காவேரி பிரச்சனை!
இப்பொழுது மாகாணங்களுக்கு இடையே மிகப்பெரிய பிரச்சனை நதிநீர் பங்கீடு
குறிப்பாக தேசங்களுக்கு இடையே கூட இந்தப் பிரச்சனை இருக்கிறது
சீன அரசு பிரம்மபுத்திராவின் மீது அணை கட்டுகிறது
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலே சிந்து நதி நீர் பங்கீட்டுப் பிரச்சினை இன்னும் சூடு பிடிக்கிறது
இந்த நிலையில் ஒரு சம்பவத்தை இங்கே நினைவுகூற ஆசைப்படுகிறேன்
கங்காதேவி தேவலோகத்து பெண்மணி இந்திர/ பிரம்ம சபையிலும் இருந்தவள்
இந்த கங்காதேவி ஒருமுறை சபையிலே இருக்கும் போது அவளுடைய ஆடை நழுவுகிறது
அப்போது மகாபிஷக் என்ற மன்னன் (சந்தனு மகாராஜாவின் பூர்வ ஜென்மம்) கங்காதேவியின் மேலாடை சரிந்ததை பார்த்து காமம் கொள்ள, மற்றவர்கள் தலையை குனிந்துகொள்ள, மகாபிஷக் மட்டும் அவளை காமத்தோடு பார்க்கிறான் இதனால் மகாபிஷக் மற்றும் கங்கா தேவிக்கு கொடுக்கப்படுகிற சாபம்,
பூலோகத்தில் பிறந்து குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது
எனவே கங்காதேவி மகாபிஷக் என்ற பூர்வ ஜென்மத்தில் பிரம்ம சபையிலிருந்த அவனுடைய, மறுபிறப்பாக பிறந்த சந்தனுவுக்கு வாழ்க்கைப்பட்டு 8 குழந்தைகளை பெறுகிறாள்
அவற்றில் ஒருவர் தான் பீஷ்மர்
ஆனால் இதே கங்காதேவியை, கங்கா கௌரி என்று சிவனுடைய மனைவியாகவும் நாம் பார்க்கிறோம்
ஆனால் கங்கை ஒரு தேவலோக நதி
தேவசபையிலும் இருக்கிறாள்
மகாபிஷக் ஆசைப்படுகிறான்
சந்தனுவின் மனைவி யாக இருக்கிறாள்
சிவனுடைய தலையிலும் இருக்கிறார்
எனவேதான் நதிநீரை யாரும் தனக்கென்று சொந்தம் கொண்டாட கூடாது என்ற விதி இருக்கிறது!
No comments:
Post a Comment