குலதெய்வமோ/ குரு வழிபாடோ / சிவா விஷ்ணுவோ... இங்கே நாம் புரிந்து கொள்ள வேண்டிய சூக்ஷமம் ஒன்று இருக்கிறது....
இதை சுலபமாக புரிந்து கொள்ள / அத்வைதத்தை சுலபமாக புரிந்து கொள்ள.... சில சம்பவங்களை பற்றி பேசுவோம்....
உண்டென்றிரு தெய்வம் ஒன்றென்றிரு
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
யாதொரு தெய்வம் கொண்டீர் அங்கே அத்தெய்வமாகி மாதொரு பாகனார்தாம் வருவார்
சர்வம் விஷ்ணு மயம் ஜகத்
அறுவகை சமயம் வைத்தார்....
மேலே சொன்ன அனைத்தையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் ....
சகலமும் ஒன்று என்று புரியும். நாம்தான் பேதம் பார்க்கிறோம் என்பது நமக்கு புரியும்.
அஷ்ட வக்கிர மகரிஷி ஒரு நாள் ஜனகன் சபைக்கு, ஜனகன் வேண்டுகோளின் பேரில் ஒரு விவாதத்துக்காக/ சபை அறிஞர்களிடம் இருந்த ஞான விசாரங்களை தீர்த்து வைக்க வந்தார்...
அவர் உடல் 8 கோணலாக இருந்ததால் அஷ்ட வக்கிரர் என்று பெயர்....
ஜனகன் சபைக்குள் கை கால் மாற்றி உடலை வித விதமாக கோணித்து அஷ்ட வக்கிரர் உள்ளே வர ஜனகன் எழுந்து ஓடி வந்து வரவேற்க, சபை பெரியவர்கள் அஷ்ட வக்கிரர் உடல் கோணல் நடையை பார்த்து ஏளனமாக சிரித்தார்கள்....
உடனே, அஷ்ட வக்கிரர் ஜனகனை ஆசீர்வதித்து விட்டு, பொறுமையாக சொன்னார்....
ஜனக மன்னனே, நான் வந்த வேலை முடிந்தது... உன்னையும் ஆசீர்வதித்தேன்.... நான் ஏதோ கற்றறிந்த சான்றோர்கள் சபையில் உரையாட எண்ணி இங்கே வந்தேன்.... இங்கே வந்த பிறகே புரிந்தது...இங்கே கூடி இருப்பவர்கள் செருப்பு தைப்பவர்கள் என்று.... இவர்கள் தோலால் ஆன என் உடலை மட்டுமே காண்கிறார்கள்.... இவர்களோடு உரையாட நான் விரும்பவில்லை என்று சொன்னார்....
மனிதன்/ தெய்வம்/ காட்சி வேறு வேறு.... ஆனால் உள்ளே இருக்கும் உயிர் / வஸ்து/ ஆத்மா ஒன்றே...
கடலை மாவு நெய் இனிப்பு கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம் கூட வேறு வேறு பெயரில் லட்டு/ மைசூர் பாகு என்று மாறுபடும்... ஆனால் அதன் சுவை தன்மை ஒன்றே.... அது போலவே குலதெய்வம்/ குரு எல்லோரும் ஒருவரே...
தன்மையை நாடிச் செல்வதை விட்டு விட்டு தனி மனிதன் பின் தேடிச் சென்று நாம் தனிமைப் பட்டுவிட்டோம்....
ரமணர்- ஞானனந்தர்- திரிவேணி கிரி ஸ்வாமிகள் குறித்து 5இல் பேசுவோம்!
இதை சுலபமாக புரிந்து கொள்ள / அத்வைதத்தை சுலபமாக புரிந்து கொள்ள.... சில சம்பவங்களை பற்றி பேசுவோம்....
உண்டென்றிரு தெய்வம் ஒன்றென்றிரு
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
யாதொரு தெய்வம் கொண்டீர் அங்கே அத்தெய்வமாகி மாதொரு பாகனார்தாம் வருவார்
சர்வம் விஷ்ணு மயம் ஜகத்
அறுவகை சமயம் வைத்தார்....
மேலே சொன்ன அனைத்தையும் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் ....
சகலமும் ஒன்று என்று புரியும். நாம்தான் பேதம் பார்க்கிறோம் என்பது நமக்கு புரியும்.
அஷ்ட வக்கிர மகரிஷி ஒரு நாள் ஜனகன் சபைக்கு, ஜனகன் வேண்டுகோளின் பேரில் ஒரு விவாதத்துக்காக/ சபை அறிஞர்களிடம் இருந்த ஞான விசாரங்களை தீர்த்து வைக்க வந்தார்...
அவர் உடல் 8 கோணலாக இருந்ததால் அஷ்ட வக்கிரர் என்று பெயர்....
ஜனகன் சபைக்குள் கை கால் மாற்றி உடலை வித விதமாக கோணித்து அஷ்ட வக்கிரர் உள்ளே வர ஜனகன் எழுந்து ஓடி வந்து வரவேற்க, சபை பெரியவர்கள் அஷ்ட வக்கிரர் உடல் கோணல் நடையை பார்த்து ஏளனமாக சிரித்தார்கள்....
உடனே, அஷ்ட வக்கிரர் ஜனகனை ஆசீர்வதித்து விட்டு, பொறுமையாக சொன்னார்....
ஜனக மன்னனே, நான் வந்த வேலை முடிந்தது... உன்னையும் ஆசீர்வதித்தேன்.... நான் ஏதோ கற்றறிந்த சான்றோர்கள் சபையில் உரையாட எண்ணி இங்கே வந்தேன்.... இங்கே வந்த பிறகே புரிந்தது...இங்கே கூடி இருப்பவர்கள் செருப்பு தைப்பவர்கள் என்று.... இவர்கள் தோலால் ஆன என் உடலை மட்டுமே காண்கிறார்கள்.... இவர்களோடு உரையாட நான் விரும்பவில்லை என்று சொன்னார்....
மனிதன்/ தெய்வம்/ காட்சி வேறு வேறு.... ஆனால் உள்ளே இருக்கும் உயிர் / வஸ்து/ ஆத்மா ஒன்றே...
கடலை மாவு நெய் இனிப்பு கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம் கூட வேறு வேறு பெயரில் லட்டு/ மைசூர் பாகு என்று மாறுபடும்... ஆனால் அதன் சுவை தன்மை ஒன்றே.... அது போலவே குலதெய்வம்/ குரு எல்லோரும் ஒருவரே...
தன்மையை நாடிச் செல்வதை விட்டு விட்டு தனி மனிதன் பின் தேடிச் சென்று நாம் தனிமைப் பட்டுவிட்டோம்....
ரமணர்- ஞானனந்தர்- திரிவேணி கிரி ஸ்வாமிகள் குறித்து 5இல் பேசுவோம்!
No comments:
Post a Comment