Tuesday, January 14, 2020

தெய்வ திருமணங்கள்

தெய்வ திருமணங்கள்...
கோவில் களில் ப்ரம்மஉற்சவம்... கடவுள் இதை கொன்டாடச் சொல்லி உங்களை கேட்டானா?!
மார்கழி கடவுளுளுக்கான விரத/வழிபாடு நாட்கள்... அப்போது, ராதா /ஆண்டாள் திருமண விழாக்கள் நாள் குறிக்கச் சொல்லி ராதை அல்லது கிருஷ்ணர் உங்களிடம் கேட்டனாரா?!
திருப்பதியில் ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் நித்ய கல்யாண உத்ஸ்வ பெருமாள் என்று ஒருவர்.... தினம்தோறும் திருக்கல்யாணம் அங்கே நடக்கும்!
இந்த ஸ்ரீனிவாசமங்காபுர திருமண உபயத்தை கூட புத்திசாலிகள் அசுப நாட்களில் தவிர்த்து விடுவதால் கோவில் கட்டளை ஏற்பாடு!!!
கட்டளை முறை இல்லை என்றால் கோவிலில் / அவர்கள் செலவில்...
நம் வீட்டு குழந்தைகளுக்கு செவ்வாய்/சனி/அஷ்டமி/அமாவாசை/ நவமி/ தேய்பிறை நாட்கள்/ கரிநாள்/ஒவ்வாத நக்ஷத்திர தினங்களில் திருமணம் செய்து கொடுப்போமா?!
சைவத்தில்....
சம்பந்தர் பெருமாள் சீர்காழியில் இருந்து புறப்பட்டு மதுரை செல்கிறார்... சைவம் தழைக்க...
உடன் இருந்த அப்பர் ஸ்வாமி அவரை இன்று நாளும்/கோளும் நலமில்லை என்று தடுக்க...
வேயுறு தோளி பங்கன், என்ற பதிகம் உருவானது...
அதில்...
ஞாயிறு
திங்கள்
செவ்வாய்
புதன்
வியாழன்
வெள்ளி
சனி
பாம்பிரண்டு உடனே ... என்ற வரி வரும்...
திருமணம் செய்ய நாம் தவிர்க்கும் வார நாட்கள் செவ்வாய் சனி...
காரணம்... உப கிரகங்கள்.... (அமுதை உண்ட) ராகு/கேது ... இதில் ராகு சனி யோடும் கேது செவ்வாயோடும் இனைந்து உள்ளதாக சாஸ்திரம் /வரலாறு விஞ்ஞானம் சொல்கிறது!!!
பக்தி இல்லாமல்... தங்கள் வருமானத்துக்காக, புரோகிதர்கள், குருக்கள், பட்டர் உருவாக்கிய சம்ப்ரதாயங்களை தூக்கி எரியுங்கள்...
பௌர்ணமி குறிப்பிட்ட நக்ஷத்திரதில் வருவதை என்றாவது மாற்றி கண்டோமா ?!
திருக்கல்யாண/ வைபவம்/உற்சவம் போன்றவை... அந்நியர் தாக்கம்/ ஆட்சியில் தக்க வைத்துக் கொள்ள செய்யப்பட்டு இன்று தொடர்கிறது...
முறை தவறிய நாள்/ கோள்/ நக்ஷத்திர நாட்களில் செய்யப்படும் இது போன்ற வைபவங்களுக்கு உதவியோ/ ஆதரவோ தராதீர்கள்...
எண்ணிக்கை குறையலாம் ஆனால் உங்கள் புறக்கணிப்பால் வீரியம்/ சாநித்தியம் நிச்சயம் அதிகமாகும்...
கடவுள் யாரோ அல்ல... நம்மில் உங்களில் ஒருவரான உங்கள் வீட்டுப்பிள்ளை...
அவரை எதுவும் கட்டுப்படுத்தாது... ஆனால் அவருக்கான வைபவம் நடத்தும் நாம் மனிதர்களே...
சனி ஆதிக்கத்துக்கு பயந்து சிவனே கோமுகில்யில் பதுங்கி இருந்த வரலாறு,
ஜென்ம குரு எட்டிலே சீதையை வனத்திலே ராமர் தொலைத்ததும்
தீதிலா ஒரு பத்திலே ஈசனே தலை ஓட்டிலே இரந்து உண்டது...
என்று சொல்வது நம் ஜோதிடம்...
இன்று நாட்டில் மழை குறைவு பஞ்சம் பட்டினி அமைதி குறைவுக்கு, இது போல முரண்கள் தான் காரணம்.
இனி, இதுபோல வெளிப்படையாக யாரும் உங்களுக்கு கருத்துக்களை செல்ல வரமாட்டார்கள்

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...