அர்ஜூனன் ரதம்.
அர்ஜூனன் ரதம் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட ரதம்.
வாய் கண் மூக்கு செவி இந்த நான்கும் புலன்களும்
மெய்யாகிய இந்த உடல் எனும் ரதத்தின் உள்ளே பயணிக்கின்ற
அர்ஜூனன் என்கிற ஜீவாத்மாவுக்கு
போர்களமாகிய உலகில் க்ருஷ்ணன் என்ற பரமாத்மாவின் வழிகாட்டுதலில்
வெற்றி எனும் ஞானத்தை தருகிறது.
சித்ரரதன் என்ற கந்தர்வன் தன்னிடமிருந்த நூறு திவ்யமான அதிவேக குதிரைகளில் நான்கினை அர்ஜூனனுக்கு கொடுத்தான் - இந்த குதிரைகள் கொலையுண்டாலும் குறையாது 100 ஆகவே இருக்கும் - ஆக குதிரைகள் சாகா வரம் பெற்றவை.
இவை பூமி வானம் சொர்க்கம் என எங்கும் செல்லும் சக்திவாய்ந்த குதிரைகளாம்.
No comments:
Post a Comment