பிறந்த மண்ணை விட்டு வேறிடம் சென்றவர்கள்.... முன்னோர்களை விட்டு விலகி போனவர்கள், கோத்திரம் மாறி சுவீகாரம் சென்றவர்கள் என இப்போது பெரும்பாலான குடும்பங்களுக்கு குல தெய்வம் எது என்றே தெரியவில்லை....
ஆனால், பெரும்பாலான குடும்பங்களுக்கு கிராம தேவதைகள் அய்யனார் வம்ச பெரியோர்களே குல தெய்வமாக இருந்து வந்துள்ளது...
எனவே, அவரவர் பூர்வீக கிராம தேவதைகள்/ கிராமத்து சாமிகள் தான் குலதெய்வமாக ஏற்கப்பட்டதாக புரிகிறது....
குலதெய்வம் என்பது மண்ணின் தொடர்பு...
Globalisation இல் மண்ணை விட்டு விலகி வந்து விட்டோம்...
வீட்டில் பெரியவர்களுக்கும் இதே கதி... குலதெய்வம் தெரியவில்லை...
இனி ஒரே வழி, ஜோதிடம்!
நல்ல திறமையான ஜோதிடரை அணுகி நம் ஜாதகம் கொடுத்து - பிரசன்னம் மூலமாக குல தெய்வத்தை தெரிந்து கொள்ள வேண்டியதுதான் வழி.
அதற்காக, ஒவ்வொரு ஜோதிடராக மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டே சென்றால் அதை விட கேலிக் கூத்து எதுவும் கிடையாது...
நம்பிக்கை தான் முக்கியம்....
அப்படி கண்டு பிடித்த குலதெய்வத்துக்கான ஆராதனையை இனி வரும் காலங்களில் விடாமல் செய்து வருவதும் மிகவும் அவசியம்.
வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் குலதெய்வ ஆராதனை இடம் பெறவேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் குலதெய்வ உபாசனை செய்ய வேண்டும்.
நம்முடைய குலதெய்வத்தை தொலைத்து விட்டு வேறு தெய்வத்தை நாடி இருக்கிறோம் என்ற குற்ற உணர்வு கூடாது என்பதற்காகவே முந்தைய பதிவுகளில் அத்வைதம் குறித்தும் சொல்லி இருக்கிறேன்....
கடவுள் என்பவர் அனுக்கிரகம் மட்டுமே செய்வார்... ஒரு போதும் நம்மை தண்டிக்கப் போவதில்லை...
அப்படி, குலதெய்வம் அறிய வீட்டில் இருக்கும் மூத்த ஆண் வாரிசு ஜாதகத்தின் மூலம் அறிந்து கொள்வது உத்தமம்.
அல்லது, யார் பிரசன்னம் பார்கிறாரோ அவர் ஜாதகத்தை அடிப்படையாக வைத்தும் அறியலாம்...
குலதெய்வம் என்பது மண்ணின் தொடர்பு/ கிராம - எல்லை தெய்வங்கள் என்று சொல்லி இருந்தேன்....
நினைவு இருக்கிறதா? இன்றும் கூட கிராமங்களில் காப்பு கட்டுதல் என்று சொல்லுவார்கள்..... ஊருக்குள் வந்தவர்கள் திருவிழா முடியும் வரை ஊரைவிட்டு போகக்கூடாது... என்று நிறைய கட்டுப்பாடுகள் உண்டு....
அதனால், தந்தை அல்லது பாட்டனாரின் பூர்வீக கிராமம் நமக்கு தெரிந்தால் அதையும் வெளிப்படையாக ஜோதிடரிடம் சொல்லி ஆலோசனை பெற வேண்டும்...
ஜோதிடருக்கு பணம் கொடுக்கிறோம், அதனால் அவரே சொல்லட்டும், என்று அதிகார போதையோடு ஜோதிடரை அணுக வேண்டாம். நமக்கு தெரிந்த/ நம் பக்கத்து தகவல்களை / நம் சந்தேகங்களை ஒளிமறைவு இல்லாமல் ஜோதிடரிடம் சொல்லி ஆலோசனை பெறுவோம்.
அதற்காக ஜோதிடர் மாற்றி ஜோதிடர் என்று அதீத ஆர்வக் கோளாறு காரணமாக தேடிக்கொண்டே திரிவது அபத்தம்!
நம்பிக்கை என்பது பலம். தேடிக்கொண்டே இருப்பது பலவீனம்!
இனி, இந்த தொடரை படிக்கும்போது நமக்கு ஏதாவது சந்தேகங்கள் ஏற்பட்டு இருந்தால் அது குறித்து பேசுவோம்.
எல்லாம் சுபமாக நிறைவு பெறுவோம்! பகுதி-11-ல்
ஆனால், பெரும்பாலான குடும்பங்களுக்கு கிராம தேவதைகள் அய்யனார் வம்ச பெரியோர்களே குல தெய்வமாக இருந்து வந்துள்ளது...
எனவே, அவரவர் பூர்வீக கிராம தேவதைகள்/ கிராமத்து சாமிகள் தான் குலதெய்வமாக ஏற்கப்பட்டதாக புரிகிறது....
குலதெய்வம் என்பது மண்ணின் தொடர்பு...
Globalisation இல் மண்ணை விட்டு விலகி வந்து விட்டோம்...
வீட்டில் பெரியவர்களுக்கும் இதே கதி... குலதெய்வம் தெரியவில்லை...
இனி ஒரே வழி, ஜோதிடம்!
நல்ல திறமையான ஜோதிடரை அணுகி நம் ஜாதகம் கொடுத்து - பிரசன்னம் மூலமாக குல தெய்வத்தை தெரிந்து கொள்ள வேண்டியதுதான் வழி.
அதற்காக, ஒவ்வொரு ஜோதிடராக மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டே சென்றால் அதை விட கேலிக் கூத்து எதுவும் கிடையாது...
நம்பிக்கை தான் முக்கியம்....
அப்படி கண்டு பிடித்த குலதெய்வத்துக்கான ஆராதனையை இனி வரும் காலங்களில் விடாமல் செய்து வருவதும் மிகவும் அவசியம்.
வீட்டில் நடக்கும் நல்லது கெட்டது எல்லாவற்றிலும் குலதெய்வ ஆராதனை இடம் பெறவேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை கட்டாயம் குலதெய்வ உபாசனை செய்ய வேண்டும்.
நம்முடைய குலதெய்வத்தை தொலைத்து விட்டு வேறு தெய்வத்தை நாடி இருக்கிறோம் என்ற குற்ற உணர்வு கூடாது என்பதற்காகவே முந்தைய பதிவுகளில் அத்வைதம் குறித்தும் சொல்லி இருக்கிறேன்....
கடவுள் என்பவர் அனுக்கிரகம் மட்டுமே செய்வார்... ஒரு போதும் நம்மை தண்டிக்கப் போவதில்லை...
அப்படி, குலதெய்வம் அறிய வீட்டில் இருக்கும் மூத்த ஆண் வாரிசு ஜாதகத்தின் மூலம் அறிந்து கொள்வது உத்தமம்.
அல்லது, யார் பிரசன்னம் பார்கிறாரோ அவர் ஜாதகத்தை அடிப்படையாக வைத்தும் அறியலாம்...
குலதெய்வம் என்பது மண்ணின் தொடர்பு/ கிராம - எல்லை தெய்வங்கள் என்று சொல்லி இருந்தேன்....
நினைவு இருக்கிறதா? இன்றும் கூட கிராமங்களில் காப்பு கட்டுதல் என்று சொல்லுவார்கள்..... ஊருக்குள் வந்தவர்கள் திருவிழா முடியும் வரை ஊரைவிட்டு போகக்கூடாது... என்று நிறைய கட்டுப்பாடுகள் உண்டு....
அதனால், தந்தை அல்லது பாட்டனாரின் பூர்வீக கிராமம் நமக்கு தெரிந்தால் அதையும் வெளிப்படையாக ஜோதிடரிடம் சொல்லி ஆலோசனை பெற வேண்டும்...
ஜோதிடருக்கு பணம் கொடுக்கிறோம், அதனால் அவரே சொல்லட்டும், என்று அதிகார போதையோடு ஜோதிடரை அணுக வேண்டாம். நமக்கு தெரிந்த/ நம் பக்கத்து தகவல்களை / நம் சந்தேகங்களை ஒளிமறைவு இல்லாமல் ஜோதிடரிடம் சொல்லி ஆலோசனை பெறுவோம்.
அதற்காக ஜோதிடர் மாற்றி ஜோதிடர் என்று அதீத ஆர்வக் கோளாறு காரணமாக தேடிக்கொண்டே திரிவது அபத்தம்!
நம்பிக்கை என்பது பலம். தேடிக்கொண்டே இருப்பது பலவீனம்!
இனி, இந்த தொடரை படிக்கும்போது நமக்கு ஏதாவது சந்தேகங்கள் ஏற்பட்டு இருந்தால் அது குறித்து பேசுவோம்.
எல்லாம் சுபமாக நிறைவு பெறுவோம்! பகுதி-11-ல்
No comments:
Post a Comment