தீபாவளி - 7
தீபாவளித் திருநாள் குறித்து பல கதைகள் பரவலாக உள்ளன. அத்தனையும் நமக்குச் சொல்லும் பாடம் “கெட்டவையை நீக்கி நல்லதை அடைய வேண்டும்” என்பதாகும். அதாவது ஞானத்தை அடைவதே தீபாவளி” என்கின்றனர் சான்றோர்.
தீய எண்ணங்கள்தான் (நரகன்) நரகாசுரன் என்ற அசுரன். அவன் குடியிருக்கும் இடமே நம்முடைய உடல். இந்த மாயாவியை அழித்து, ஆத்ம ஜோதியாகத் திகழ்வதே தீபாவளி''. எனவே எம்மை தீய வழிக்கு இழுத்துச் சென்று கொடுமைப் படுத்தும் காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய ஆறுவகை அசுரக் குணங்களையும் அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்ட கிருஷ்ண பராமாத்மாவையும், இலட்சுமி தேவியையும் இந் நன்நாளில் துதித்து அசுர குணங்களை அழித்து மகிழ்வான வாழ்வைப் பெற திடசங்கல்பம் கொள்வோம்.
பண்டிகை பூஜைகள்:
பூஜையறையில் தட்டுகளில் புத்தாடைகள் (துணியில் மஞ்சள் தடவ வேண்டும்), பட்டாசு, பட்சணங்கள், தீபாவளி மருந்து வைத்து படைக்க வேண்டும். பின் மருந்தை விழுங்கிவிட்டு, புத்தாடை உடுத்தி பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெற்று, பட்சணம் சாப்பிட்டு பட்டாசு வெடித்துக் கொண்டாடி, ஒருவருக்கொருவர் பட்சணம் கொடுத்து மகிழ வேண்டும்.
தீபாவளி மருந்து எளிய வகை: வேப்பிலை, வெற்றிலை, ஓமம், மிளகு, வெல்லம் சிறிது சிறிது வைத்து, மைபோல அரைத்து சுண்டைக்காயளவு விழுங்கலாம். தீபாவளி மருந்து சாப்பிடுவதால் பின்னர் உண்ணும் பலகாரங்கள் ஜீரணமாகும். தீபாவளி பூஜைகள் பல உள்ளன. இவற்றில் ஒன்றைச் செய்யலாம்.
மகாலட்சுமி பூஜை
கங்கா ஸ்நானம் செய்தபின் இந்த முக்கிய பூஜையைச் செய்ய வேண்டும். அன்று லட்சுமிக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, இனிப்பு பண்டம் வைத்து வணங்கி சிறுவர்களுக்குத் தரவேண்டும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும்; கன்னிகளுக்குத் திருமணம் நடைபெறும்.
லட்சுமி குபேர பூஜை
தீபாவளிக்கு மறுநாள் லட்சுமி குபேர பூஜை செய்வார்கள். இதனால் வறுமை நீங்கி வளம் பெருகும். திருமகள் திருவருளால் செல்வம் நிறையும். பிணி, மூப்பு, துன்பம் தொலையும். “சுக்லாம் பரதரம்’ சொல்லி கணபதியை வணங்கியபின், லட்சுமி, துர்க்கா, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்து, பின் குபேர ஸ்துதி கூறி குபேரனை வணங்கவும். லட்சுமியும் குபேரனும் செல்வத்தின் அதிபதிகள்.
“ஓம் குபேராய நம; ஓம் மகாலட்சுமியே நம’
என 108 முறை சொல்லலாம்.
குலதெய்வ வழிபாடு
நம் வீட்டு குலதெய்வத்தை நினைத்து- முக்கியமாக பெண் தெய்வங்களை நினைத்து அவர்களுக்குப் பிடித்த உடை, பூஜைப் பொருட்கள், பட்சணங்கள் வைத்து வணங்க வேண்டும். இதை ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் செய்யலாம். தீபாவளியன்று செய்வது மிகவும் நல்லது.
முன்னோர் வழிபாடு
நம் வீட்டில் இறந்துபோன முன்னோர்களை எண்ணி, அவர்களுக்குப் பிரியமானவற்றை வைத்து வணங்கி, அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும். நன்மைகள் கிடைக்கும்.
கோவர்த்தன பூஜை
வடமாநிலங்களில் தன திரயோதசி, நரக சதுர்த்தி, தீபாவளி, அன்னக்கூட்டு, பாய்ஜ் என அடுத்தடுத்து வரும் ஐந்து நாட்கள் முக்கியமாகும். இதில் கோவர்த்தன பூஜையை பீகார், அரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேச மாநிலங்களில் சிறப்பாகச் செய்வர். மதுராவுக்கு மேற்கே 26 கிலோமீட்டரில் மானச கங்கை குளக்கரையில் கோவர்த்தனகிரி உள்ளது. 5,000 வருடங்களுக்கு முன்பு இது 29 கிலோமீட்டர் உயரம் கொண்டதாக இருந்ததாம். இப்போது 80 அடி உயரமாக உள்ளது.
பக்தர்கள் விழாவன்று இரவு விழித்திருந்து ஆடிப் பாடுவர். சிறு மலை உருவாக்கிஅலங்கரிப்பர். அதன்முன் பலவித பலகாரங்களும், 56 வகை பதார்த்தங்களும், சாப்பாடும் வைத்து மலைபோல செய்வர். இதற்கு அன்னக்கூட்டு எனப் பெயர். பின் பூஜை செய்து அனைவரும் சாப்பிடுவர். 38 கிலோமீட்டர் சுற்றளவுள்ள கிரிவலப் பிரதட்சிணமும் செய்வர். இதனால் கோவர்த்தன கிரிதாரி அருள் நமக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
துளசி கல்யாணம்
தீபாவளிக்குப் பின்வரும் துவாதசியன்று துளசிச் செடிக்கு, திருமாலாக பாவித்த நெல்லி கிளைக்கும் திருமணம் செய்விப்பார்கள். பிரபோதன ஏகாதசி என்பது தீபாவளிஅமாவாசைக்குப்பின் வரும் ஏகாதசி.
அன்றுதான் திருமால் மகாபலிக்கு காவலாக நான்கு மாத யோக நித்திரை செய்து பின் வைகுண்டம் திரும்பிய நாள். அதற்கு மறுநாள் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற திருமால் துளசியை மணந்து கொண்டார்.
தீபாவளி - 8 இல் தொடரும்...
#எவர்கிங்_ஏகாம்பரம்
தீபாவளித் திருநாள் குறித்து பல கதைகள் பரவலாக உள்ளன. அத்தனையும் நமக்குச் சொல்லும் பாடம் “கெட்டவையை நீக்கி நல்லதை அடைய வேண்டும்” என்பதாகும். அதாவது ஞானத்தை அடைவதே தீபாவளி” என்கின்றனர் சான்றோர்.
தீய எண்ணங்கள்தான் (நரகன்) நரகாசுரன் என்ற அசுரன். அவன் குடியிருக்கும் இடமே நம்முடைய உடல். இந்த மாயாவியை அழித்து, ஆத்ம ஜோதியாகத் திகழ்வதே தீபாவளி''. எனவே எம்மை தீய வழிக்கு இழுத்துச் சென்று கொடுமைப் படுத்தும் காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய ஆறுவகை அசுரக் குணங்களையும் அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்ட கிருஷ்ண பராமாத்மாவையும், இலட்சுமி தேவியையும் இந் நன்நாளில் துதித்து அசுர குணங்களை அழித்து மகிழ்வான வாழ்வைப் பெற திடசங்கல்பம் கொள்வோம்.
பண்டிகை பூஜைகள்:
பூஜையறையில் தட்டுகளில் புத்தாடைகள் (துணியில் மஞ்சள் தடவ வேண்டும்), பட்டாசு, பட்சணங்கள், தீபாவளி மருந்து வைத்து படைக்க வேண்டும். பின் மருந்தை விழுங்கிவிட்டு, புத்தாடை உடுத்தி பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெற்று, பட்சணம் சாப்பிட்டு பட்டாசு வெடித்துக் கொண்டாடி, ஒருவருக்கொருவர் பட்சணம் கொடுத்து மகிழ வேண்டும்.
தீபாவளி மருந்து எளிய வகை: வேப்பிலை, வெற்றிலை, ஓமம், மிளகு, வெல்லம் சிறிது சிறிது வைத்து, மைபோல அரைத்து சுண்டைக்காயளவு விழுங்கலாம். தீபாவளி மருந்து சாப்பிடுவதால் பின்னர் உண்ணும் பலகாரங்கள் ஜீரணமாகும். தீபாவளி பூஜைகள் பல உள்ளன. இவற்றில் ஒன்றைச் செய்யலாம்.
மகாலட்சுமி பூஜை
கங்கா ஸ்நானம் செய்தபின் இந்த முக்கிய பூஜையைச் செய்ய வேண்டும். அன்று லட்சுமிக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, இனிப்பு பண்டம் வைத்து வணங்கி சிறுவர்களுக்குத் தரவேண்டும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும்; கன்னிகளுக்குத் திருமணம் நடைபெறும்.
லட்சுமி குபேர பூஜை
தீபாவளிக்கு மறுநாள் லட்சுமி குபேர பூஜை செய்வார்கள். இதனால் வறுமை நீங்கி வளம் பெருகும். திருமகள் திருவருளால் செல்வம் நிறையும். பிணி, மூப்பு, துன்பம் தொலையும். “சுக்லாம் பரதரம்’ சொல்லி கணபதியை வணங்கியபின், லட்சுமி, துர்க்கா, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்து, பின் குபேர ஸ்துதி கூறி குபேரனை வணங்கவும். லட்சுமியும் குபேரனும் செல்வத்தின் அதிபதிகள்.
“ஓம் குபேராய நம; ஓம் மகாலட்சுமியே நம’
என 108 முறை சொல்லலாம்.
குலதெய்வ வழிபாடு
நம் வீட்டு குலதெய்வத்தை நினைத்து- முக்கியமாக பெண் தெய்வங்களை நினைத்து அவர்களுக்குப் பிடித்த உடை, பூஜைப் பொருட்கள், பட்சணங்கள் வைத்து வணங்க வேண்டும். இதை ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் செய்யலாம். தீபாவளியன்று செய்வது மிகவும் நல்லது.
முன்னோர் வழிபாடு
நம் வீட்டில் இறந்துபோன முன்னோர்களை எண்ணி, அவர்களுக்குப் பிரியமானவற்றை வைத்து வணங்கி, அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும். நன்மைகள் கிடைக்கும்.
கோவர்த்தன பூஜை
வடமாநிலங்களில் தன திரயோதசி, நரக சதுர்த்தி, தீபாவளி, அன்னக்கூட்டு, பாய்ஜ் என அடுத்தடுத்து வரும் ஐந்து நாட்கள் முக்கியமாகும். இதில் கோவர்த்தன பூஜையை பீகார், அரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேச மாநிலங்களில் சிறப்பாகச் செய்வர். மதுராவுக்கு மேற்கே 26 கிலோமீட்டரில் மானச கங்கை குளக்கரையில் கோவர்த்தனகிரி உள்ளது. 5,000 வருடங்களுக்கு முன்பு இது 29 கிலோமீட்டர் உயரம் கொண்டதாக இருந்ததாம். இப்போது 80 அடி உயரமாக உள்ளது.
பக்தர்கள் விழாவன்று இரவு விழித்திருந்து ஆடிப் பாடுவர். சிறு மலை உருவாக்கிஅலங்கரிப்பர். அதன்முன் பலவித பலகாரங்களும், 56 வகை பதார்த்தங்களும், சாப்பாடும் வைத்து மலைபோல செய்வர். இதற்கு அன்னக்கூட்டு எனப் பெயர். பின் பூஜை செய்து அனைவரும் சாப்பிடுவர். 38 கிலோமீட்டர் சுற்றளவுள்ள கிரிவலப் பிரதட்சிணமும் செய்வர். இதனால் கோவர்த்தன கிரிதாரி அருள் நமக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
துளசி கல்யாணம்
தீபாவளிக்குப் பின்வரும் துவாதசியன்று துளசிச் செடிக்கு, திருமாலாக பாவித்த நெல்லி கிளைக்கும் திருமணம் செய்விப்பார்கள். பிரபோதன ஏகாதசி என்பது தீபாவளிஅமாவாசைக்குப்பின் வரும் ஏகாதசி.
அன்றுதான் திருமால் மகாபலிக்கு காவலாக நான்கு மாத யோக நித்திரை செய்து பின் வைகுண்டம் திரும்பிய நாள். அதற்கு மறுநாள் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற திருமால் துளசியை மணந்து கொண்டார்.
தீபாவளி - 8 இல் தொடரும்...
#எவர்கிங்_ஏகாம்பரம்
No comments:
Post a Comment