Wednesday, October 30, 2019

தீபாவளி -8

தீபாவளி - 8

வரலாற்றில் தீபாவளி
மதுரை மாநகரில் திருமலை நாயக்கர் ஆட்சியில்தான் தீபாவளிப் பண்டிகை அறிமுகமானது.
கி.பி. 1117-ல் சாளுக்ய திரிபுவன மன்னனின் கன்னட கல்வெட்டில், ஆண்டுதோறும் தீபாவளியன்று சாத்யாயர் என்ற அறிஞர்களுக்கு தீபாவளி பரிசு தந்ததாகக் குறிப்பு உள்ளது. தென்னிந்திய தீபாவளி முதல் குறிப்பு இதுதான்.

ஹர்ஷரின் நாகானந்தம் நாடக நூலில் தீபாவளி பற்றிக் குறிப்பிட்டுள்ளார். புதுமணத் தம்பதிகளுக்குப் புத்தாடை வழங்கியதையும் அதில் கூறியுள்ளார்.
குடந்தை சாரங்கபாணி ஆலய கல்வெட்டு, தீபாவளியன்று பெருமாளுக்கு விசேஷ பூஜை, ஆராதனை நடந்ததைக் கூறுகிறது.

காளத்தி ஆலயத்தில் உள்ள கல்வெட்டில், தீபாவளியன்று இறைவனுக்கு விசேஷ பூஜையும் மானியமும் தந்த செய்தி உள்ளது.
மொகலாய பேரரசர் ஷாஜஹான் தீபாவளியன்று பெருவிருந்து ஏற்பாடு செய்து, சமபந்தி போஜனம் கொடுத்து பட்டாசு கொளுத்தி வாணவேடிக்கை செய்துள்ளார்.

சுவாமி ராம்பாத்ஹா என்ற ராம தீர்த்தர் தீபாவளியன்று சந்நியாசம் பெற்றார்.
பவிஷ்யோத்ர புராணத்தில் தீபாவளி என்றும்; காமசூத்ராவில் கூராத்ரி என்றும்; “கால விவேகம்’, “ராஜமார்த்தாண்டம்’ ஆகிய நூல்களில் சுக்ராத்ரி என்றும் தீபாவளி குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள “ஆகாச பைரவ ஜல்பம்’ என்ற ஓலைச் சுவடியில் வாணவேடிக்கை பற்றி உள்ளது. சிவகாசி பட்டாசு தொழில் 1923-ல் ஆரம்பிக்கப்பட்டது. தீபாவளி வெடி வெடிக்கும் பழக்கம் பேரரசர் பாபர் (1483- 1530) காலத்தில் ஏற்பட்டது. மஹதாப் என்ற உருது சொல்லுக்கு மத்தாப்பு எனப் பொருள்.

நேபாளத்தில்…
திஹார் என்ற பெயரில் ஐந்து நாள் கொண்டாடுகின் றனர். தீபாவளி முதல் நாள் காகங்களுக்கு தயிர் சாதம் வைப்பர். இரண்டாம் நாள் பைரவரான நாய்க்கு விருந்து வைப்பர். மூன்றாம் நாள் பசுக்களுக்கு பூஜை செய்வர். நான்காம் நாள் வீட்டுப் பிராணிகளுக்கு உணவு கொடுப்பர். ஐந்தாம் நாள் சகோதர- சகோதரிகள் நலனுக்கு பைலாதாஜ் என்ற பண்டிகை கொண்டாடுகின்றனர்.

உலகெங்கும் தீபாவளி
இங்கிலாந்தில் கைபாகஸ் என்றும்; ஸ்வீடனில் லூசியா என்றும்; ஜப்பா னில் டோராநாக்ஷி என்றும்; சீனாவில் தஹிம் ஹீபர் என்றும்; பர்மாவில் தாங் கீஜி என்றும் தீபாவளிப் பண்டிகையை வரிசையாய் தீபம் ஏற்றி கொண்டாடுவர்.

பர்மா, சீனா, சயாம் நாடுகளில் மூங்கிலில் வண்ணக் காகித அலங்காரம் செய்து அதில் தீபமேற்றி ஆடிப் பாடுவர். இது ஆகாய தீபம். கனடா நாடாளுமன்றத்தில் 1998-ல் தீபாவளி கொண்டாடினர். வண்ண விளக்கு அலங்காரத் துடன் மகாலட்சுமி பூஜை செய்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கயானாவில் இந்துக்கள் வாழும் இடத்தில், சம்பிரதாயப்படி தீபாவளியைக் கொண்டாடு கின்றனர். அன்று அங்கு தேசிய விடுமுறை நாள்.

இந்தியாவில் ராஜஸ்தான் வேடுவர் வீர விளையாட்டு ஆடுவர். ராஜபுத்திரர்கள் ராம பட்டாபிஷேகம் கொண்டாடுகின்றனர். சௌராஷ்டிரத்தில் லட்சுமி பூஜையுடன் புது கணக்கு எழுதுவர். மகாராஷ்டிரத்தில் தாம்பூலம் போடும் திருநாள் இதுதான். பஞ்சாப் பொற் கோவிலில் தீபமேற்றி அலங்காரம் செய்வர். இமாசலப் பிரதேசத்தில் பசுவிற்கு பூஜை செய்வர். மத்திய பிரதேசத்தில் குபேர பூஜை செய்வர். வங்காளத்தில் காளி பூஜை செய்து கொண்டாடுவர்.

தீபாவளி குறித்த பதிவு 9 சிறிது இடைவெளிக்குப்பின் தொடரும். ....

#எவர்கிங்_ஏகாம்பரம் 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...