Monday, March 12, 2018

குலதெய்வம்-பகுதி-8

சுவீகாரம் என்பது வாரிசு வேண்டி உறவினர் குழந்தைகளை தத்து எடுப்பது....

சுவீகாரம் என்பது அக்னி பூர்வ சடங்காக நடந்தவரை தோஷம் இல்லாமல் இருந்தது....

வெள்ளையர் ஆட்சியில்,   வாரிசு இல்லாத சொத்துக்கள் அரசுடைமை ஆகும் என்று சட்டம் வர,

அக்னி / மந்திர பூர்வ சடங்கு காகிதமாக மாறி ... உயில் நடைமுறைக்கு வந்தது...

சுவீகாரம், எடுப்பது பாரம்பரியமாக ஒரே கோத்திரத்தில் மட்டும் நடக்கும்.... அதுவும் மந்திர பூர்வமாக / குலதெய்வ சாட்சியாக!

பின் நாட்களில் அரசு கெடுபிடி காரணமாக சுவீகாரம் என்பது rather became emotional...சொத்துக்காக / குடும்ப உறவுகள் அழுத்தம் கருதி and not not traditional.

பேப்பரில் எழுதிவிட்டால்   போதுமா?

பண்டைய நாட்களில் கோத்திரம் விட்டு கோத்திரம் சுவீகாரம் எடுத்துக்கொண்டால் கூட, அக்னி பூர்வ சடங்கின் மூலம் ஒரு ரத்த சுத்தீகரிப்பு நடந்தது.... சுவீகார சடங்கு மந்திரங்களை இந்த திசையில் ஆராய வேண்டும்.... எனக்கு போதுமான ஞானம் இந்த விஷயத்தில் இல்லை.

பின் நாட்களில் கோத்திரம் விட்டு சுவீகரித்து, குலதெய்வ சாட்சி இல்லாமல் காகித சாட்சியால் ஏற்படும் சிக்கல் ஒன்றை பார்ப்போம்...

அதற்கு முன்.... கடந்த 2016 ஜூன் மாதம் எனது ஷட்டகரின் தாயார் இறந்து போனார்... அப்போது என் மைத்துனிக்கு பெண் வீட்டு சீர் நானே வைத்தேன்.... அப்போது வீட்டின் பெயர் சொல்லி ஓதி விட சொன்ன போது, அங்கே இருந்த புரோகிதர்.... வீட்டின் பெயரை கேட்ட உடனேயே கோத்திரம்/ குல தெய்வம் போன்ற விஷயங்களை சொன்னார்....

ஆனால், என் விஷயத்தில் அது பொருந்தவில்லை.... காரணம், என் தந்தை சுவீகாரம் எடுக்கப்பட்டவர்.... என் பாட்டி கணவனை இழந்த பின் தன் முனைப்பில்! (காகிதத்தில் - வளர்ந்து பெரியவர் ஆன பின்)

ADDED to... என் தகப்பனாரின் நேரடி ரத்தத் தந்தையும் சுவீகாரம் வந்தவர்...

இதில் உள்ள சிக்கலை 9 இல் பேசுவோம்!

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...