Monday, April 29, 2019

சிருங்கேரி ஸ்ரீ சாரதாம்பாள் - 10

ஆதி சங்கரர் காலம், காஞ்சி காமகோடி பீடம், குருமார்கள் பிரவரம் (தொடர்ச்சியான பெயர்/ பிறந்த ஊர், பீடத்தில் இருந்த ஆண்டுகள், சமாதியான இடம்) இன்று நடப்பில் இருக்கும் 70வது பீடாதிபதி, காஞ்சி பீடம் சங்கரரால் ஸ்தாபிக்கப்பட்டது என்பதற்கு ஆதாரமாக உள்ளது...
அதே போல சிருங்கேரி மடம், ஸ்தாபகர் 14ஆம் நூற்றாண்டு வித்யாரண்ய ஸ்வாமிகள், ஹரிஹரர், புக்கர் காலக்கணக்கு, ஹொய்சால மன்னர்கள் நிர்மாணித்த கோவில், இன்று உள்ள 36வது பீடாதிபதி சிருங்கேரி மடத்தின் வரலாற்றை நமக்கு உணர்த்தும் என்று நம்புவோம்...
நான் ஏதோ காஞ்சி மட பக்தன், அதனால் சிருங்கேரி மடத்தின் பிரவரத்தை குறைத்து மதிப்பிடுவதாக தயவுசெய்து எண்ணிவிட வேண்டாம்...
எனக்கு இஷ்ட ஆச்சாரியர் காஞ்சியாக இருந்தாலும், என் பூர்வீகம் தேடி பார்க்கும்போது நெல்லை, சிருங்கேரி மடம், தெலுங்கு என் தகப்பனார் வழி பாட்டி பெயர் என்று சிருங்கேரி மடம் தான் எங்கள் ஆச்சார்யாராகவும் இருக்கவேண்டும் என்று நான் நம்புகிறேன்.
சிருங்கேரி இடமே ராமாயணத்துக்கு முற்பட்ட ஹருஷ்ய ஸ்ருங்கரால் புனிதம் அடைந்தது, ஆதி சங்கரரின் 12 ஆண்டு கால தவத்தால் புனிதம் அடைந்தது...
அந்த மேன்மையின் மாண்புதான் அந்தர்முகமான பின்னால் தோன்றிய இந்த மடம் என்று நான் நம்புகிறேன்.
இனி, சங்கரர் உடன் நடந்து வந்த உபய பாரதி/ சரசவாணி பற்றி பேசலாமா?!
சங்கரர் பிரம்மாவின் அம்சமான, மண்டன மிஸ்ரரை வாதில் வென்று, அவரை சந்நியாசம் ஏற்க செய்து விட்டதால், அவர் மனைவியாக வாழ்ந்த சரசவாணி அதனால் மீண்டும் சத்ய லோகம் சென்று விட எண்ணிய சரஸ்வதி தேவியை தன் தாய்க்கு அருளிட வேண்டி தன் பின் காலடிக்கு வர வேண்டினார்...
இந்த நிலையில் மலை பாதையில் வந்து கொண்டு இருந்த அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம்...
சங்கரர் முன் செல்ல வேண்டும்... அன்னை சரஸ்வதி பின்னே நடந்து வருவார்... எங்கே சங்கரர் திரும்பிப் பார்கிறாரோ அங்கே அம்பாள் நின்று விடுவதாக...
சிருங்கேரி வந்த உடன் ஹ்ருஷ்ய ஸ்ருங்கர் தவம் செய்த இடம், மலை சாரல் ரம்யம், மாலையாக ஓடும் துங்க பத்ரா நதி கூட்லி... (இப்போது உள்ள சிருங்கேரி மடம் அருகே மலையில்) அம்பாள் நின்ற கோலத்தில்....
படம் இணைப்பு...
கடைசி இரண்டு பதிவுகளில் controversy என்று தோன்றினாலும், மனதில் பட்டதை அப்படியே எழுதிவிட்டேன் என்பதால் மேலும் தொடராமல் நிறைவு செய்கிறேன்!
Image may contain: 1 person

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...