Friday, February 7, 2020

ராவணன் தமிழனா


ராவணன் தமிழனா?
புலஸ்திய மகரிஷி ப்ரம்மாவின் மகன். புலஸ்தியர் தன் தவத்துக்கு இடைஞ்சல் இருக்க கூடாது என்பதற்காக, தன் ஆஸ்ரமத்தின் அருகே கட்டுபாடு இல்லாமல் பெண்கள் நெருங்கினால் அவர்கள் கர்ப்பம் தரிப்பார்கள் என்ற காப்பு ஏற்படுத்தி இருந்தார்.
த்ருணபிந்து என்ற ஒரு பெண் (ரிஷி குமாரிபுலஸ்தியர்ஆஸ்ரம அருகில் வந்து கர்ப்பம் ஆகிறாள்.
அந்த பெண்ணின் தந்தை வேண்டுகோள் படி புலஸ்தியர் த்ருணபிந்துவை தன் மனைவியாக அங்கீகரிக்கிறார்.
இவர்களுக்கு பிறந்த மகன் விஸ்ரவஸ்
விஸ்ரவஸ் பரத்வாஜ மகரிஷி மகள் தேவவர்ணனி யை மணந்து
வைச்ரவணன் என்கிற குபேரன் பெற்று எடுக்க... அவன் தன் முப்பாட்டன் ப்ரம்மாவை நோக்கி தவம் செய்து எமன் இந்திரன் வருணனுக்கு இணையாக குபேர பதவியை /புஷ்பக விமானத்தை பெறுகிறான்.
குபேரன் தன் தந்தை விஸ்ரவஸ் சுட்டிக்காட்டிய தென் கடலுக்கு அப்பால் திரிகூட மலையை ஒட்டிய இலங்கையை காட்டி அங்கே வசிக்கும்படி கூறினார்.
அந்த இலங்கையில் இருந்து விஷ்ணுவால் விரட்டப் பட்ட ராக்ஷஸர்கள். ..
மால்யவான்
சுமாலி
மாலி
மூவரும் (சகோதரர்கள்) பெரும் தவம் புரிந்தவர்கள்... இவர்கள் ஆளுகையில் இருந்த இடம் இலங்கை. விஷ்ணு வுடன் நடந்த போரில் மாலி கொல்லப்பட்டான்...
சுமாலி, மால்யவான் மற்றும் எஞ்சி இருந்த ராக்ஷஸர்கள் அஞ்சி ஒடி ரசாதளம் என்ற கீழ் உலகில் புகுந்து கொண்டார்கள்...
மால்யவான் சுமாலி மாலி... மாலி இறந்துவிட்டான்... இவர்கள் ஓடி ஒளிந்த இடம் இன்றைய மாலத்தீவுகள் மால்டீவ்ஸ்....
சுமாலி மகள் கைகஸி ... இவள் சுமாலியின் அறிவுரை பேரில் விஸ்ரவஸ் என்ற குபேரன் தந்தையை அணுகி பெற்று எடுத்த வாரிசுகள் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் சூர்ப்பனகா ஆகியோர்.
தாயின் அறிவுரை படி ராவணன் தன் ஒன்றுவிட்ட சகோதரன் குபேரன் போல வாழ ப்ரம்மா வை நோக்கி தவம் செய்து வரம் பல பெற்று, குபேரனை இலங்கையில் இருந்து விரட்டி... தன் தாத்தா சுமாலியின் ஆசைப்படி இலங்கையை மீண்டும் சுமாலியின் மகள் வயிற்று பேரன் ராவணன் தன் வசமாக்கிக் கொண்டான். குபேரன் னுடைய புஷ்பக விமானத்தையும் அபகரித்துக் கொண்டான் ராவணன்.
பாரதத்தை சேர்ந்த ப்ரம்மா வின் பேரன் விஸ்ரவஸ் என்கிற ப்ரம்மண ரிஷிக்கும், இலங்கையில் வாழ்ந்த சுமாலி என்ற ராக்ஷசன் மகள் கைகஸி க்கும் பிறந்தவனே ராவணன்.

கூடுதல் தகவல் அந்த சொக்க தங்கம் தமிழன் ராவணன் சம்ஸ்கிருத பண்டிதன், தினமும் சிவனை பூஜிக்கும் பரம பக்தன், சிவனை குறித்து சிவ தாண்டவ ஸ்தோத்திரம் என்ற நூலை சம்ஸ்கிருதத்தில் இயற்றியவன்

இந்திய பிராமணன் மற்றும் சிங்கள கலப்பினம்... கூறு கெட்ட குட்டிச் சாத்தான் வாரிசுரிமை சட்டத்தின் கீழ் தமிழன் என்பது நம் தலைவிதி.
இனி தமிழர்கள் யாவரும் தாய் வழிப் படியே வாரிசு சொத்து உரிமை ஜாதி status பெறவேண்டும் என்று அரசு உடனடியாக சட்டம் இயற்றியே ஆகவேண்டும்

பஞ்ச பூதங்களின் குணங்கள்

பஞ்ச பூதங்களின் குணங்களாவன -
ஆகாசம் - சப்தம்
காற்று - சப்தம் மற்றும் ஸ்பரிசம்
தீ - சப்தம் ஸ்பரிசம் ரூபம்
நீர் - சப்தம் ஸ்பரிசம் ரூபம் மற்றும் ரசம்
மண் - சப்தம் ஸ்பரிசம் ரூபம் ரசம் (சுவை) நாற்றம் (வாசனை)
பூதங்களின் ஒவ்வொரு தடைகளை (குணங்களை) விட்டு மேலே செல்லச் செல்லவே ஓம்காரரூபமான ஆண்டவன் நமக்கு அகப்படுவான்

மஹாபாரத போர் (1)

மஹாபாரத போர் (1)
குருக்ஷேத்திரப் போர் துவங்கிய அன்றே பாண்டவர்களின் வெற்றியை துரியோதனனே அறிவித்துவிட்டான்.
ஏன், வியாசரும் கூட....
பாண்டவர்கள் யுத்த ஆரம்பத்தை அறிவிக்க தத்தமது சங்குகளை ஊதி ஒலிக்கச் செய்தனர் - இந்த ஆரவார ஒலி துரியோதனாதியருடைய இருதயங்களை பிளந்தது. அத் 1. ஸ் 19.
உடல் என்பது கருவி அனால் மனம் புத்தி சித்தம் ஞானம் ஆனந்தமே நம்மை உள்ளிருந்து இயக்கும் கர்த்தா. பாண்டவ சேனையில் தருமம் வீரியம் பலம் ஞானம் வைராக்கியம் போன்ற அந்த கரணங்கள் குறிக்கப்பட்டு அதை பரமாத்மாவின் இயக்கத்தில் இருப்பனவாக குறிக்கப்பட்டது - ஆனால் கெளரவ சேனை முதல்வர்கள் யாராலும் வெல்ல முடியாத பலசாலிகளாக அதாவது உடல் என்ற கருவியின் பிரதாபத்தினால் சிறப்பிக்கப்பட்டவர்களாகவே போர்களத்தில் குறிக்கப்பட்டார்கள்.
பாண்டவர்களின் போர்த்திட்டம் - கடைசி நேர ஆலோசனைகள் எல்லாம் பாசறைக்குள்ளேயே முடிந்தது - ஆனால் 11 அக்க்ஷொரவ்னி படைகள் கொண்ட துரியோதனன், போர்க்களத்துக்கே வந்து - போர் துவங்கும் முன்பாக 7 அக்க்ஷொரவ்னி படைகள் கொண்ட பாண்டவர்கள் படை த்ருஷ்ட்டத்யும்ணனால் அழகாக சிறப்பாக அணிவகுக்கப் பட்டு நிறுத்தப்பட்டதாக துரோணரிடம் சொல்கிறான்.
சேனை நாயகராக பீஷ்மர் நிற்க்கும் போது சக்ரவர்த்தி துரோணரிடம் வந்து strategy குறித்து விவாதிக்கிறான் - மேலும் கடைசியாக எல்லோரையும் நோக்கி - படை தனது அதனால் எல்லோரும் எனக்குரியதை போலவே முக்யத்துவத்தை பீஷ்மருக்கு தந்து பிதாமகரை ஏற்றிக் காக்க வேண்டும் என்கிறான்.
பரசுராமருக்கு இணையாக போர்புரிய வல்ல பீஷ்மரை பற்றிய எதிர்மறை அபிப்பிராயங்களை இது கெளரவ சேனையிடம் ஊக்குவித்துவிட்டது.
துரோணரை கோபப்படுத்தி வைப்பதாக எண்ணி துரியோதனன் உமது சீடர்கள் பாண்டவர்கள் த்ருட்டத்யும்ணன் என பேசி சுற்றி இருந்த சேனையிடத்தே, அரசரே போற்றும் எதிரணி வீரர்கள் நம் ஆசாரியரின் சீடர்கள் என ஒரு பச்சாதாபத்தையும் ஏற்படுத்தி இருக்கலாம்.
கடைசியாக, பாண்டவர் அணியில் அர்ச்சுனன் தவிர வேறு பிறப்புக் காரண பராக்ரமசாலிகள் இல்லை. மற்ற நால்வரும் வெல்ல முடியாத சக்தி படைத்தவர்களும் அல்ல என்பது கர்ணனிடம் குந்தி வாங்கிய சத்தியத்தால் உறுதியாகிறது.
மாறாக, கெளரவ சேனையில் பீஷ்மர், துரோணர், கர்ணன், க்ருபாச்சாரியார், அஸ்வத்தாமன், பூர்சிரவசு, சல்லியன், ஏகலைவன் என பெரிய பெரிய பராக்ரமசாலிகள் நிறைந்திருந்தனர். இது கூட ஒருவேளை too many cooks spoils the dish ஆக இருக்கலாம்....

மஹாபாரத போர் (2)

மஹாபாரத போர் (2)
மஹாபாரத போரில் வெற்றி பாண்டவருக்கே என துரியோதனன் போர் துவங்கிய அன்றே அறிவித்தது
முதல் நாள் போரில் பாண்டவர்களின் சேனை எண்ணிக்கை குறைவானதாக இருந்தபோதிலும் த்ருஷ்டத்யும்னனால் வஜ்ர வ்யூகம் வகுக்கப்பட்டு மிக பிரம்மாண்டமானதாக அமைக்கப்பட்டதை துரியோதனன் துரோணருக்கு சுட்டிக் காட்டுகிறான்.
போர்க்கலைகளை சொல்லிக் கொடுக்கும் துரோணருக்கு இதை பார்த்தவுடன் புரியாதா? துரியோதனன் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
சரி, த்ருஷ்டத்யும்னன் குறித்து சொல்லுகையில் துரியோதனன் துரோணர் மனதில் கோபத்தை ஏற்படுத்த - பாஞ்சால தேசத்து அரசன் துருபதன் மகன் த்ருஷ்டத்யும்னன் என்று விளித்து - துரோணருக்கும் - துருபதனுக்கும் உள்ள பழைய பகையை நினைவூட்டுவதாக எண்ணி அதிகப் பிரசங்கியாக -
துருபதன் துரோணர் மீது உள்ள தீராத பகையை தீர்க்க யாஜர் மற்றும் உபயாஜர் என்ற ரிஷிகளை கொண்டு துரோணரை கொல்ல வேண்டி த்ருஷ்டத்யும்னன் (அவன் தங்கையாக திரெளபதி என்கிற க்ருஷ்ணை என்கிற பாஞ்சால தேசத்து பாஞ்சாலியையும்) தோன்றப் பெற்றார் துருபதர்.
துருபதனுக்கு போரில் துரோணர் கையாலேயே மரணம் சம்பவித்தது வேறுகதை. ஆனால் போரில் துரோணருக்கு மரணம் உறுதி, காரணம் துரோணரை கொல்லவவே (பழைய பகையில் பழிதீர்க்க) துருபதன் யாகம் மூலம் த்ருஷ்டத்யும்னனை பெற்றதைச் சொல்லிக்காட்டி துரோணரின் மரணத்தை முதல் நாள் போர்களத்திலேயே உலகறியச் சொல்லிவிட்டான் துரியோதனன்.
இதே போலவே சிகண்டியை பற்றி குறிப்பாலுணர்த்தி, பீஷ்மரை காப்பது நம் முதல் கடமை என்று சொல்லி, பீஷ்மரின் வீழ்ச்சியையும் போர் துவங்கும் முன்னரே துரியோதனன் வெளியே கொட்டி பாண்டவ வெற்றியை உறுதியாகச் சொல்லி விட்டான்.

அர்ஜூனன் ரதம்

அர்ஜூனன் ரதம்.
அர்ஜூனன் ரதம் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட ரதம்.
வாய் கண் மூக்கு செவி இந்த நான்கும் புலன்களும்
மெய்யாகிய இந்த உடல் எனும் ரதத்தின் உள்ளே பயணிக்கின்ற
அர்ஜூனன் என்கிற ஜீவாத்மாவுக்கு
போர்களமாகிய உலகில் க்ருஷ்ணன் என்ற பரமாத்மாவின் வழிகாட்டுதலில்
வெற்றி எனும் ஞானத்தை தருகிறது.
சித்ரரதன் என்ற கந்தர்வன் தன்னிடமிருந்த நூறு திவ்யமான அதிவேக குதிரைகளில் நான்கினை அர்ஜூனனுக்கு கொடுத்தான் - இந்த குதிரைகள் கொலையுண்டாலும் குறையாது 100 ஆகவே இருக்கும் - ஆக குதிரைகள் சாகா வரம் பெற்றவை.
இவை பூமி வானம் சொர்க்கம் என எங்கும் செல்லும் சக்திவாய்ந்த குதிரைகளாம்.

காண்டீவம்...

காண்டீவம்...
காண்டீவம் என்பது அர்ஜூனன் கையில் இருந்த வில். இதற்கு ஒரு வரலாறு உண்டு...
கெளரவர்களுக்கும் / பாண்டவர்களுக்கும் ராஜ்ய பாகப் பிரிவினை செய்ய பெரியோர்கள் அறிவுரைப்படி வேறு வழியில்லாது துரியோதனன் ஒப்புக் கொள்கிறான்.
ஆனாலும், பேராசை காரணமாக துரியோதனன் வளமான பகுதிகளை தன்வசம் வைத்துக் கொண்டு - வெப்பமான - இடுகாடுகள் நிறைந்த - துஷ்டமிருகங்கள் வாழும் காண்டவ வணம் என்ற பகுதிகளை (குறிப்பாக தற்போதைய டெல்லி பகுதியை) பாண்டவர்களுக்கு விட்டுக் கொடுக்கிறான்.
(நினைவிருக்கட்டும் இன்றும் கூட டெல்லியில் எந்த இயற்கை வளமும் கிடையாது)
இந்த காண்டவ வனப்பகுதியை அர்ஜூனன் கண்ணன் ஆலோசனைப் பேரில் முழுவதுமாக அக்கினிக்கு இரையாக்கி - நிலத்தை சீர்படுத்தி இந்திரப்ரஸ்தம் எனும் தலைநகரை பாண்டவர்கள் உருவாக்கினார்கள்.
இந்த காண்டவ வனத்திலிருந்து தப்பிப் பிழைத்த கார்கோடகன் எனும் கொடிய சர்ப்பமே - காண்டவ வனத்தை அழித்த அர்ச்சுனனை பழிதீர்க்க நாகாஸ்திரமாகி பின் நாட்களில் கர்ணன் கைகளில் தஞ்சம் புகுந்தது - புராண இதிகாசங்களில் நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று எத்தனை அழகாக தொடர்புடையவையாக கோர்க்கப்பட்டுள்ளது என்பது நினைத்து இன்புறத்தக்கது...
காண்டவ வனத்தை அர்ஜூனன் அக்னி தேவனுக்கு உணவாகப் படைத்ததால் - அக்னி தேவன் மனம்மகிழ்ந்து அர்ஜூனனுக்குப் பரிசளித்தது காண்டீபம் (காண்டவவனம் - காண்டீபம்)
காண்டீபம் - பனைமரத்தளவு உயரம் கொண்டது (மஹா. உத். பர்வம் 161)
காண்டீவத்துக்கு தங்கக் கவசம் உண்டு - லட்சம் ஆயுதங்களுக்கு சமமான சக்தி உடையது. (லட்சம் வில்களுக்கு அல்ல - லட்சம் ஆயுதங்கள் என்றால் - வாள், சக்ரம், ஈட்டி, கதாயுதம் என பல வகையை குறிக்கும்)
பல வர்ணம் கொண்டது - மிருதுவானது- தேவர்கள் - கந்தர்வர்கள் பூஜித்தது.
காண்டீவம் - 1000 வருடங்கள் பிரம்மதேவனிடமும் - பிரஜாபதியிடம் 503 வருடங்களும் - இந்திரன் வசம் 85 வருடங்களும், சந்திரன் 500 வருடங்களும் வருணனிடம் 100 வருடங்களும் வைத்து இருந்தனர்.
(ஆண்டுக் கணக்குள் கூட எத்தனை நேர்த்தியாக கோர்க்கப்பட்டு!!!)⁠⁠

ராம ராஜ்யம் என்றால் என்ன

ராம ராஜ்யம் என்றால் என்ன?!
ஸ்ரீ ராமன் ஆட்சியில் மக்களிடையே அல்பாயுசில் குழந்தைகள் இறந்து போனதாக நிகழ்ச்சிகள் கிடையாது.
பெண்கள் விதவைத் தன்மையை எய்தாமலும், கற்பை இழக்காமலும் நல் வாழ்வு வாழ்கிறார்கள்.
தீ, காற்று, தண்ணீர் இவற்றினால் எந்த ஆபத்தும் மக்களுக்கு ஏற்படாது.
திருடர் பயம் கிடையாது
பசி, நோய் துன்பம் கிடையாது
பயிர்கள் செழித்து செல்வம் கொழிக்கும்
மக்கள் மகழ்ச்சி பொங்க சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தார்கள்....
மேற்கு வங்கத்தைப் போல அரசு ஆஸ்பத்திரிகளில் கொத்து கொத்தாக குழந்தைகள் சாகாது. சென்னையில் இன்குபேட்டரில் குழந்தைகள் சாகாது
டாஸ்மாக்கினால் பெண்கள் விதவை ஆகமாட்டார்கள். சூரிய மின் தகடால் சரிதா நாயர் கற்பிழந்து இருக்க வாய்ப்பில்லை. நிர்பயா வழக்கும் இல்லாது இருந்து இருக்கலாம்.
கும்பகோணம் பள்ளித் தீவிபத்து கடலூர் தானே புயல், சென்னை வெள்ளம் கிடையாது.
தமிழக கள்வர்களுக்கும் காவல்துறைக்கும் கூட்டுக் களவானி உறவு இருக்காது
சுகாதாரத் துறை மூலம் காசு பார்க்க அரசு மருத்துவ மனை, ஆம்புலன்ஸ், மருத்துவ காப்பீட்டுத் திட்டமே தேவை இல்லை
காவிரிப் பிரச்சனை மணல் கொள்ளை பாசனத் தூர்வாரல் என்ற பெயரில் கொள்ளைகள் இல்லாது மக்கள் செல்வம் கொழிக்க சுகமாக இருந்திருக்கலாம்....
ராமன் - தனி ஒருவன். ஆனால் தற்போது ஜனநாயகம் என்ற பெயரிலும் / கூட்டணி என்ற பெயரிலும் நடப்பது ராஜ்யம் அல்ல - ஒரு கூட்டு வண்புணர்வு - political gang rape.⁠⁠

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...