விதுரன்...
மஹாபாரதத்தில் மிக மிக உயர்ந்த நிலையில் இருந்த புண்யாத்மா விதுரர். காரணம் அவர் தர்மதேவனின் அம்சம். வியாச பகவானின் அருட்கொடை.
இப்படிட்பட்ட புண்யாத்மா விதுரரை ஸ்ரீ கிருஷ்ணபகவான் ஒரு இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்றிய சம்பவம் ஒன்று உள்ளது!
பாண்டு காணகத்தில் மரித்து விட்டதால் - பாண்டவர்களின் கல்யாண குணங்களால் ஈர்க்கப்பட்ட விதுரர் பல சூழல்களில் பாண்டவர்களுக்கு சாதகமாக பேசி கெளரவர்களால் சபையிலேயே இகழப்பட்டதும் நமக்கு நன்கு தெரியும்...
இப்படிப்பட்ட விதுரரை ஸ்ரீ கிருஷ்ணன் அணுகி தகப்பனில்லாத பாண்டவர்களுக்கு திருதராஷ்டிரன் ஸ்தானத்தில் விதுரர் இருந்து வழிநடத்த குறைந்த பட்சம் ஆயுதம் ஏந்தாது அரசனாக / தகப்பனாகவாவது வழிநடத்த கேட்டிருந்தால் விதுரர் நிச்சியமாக சம்மதித்து இருப்பார். காரணம் துரியோதனாதிகள் அவரை அத்துணை அவமரியாதை செய்தது அத்தனையும் பதிவுகள்.
ஆணால், தர்மாத்மாக்கள் பீஷ்மர் - துரோணர் - கிருபர் - அஸ்வத்தாமன் (இவர் உயிரிழக்கவில்லை) கர்ணன் போன்றவர்களே செஞ்சோற்றுக் கடன் / ராஜ நீதி என்ற பெயரில் கெளரவர்களோடு துணை நின்று உயிர்விட்டனர்.
விதுரரும் இதைச் செய்திருக்கலாம். ஆனால் போரின் முடிவு பாண்டவர்க்கே அணுகூலம் என்பது பரமதயாபரனுக்கு நன்கு தெரியும். தர்மம் அறிந்த பீஷ்மர் இஷ்டா ம்ருத்யு வரம் பெற்றவர். ஆனால் தர்மம் அறிந்த விதுரர் தர்மத்தை உலகுக்குச் சொல்ல / விதுர நீதியாக பதிவு செய்ய / வெற்றி பெறப்போகும் பாண்டவர்களுக்கு வழிகாட்ட வெகுகாலம் உயிரோடு இருக்க வேண்டியவர்.
அணி மாறினால் துரோகமாகி இன்னும் அதிககாலம் இகழப்பட்டு இருப்பார் - அல்லது ஆயுதமெடுத்து போரில் உயிர்விட்ட (எந்த அணியில் இருந்தாலும்) உயிர்விட்டு இருப்பார்.
ஆக, குருக்க்ஷேத்திர போருக்குப் பின், பாண்டவர்களுக்கு உடனிருந்து வழிகாட்ட பீஷ்மரைப் போல ராஜ தர்ம நீதி தெரிந்த மற்றும் ரத்த சம்பந்தமுள்ள விதுரரை பாதுகாக்கும் பொருட்டு கிருஷ்ணர் ஆடிய நாடகம் தூதனாகச் சென்று விதுரரோடு தங்கி - அதை காரணமாக வைத்து ஆயுதம் தொடேன் என விதுரரை சபதமிடவைத்ததும் ஸ்ரீ கிருஷ்ணனின் நாமறிந்திராத திருவிளையாடல்களில் ஒன்று.
இதில் இன்னும் ஒரு சூக்ஷ்மம் உள்ளது.
கிருஷ்ணன் தர்மத்தின் உருவம் (கீதாசார்யனை விட பெரிய தர்மவான் யார்?). தர்மவான்கள் கையில் ஆயுதம் ஏந்தினால் அவர்களை ஒருக்காலும் வெல்லவே முடியாது. இதற்குச் சிறந்த உதாரணம் பரசுராம பீஷ்ம யுத்தம். இருவருமே வெல்லப்படாமல் போர் தொடர்ந்து கொண்டே போக, கடைசியில் தேவர்களின் முயற்ச்சியால் சமாதானமடைகிறது. பீஷ்மரும் தர்மத்தின் திரு உருவமே ஆனால் குருக்ஷேத்திர போரில் பீஷ்மர் அதர்மத்தின் பக்கமிருந்தார் அதனால் வீழ்ந்தார்.
தர்மத்தின் திரு உருவான கண்ணன் ஆயுதம் தொடேன் எனச் சொல்லி பாண்டவர் பக்கமிருந்தான். (to compensate Bheeshma effect in the opposite camp).
இந்த நிலையில் தர்மவானாகிய விதுரர் பீஷ்மர் போல யுத்த ராஜ நீதி வழியில் கெளரவர்களுக்காக ஆயுதமேந்தி இருந்தால் போரில் வெற்றி கெளரவர் பக்கமிருந்திருக்கும் என்பதே அந்த ரகசியம்.
No comments:
Post a Comment