Monday, January 21, 2019

சுடுகாட்டு பணியாரம் 4ல் துவங்கி 1ல் முடியும்-2

4இல் துவங்கி 1 இல் முடியும்.
இது 2வது
மகாபாரதம் ஆதி பர்வம் அத்தியாயம் 13
அரக்கு மாளிகையில் இருந்து தப்பிய பாண்டவர்கள் வியாசரின் ஆலோசனையின் பேரில் ஏகசக்ரம் என்கிற நகரில் ஒரு ப்ரம்மணர் வீட்டில் தங்கி இருந்தனர்....
ப்ரம்மணர் வேடத்தில் நகரில் பிக்ஷை எடுத்து தொடர்ந்து தலைமறைவாகவே வாழ்ந்து வந்தார்கள். இந்த காலகட்டத்தில் தான் பகாசுரன் என்ற அரக்கனை பீமன் வதம் செய்கிறான்.
பகாசுரன் என்ற அரக்கனுக்கு முறைவைத்து ஏகசக்ரம் நகர மக்கள் தங்களில் ஒருவரை உணவாக்கி கொள்வது என்றும், அன்றைய முறையில் குந்தியோடு பாண்டவர்கள் தங்கி இருந்த ப்ரம்மணர் வீட்டு முறை....
அப்போது, அந்த ப்ரம்மணர் பேசும் விஷயங்களில் மிக முக்கியமான இரண்டு வசனங்களை இங்கே பார்க்கலாம்...
#1
திறமை
அக்கறை
விவேகம்
எதுவுமே இல்லாத ஒரு அரசனுடைய ராஜ்யத்தில் ஒரு பகுதியாக நமது நகரம் அமைந்து விட்டது. அரக்கனிடமிருந்து நம்மை காப்பாற்ற அரசன் எதுவும் செய்யப்போவது இல்லை.
#2
எங்களுக்கு இது வேண்டியதுதான்... ஆட்சி செலுத்த அருகதையற்ற, திறமை இல்லாத அக்கறையற்ற அரசன் ஆளும் இந்த ராஜ்யத்தில் வசிக்க நாங்கள் முடிவு எடுத்ததால் இந்த நிலை எங்களுக்கு. ஒரு மனிதன் முதலில் நல்ல ராஜ்யத்தை தேர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.
இதன் தொடர்ச்சியாக அந்த பிராமணன் சொல்வது, மக்களை ரக்ஷிக்க முடியாத அரசன் உள்ள நாட்டை விட்டு மக்கள் வெளியேறி வேறு நாட்டுக்கு சென்று விடலாம்.... என்று...
இன்று, 2018 ஆம் ஆண்டில் -
இப்போது, இந்த நாட்டில் அப்படிப்பட்ட ஒரு நிலைமைதான்... ஒரு கேடுகெட்ட அரசாங்கத்தை உருவாக்க நமக்கு வாக்காளர் அடையாள அட்டை... அறுக்க மாட்டாதவன் இடுப்பில் அலங்காரமாக 58 அரிவாள்...
சொந்த நாட்டிலேயே பெரும்பான்மை மக்கள் அகதிகளை போல அடிமை யை போல வாழுகின்ற இந்த நாட்டில் (காஷ்மீர் பண்டிட் போல - தமிழக ப்ரம்மணர் கள் போல - திராவிட காவாலிகள் ராஜ்யத்தில் இந்துக்கள் போல) - இலங்கை அகதிகள், ரோஹிங்கிய அகதிகள்...
புழுத்த அரிப்பு கடவுள் மறுப்பு என்ற பெயரில் கடவுளையே நிந்திக்கும் ஒரு கேடுகெட்ட பொருக்கிகளை தட்டிக் கேட்க உரிமை இல்லாத அரசு அறநிலையத்துறை என்ற பெயரால் ஆலயங்களை அதன் வருமானங்களை கொள்ளை அடிக்க மட்டுமே செய்கிறது....
நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு....
அடுத்ததாக முக்கியமான நிறைவுப் பகுதி.... இதுவரை எழுதப்பட்ட 3 பகுதிகளின் நோக்கம் அதில் வெளியிடப்படும்

சுடுகாட்டு பணியாரம் 4ல் துவங்கி 1ல் முடியும்-3

4 இல் துவங்கி 1 இல் முடியும்.
இது 3 வது....
யுத்த காலத்தில் ராணுவ தேவைகளுக்கு முன்னுரிமை தரப்படும். அப்போது மக்களுக்கு உணவு பொருட்களை ரேஷனில் வழங்குவார்கள்.
மேலும், இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் உணவு உற்பத்தி குறைவாக இருந்தது. எனவே மக்களுக்கு உணவுப் பொருள்களை ரேஷனில் வழங்கினார்கள்.
இன்றைய காலகட்டத்தில் ரேஷன் என்பதே தேவை இல்லாத ஒன்று. ஆனால் ஆட்சியாளர்கள் ரேஷன் அட்டைகளை தங்கள் வாக்கு வங்கி அரசியலுக்கு உபயோகப்படுத்தி - இலவசங்களை அள்ளிவிட்டு நம் மக்களை பிச்சைக்காரர்களாகவே வைத்து உள்ளனர்.
20 கிலோ அரிசி... இதை காக்கை கள் கூட சீண்டுவது இல்லை. அன்பு இல்லங்கள், முதியோர் இல்லங்களில் கூட ரேஷன் அரிசி வேண்டாம் என்று சொல்லி/ அறிவிப்பு பலகையில் கூட எழுதி வைத்து உள்ளனர்.
அரைத்து மாடுகளுக்கு வைத்தால் அவை அதை தின்றுவிட்டு கழியத் தொடங்கி விடுகிறது...
ரேஷன் கடைக்கு உள்ளே சென்று பாருங்கள், சர்க்கரை அரிசி கோதுமை என்று எல்லா பொருள்களிலும் எலிப் புழுக்கை, கரப்பு சக்கை கூடவே மக்கிய நாற்றம்.... எல்லாவற்றுக்கும் மேலாக அளவு குறைவு...
கொடுக்கும் எல்லா பொருள்களையும் ஒரே நாளில் கொடுத்தாலாவது தேவலாம்.
அரிசி ஒருநாள், சர்க்ரை ஒருநாள், கோதுமை ஒருநாள், மண்ணெண்ணெய் ஒருநாள், பாம் ஆயில் ஒருநாள், துவரம் பருப்பு ஒருநாள், உளுந்து ஒரு நாள்... ஒவ்வொன்றுக்கும் ஒரு ஒரு நாள் கால் கடுக்க que வில் நின்று லட்சக்கணக்கான மக்களின் கோடிக்கணக்கான உழைப்பு மணிகள் வீணாகின்றன.
2இல் கொஞ்சம் தர்மம் பேசுவோம்

சுடுகாட்டு பணியாரம் 4ல் துவங்கி 1ல் முடியும் -4

4 இல் துவங்கி 1 இல் முடியும்.
4.
சுடுகாட்டுப் பணியாரம்....
80 களில் மயிலாடுதுறையில் மகாதானத் தெருவில் வசித்தோம். நாங்கள் அப்போது அண்ணன் தம்பிகள் 3 பேர்...
தெருவில் நல்லது கெட்டது குறிப்பாக கெட்டது நடந்தால் முதல் தகவல் எங்களுக்கே வரும்....
ஓலை பாய், வாகனம், தயாரிப்பில் துவங்கி வெட்டியானிடம் கூலி பேசுவது உட்பட என் அண்ணன்கள் துரை, இல்லாத நேரத்தில் கணேசன்.
நான் அருகே இருந்து உதவுவேன்.... தோள் போடுவேன்....
யாத்திரை தானம் வாங்க மாட்டோம்.... காரணம் புண்ணியம் எங்களுக்கு வேண்டி.. வீட்டுக்கு வந்து பூணூல் மாற்றி மாலை சிவன் கோவில் தரிசனம்....
மறுநாள், சஞ்சயணம்.... எங்களில் ஒருவர் அங்கே இருப்போம்... காரணம், வேலை குறைவுதான்!!!
முதல் நாள் வாய்க்கு அரிசி... காசோடு போடுங்க என்று வெட்டியான் கூவிக்கொண்டே இருப்பான்.... மூங்கில் களை கண்டிப்பாக வெட்டி.... போர்த்திய துணிகளை நாங்கள் கிழிப்போம்.... எங்களிடம் மட்டும் அஞ்ஞான் என்ற அந்த வெட்டியானுக்கு பயம் கலந்த மரியாதை.... அடக்கி வாசிப்பான்...
மற்றவர்களிடம் கூலியில் துவங்கி, மூங்கில் வெட்ட துணி கிழிக்க என்று எல்லாம் சண்டை....
சடலத்தின் மீது போர்த்தப் பட்ட துணி, வாயிலிட்ட அரிசி, காசு மூங்கில் எல்லாவற்றையும் திரும்பி பார்க்காமல் நாம் செல்லும் போது அஞ்ஞான் தன் வசமாக்கிக் கொள்வான்....
மறுநாள், சுடுகாட்டு பணியாரம், அரிசி வடை, இளநீர் எல்லாம் வெட்டியானுக்கே....
இன்று.... நிலைமை தலை கீழ்.... பெருகிய மக்கள் தொகை, நித்திய அதிக மரணம், எரிவாயு தகனம், pollution control fees.... மாமூல் பேரம், வெட்டியான் (அரசு ஊழியன் ஆகிப்போன சுடு/இடு காட்டு ஊழியன்) இறந்தவனை விட பெரிய பெரிய பணக்காரன்.... அரிசி/ சில்லறை/துணி/மூங்கிலுக்கு ஆசை படுவதே இல்லை....
ஆனால், நாம் இந்த தேசத்தின் பொது மக்கள்.... இன்றும் கூட எலி புழுக்கை போட்ட எடை குறைந்த பழுப்பு நிற ₹25 சர்க்கரை/ மக்கிய வாசம் வீசும் மோட்டா ரக அரிசி, 1 முழ கரும்பு, cancer வர காரணமான பருப்பு பாமாயில் போன்றவற்றுக்கு ரேஷன் que வில் பல மணி நேரம் கால் கடுக்க....
4 இல் துவங்கி 1இல் முடியும் தொடரில் 3வது அடுத்து வரும். 

Sunday, January 20, 2019

பீஷ்மர்

ஸ்ரீ கிருஷ்ணன், வேளுக்குடி உரை யில் கேட்டது....
பீஷ்மர் மகா பண்டிதர்.... அரசர் கள்/ரிஷி கள் என எல்லோருமே அவரிடம் சந்தேகம் தெளிவார்கள்...
பீஷ்மர் தன் தந்தை சந்தணுவுக்கு ஸ்ரார்தம் செய்தாராம்....
மகன் பீஷ்மர் செய்யும் ஸ்ரார்தத்தில் மகிழ்ந்த தந்தை சந்தனு பூமிக்குள் இருந்து கையை நீட்டி நேரில் தன் கையில் பிண்டத்தை கொடு என்று கேட்க.... பீஷ்மர் சாஸ்திரத்தில் பிண்டம் பூமியில் தரப்பட /இடப்பட வேண்டும் என்றே சொல்லி இருக்கு... இந்த திவசம் கூட சிரார்த்தம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்வதால் செய்கிறேன்... என்று சொல்லி பிண்டத்தை சந்தனு கையில் தராமல் தரையில் வைத்தாராம் பீஷ்மர்....
பிரமாணம் என்பது சாஸ்திரம் மட்டுமே... மகாபாரதம் சாந்தி பர்வத்தில் அநேகமாக அனைத்து சாஸ்திர சம்பிரதாய ராஜ நீதி விளக்கங்களும் உள்ளன.

Saturday, January 19, 2019

வாதாபி கணபதி-4 நிறைவு

பரஞ்சோதியார் மற்றும் அவரது மனைவி திருவெண்காட்டு மங்கை தங்கள் தலைமகன் சீராளனை உத்திராபதியார் கேட்டபடி கறி சமைத்து பரிமார -
சிவனடியார் உத்திராபதி தலைக்கறி எங்கே எனக் கேட்க பணிப்பெண் சந்தன நங்கை அதையும் படைக்க -
உத்திராபதியார் இல்லத்தின் உறுப்பினர் ஒருவரும் தன்னோடு உணவருந்த அமர வேண்டும் எனக் கேட்க -
பரஞ்சோதியார் தானே உடன் அமர்ந்து உண்ணுவதாகச் சொல்ல -
உத்திராபதியார் நீ கர்த்தா - மாகேஸ்வர பூஜை முடித்த பின்னரே உணவு அருந்துவது முறை - அதனால் உன் மகனை என்னோடு அமரச் சொல் எனக் கேட்க...
பரஞ்சோதியார் சொல்கிறார் - அவன் இங்கே உதவான் என... ஆனால் உத்திராபதியார், வாய்விட்டு அழை என வற்புறுத்த - பரஞ்சோதியார் வாசல் நோக்கி கணீரென்ற குரலில், மகனே சீராளா, மகாதேவன் அடியாரோடு உணவுகொள்ள வா எனச் சொல்ல -
பாடசாலையிலிருந்து ஓடிவரும் பிள்ளையாய் சீராளன், வந்தேன் என உள்ளே வர...
உத்திராபதியார் மறைய வீட்டின் உள்ளே ஜோதிப்பிழம்பில் பார்வதி பரமேஸ்வரனாய் தன் மடியில் கந்தனை அமர்த்திக் கொண்ட நிலையில் சோமஸ்கந்தராக காட்சி தந்து - பரஞ்சோதியார் - வெண்காட்டு மங்கை - சீராளன் - பணிப்பென் சந்தன நங்கைக்கு திருவடி ஐக்கியமளித்தார்.
முக்கிய குறிப்பு - சிவாலயஙகளில் 63 நாயன்மார்கள் சந்நிதி கடைசியில் பார்வதி பரமேஸ்வரன் ரிஷபத்தின் மீது ஆரோகணித்து - காக்ஷி நாதர் என்ற பெயரில் அமைந்திருப்பார். எல்லா நாயன்மாருக்கும் காக்ஷிநாதராகவே வந்த ஈசன் சிறுத்தொண்டர் பரஞ்சோதியாருக்கு மட்டும் மடியில் மகனை இருத்தி சோமஸ்கந்தராக காக்ஷி கொடுத்தார்.
இது, ஆதி நாயகனான தன்னாலேயே பிள்ளைப் பாசத்தை விட முடியவில்லை - ஆனால் பரஞ்சோதியார் செய்த செயல் தன்னையும் மிஞ்சிய தியாகம் என்ற பொருள் படுவதாக.
(இது ஒரு கனவு நிலை அவஸ்தை - அதன் பயனாய் செய்த சிவப்பணிக்கான பரிசாய் மோக்ஷம் என்றும் சொல்பவர்கள் உண்டு)
-நமசிவாய-

வாதாபி கணபதி-3

எங்கு தேடியும் சிவன் அடியாரை காணாத பரஞ்சோதியார் வீடு வந்து உத்திராபதியார் குறித்த தகவல் கேட்டு பெருமகிழ்வோடு கோவிலுக்குச் சென்று - சிவனடியார் காலில் விழுந்து நமஸ்கரித்து வீட்டுக்கு வந்து அமுது உண்ண வேண்டினார்.
உத்திராபதியார் சொன்ன மறுமொழி...
யாம் ஆறு மாதத்துக்கு ஒரு முறையே உணவு எடுப்போம். அதனால் எனக்கு குறையில்லா தலை நரப்பசுங்கன்று கறியுடன் உணவு வேண்டும் - அதை முகமலர்ச்சியோடு கண்ணீரின்றி தாய் மடியிலிருத்தி தந்தை வெட்டி கறி சமைக்க வேண்டும் - எனக்கு இப்போது பசி மிகுதியாய் இருக்கிறது - ஆக சீக்கிரமாக உணவு தேவை - உன்னால் அப்படி ஒரு உணவு தர முடியுமா?
ஒரு நாட்டின் போர் தளபதியாக பர்சோதியார் உயிர் கொலைக்கு பழக்கமானவரே - ஆயினும் இங்கே அடியார்க்கு அமுது படையல் பணி - அதில் உள்ள நிபந்தனைகளின் ஆழத்தை பின்னே தள்ளியது - பரஞ்சோதியார் விரைவில் உணவு தயாரித்து கொண்டு தங்களை அழைக்கிறேன் சிறிது அவகாசத்தில் - எனக் கூறி வீடு வந்தார்.
பரஞ்சோதியாருக்கு கால அவகாசமும் குறைவு - பொன் பொருள் வேண்டி யாரும் பிள்ளையை விற்க துணிந்தாலும் மடியில் வைத்து முகமலர்வோடு தந்தை அரிய வேண்டும் -
வீட்டுக்கு வந்து திருவெண்காட்டு மங்கை யிடத்தே நிலையைச் சொல்லி சீராளனே வழி என்ற முடிவுக்கு வந்தனர்.
பாடசாலைக்கு சென்றிருந்த சீராளனை அழைத்து வந்தனர். குழந்தை என்ன விசேஷம் அம்மா - பெரிய அடியார் யாரோ வந்திருக்கிறார்களா? நிறைய பதார்த்தங்களோடு சாப்பிடப் போகிறேன் - என்று தானே விருந்தாகப் போவது தெரியாமல்!
சீராளனை குளிப்பாட்டி நறுமணம் சூட்டி - வீட்டில் இருந்த சந்தன நங்கை என்ற பணிப்பெண்னை புழக்கடைக்கு அனுப்பி விட்டு மகிழ்வோடு சீராளன் தாய் மடியில் தகப்பனால் கறிக்காக வெட்டப்பட்டான்.
#சந்தன_நங்கை என 4 ஆம் பகுதி தொடரும்.

வாதாபி கணபதி-2

வாதாபி கணபதி -1
உத்ராபதி - 2
பரஞ்சோதி - திருவெண்காட்டு மங்கை இனிதே வாழ அவர்களை ஆட்க்கொள்ள முடிவு செய்த சிவபெருமான் துவங்கினார் தன் திருவிளையாடலை.
சீராளன் 5 வயது மகனாய் பாடசாலைக்கு சென்ற இருக்க - ஒரு குறிப்பிட்ட நாளில் மாகேஸ்வர பூஜை எங்கு தேடியும் அடியார் ஒருவரும் கிடைக்கவில்லை. (சிவனடியாருக்கு அமுது படைப்பதை மாகேஸ்வர பூஜை என்பார்கள் - சிவபெருமானே அடியார் ரூபத்தில் உணவு உண்ணுவதாக கருதி அடியாருக்கு பாதம் கழுவி தூப தீபம் காட்டி அவர் அமுது உண்ணுகையில் விசிறி கொண்டு வீசூதல் போன்ற மரியாதைகளை செய்வது)
பரஞ்சோதியார் அடியாரை தேடி ஊர் முழுவதும் அலைந்து கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் பரஞ்சோதியார் இல்லம் தேடி பைரவ கோலமாக சிவபெருமான் பரஞ்சோதியார் இல்லம் தேடி வந்தார்.
வீட்டில் திருவெண்காட்டு மங்கை மற்றும் சந்தனநங்கை என்ற பணிப்பெண் ஆகியோர் இருக்க -
வீட்டில் யார் என குரல் - அடியாரோடு வருவார் என பதி பரஞ்சோதியாருக்காக வாசல் நோக்கிக் காத்திருந்த திருவெண்காட்டு மங்கை, வாருங்கள் சுவாமி - நாங்கள் புண்ணியர்களானோம் - வாருங்கள்... என் கணவர் அமுது பூஜை செய்ய அடியார் தேடிச் சென்றுள்ளார் - வந்து அமருங்கள் - அவருக்கு தகவல் சொல்லி விடுகிறேன் - இப்போது வந்து விடுவார் - நீங்கள் வந்து அமருங்கள் - என்று சொல்ல - ஈசன், யாம் உத்திராபதி - பெண்கள் தனித்திருக்கும் இல்லங்களில் நுழைவதில்லை - கணபதீச்சரத்து ஆத்தி மரத்தடியே காத்திருப்போம் - உன் கணவர் வந்த பின் சந்திக்கச் சொல் என புறப்பட்டார்.
உத்திர - என்பது வடதிசை - உத்திர என்பது மேல் பகுதி - விண்ணுலகுக்குப் பதி - அந்த விண்ணுலகை அடைய ஆள் சேர்ப்பு ஊருக்கு வடக்கே இருக்கும் - அந்த சுடலைப் பதி என்பதை தெளியலாம்.
நரப்பசுங்கன்று - 3 ஆம் பகுதியாக!

வாதாபி கணபதி-1

#வாதாபி_கணபதி தமிழகம் வந்த கதை -1
ஆதி தஞ்சை மாகாணத்தின் திருச் செங்காட்டாங்குடியில் மாமாத்திரர் குலத்தில் பரஞ்சோதி என்பவர் அவதரித்தார்.
இந்தப் பரசோதியர் சிறந்த சிவபக்தர். ஆயினும் வாழும் வழியாய் நரசிம்ம வர்ம பல்லவனிடத்து தளபதியாய் பணியாற்றி வடதிசை வாதாபி நகரை வென்று பொன் பொருள் மண் மற்றும் அருளும் கணபதியையும் கொண்டு வந்து அரசரிடம் சமர்ப்பித்தார்.
பரஞ்சோதியாரின் இத்துனை பராக்ரமத்திற்கும் காரணம் அவரின் சிவபக்தியே காரணம் என்பதை உணர்ந்த மன்னர் அவரை சேனைப் பொறுப்பிலிருந்து விடுவித்து சொந்த ஊர் சென்று சிவதொண்டில் இருக்க வேண்டும் என விண்ணப்பித்து பொன்னோடும் பொருளும் தந்து அருளும் வாதாபி கணபதியையும் நினைவாய் தந்து அனுப்பி வைத்தான்.
சொந்த ஊர் திருச் செங்காட்டங்குடி திரும்பிய பரஞ்சோதியார் அவ்வூர் சிவாலயத்தில் வாதாபி கணபதியை ஆத்திமரத்திடை நிறுவி வழிபட்டு அடியார் தொண்டில் இருந்தார்.
இல்லாளாக திருவெண்காட்டு மங்கையை சேர்ந்து சீராளன் என்ற மகனையும் வரமாய் பெற்று நாள்தோறும் அடியார்க்கு அமுது படைத்து அதன் பின் உண்டு வாழ்ந்தனர்.
#உத்திராபதியார் 2 ல் தொடரும்.

பீஷ்ம ஏகாதசி....

பீஷ்ம ஏகாதசி....

தகப்பனார் சந்தனுவுக்காக, தன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியாகவே இருப்பேன் என சபதம் செய்தார் பீஷ்மர்.
இதனால் மகிழ்ந்த சந்தனு பீஷ்மருக்கு இஷ்டா ம்ருத்யு - பீஷ்மர் விருப்பப்படி மரணம் புகலாம் என வரமளித்தார்.
குருஷேத்திர போர் தக்ஷிணாயணத்தில் முடிந்தது.... அதாவது வழக்கமாக கார்த்திகையில் வரும் கைசிக ஏகாதசி எனும் கீதா ஜெயந்தி துவங்கி 18 நாள் போர்.
கைசிக ஏகாதசிக்குப் பிறகு வரும் பெளர்ணமி கழிந்த கிருஷ்ணபட்ச பஞ்சமி போரின் 10ஆம் நாள் பீஷ்மர் அடிக்கப்பட்டு வீழ்ந்தாலும் -
ராஜ்யத்தில் தர்மநெறியோடு கூடிய ஆட்சி அமைந்து அதன் பின்னரே உயிர் நீப்பேன் என்ற சபதம்
- உத்திராயண புண்யகாலத்தில் உயிர் துறக்க சங்கல்பம். (தேவர்களுக்கான பகல் பொழுது - கர்ம காரியங்களை / அந்திம சடங்குகளை மனிதர்களே கூட இரவு நேரத்தில் அதாவது சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு / சூரிய உதயத்துக்கு முன் மேற்கொள்வது வழக்கமில்லை)
உத்ராயண புண்யகாலம் மகர ஸங்கராந்தியில் பிறக்க ஏகாதசியில் சரகல்பம் எனும் அம்புப் படுக்கையில் கிடந்த பீஷ்மர் முக்கி அடைந்த நாள் பீஷ்ம ஏகாதசி
ஏகாதசி மரணம் / துவாதசி தகனம் விசேஷம் என்ன?
ஏகாதசி உபவாசம் இருந்து துவாதசி உணவு எடுத்துக் கொள்கிறோமே... அது போல அக்னி தேவனும் ஏகாதசி அன்று உபவாசம் - துவாதசி அன்று அக்னி ஏற்க்கும் முதல் ஆகுதி ஏகாதசி மரணமடைந்து துவாதசி தினத்தில் தகனம் செய்யப்படும் பூத உடல்களே.
ப்ரம்மேசாய
ஓம் நமோ நாராயண நம சிவாய!

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...