Thursday, June 20, 2019

கர்ப்பம்-4

கர்ப்பம் பகுதி 4
மூலிகை பசுநெய் - இங்கும் விஞ்ஞானம்...
எண்ணெயும் தண்ணீரும் கலக்குமா?! கலக்கும்.... எப்போது சோப்புத் தூள் கலந்தால்... an absolute chemical reaction... அதுபோல மூலிகை கலந்த பசுநெய் கர்ப்பப் பையில் உள்ள பனிக்குட நீராக பிண்டத்தை சுற்றியிருந்து காக்கிறது...
நீரின்றியமையாது உலகு / நீரால் சூழப்பட்ட உலகம்... நாமும் பிண்டத்தில் அப்படியே....
பசு நெய்....
ஆம்.... விந்தணு குறைபாடுடையவர்களுக்கு merck pharma தயாரித்த evion என்ற மருந்து உட்கொள்ள அறிவுறுத்துவார்கள்.... முட்டையின் வெள்ளைக்கரு பசு நெய்யில் வைட்டமீன் ஈ அதிகம் உள்ளது....
அதனாலேயே மஹாபாரதத்திலும் பசு நெய்க்ககுடத்தில் பிண்டம்.... இப்போது திரு-கரு-காவூர் கர்ப்ப ரக்க்ஷ அம்பிகை ஆலயத்திலும் பசு நெய்ப் பிரசாதம்...
இந்த பதிவை (ஆராய்ச்சித் தொடரை) முடிக்கவே முடியாத அளவுக்கு விஞ்ஞானத் தகவல்கள் மனதில் தொடர்கின்றன...
இருப்பினும்.... நேரமின்மை கருதி கோழி முட்டையின் வெள்ளைக் கருவில் வைட்டமீன் ஈ அது குறித்த ஒரு விஞ்ஞானத் தகவலோடு முடிக்கலாம்....
மாட்டாஸ்பத்திரி... ஆம் எழுபதுகளின் முடிவில் என்பதுகளின் ஆரம்பத்தில் மயிலாடுதுறையில் தரங்கம்பாடி சாலையில் பெரிய நிலப்பரப்பில் இருந்த வெட்னெரி அதாவது கால்நடைகளுக்கான மருத்துவ மனை மாடுகளுக்கான ஆஸ்பத்திரி (hospital) மாட்டாஸ்பத்திரி உண்டு.
அங்கு வெளிநாட்டு பெரிய காளைகள் (ஜெர்ஸி மட்டுமே நினைவில் இருக்கிறது) 4 அல்லது 5 வகைகள் உண்டு.
அந்த காளைகளை நேரடியாக மாடுகளோடு இணையவிடாமல் எதாவது ஒரு பெரிய பசுமாட்டை வளையத்துக்குள் நிறுத்தி காளைகளை பாயவிட்டு காளைகளின் பிளய்புறுப்பில் ப்ளாஸ்க் வடிவில் ரப்பர் குழாயின் முடிவில் பாட்டில் ஒன்றுடன் கூடிய ஒரு sperm collection vessal மூலம் காளையின் விந்தணுக்கள் சேகரிக்கப்படும்...
இந்த விந்தணுக்களை சில கண்ணாடிப் பாத்திரத்தில் விட்டு அதனுடன் சில ஆரோக்யமான பரிக்க்ஷிக்கட்பட்ட உயிர்த் துடிப்போடு கூடிய புதிய நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து பிப்பெட் (ஒரு வகை இருபுறம் துவாரமுடைய மெல்லிய கண்ணாடி குழாய் மூலம்) நன்கு கலக்குவார்கள்...
அதாவது காளையின் சில நூறு மில்லியன் உயிர்ப்புள்ள விந்தணுக்களோடு கோழியின் விந்தணுவும் கலக்கப்பட்டு செயற்கையாக அதிக பாயும் தன்மை உருவாக்கப்பட்டு அந்த கலவை பகுதி பகுதியாக freezer குடுவையில் இடப்பட்டு மீண்டும் சினைப்பிடிக்க அன்றயதினம் கொண்டுவரப்பட்ட பசுக்கள் இருக்குமிடத்துக்கு கொண்டு வரப்படும்.
மேற்படி பசுக்கள் கன்று ஈன்று குறைந்தபட்சம் 9 மாதங்கள் ஆகி இருக்கும்... சினை வலு என்ற திரவம் போன்ற நீண்ட கொழகொழப்பான கம்பி போல பசுவின் பிறப்புறுப்பிலிருந்து வெளிப்பட்டு பசு விரகக் குரல் எழுப்பும் பக்குவ காலம் (இது நம்மாளு / முந்தானை முடிச்சு போன்ற பாக்யராஜ் படங்களில் மேற்படி பசு குரல் எழுப்பும் / மாட்டாஸ்பத்திரிக்கு ஓட்டிச் செல்லப்படும் காட்சி அமைப்புகள் உள்ளது) மட்டுமே கொண்டு வரப்பட்ட மேற்படி பசுக்களின் பிறப்புறுப்பு வழியாக அதன் சினை பைக்குள் நீண்ட கண்ணாடி குழாய் வழியாக காளையின் விந்தணுக்கள் வைக்கப்படும்....
கோழி முட்டையின் வெள்ளைக்கருவில் விந்தணுக்களை பலப்படுத்தும் வைட்டமீன் ஈ இருப்பது என்பதற்காக இத்தனை நேரம் பேசினோம்...
இங்கு பசுக்களின் பிரசவம் / பாரத சர்க்கரை நோய்க்கான காரணம் குறித்து சில விஞ்ஞானத் தகவல்கள் இருக்கிறது... விருப்பமிருந்தால் பார்க்கலாம்....⁠⁠⁠⁠ 

கர்ப்பம் -3

கர்ப்பம் பகுதி 3
மேற்கொண்டு பின்னர் பேசுவோம்... இப்போது முந்தைய கருத்தரித்தல் பதிவின் சாராம்ச விஷயம் பற்றி பார்ப்போம்...
பண்டைய காலங்களில் சாந்தி முகூர்த்த நேரத்தை வைத்தே பிறக்கும் குழந்தை ஆணா பெண்னா என்பதையும் கணித்து விடுவார்கள்... காரணம்.... நீங்கள் சொன்ன ஒரு வார சுழற்ச்சி நீர் குமிழி போன்ற முட்டை உருவாகுதல் என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல ஆண் பெண் விந்தணு/ கருமுட்டைகளில் எந்த க்ரோமோசோம் உயிர்ப்போடு சீரான சுழற்ச்சி வேகத்தில் மேலே இருக்கிறதோ அந்த பாலினத்திலேயே குழந்தை பிறக்கும்...
இத்தனை கட்டுப்பாடுகளோடு உடலுறவு கட்டுப்பாடுகள் முந்தைய காலகட்டத்தில் அணுசரிக்கப்பட்டதால் தான் இராம இராஜ்ஜியம் என புகழப்பட்ட குழந்தை மரணம் பிரசவகால மரணம் கருச்சிதைவு இல்லாத /ஆரோக்யமான நீண்ட ஆயுளுடன் கூடிய அதே நேரத்தில் இயற்கையான குடும்பக் கட்டுபாடு என எல்லாமே ஹிந்து தர்மத்தில் அமைந்தது...
இதை வைத்தே இந்து தர்மத்தில் தலைக் குழந்தையே கர்மாதிபதி. மற்றவை எல்லாம் காமாதிபதி...
இதுவே குடும்பக்கட்டுப்பாடு..
மஹாபாரதத்தில் கருச்சிதைவு இருந்ததே - காந்தாரிக்கு.... அது காந்தாரியின் கோபத்தால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது
அப்படியே ஏற்பட்டிருந்தாலும்... அந்த பிண்டங்களை மூலிகை மற்றும் பசு நெய் கலந்த மட்பாண்டத்திலிட்டு மீண்டும் உரிய காலத்தில் துரியோதனாதிகளை உருவாக்கினார்கள்...
இங்கும் ஒரு விஞ்ஞானம் உள்ளது...
பிரசவத்துக்குரிய பெண்ணின் வயிறு பெரியதாக இருந்தால் பெண்குழந்தை பிறக்கும் என்பார்கள்... ஞாபகமிருக்கா?! கேட்டிருக்கிறோம்...
மஹாபாரதத்தில் காந்தாரியின் பிண்டம் 101 துண்டுகளாக சிதற 100 சீரான பிண்டங்களில் 100 கெளரவர்களும் கடைசி ஒரு பெரிய துண்டான (பெரிய துண்டான) பிண்டத்தால் ஒரே ஒரு மகளும் ஜனித்தனர்....
மூலிகை பசு நெய் கலந்த மட்பாண்டத்தில் என்று சொன்னேன் அல்லவா... இங்கும் விஞ்ஞானம்....
உடல் பஞ்ச பூதங்களால் ஆனது... சதை மண் இரத்தம் நீர் மூச்சு வாயு உடல் சூடு அக்னி வெற்றிட ஆகாசம் இதயத்துக்குள்ளே
இதே போல...
மட்பாண்டம் மண் நீரால் குழைக்கப்பட்டு தீயில் சுடப்பட்டு கற்றுத் துவாரங்களுடன் உள்ளே வெற்றிட ஆகாசம்....
துரோணாச்சாரியார் கூட துரோண பாத்திரம் என்ற மண்ணால் ஆன (மடக்கு போன்ற அமைப்பு - ஹோமங்களில் பயன்படுத்தப்படுவது) பாத்திரத்தில் உருவாணதால் அவருக்கு துரோணர் (துரோண பாத்திரம்) எனப் பெயர்....⁠⁠⁠⁠

கர்ப்பம்- 2

கர்ப்பம் பகுதி 2
திருமணத்துக்குப் பின் கணவன் மனைவி ஒன்று கூட சாந்தி முகூர்த்த நேரம் குறிக்கப்படும்
சுபயோக சுபதினத்தில் சுபஹோரையில் கணவன் மனைவி நக்ஷத்திரங்களை அனுசரித்து / பெண்ணின் ருது ஜாதகம் மற்றும் மாதவிடாய் நாட்களை அனுசரித்து இந்த முகூர்த்தம் குறிக்கப்படும்...
தற்போது சினிமாக்களில் காட்டப்படும் கற்பழிப்புக்காட்சி ஒன்றுக்கு பிறகே அந்தப் பெண் கர்ப்பம் அடைவதாக காட்டுவார்கள்... அது முற்றிலும் இன்று பொய் அன்று மெய்.
மாதவிடாய் முடிந்து அதாவது 5 வது நாளில் இருந்து (இரத்தப் போக்கு முற்றிலுமாக நின்ற பின்) 16 வது நாள் வரையே பெண்ணின் கருமுட்டைகள் ஆண் விந்தனுவோடு சேர்ந்து குழந்தையை உருவாக்கும்...
மேலும் ஆணின் விந்தனு 15 நாட்களுக்கு ஒரு முறையே வீரியத்துடனிருக்கும்.... மாதமிருமுறையே உடலுறவு அனுமதிக்கப்பட்டது.....
வேளைக்கு இருமுறை தண்ணீர் குடிக்கனும்
நாளைக்கு இருமுறை மலம் கழிக்கனும்
வாரமிருமுறை எண்ணெய் குளியல்
மாதமிருமுறை உடலுறவு
வருடமிருமுறை பேதிக்கு சாப்பிட வேண்டும்
இந்த மாதமிருமுறை உடலுறவு அங்கீகரிக்கப்பட்ட தினங்களும் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா?!
அமாவாசை பெளர்ணமி பிரதோஷ ச்ரார்த ஜென்ம நக்ஷத்திர நாட்களாக இருக்கக் கூடாது... மேலும் அந்த குறிப்பிட்ட நாட்கள் விரத நாட்களாக / அசுப காரிய காரணங்களில் கலந்து கொண்ட / சாப்பிட்ட / உள்ளூர் ஆலய காப்பு கட்டிய உற்சவ நாட்களாக இருக்கக் கூடாது...
இந்தனை கட்டுப்பாடுகளுடன் பெண்ணின் மாதவிடாய்க்குப் பிறகான 5 முதல் 16 நாட்களுக்குள்ளான நாட்களாக இருந்து - ஆணுக்கு ஸ்வப்பனஸ்கலிதம் / விந்து நாசம் இல்லாமல் இருந்து முறையாக உடலுறவு நல்ல சூழலில் நல்ல எண்ணங்களுடன் நல்ல ஹோரையில் கூடினால் மட்டுமே சுப புத்திர அதே நேரம் ஒரே உறவில் நல்ல ஆரோக்யமான குழந்தை பிறக்கும்...
அடிக்கடி உடலுறவு காலம் தவறி செய்வதால் விந்தணுக்கள் பாய்ந்து சென்று பெண்ணின் கருமுட்டையோடு இணையும் வாய்ப்பு குறைவு... அதாவது ஒரு மில்லி விந்தணுவில் 10 மில்லியன் அணுக்கள் இருந்தாலே விந்தணு பாயும் தன்மை பெறும்...
அப்படி இல்லாத இன்று தவறான நேரம் அடிக்கடி உடலுறவு செயற்க்கை கருத்தரித்தலால் தான் சமூக சீர்கேட்டுக்கான பிரஜைகளை உற்பத்தி செய்யப்படுகிறது
அவற்றுக்கு ஆரோக்யமும் இல்லை... பிறப்பில் போலியோ - மரபணு குறைபாடு - வியாதிகள் - அங்கஹீணம் - மனநிலை பாதிப்பு - மறுஉற்பத்தி இயலாமை ஏற்படுகிறது...⁠⁠⁠⁠

கர்ப்பம்-1

கர்பம்-1
கர்பத்தைப்பற்றி உபனிஷத் கூறுவது .......... !!
ஆண் பெண் சம்போகத்தால் ஓர் இரவு கழிந்ததும் கருவானதுகலங்குகிறது.
ஏழ் இரவுகளிள் நீர்க்குமிழி போன்ற உருவத்தை அடைகிறது.
அரை மாதத்தில் பிண்டமாகிறது.ஒரு மாதத்தில் அது
கடினமாகிறது.இரண்டு மாதத்தில் தலை தோன்றுகிறது.மூன்று மாதங்களில்
பாதங்களின் பிரதேசம் தோன்றுகிறது.
நாலாவது மாதத்தில் மணிக்கட்டு வயிறு,இடுப்பு
முதலிய பிரதேசங்கள் உண்டாகின்றன.ஐந்தாவது மாதத்தில் பின்புறம் மூங்கில் போன்ற முதுகு எலும்பு உண்டாகிறது
ஆறாவது மாதத்தில் வாய்,மூக்கு கண்கள்.காதுகள்உண்டாகின்றன
ஏழாவது மாதத்தில் ஜீவனுடன்
கூடுகிறது. எட்டாவது மாதத்தில் எல்லா
லக்ஷணங்களும் பூர்த்தியாகின்றன
தந்தையின் வீர்யம் அதிகமாயிருந்தால்
புருஷனாகவும்,தாயின் வீர்யம்
அதிகமாயிருந்தால் ஸ்திரீயாகவும்,இரண்டும்
சமமாக இருந்தால் அலியாகவும் ஆகிறது.
மனக்கலக்கத்தோடு இருந்தால்
குருடர்களாகவும்,முடவர்களாகவும்
கூனர்களாகவும்,குள்ளர்களாகவும்
பிறக்கிறார்கள்.
ஒன்றுக்கொன்று வாயுவினால்
பீடிக்கப்பட்டு சுக்லம் இரண்டுபட்டால்
அப்போது இரட்டை பிள்ளைகள் பிறக்கிறார்கள்.
கர்பத்தில்இருக்கும் போது தாயார் உண்டதும்
பருகியதும் தாயுடன் இணைந்து நாடிகளில்
பரவி அதன் மூலம் குழந்தையின் பிராணனை
திருப்தியடைகிறது.
ஒன்பதாவது மாதத்தில் எல்லா லக்ஷணங்களும்
ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும்
பரிபூரண நிலையை அடைகின்றன.
அந்த ஜீவனுக்கு முந்திய பிறவியின் ஞாபகம்
வருகிறது. தான் செய்த புண்ணிய
செயல்களையும்.பாபச்செயல்களையும் உணர்கிறது.
முன்பு என்னால் ஆயிரக்கணக்கான
யோனிகள் பார்க்கப்பட்டும் பலவிதமான
ஆகாரங்கள் புசிக்கப்ட்டும்.பலவிதமான
ஸ்தன்ய பானங்கள்(தாய்ப்பால்) பருகப்பட்டும்
ஆகிவிட்டன.திரும்பத்திரும்ப பிறந்தும்
இறந்துமாயிற்று. நல்லதோ பொல்லாததோ
எந்த கருமம் எந்த சுற்றத்தின்ன் பொருட்டு
என்னால் செய்யப்ட்டதோ அந்த உற்றார்
பயனை அனுபவித்துவிட்டு போய்விட்டார்கள்.
நானோ தன்னந்தனியாக அதனால் தவிக்கிறேன்.
யோனியினின்று வெளிவந்தால் இனி நான்
பாவத்தை போக்குபவரும் கருமப்பயனிலிருந
்து முக்தியளிப்பவரும்மான மகேஷ்வரனை
நாராயணனை சரணடையப்போகிறேன
யோனியில் இருந்து வெளிவந்தால் இனி நான்
பாபத்தை போக்குவதும் கருமப்
பயனிலிருந்துவிடுதலையளிப்பதுமான
ஞானமார்க்கத்தை அப்பியாசம் செய்வேன்.
யோனியிலிருந்து வெளிவந்தால்
பிரம்மத்தை தியானிப்பேன் என்று
எண்ணுகிறான்.பிறகு யோனித்துவாரத்தை
அடைந்து இயந்திரத்தால் பீடிக்கப்ட்டவனை
ப்போல மிகுந்த துன்பத்திற்குள்ளாகி
பிறந்தவுடன் விஷ்ணுமாயா வாயுவால்
தொடப்பட்டு நினைவிழந்து
முற்பிறவியையோ புண்ணிய
பாபச்செயல்களையோ எதையும்
அறிவதில்லை !! 

Wednesday, June 19, 2019

விதுரன்...

விதுரன்...
மஹாபாரதத்தில் மிக மிக உயர்ந்த நிலையில் இருந்த புண்யாத்மா விதுரர். காரணம் அவர் தர்மதேவனின் அம்சம். வியாச பகவானின் அருட்கொடை.
இப்படிட்பட்ட புண்யாத்மா விதுரரை ஸ்ரீ கிருஷ்ணபகவான் ஒரு இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்றிய சம்பவம் ஒன்று உள்ளது!
பாண்டு காணகத்தில் மரித்து விட்டதால் - பாண்டவர்களின் கல்யாண குணங்களால் ஈர்க்கப்பட்ட விதுரர் பல சூழல்களில் பாண்டவர்களுக்கு சாதகமாக பேசி கெளரவர்களால் சபையிலேயே இகழப்பட்டதும் நமக்கு நன்கு தெரியும்...
இப்படிப்பட்ட விதுரரை ஸ்ரீ கிருஷ்ணன் அணுகி தகப்பனில்லாத பாண்டவர்களுக்கு திருதராஷ்டிரன் ஸ்தானத்தில் விதுரர் இருந்து வழிநடத்த குறைந்த பட்சம் ஆயுதம் ஏந்தாது அரசனாக / தகப்பனாகவாவது வழிநடத்த கேட்டிருந்தால் விதுரர் நிச்சியமாக சம்மதித்து இருப்பார். காரணம் துரியோதனாதிகள் அவரை அத்துணை அவமரியாதை செய்தது அத்தனையும் பதிவுகள்.
ஆணால், தர்மாத்மாக்கள் பீஷ்மர் - துரோணர் - கிருபர் - அஸ்வத்தாமன் (இவர் உயிரிழக்கவில்லை) கர்ணன் போன்றவர்களே செஞ்சோற்றுக் கடன் / ராஜ நீதி என்ற பெயரில் கெளரவர்களோடு துணை நின்று உயிர்விட்டனர்.
விதுரரும் இதைச் செய்திருக்கலாம். ஆனால் போரின் முடிவு பாண்டவர்க்கே அணுகூலம் என்பது பரமதயாபரனுக்கு நன்கு தெரியும். தர்மம் அறிந்த பீஷ்மர் இஷ்டா ம்ருத்யு வரம் பெற்றவர். ஆனால் தர்மம் அறிந்த விதுரர் தர்மத்தை உலகுக்குச் சொல்ல / விதுர நீதியாக பதிவு செய்ய / வெற்றி பெறப்போகும் பாண்டவர்களுக்கு வழிகாட்ட வெகுகாலம் உயிரோடு இருக்க வேண்டியவர்.
அணி மாறினால் துரோகமாகி இன்னும் அதிககாலம் இகழப்பட்டு இருப்பார் - அல்லது ஆயுதமெடுத்து போரில் உயிர்விட்ட (எந்த அணியில் இருந்தாலும்) உயிர்விட்டு இருப்பார்.
ஆக, குருக்க்ஷேத்திர போருக்குப் பின், பாண்டவர்களுக்கு உடனிருந்து வழிகாட்ட பீஷ்மரைப் போல ராஜ தர்ம நீதி தெரிந்த மற்றும் ரத்த சம்பந்தமுள்ள விதுரரை பாதுகாக்கும் பொருட்டு கிருஷ்ணர் ஆடிய நாடகம் தூதனாகச் சென்று விதுரரோடு தங்கி - அதை காரணமாக வைத்து ஆயுதம் தொடேன் என விதுரரை சபதமிடவைத்ததும் ஸ்ரீ கிருஷ்ணனின் நாமறிந்திராத திருவிளையாடல்களில் ஒன்று.
இதில் இன்னும் ஒரு சூக்ஷ்மம் உள்ளது.
கிருஷ்ணன் தர்மத்தின் உருவம் (கீதாசார்யனை விட பெரிய தர்மவான் யார்?). தர்மவான்கள் கையில் ஆயுதம் ஏந்தினால் அவர்களை ஒருக்காலும் வெல்லவே முடியாது. இதற்குச் சிறந்த உதாரணம் பரசுராம பீஷ்ம யுத்தம். இருவருமே வெல்லப்படாமல் போர் தொடர்ந்து கொண்டே போக, கடைசியில் தேவர்களின் முயற்ச்சியால் சமாதானமடைகிறது. பீஷ்மரும் தர்மத்தின் திரு உருவமே ஆனால் குருக்ஷேத்திர போரில் பீஷ்மர் அதர்மத்தின் பக்கமிருந்தார் அதனால் வீழ்ந்தார்.
தர்மத்தின் திரு உருவான கண்ணன் ஆயுதம் தொடேன் எனச் சொல்லி பாண்டவர் பக்கமிருந்தான். (to compensate Bheeshma effect in the opposite camp).
இந்த நிலையில் தர்மவானாகிய விதுரர் பீஷ்மர் போல யுத்த ராஜ நீதி வழியில் கெளரவர்களுக்காக ஆயுதமேந்தி இருந்தால் போரில் வெற்றி கெளரவர் பக்கமிருந்திருக்கும் என்பதே அந்த ரகசியம்.

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...