Monday, March 12, 2018

குலதெய்வம்-பகுதி-1

நண்பர்களுக்கு வணக்கம்.  குல தெய்வம்! இங்கே நாம் பேச நினைப்பது நம் வம்சத்துக்கே நல்ல ஒரு விழிப்புணர்வை கொடுக்கும். வழிகாட்டும்.

இங்கே நாம் பேசுவது ஏதோ சம்பந்தம் இல்லாமல் வெவ்வேறு பக்கங்களில் செல்லும்... ஆனாலும் எல்லாவற்றையும் ஒரே புள்ளியில் முடிச்சு போடுவோம்.

இந்த பதிவுகளை யார் எங்கே வேண்டும் என்றாலும் உங்கள் சொந்த பதிவாக பகிர்ந்து கொள்ளலாம். Tag/நன்றி தேவை இல்லை. நல்ல விஷயங்கள் எல்லாம் இறைவன் அருளால், அதை என்னுடையது என்று உரிமை கொண்டாட விரும்பவில்லை.

ஊருக்குள்ளே ஒரு போலிச் சாமியார், தினமும் மக்களை ஏமாற்றி வயிறு வளர்த்தார்....

அவரையும் நம்பி ஒரு பாமரன்... அவரிடம் உபதேசம் வேண்டி, தினமும் வந்து சாமியாரை வழிபட்டு காணிக்கை செலுத்தி வந்தான்...

பாமரன் தினமும் சாமியாரிடம் உபதேசம் வேண்டினான்.... ஒரு நாள் சாமியார் ஏளனமாக, #இங்கே_அங்கே, இதுவே உனக்கான உபதேசம் என்றார்....

பாமரன் சுற்றம் அன்னம் பானம் மறந்து தன் ஆசாரியன் சொன்ன மகா வாக்கியத்தை ஜெபிக்க....

6 மாதங்கள் கடந்து குருவிடம் வந்தான்...

குருவே மந்திரம் பலித்து விட்டது என்று சொல்ல... குரு ஏளனமாக சிரிக்க.... அருகே இருந்த பிரம்மாண்டமான பாறையை நோக்கி பாமரன் இங்கே அங்கே என்று சொல்ல....

பாறை இங்கும் அங்குமாக நகர... அடுத்த நொடி குருவை நோக்கி அங்கே இங்கே என்று சொல்ல குரு தன் ஆசனத்தில் இருந்து சீடன் அருகில் பறந்து வர....

மேலே சொன்ன சம்பவத்தால் நாம் புரிந்து கொள்ள வேண்டியது.... குரு போலி.... சீடன் மாயை... மந்திரம் வெறும் வெற்றுச் சொல்... ஆனால் அப்யாசம்/ பாமரன் பக்தி சிரத்தை உறுதியானது... பலித்தது....

குலதெய்வம் விஷயத்தில் நமக்கு வேண்டியது நம்பிக்கை/ சிரத்தை / உறுதி....

2 இல் தொடரும்....

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...