Friday, April 5, 2019

Test Tube Baby-5

ரிஷி அல்லது முனி / துறவு
சந்நியாசம் என்பது ஒரு நிலை... அதாவது பிரம்மச்சரியம், கிரஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம், சந்நியாசம்.... நாம் சந்நியாசம் என்ற உடன் அதை ஏதோ மனிதனின் காமம் / உடலுறவு சம்பந்தப்பட்ட விஷயம் என்று நினைக்கிறோம்.
அமாவாசை தர்ப்பணம் முடிந்த பின் பிரம்ம யக்ஞம் என்று அர்க்கியம் கொடுக்கும் போது ரிஷி தர்ப்பயாமி ரிஷி பத்னிம் தர்ப்பயாமி...
அதாவது ரிஷி/ முனிவர் களுக்கு மனைவி உண்டு என்று ஏற்கனவே பார்த்தோம்.
முனிவர்கள், ஒதுக்குப்புறமான அமைதியான இடத்தில் ஆசிரமம் அமைத்து தன் பத்தினி மற்றும் குடும்பம் / சீடர்களோடு வாழ்வார்கள்.
சந்யாஸ நிலையில் ஊர் ஊராக அதிக பட்சம் ஒரிடத்தில் 3 நாட்கள் மட்டுமே (சதுர் மாஸ்ய காலம் தவிர) தங்கலாம்.
ஹிந்து தர்மத்தை பொருத்தவரை சந்நியாசம் என்பது கிரஹஸ்த / வானப்ரஸ்த நிலைக்கு பின்னர்...
ஆதி சங்கரர் துறவு ஏற்றது ஒரு வித வித்யாசமான சூழல்... கிரஹஸ்தன் என்றால் அவன் குடும்பத்தை பராமரிக்க போதுமான நேரம் கொல்ல வேண்டும் (அதாவது நேரம் கொடுக்க வேண்டும்). ஆதி சங்கரர் காலத்தில் அப்படிப்பட்ட பந்தத்தில் அவர் சிக்கி இருந்தால், பௌத்த சமணர்கள் நம் தர்மத்தை அழித்தே இருப்பார்கள்.
ஆனால் இன்றைய கால கட்டத்தில் நம் தர்மத்துக்கு ஜனத்தொகை பெருக்கம் அதே நேரம் சந்நியாசம் போல முழு நேர தர்ம ரக்க்ஷகர்கள் என்ற இரண்டுமே தேவை.
முனி/ரிஷி போன்றவர்களின் area of operation குறைவு. ஆனால், துறவிகள் பெரும்பாலும் பரிவ்ராஜகர்கள்... அதாவது சுற்றுப்பயணம், அதுவும் தர்ம ரக்க்ஷணம் பொருட்டு.
மனிதனின் வீர்யம் வெளிப்பாடு இயற்க்கை... அதில் முனி அல்லது ரிஷி அல்லது துறவி என்ற பேதம் இல்லை... ரிஷியை பொறுத்தவரை வீர்யம் பத்தினியிடத்தே... சில கால _ தேசங்களில் கர்ப்பதானம், டெஸ்ட் tube, என்பதெல்லாம் பார்த்தோம்.
அரசமரம் சுற்றினால் குழந்தை பாக்கியம் என்பது போல, கோவில் குளம் சுற்றினால் குழந்தை பிறக்குமா?!
பிறக்கும் _ முன் காலத்தில் / pollution இல்லாத காலத்தில்.
இங்குதான், விந்து தானம், சந்யாஸ பரிவ்ராஜகத்துக்கும் ஒரு தொடர்பு உண்டு. அது பற்றி அடுத்த பதிவில்...

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...