Monday, March 12, 2018

கால சம்ஹாரம்....

கால சம்ஹாரம்....

எமன் உதைக்கப்பட்ட திருக்கடையூர் லீலை....

மார்கண்டேயனுக்கு என்றும் 16 அருளியது...

திருக்கடையூரில் உதைக்கப்பட்ட எமன் ஸ்ரீ வாஞ்சியத்தில் தவம் செய்து மீண்டும் திருப்பைங்ஜீலி (ஊர் பெயர்  தவறு வேறு வழியில்லை) யில் தன் தொழிலை கைவரப் பெற்றான்...

இடையில், எமன் அநேக இடங்களில்  தர்மபுரீஸ்வரர் பிரதிஷ்டை செய்து வழிபட்டு இருக்கிறான்.

சரி, கால சம்ஹாரம்... என்பது என்ன?!

மனிதன் படைக்கப்பட்ட போதே நாள் ஒன்றுக்கு 21600 சுவாசம் வீதம் அவனுக்கு ஆயுள் பெறுகிறான்...

இந்த சுவாசத்தின் எண்ணிக்கையை பிராண நியமம் மூலம் கட்டுப்படுத்தினால் ஆயுள் கூடும்.

மார்க்கண்டேயன் விஷயத்தில் அவருடைய 16 ஆம் வயதில் பிராணன் உள் முகமாக கட்டுப்படுத்தப் பட்டது.

அந்திமக்காலத்தில் சிலர் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு சுவாச குழாய் மூலம் செயற்கை பிராண ஏற்பாடுகள் செய்யப்படுவதும் பிராண நியமம்தான்... மெய்ஞானத்துக்கு உள்ளடங்கிய விஞ்ஞானம்.

அதீத சுவாசம் பயன்பாடு உடையவர்கள் இதய இயக்கம் நின்று இறப்பதும் இறைவன் விதி.

ஆயுள் நீட்டிப்பு என்ற பெயரில் இன்று திருக்கடையூர் கோவிலில் தினந்தோறும் 100 கணக்கில் ஹோமங்கள்.... ஒரு வியாபாரம் கேந்திரமாக...

1500 ரூபாய் ஆலய கட்டணம்.
22500 ரூபாய் மந்திர பூஜாரிகள் சம்பாவனை...

வேஷ்டி புடவை மாலை சீர் /பட்சணம் தனியாக நாம் நம் விருப்பப்படி....

எல்லாமே முதல் நாள் மாலை 4 மணிக்கு துவங்கி மறுநாள் மதியம் 3 மணி check out.

முதல்நாள் மாலை snacks பஜ்ஜி அல்லது போண்டா 2 எண்ணம் காபி/tea

இரவு கிச்சடி /இட்லி/ சப்பாத்தி பால்

மருநாள் காலை இட்லி வடை பொங்கல் மினி தோசை காபி/tea

மதியம் சாப்பாடு....

இவை எல்லாம் சேர்த்து நபர் ஒன்றுக்கு ₹450

40 நபர்கள் தங்க விடுதி ஒன்று 4pm to 3pm.... ₹7500

Non ac ரூம் 2 பேர் தங்க ₹600 ac ரூம் 2 பேர் தங்க ₹ 1000

அதிக நபர் ஒருவர் மட்டுமே ரூமுக்கு extra ₹100/150

Photo/video அவர்கள் வைத்ததே சட்டம்... ஆலயத்துக்குள் வசதியான தோதான சந்நிதிகளில் பூஜை நடத்த தனி சார்ஜ்...

அம்பிகை பிரகாரத்தை சுற்றியும் இப்போது கான்க்ரீட் மேல் கூரை.... காரணம்,  ஹோம எண்ணிக்கையை கூட்ட/ இட வசதி வேண்டி...

ஒவ்வொரு நாளும் ஆலயத்தில் திருவிழா தான்...வசூல் அமர்க்களம்...

ருத்ர ஏகாதசி என்பது முதல் நாள் காலை சூரிய உதயத்தில் மந்திர பூர்வமாக கட நீர் புனித்தப்படுத்தப் பட வேண்டும்...  அதாவது curing time... அவசர உலகில் ருத்ர ஏகாதசி இப்போது அஸ்தமனத்தில்...

காலத்தின் கோலம்/கட்டாயம்!

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...