Monday, December 30, 2019

எண்ணம் -3

எண்ணம் 3
இடியுடன் கூடிய கடும் மழை...
ஒரு பாழ் அடைந்த கட்டிடம்...
22 நபர்கள் ஒதுங்கி நிற்கின்றனர்...
ஆண்டவன் அசரீரியாக...
மரணம் சம்பவிக்க வேண்டிய - உயிர் பறிப்பு வேண்டிய கட்டாயம் இப்போது...!!!
எல்லோரும் ஆலோசித்து...
நாம் ஒவ்வொருவராக சில தப்படிகள் தள்ளி இருக்கும் மரத்தை தொட்டு விட்டு வருவோம்..
யாருடைய உயிர் பரிக்கப்பட வேண்டுமோ அவரை விதி எடுத்துக்கொள்ளும்...
எல்லோரும் பீதியுடன் ஒவ்வொருவராக செயலில்...
21 நபர்களும் பத்திரமாக மீண்டுவிட...
எல்லோரும் 22 ஆம் நபரை பரிதாபமாகப் பார்த்தனர்...
அந்த நபர் தனது நடையை துவக்கி அருகில் இருந்த மரத்தை தொட்டார்....
அடுத்த நொடி இடி தாக்கியது...
கட்டிடத்தின் மீது... 21 பேரும் இறந்தனர்...
இதுவும் ஆண்டவன் சந்நிதி
இதுதான்...
நல்லார் ஒருவர் உளரேல்.. என்பது...
அந்த ஒரு உயிர் 21 பேரை இதுவரை காபாற்றி வந்துள்ளது...
நள்ளிரவில் பேய்கள் உலாவும் நேரத்தில் ஆண்டவன் சந்நிதி இப்படியாகவும் அமையலாம்...
புரிந்தவர்களுக்கு 

எண்ணம் -2

எண்ணம் 2
தினசரி சந்தியாவந்தனத்தில் சில சடங்குகள்...
கரங்ஞாசம்... அங்கஞாசம்...
ஆபாஹிஷ்ட என்ற மந்திரம்...
அக்னி பூர்வ ஹோமத்தில் கூட கர்த்தாவை சுத்தப்படுத்திக் கொள்ள சில நியதிகள் பலி உண்டு...
தினந்தோறும் ஆண்டவன் சந்நிதியை திறக்கும் முன்பாக உள்ளே நுழைய அர்ச்சகருக்கும் சில நியதிகள்...
ஆண்டவனுக்கு சில சடங்குகள்... சம்பிரதாயங்கள்... சுப்ரபாதம் போல...
தூங்கும் நாயை எழுப்பக்கூடாது என்று ஒரு வழக்கு உண்டு...
திருமடங்களில் உணவுக்குப்பின் மடாதிபதிகள் கொஞ்சம் கண்ணயர்வார்கள்...
அப்போது, சந்திக்க வரும் பிரமூகர்களிடம் காத்திருங்கள்... சாமி / சன்னிதானம் நித்திரையில் இருக்கு...
உறக்கம் என்பது வேறு...
நித்திரை என்பது வேறு...
நல் உறக்கம்
யோக நித்திரை...
திரை... என்பது திருஷ்டியில் இருந்து மறைத்தல்...
நிர்ச்சலனமாக... நமது உணர்வில் இருந்தும் விலகி இருத்தல்..
இரவில் ஆலய அடைப்புக்குப் பின் உறக்கம் இல்லாத இறைவன் தனது யோக நித்திரையில் இருந்து வேறு ஒரு இடத்தில் வேறு சில பரிபாலனங்களை செய்கிறான்... நாம் ஓய்வில் அமெரிக்கன் உழைப்பில்...
5.12.16 நடந்ததாக சொல்லப்பட்ட நிகழ்வுக்கு முன்பு நவம்பர் கடைசி வாரத்தில்...
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவில் கருவறை நள்ளிரவில் திறக்கப்பட்டதாம்...
விளைவு ?!⁠⁠⁠⁠

எண்ணம் -1

எண்ணம் 1...
இப்போது பதிவு செய்வது நல்லது...
ஸ்ரீரங்கம் கோவில் சமீபத்தில் இரண்டு மூன்று கட்டங்களாக குடமுழுக்கு நடந்தது...
பாலாலய பூஜை...
அசுப... மரணயோக நாளில்... பின்னர் நடந்தது நாடே அறியும்...
ஆக நேரமும் நாளும் கோளும்.... அதன் பயனும்....
1.1.17 நள்ளிரவு பூஜை...

Monday, December 23, 2019

வயசு இலக்கணம் கூட வகையாகத்தான்

வயசு இலக்கணம் கூட வகையாகத்தான்!
சந்யாசிகள் ஒரு நாளைக்கு எட்டு கவளம் மட்டுமே சாப்பிடலாம்
வானப்ரஸ்திகள் 16 கவளமும்
க்ருகஸ்தர்கள் 32 கவளமும்
பிரம்மச்சாரிகள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
ஒரு கவளமென்பது சாதாரண கையளவு உணவு.
உடனே நம்மாளு ஒருத்தர் கேட்டார்....
வயசான சுகர் வருது - அதனால வயிறு காலியாக இருக்கக் கூடாதே என்று -
ஆசாரியர் சொன்னார்... க்ருகத்திலே இருக்கிற வரை குடும்பத்துக்காக உழைக்கனும் அதனால கொழுப்பு சேராது - வானப்ரஸ்தி ஆகிட்டா வீட்டை விட்டு வெளியேறி க்ஷேத்ராடணம் பண்ணி அலையனும் அப்போ நடந்தா சுகர் குறையுமே என.
கடவுளின் சிருஷ்டியில் மனிதன் கழுதை நாய் குரங்கு என 4 உயிர்களையும் தலா 40 வயதுகளோடு அவரவர்க்கு உரிய கர்மாக்களை விளக்கி படைத்தான்.
கழுதை - சதா பொதி சுமப்பது புண்யகாரியமா என்ன - அதனால 20 வயசு போதும் என்றது - அதே போல நாயும் கல்லடி தவிர்க்க - குரங்கு சேஷ்டை - இடம் மாறி தாவுதலை தவிர்க்க தங்களுக்கும் தலா 20 வயசுகள் போதும் என்றனர்.
மனிதன் பேராசையின் மொத்த உருவமாயிற்றே அதனால் மற்ற மூன்று விலங்குகளின் தலா 20 ஆக 60 ஆண்டுகளை தனக்கே தந்து தனது ஆயுளை 100 ஆண்டுகள் ஆக்க கோரினான்.
கடவுளும் சம்மதிக்க - மனிதன் 40 வயது வரை மனிதனாக பின் 41 முதல் 60 வரை குடும்பத்துக்காக சுமை சுமக்கும் கழுதையாக பின் ஓய்வு பெற்று 61-80 ல் வீட்டுத் திண்ணையில் நாயைப் போல காவலும் 81-100 வரை குரங்கைப் போல குச்சியை பற்றி - உடல் சேஷ்டை - வீடு ஆஸ்பத்திரி எனத் தாவித் தாவி....

ஆனந்தம் ஆனந்தமே -2

ஆனந்தம் ஆனந்தமே
ஆனந்தம் என்பது இன்பம் துன்பம் உயர்வு தாழ்வுகளை சமமாக நோக்குவது.
இந்த சமநோக்கு நமக்கு உள்ளே இருக்கிறது - அதை நாம் வெளியே தேடி அலைகிறோம்.
புதிய புதிய இடங்களில் புதிய புதிய குருமார்களிடம் புதிய புதிய உபதேசங்களை கேட்டுக் கேட்டு தேடித் தேடி வாழ்க்கை முடிவதும் ஓடிக்கொண்டே -
ஒரு கணவன் மனைவி - மனைவியின் ஆதிக்கம் நிறைந்த குடும்பம். ஒரு நாள் மனைவி கணவனிடம் 100 ரூபாய் கொடுத்து கோழிக்கறி வாங்கிவரச் சொல்லி அனுப்ப - கணவரிடமிருந்த பணம் களவு போனது - மனைவி நாள் முழுவதும் திட்டித் தீர்த்தார். கணவன் வருத்தமடைந்தான்.
மீண்டும் ஒருநாள் இது போலவே - இந்தமுறை கணவன் தன்னிடமிருந்த பணத்தை ஒரு ஏழை குடும்பத்தின் உணவுக்காக செலவழித்துவிட்டு - மனைவியிடம் பணம் களவு போனதாக சொல்ல - மீண்டும் அர்ச்சனை.
அன்று மனைவி திட்டியபோது வருந்திய மனம் இன்று திட்டியபோது மகிழ்ச்சியாகவே இருந்தது -
முதல் முறை பணம் தொலைந்த போது யாரோ இல்லாத குறையை போக்கிக் கொள்ள திருவிட்டார்கள் என எண்ணத் துவங்க - கணவனின் ஆனந்தம் இன்னும் அதிகமானது
இந்த சம திருஷ்டி குறித்து சாது ஒருவர் ஒரு முட்டாளுக்கு விளக்கிக் கொண்டு இருந்தார்.
சாதுவை அவமானப் படுத்த அந்த முட்டாள் சாதுவுக்கு உணவுக்கு பதிலாக மாமிசத்தை இலையில் படைத்தான் - சம திருஷ்டி என்றீர்களே ஆக இதையே உணவாக எண்ணி சாப்பிடுங்கள் என்று சொல்ல, சாது உடனே ஒரு புலியாக மாறி அந்த மாமிசத்தை திண்ணத் தொடங்கினார்.
ஆக ஆனந்தம் நம் மனோபாவத்தில் ஒளித்து வைக்கப்பட்டு இருக்கும் சமநிலை. 

ஆனந்தம் ஆனந்தமே-1

ஆனந்தம் ஆனந்தமே
ஆனந்தம் நமக்குள் இருக்கிறது - இது எப்போது வெளிப்படும்?
மனிதன் ஆசாரமாக இருந்தால் ஆனந்தம் அடையலாம்.
ஆசாரம் என்பது என்ன? ஏதோ ப்ராம்மண பாஷை என்று நினைக்க வேண்டாம் - தனி மனித ஒழுக்கமே ஆசாரம்.
கோபுரத்தின் உச்சி அந்தம் - அந்த உச்சிக்கு நாம் சென்றடைய சாரம் தேவை - ஆக ஆனந்தத்தை அடைய ஆசாரம் தேவை.
வர்ணாஸ்ரம தர்மம் - ஏதோ ஒரு இனவெறிச் சொல் என்று நம்ப வைக்கப்பட்டுள்ளது. ஜாதி என்பது பிறப்பால் வருவதல்ல - குணத்தால் என்பதை விரிவாக வேறு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.
ஜாதி எதுவாக இருந்தாலும் ஆசாரம் முக்கியம். அதாவது ஸ்நாநம் - ஆசமனம் - ஆகாரநியமம் - ப்ரம்மச்சர்யம் ஆகிய நான்கும் எல்லா தர்மத்துக்கும் ப்ரதானம்.
அது என்ன எல்லா தர்மம்....
ப்ரம்மச்சர்யம்
க்ரகஸ்தாஸ்ரமம்
வானப்ரஸ்தம்
சந்யாசம்
அறம் - பொருள் - இன்பம் - வீடு
பூ பிஞ்சு காய் கனி
Spring - summer - autumn- winter
மேலே சொன்ன நாலு தர்மங்களை முறையாக அனுஷ்டிக்க மாட்டதவர்களே / மீறுபவர்கள் / முடியாதவர்களே வர்ணாஸ்ரம தர்மத்தைப் பற்றி துர்போதனைகள் செய்பவர்கள்.
அறவழியில் வாழ்ந்து பொருள் ஈட்டி அதை இன்பமாக அனுபவித்து பின் வீடு பேரடைதலே ஆசிரம தர்மம்.
ஆனால் நாம் முதலும் போட மாட்டோம் (அறம்) கடையும் வேண்டாம் (வீடு) ஆனால் இடைப்பட்ட பொருளும் இன்பமும் மட்டுமே நமக்கு எப்போதும் வேண்டும்.
ஜாதி பிறப்பால் அல்ல குணத்தால் என்று சொன்னேனே - ஆசாரம் + தர்மம் = ஆஸ்ரமதர்மம் - எவனொருவன் இந்த 4 தர்மங்களையும் சரிவர அனுஷ்டிக்கிறானே அவன் ப்ராம்மணன்.
அறத்தை விட்டு விட்டு பொருள் இன்பம் வீடு என மூன்று விஷயங்களை ஏற்கிறானே அவன் க்ஷத்ரியன்.
அறமும் செய்ய மாட்டேன் பொருளும் தேடமாட்டேன் ஆனால் இன்பமாக வாழ்ந்து வீடுபேரடைய ஆசை கொண்டவன் வைசியன் - எதுவுமே செய்யமாட்டேன் ஆனால் வீடு பேரடைவது மட்டும் அவஸ்யம் என நினைப்பவன் சூத்திரன்.
General - OBC - MBC -SC/ST நன்றாகப் படித்து (அறம்) தேர்விலும் நல்ல மார்க் வாங்கி (பொருள்) நுழைவுத்தேர்விலும் முதலில் (இன்பம்) வந்து உயர் கல்வி படிப்பதை (வீடு) வர்ணாஸ்ரம தர்மம் என புரிந்து கெள்ளலாமா?
ஆசாரம் பற்றி அடுத்த பதிவில் 

பூதத்தில் கரைதல் -3

பூதத்தில் கரைதல்
இயற்கை யின் மகத்துவத்தால் உயிர்களின் உருவாக்கம் நடக்கிறது.
ஒவ்வொரு உயிருக்கும் அதன் பிறப்பிலிருநது இறப்பு வரை தேவையான சக்தியும் - உடலமைப்பும் அருளப்படுகிறது.
உயிர்கள் வாழும் சூழலுக்கு ஏற்றார் போல தேவையான feeder களும்....
உதாரணமாக -
இந்தியாவில் வெப்பம் அதிகம் - அதனால் இதமான பருத்தித் துணிகளுக்கான விளைச்சலும் அதிகம். பனிப் பகுதிகளில் செம்மறி ஆடுகள் அதிகம். கம்பிளிக்காக.
உயிர்களுக்கு தேவையான உணவும் கூட regional and rational.
மனிதன் தனது ஆசை காரணமாக தன் உடலை வருத்தி - கூடுதல் சக்தியை செலவிட்டு பொருளைத் தேடி ஓடுகிறான். கடைசியில் மரணத்தை நெருங்கும் காலத்தில் - to offset exhausted energy spending in times - in excess of requirements - drained out from the reserve for future - மனிதன் துணைக் கருவிகளை நாடுகிறான். உதாரணமாக walker wheel chair etc அல்லது பிறர் உதவியோடே நடமாடுகிறான்.
அநேகமாக 100 வயதுக்கு மேல் வாழும் சாதனையாளர்கள் பலரும் சொல்லும் ஒரு விஷயம் ஒரே விஷயம் இயற்கையை அனுசரித்து வாழுந்தோம் என்பதே!
மனிதனின் நகருதலுக்கு கடவுளால் படைக்கப்பட்டது அதிகபட்சம் மாட்டு வண்டிகள் - படகுகள். குதிரைகள் கூட க்ஷத்திரிய பயன்பாட்டுக்காக ஆனால் அதற்கேற்ற உணவும் ஓய்வும் அவர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.
ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக மோட்டார் சைக்கிளில கார் விமானம் ரயிலில் பயணித்தால் நம் உடலுக்கு வேலை இல்லை - ஆணாலும் உடம்புக்குள் ஒரு விதமான அசதி.
குளிர் சாதன படுக்கை வசதி ரயிலில் பயணித்தால் கூட தரையில் ஒரு அரைமணி நேரம் படுத்து எழும் சுகம் கிடைப்பதில்லையே.
இயற்கையை வென்று விமானத்தை படைத்ததாக பெருமை பட்ட மனிதனுக்கு இயற்கை அடித்த ஆப்பு - அடுத்த பதிவிலே...

பூதத்தில் கரைதல் -2

பூதத்தில் கரைதல்...
இயற்கையின் படைப்பு விதிகளை மனிதன் கையாளவே முடியாது என தொடங்கினோம்...
உறுப்பு மாற்று....
பிரமாணத்தின் சார்புக்கு சப்ஸ்டிட்யூட் தேடலாம் - பிரமாணத்துக்கே?!
ஏசி இருக்கிறது - அதை ஒரு தற்காலிக ப்ரமாணமாக கொள்வோம் - அதற்கான தொடர்புடைய சார்பு ஸ்விட்ச் மாற்றிக் கொள்ளலாம்.... ஆனால்... சாம்சங் இண்டோர் யூனிட்டையும் எல் ஜி அவுட்டோர் யூனிட்டை ப்ளூ ஸ்டார் ரிமோட்டையும் இணைத்து ஏசியை இயக்க முடியுமா? எல்லோராலும் முடியாது... அது போலவே தான் உறுப்பு மாற்று...
அசம்பில்டு ரோடியோ செட் போல - இதுவும் சாத்தியமே - சில புத்திசாலிகளுக்கு - ஆணால் சர்க்யூட் போர்டில் பெரிய மாற்றங்களை அதாவது சாம்செங் / எல் ஜி / காத்ரெஜ் சாதனங்களின் தனித்தன்மை எல்லாம் திரட்டி புதியதோர் வடிவமைப்புத் தேவை - ஆக இந்த ஏசி பழுதானால் அதை சீர் படுத்த இப்போது 3 டாக்டர்கள் மற்றும் புதிய சர்க்யூட் போர்டை வடிவமைத்த 4 வது நபரும் இங்கே தேவை.
உறுப்பு மாற்றும் - இது போலவே...
ஒரே ரத்தப்பிரிவு ஒரு புறமிருக்கட்டும் - அதற்காக 50 வயது முதியவரின் சிறுநீரகத்தை 25 வயது வாலிபனுக்குப் பொருத்துதல் - spare - spare தான் O.E. O.E தான்....
ஸ்பேரின் தேய்மான விகிதம்?!
உறுப்பு மாற்றுதலில் ரத்த வகை மட்டுமல்ல - பயன்பாட்டு விகிதம் - வயது - உணவுப் பழக்க வழக்கம் - சுற்றுச் சூழல் - ஜீன் - reflex - எண்ணவோட்டம் என பல கோணங்கள் உண்டு. இவை எல்லாம் ஒரே மாதிரியாக அமையும் இரண்டு உயிர்கள் ஏன் வாண சாஸ்திரம் என்னும் ஜாதக bar code ஒன்றாக அமையும் இரு ஜீவன்கள் இருக்கவே முடியாது இறைவன் படைப்பில் -
இதுதான் 84 நூறு ஆயிரம் கோடி யோனி பேதம் என நாம் வகைப்படுத்திய இறைவனின் படைப்புக் கொள்கையில் நாம் அறிந்த பகுதி. 

பூதத்தில் கரைதல் -1

பூதத்தில் கரைதல்....
படைப்பில் பாதியை இயற்க்கைக்கு மறு சுழற்ச்சிக்காக விட்டுக் கொடுக்க வேண்டும்.
கட்ட பொம்மன் என்ற திரைப்படத்தில் கவுண்டமணி அவர்களின் நகைச்சுவை காட்சி ஒன்று வரும். ஒரு நபர் 1000 மூட்டை நெல் அறைத்தால் எவுவளவு அரிசி வரும் என கேட்பார். அதற்கு கவுண்டர் 1000 அறைத்தால் 500 - ஐநூறு அறைத்தால் 250 - என அடுக்கி இது உலக வழக்கம்தானே என பதில் சொல்வார்.
அதாவது தவிடு / உமி மீண்டும் இயற்க்கைக்கு - பசுவுக்கு...
படத்தில் அந்த நபர் - இரண்டு நெல்லை எடுத்து கவுண்டர் கையில் கொடுத்து இந்த ரெண்டு நெல்லை அறைத்தால் எத்தனை அரிசி வரும் என கேட்க - கவுண்டர் இரண்டு அரிசி வரும் எனச் சொல்ல - வந்த நபர் - கவுண்டரைப் பார்த்து மோசக்காரா யாரை ஏமாற்றுகிறாய் - இரண்டு நெல்லை அறைத்தால் இரண்டு அரிசி வருவது போல ஆயிரம் மூடை நெல் அறைத்தால் 1000 மூடை அரிசி வரவேண்டும் என்பார்.
மனிதன் இன்று இதே மனோபாவத்தில்தான் இருக்கிறான் - எண்ணிக்கை / எடை என எதையும் மிச்சம் வைக்காமல் உண்டு கொழிக்கிறான். இயற்கைக்கு மறு சுழற்சிக்காக இவன் எதையுமே கொடுப்பதில்லை.
நெல் லில் இருந்து கிடைக்கும் உமியை எரிக்கவும் தவிட்டில் இருந்து என்ணெய் எடுக்கவும் கற்ற களவானி மனிதன்.
க்ரூட் ஆயில் எடுத்தான் - 200 லிட்டர் - அதில் பாதியை - குறைந்தபட்சம் கழிவாக 100 லிட்டராவது மண்ணுக்குத் தரவேண்டும் -
மனிதன் செய்தது என்ன?
க்ரூட் ஆயிலை - பெட்ரோல் - டீஸல் - மண்ணெண்ணெய் - பாலிமர் - நாப்தா - தார் என 200 லிட்டரையும் விஞ்ஞானப் பேராசையால் அனுபவித்து, கடைசியாக - மறுசுழற்ச்சிக்கு வழியில்லாத மக்கிப் போகாத ப்ளாஸ்டிக் கழிவுகளை மட்டும் இயற்கையிடம் திருப்பிக் கொடுத்தான்.
விளைவு - எதிர்கால இயற்கை கொடை கேள்விக் குறியாக!
பூதத்தில் கரைவோம்....⁠⁠⁠⁠

Sunday, December 22, 2019

புகழோங்கிய பாரதம்- 4

புகழோங்கிய பாரதம்
அஸ்திரம்/ ஆன்ராய்டு/மந்திரம்
பாரத ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் உருவானதே *#ப்ரம்மோஸ்* என்ற ஏவுகனை. இதற்க்கு இந்த பெயர் வர காரணம்... நம் புராண இதிகாசங்களில் சொல்லப் பட்ட *#ப்ரம்மாஸ்த்ரம்* மற்றும் Mos cow ரஷ்ய நாட்டின் தலை நகரம்.
இந்தோனேசியா வின் அரசு வானூர்தி நிருமம் கருடா Airlines. சின்னம் கருடன்.
புஷ்பக விமானமே குபேரன் மீது ராவணனுக்குப் வெறுப்பும் பகைமையும் வர காரணம் ஆனது.
காண்டவ பிரஸ்தம்- வனம் இந்திரபிரஸ்தம் ஆக பாண்டவர் தலை நகரம் ஆனது. அப்போது அர்ஜுனனால் உயிர் பிச்சை தரப்பட்ட பாம்பு ஒன்றே கடைசி வரை அர்ஜுனன் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த நாகாஸ்திரம்.
சிவனின் பாசுபத அஸ்திரம்... இந்த அஸ்திரங்கள் பிரயோகிக்கப்ப்படும் நேரம் அதை வாயருகே வைத்து மந்திரம் சொல்லுவார்கள்... அது என்ன தெரியுமா... பசு பிராம்மனர் குழந்தைகள் நோயாளிகள் பெண்கள் மூத்த குடிகள்ஆகியோருக்கு ஆபத்து செய்யாதே என்ற command... இது எப்படி ஒரு ஆயுதத்துக்கு ...?!
Voice typing செய்கிறோமே!! அஸ்திரத்துக்கு command கொடுக்க முடியாதா?!
நம் முன்னோர்கள் அணு ஆயுதங்களை ஒரு 3அல்லது 4 அடி நீளம் உள்ள குச்சி வடிவில் அமைத்து இருந்தார்கள்...
உலக நலன் கருதி நைமிசாரண்யத்தில் தங்கள் அம்பு அஸ்திரம் படை கலன்ங்களை நம் காவிய நாயகர்கள் விட்டும் கொடுத்தார்களே...
இன்னும் பேசுவோம்...

புகழோங்கிய பாரதம்-3

புகழோங்கிய பாரதம்
வாரணாவதம் என்ற நகரில் மெழுகு வைக்கோல் மற்றும் அரக்கு போன்ற எளிதில் தீபற்றக் கூடிய பொருள்களால் உருவாக்கப்பட்ட மாளிகை ஒன்றை தயார் செய்து அங்கே புரோசனன் என்ற ஒரு வேவு பார்ப்பவன் மூலம் பாண்டவர்களை தீர்த்துக்கட்ட துரியோதனான் திட்டமிட்டான்.
இது குறித்து தகவல் அறிந்த விதுரர் தகுந்த சில குறிப்பு உபயங்கள் சொல்லிக் கொடுத்து தருமனை உஷார் படுத்தினார்.
சுரங்கம் அமைத்தல், இரவு நேரத்தில் விண் கோல்கள் /நகர்வு மூலம் திசை/ பாதை அறிவது போன்றவை அவை. இது தவிர அரக்கு மாளிகையில் இருந்து தப்பிய பாண்டவர்கள் கங்கை கரையை அடைந்து அங்கே விதுரர் ஏற்பாட்டின் படி இருந்த படகில் ஏறி தப்பினார்கள்.
அந்த படகு குறித்து ஆதி பர்வம் அத் 13இல் இயந்திரம் பொருத்ப்பட்டது... பெரும் காற்றை எதிர்கொண்டு அலைகளால் பாதிக்காமல் அதி வேகமாக பயணிக்கும் என்று வர்ணிக்கப்பட்டு உள்ளது.
பின்னர், வியாசரை சந்தித்த பாண்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட துர்பாக்ய நிலை குறித்து புலம்பி துக்கித்த நேரத்தில்...
வியாசர் சொல்கிறார்...
பாண்டு குமாரர்களே, பூர்வ ஜென்மத்தில் நீங்கள் நல்ல நண்பர்களை பிரித்து அவர்களிடையே விரோதத்தை உருவாக்கிய பாவமே இன்று இப்படி அவதிப் படுகிறீர்கள்...
ஆகவே, இனி நீங்கள் உங்களோடு பயணிக்க ஹித வார்த்தைகளை சொல்லி வழி நடத்த ஒரு புரோஹிதன் உதவியோடு செல்லுங்கள் என்று சொல்லி தௌம்யர் என்ற சாஸ்திரம் அறிந்த புரோகிதரை பாண்டவர்களுக்கு துணையாக அனுப்பினார்.
அஸ்திரம்/ ஆன்ராய்டு/மந்திரம் 4இல் 

புகழோங்கிய பாரதம்- 2

 புகழோங்கிய பாரதம்
திரௌபதி பாண்டவர்களுக்கு சொந்தமான செய்தி துரியோதனாதிகளுக்கு மிகுந்த சலிப்பை கோபத்தை தூண்டியது.
பாஞ்சால தேசத்திலேயே துரியோதனன், கர்ணன், சகுனி, சோம தத்தன் ஆகிய நால்வரும் ஒன்றுகூடி பாண்டவர்களை தாக்குவது சம்பந்தமாக ஆலோசிக்கத் துவங்கினர்.
அப்போது சோமதத்தன் பேசுவது, துருபதன் வல்லமை படை பற்றி சகுனி சொல்வதை என்னால் எற்க முடியவில்லை. அவனிடம் ஆயுதங்கள் எந்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. அவனுடைய கோட்டை மதிலின் மேல் அக்கினியை வீசும் கோளங்கள் பொருத்தப்பட்டு இறுக்கின்றன என்று சொல்கிறான்...
இவை பீரங்கியாக இருக்கும் என்பது அனுமானம்.
ஆதாரம்... மகா பாரதம் ஆதி பர்வம் அத்யாயம் 17.
3இல் கப்பல்.

Saturday, December 21, 2019

புகழோங்கிய பாரதம் -1

புகழோங்கிய பாரதம்.
நம் பாரத மக்களின் மனதில் நமது வரலாறு/பெருமை குறித்து நிறைய பொய்கள் நன்கு விதைக்கப்பட்டு உள்ளது...
கொள்ளை அடிக்க / பெண்கள் மீது நாட்டம் கொண்டு இங்கே வந்த முஸ்லிம் களை மன்னர்கள் என்றும், மதம் மாற்றம் நோக்கமாக வந்த கிறித்தவர்களை lord என்றும் ப்ரபுக்கள் என்றும் நாம் இன்றுவரை பாடங்களில் படித்துக்கொண்டு இருக்கிறோம்.
நன்கு படித்த பாண்டித்யம் பெற்றவர்கள் கூட இன்று நம்பும் ஒரு விஷயம், secularism.
அதே போல பாரதீயர்கள் காட்டுமிராண்டிகள்/பாம்பாட்டிகள் நாகரீகம்/ விக்ஞானம் தெரியாதவர்கள் என்ற எண்ணம் நமக்குள் விதைக்கப்பட்டு உள்ளது.
பீரங்கிகள் இங்கே புழக்கத்துக்கு வந்தது, முகலாய கொள்ளையர்கள் (so called மன்னர்கள்) காலத்தில்.... துப்பாக்கிகள் இங்கே வந்தது மதம் மாற்றும் கிறித்தவர்கள் செய்த சாதனை என்றெல்லாம்...
வாஸ்து அறிந்த ப்ரோஹிதன் இன்றைய google போல தேர்தவனாக இருந்து உள்ளனர் நம் தேசத்தில்.
மகா பாரதத்தில் பீரங்கிகள்/ கப்பல் /அணு ஆயுதங்கள் இருந்து உள்ளது.
இன்றும் இலங்கை விமான குழுமத்தின் பெயர் ராமாயணம் தழுவியே. வைமானிக சாஸ்திரம் யாருடைய நூல்?!
நம் பெருமை / ஆயுதம் குறித்து கொஞ்சம் விரிவாக பேசலாம்....
2இல் 

ஸ்ரார்தம்

ஸ்ரார்தம்...
வீட்டில் இருக்கும் மூத்த கர்த்தா வே செய்ய வேண்டும்... மற்ற உப கர்த்தா க்கள் உடன் இருக்க வேண்டும்.
மூத்த கர்த்தா உடல் நலம் குன்றியவர் அல்லது மனைவி இல்லாதவர் என்றால் அதிகாரம் இரண்டாமவருக்கு.
கர்மாக்கள் கொடுக்க வேண்டியவர் தவறினால் உப கர்த்தா செய்யலாம்.
இப்போது எல்லாம் புரோகிதர்களின் அதீத பேராசை, இழுத்தடிப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஒப்புக் கொள்வது மந்திர பிரயோகங்களில் சிரத்தை இல்லாமை ஆகியவற்றால், கர்த்தாக்கள் ஸ்மரண தினத்தன்று கோசாலை விருதாஸ்ரமங்களில் சிரார்தத்துக்கு ஆகும் சிலவை விட அதிக பொருள் செலவிட்டு உணவு கொடுத்து விட்டு வந்து விடுகிறார்கள்.
இங்கேயும் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், பல இடங்களில் பணம் கட்டுவதை தவிர்த்து ஒரு இடமாக செய்தால் அந்த பித்ரு அன்னம் தண்ணீருக்கு அலையாமல் இருக்க வேண்டும்... கர்த்தா பணம் கட்டிய இடத்தில் சிரத்தையுடன் ஒரு தர்ப்பணம் கொடுப்பதும் நல்லது.
இப்போதெல்லாம் சம்பாதிக்க ஒரு நல்ல வழி...
மகா பெரியவர் ஆராதனை... ராகவேந்திரர் ஆராதனை, சேஷாத்திரி ஸ்வாமிகள் ஆராதனை என்று ஊருக்கு ஊர் கிளம்பி உள்ளனர்.
குரு வின் சமாதி/ பிருந்தாவனம் உள்ள இடத்தில் அங்கீகரிக்கப்பட்ட நபரால் மட்டுமே ஆராதனை நடத்த வேண்டும்...
ஆளாளுக்கு தங்கள் தங்கள் ஊரில் ஆராதனை என்று துவங்கினால், சமாதி/பிருந்தாவனத்துக்கு என்ன முக்கியத்துவம்!
ஜெயந்தி விழா ஊர் ஊருக்கு கொண்டாடிவிட்டு போய் சேருங்கள்... அதை விட்டுவிட்டு ஆராதனை என்ற பெயரில் மக்களின் பக்தி நம்பிக்கையை பணத்தை மோசம் செய்ய வேண்டாமே. 

விவாக தர்மம்

விவாக தர்மம்
இந்து தர்மத்தில் இருந்த அதி உத்தமமான விஷயம் பால்ய விவாகம்.
தர்மத்தை அழிக்கவே வந்த ஆங்கிலேயர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி குழந்தை திருமணம் சமூகக் கொடூரம் என்று சொல்லிவிட்டு இன்று கோ எஜூகேஷன் - செக்ஸ் கல்வி பற்றி பேசி மேல் நாட்டுக் கலாசாரம் என்று புதிது புதிதாக பினாத்துதல் செய்து சிறுமிகளை பாலியல் வன்புணர்வில் இந்தியன் சீரழிக்கிறான்.
8 வயது பெண் கெளரீ
9 வயதில் ரோஹிணீ
10 வயதில் கன்யா
அதன் பின் ரஜஸ்வலை .... எட்டு முதல் 10 வயதுக்குள் விவாகம் முடிக்கப்பட வேண்டும்
கெளரீ விவாகம் ஸ்வர்க்க லோகத்தை - ரோஹிணீ விவாகம் ப்ரம்ம லோகத்தை தரவல்லது.
பால்ய விவாகம் கணவன் மனைவிக்கு பரஸ்பர அண்யோன்யத்தை தரவல்லது -
இப்போதெல்லாம் 25 -28வயது வரை பெண்கள் சம்பாதிக்கிறேன் என்று சொல்லி பணத்தோடு தனக்கென விருப்பு வெறுப்பு பிடிவாதத்தையும் சேர்த்துக் கொண்டு அடங்காத மனைவியாய் ஆறே மாதத்தில் விவாகரத்து கோரி வழக்காடு மன்றத்தில்.
கணவனின் 32 வது வயதுக்குள் பிள்ளைகளை பெற்றுக் கொண்டு விடுதல் கட்டாயம். அப்போது தான் மகனோ / மகளோ பெற்ற தகப்பன் தன் கடமைகளை தன் சம்பாதித்து திடகாத்திரமாய் இருக்கும் காலத்திலேயே முடித்து விட முடியும் (58 வயது ரிடையர்மெண்ட்டுக்கு முன்).
ஆணுக்கும் பெண்ணுக்கும் வயது வித்யாசம் தேவை - ஆணுக்கு மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது - ஆக ஆணின் இச்சை பூர்த்திக்காக பெண் இளமையைப் பேணித்தான் ஆகவேண்டும்.
பெண்ணோடு உறவு கொள்வதில் சொல்லப்படும் முக்கிய விதி - தலை முடி நரைத்த பெண்ணோடு உறவு தவிர்க்க வேண்டும். ஆணால் இன்று நாகரீக பெண்களின் முதல் நிபந்தனையே வயது வித்யாசம் அதிகபட்சம் 2 வருடங்களே.
பெண் குழந்தைகளுக்கு இரண்டு ஜாதகங்கள் உண்டு. ஒன்று ஜனன கால ஜாதகம் - இன்னும் ஒன்று ருது மங்கள ஜாதகம். ஆனால் ஆண்களுக்கு ஒரே ஜாதகம் மட்டுமே.
பெண்ணுக்கு பருவமடைவதற்க்கு முன்பே திருமணம் செய்து வைத்து பின் ருது மங்கள ஜாதகத்தின் படி தக்க நேரத்தில் சாந்தி முகூர்த்தம் வைப்பதாலேயே - இத்தனை விசேஷமாக தர்மம் நமக்கு குறிப்பிட்டு சொல்லி கொடுத்தது.
ஹூம்...⁠⁠

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...