போகி...
நண்பர்கள் அனைவருக்கும் இனிய போகிப் பண்டிகை நல்வாழ்த்துக்கள்
போகி என்றால் இந்திரன்
இந்த போகி அன்று நாம் விவசாய காரியங்களுக்கும் பசுக்களுக்கும் போதிய மழை வெயில் இயற்கைச் சூழல் ஆகியவற்றை பெற்றதால், அவற்றை அருளிய இந்திரனை கொண்டாடுவதற்காக, தேவேந்திரனை வண்ங்கக் கூடிய ஒரு திருநாள்
எனவேதான் இந்த பண்டிகைக்கு போகிப் பண்டிகை என்று பெயர்
ஆதியில் ஸ்ரீ கிருஷ்ணரும் ஆயர்பாடியில் இருக்கக்கூடிய இடை கூட்டமும் இந்த போகிப் பண்டிகை கொண்டாட சென்றுகொண்டிருந்தபோது, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா எதற்காக நாம் இந்த விழாவை இந்திரனுக்கு கொண்டாட வேண்டும்? இதோ இருக்கிறதே இந்த கோவர்த்தனகிரிதான் வழி செல்லக் கூடிய மேகங்களையும் காற்றை தடுத்து நமக்கு ஜீவிதங்களை குறைவின்றி தருகிறது.
எனவே நாம் அனைவரும் இந்த கோவர்த்தன மலைக்கு நம்முடைய மரியாதைகளை தெரிவிப்போம் என்று சொல்லுகிறார்
கிருஷ்ணனுடைய வார்த்தைக்கு மறு வார்த்தை இல்லை
ஆயர்பாடி கூட்டம் கோவர்த்தனகிரி தன்னுடைய மரியாதைகளை செய்யத் துவங்குகிறது
இதனால் கோபம் கொண்ட இந்திரன் இந்த ஆயர்பாடி கூட்டத்தை அழித்து விட வேண்டும் என்று சொல்லி மழை மற்றும் பலத்த காற்று வருணன் வாயு ஆகியோரை ஏவி விட, ஆயர் கூட்டமெல்லாம் பயந்து நடுங்கி கொண்டிருக்க, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, சிறு குழந்தை எப்படி ஒரு நாய் குடையை பிடுங்கி எடுக்குமோ அதுபோல கோவர்த்தனகிரியை தன்னுடைய கை விரல்களால் தூக்கி தலைக்கு மேலே உயர்த்தி நிற்கிறான்
அவ்வாறு ஸ்ரீ கிருஷ்ணன் கோவர்த்தனகிரியை தலைக்குமேல் உயர்த்தி பிடித்து நிற்கும் போது அந்த ஆயர்பாடி கூட்டம் எல்லாம் அந்த கோவர்த்தனகிரி க்கு கீழ் பாதுகாப்பாக நின்று கொண்டிருக்கிறார்கள்
ஒருவாரம் புயலும் மழையும் கொட்டித்தீர்க்கிறது
இந்திரனுக்கு புரிகிறது ஆயர்குடி காத்துக்கொண்டிருப்பது சாட்சாத் ஸ்ரீ மகாவிஷ்ணு என்று!!
ஏழு நாட்கள் கழித்து இந்திரன் காற்றையும் மழையையும் விலக்கி கிருஷ்ண பரமாத்மா விழுந்து வணங்கி துதித்து செல்கிறான்
ஆக இன்றிலிருந்து ஏழாம் நாள் கோவிந்த பட்டாபிஷேகம்
ஆனால் ஆண்டாள் பாடிய இன்றைய திருப்பாவை பாடலில் குறையொன்றுமில்லாத கோவிந்தா என்ற வரி ஒலிப்பதால் எல்லோருமே இன்றைக்குத்தான் கோவிந்த பட்டாபிஷேகம் என்று கொண்டாடி வருகிறார்கள்
ஆனால் போகிப் பண்டிகைக்கு பிறகு ஏழு நாட்கள் கோபமாக இருந்த இந்திரன் வந்துதித்த அந்த ஏழாம் நாளே கோவிந்த பட்டாபிஷேகம்!
No comments:
Post a Comment