Monday, March 12, 2018

குலதெய்வம்-பகுதி-7

குலதெய்வம் 7

கிராமங்களில் கூட்டமாக வசித்த காலத்தில் குலதெய்வ பிரச்சனை இல்லை...

நகரங்களை நோக்கி மனிதன் நகர நகர உலகம் விரிய மனம் குறுகியது.

ஜானவாசம் / மாப்பிள்ளை அழைப்பு... எதற்காக?

லக்ன பத்திரிக்கை என்று பெண் பார்க்கும் சடங்கு முடிந்த பின்....  நடக்கும் நிச்சயதார்த்தம், ஒரு சம்பிரதாயம்.... ஆனால் மாப்பிள்ளை அழைப்பு முடிந்து அன்று இரவு நடக்கும் நிச்சயதார்த்த சடங்கில் பத்திரிக்கை படித்து நடக்கும்... அதுவே இருதியானானது....

மாப்பிள்ளை அழைப்பு என்பது, மாப்பிள்ளை குறித்த ஒரு கருத்து கேட்பு!

அக்கம் பக்கம் அண்டை ஊர்களில் மாப்பிள்ளை ஏதாவது தப்பு தண்டா செய்து இருந்தாலும், ஜானவாசத்தின் போது மாப்பிள்ளை யின் மீது புகார் சொன்னால் கூட கல்யாணத்தை நிறுத்தி விடலாம்....

ஆனால், இன்று!

மாப்பிள்ளை எங்கோ தூர தேசம்.... மக்கள் தொகை பெருக்கம்... அதனால், மாப்பிள்ளை அழைப்பே தேவை இல்லாத செலவீன சடங்கு...

அதற்கு பதிலாக, இப்பேது முதல் நாள் மாலை reception.... நெருப்பு என்றால் வாய் வெந்து விடாது...

Reception இல் பெரிய போட்டோ session நடக்கும்.  அன்று இரவு மாப்பிள்ளை அல்லது பெண் ஓடி போய்விட்டால்?!

தேவை இல்லாத சடங்குகளுக்கு தரும் முக்கியத்துவத்தை நாம் குறைத்துக் கொண்டு, குலதெய்வ வழிபாடு அது குறித்த ஆராய்ச்சி என செலவு செய்யலாமே...

நகர மயமாகி நரக மயமாகி குலதெய்வத்தை மறந்து விட்டோம்...

வேர்களை/ உறவுகளை பிறந்த மண்ணை இழந்துவிட்டோம்...

Nursery யில் செடி வாங்கி வீட்டில் வைப்போம்....அந்த செடியோடு கீழே கொஞ்சம் பிறந்த மண் எதற்காக கட்டி அனுப்புகிறார்கள்?!

குலம் ஆசாரம் தெய்வம் விட்டுப் போனதற்கு முக்கிய காரணம் ஸ்வீகாரம்.... குறிப்பாக, கிறித்தவ (பிரிட்டிஷ்) ஆட்சியில் வாரிசு பிரச்சனையில் ஜான்சி ராணியே அவஸ்தை பட்டாளே.... (வரலாறு படிப்போம்)

8 இல் பேசலாம்

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...