Friday, February 22, 2019

சம்ஸ்கிருதம்-5

உலகமே கொண்டாடும் ஒரு உன்னத மொழியை நம்மை ஆண்ட இன்னமும் மறைமுகமாக ஆண்டு கொண்டு இருக்கின்ற இஸ்லாம் கிறித்தவ சக்திகள் சதியின் காரணமாக நாம் செத்த மொழி என்று கைவிட்டு விட்ட, சமஸ்க்ருதம் மீண்டும் ஒரு பேச்சு வழக்கு மொழியாக வேண்டும்.
இன்று சமஸ்க்ருதம் கூடாது என்று கூச்சல் போடுபவர்கள் அதற்கு சொல்லும் காரணம் என்ன?
அது பிராம்மண, ஆரிய பாஷை.
இல்லாத ஆரிய திராவிட கற்பனையின் கீழ் கைபர் போலன் கணவாய் வழியாக கடந்து வந்து நம்மை அடிமைப் படுத்தியவர்கள் பாஷை....
அதாவது ஆதாரமே இல்லாத ஒரு புளுகு மூட்டையின் படி, ஒரு மகோன்னத மொழி நம் நாட்டில் செத்த மொழி...
நம் மனம் ரத்தம் வரலாறு என ஒவ்வொன்றிலும் நம்மை இன்னமும் அடிமை படுத்தி வைத்து இருக்கும் கிறித்தவ துலுக்க பாஷைகள் நம்மை ஆண்டால் தப்பில்லை என்ற எண்ணம், எச்சில் பிச்சை அமுதம் என்ற அடிமை மனோபாவம்.
இந்த நாட்டில் பிறந்ததாக ஒட்டுமொத்த உலகமே கொண்டாடும் ராமாயண மகாபாரத ஏன், வேதங்கள் கூட சமஸ்க்ருத மொழியில் இருக்கும்போது, சமஸ்க்ருதம் எப்படி கைபர் போலன் கணவாய் வழியாக வந்த ஆரிய அல்லது வெளிநாட்டு மொழியாக இருக்க முடியும்?!
க்ருத யுகத்தில் மச்ச ரூபத்தில் விஷ்ணு காப்பாற்றிய, பிரம்மன் கையேடு வேதம் சமஸ்க்ருதம்.
த்ரேதா யுகத்தில் வேடுவ வால்மீகி எழுதிய ராமாயணம் சமஸ்க்ருதம்.
துவாபர யுகத்தில் மீனவ பெண்ணின் மகன் வ்யாஸன் தொகுத்த வேதம் _ எழுதிய மஹா பாரதம் அதன் உள்ளே இடையன் சொன்ன கீதை சமஸ்கிருதம்.
1947 இல் சுதந்திரம் பெற்று 1950 இல் இந்தியாவுக்கு என்று நாமே நம் தலையில் கூட்டிக் கொண்ட குப்பை குவியல் இந்திய அரசியல் அமைப்பின் / இலச்சினை யின் சத்யமேவ ஜயதே கூட சமஸ்க்ருதம்...
உண்மைகள் யுக யுகங்களாக சமஸ்க்ருதம் சாமானியன் மொழி என்ற சத்தியத்தை உணர்த்திக்கொண்டு இருக்கும்போது அது எப்படி பிராம்மண பாஷை ஆனது அதுவும் கடந்த 50 ஆண்டுகளில்?! என்பதை பார்ப்போம் 6 இல்... 
No photo description available.

Thursday, February 21, 2019

சம்ஸ்கிருதம்-4



ஹ்ருதயம்... என்றால் என்ன... heart... இதன் செயல்பாடுகள் என்ன... கிறிஸ்து பிறந்து 1200 ஆண்டுகளுக்கு பின்னர் இதயம் என்ற உறுப்பு பற்றி மேற்கத்திய நாடுகள் சிந்திக்க துவங்கி பல புத்தகங்கள் கட்டுரைகள் எழுதினர் பல ஆராய்ச்சியாளர்கள்!
இருப்பினும், ஹ்ருதயத்தின் செயல்பாடுகள் குறித்த தெளிவான முடிவுக்கு 1900 வாக்கில்தான் மேற்க்கத்தியர்களால் வர முடிந்தது...
1906 இல் எழுதப்பட்ட புத்தகம் ஒன்றில் ஹ்ருதயம் என்பது உடலில் இருக்கும் ரத்தத்தை உள்வாங்கி அதை மூளையின் கட்டளைப்படி சுழற்சி செய்து உடலின் பகுதிகளின் தேவை கேற்ப அனுப்பி வைப்பதே ஹ்ருதயத்தின் பிரதான பணி என்ற முடிவை கண்டு கொண்டார்கள்...
ஆனால், எப்போது தோன்றியது, என்ன வயது என்று தெரியாத சமஸ்க்ருத மொழியில் ஹ்ருதயம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை கேட்டால் ஆச்சர்யமாக இருக்கும்!
ஹ்ரு
என்றால் அபகரித்தல் அல்லது உள் வாங்கிக்கொள்ளல்
என்றால் கொடுத்தல்
யம்
என்றால் சுழற்சி செய்தல்
கிறிஸ்து பிறந்து 1900 ஆண்டுகள் கழித்து மேற்கத்தியர் ஆராய்ந்து உருண்டு பிரண்டு சில நூறு பக்கங்களில் எழுதிய ஒரு செய்தியை ஹிந்து சனாதன தர்மத்தின் தாய் மொழி ஒரே ஒரு வார்த்தையில் சொல்லி விட்டது... ஹ்ருதயம்...
சரி, இனி இந்த சமஸ்க்ருத மொழிக்காக நாம் என்ன செய்யலாம் என்று யோசிப்போம் 5இல்...
No photo description available.

சம்ஸ்கிருதம்-3

Facial stroke இப்போது நிறைய கேள்வி படுகிறோம்... அதீத ஏசி பயன்பாடு /குளிர் இதற்க்கு சில காரணம்...
Chewing gum சாப்பிடுவது ஒரு விதமான சிகிச்சை... தொடர் மெல்லுதல் முகத்துக்கு ஒரு விதமான பயிற்சி....
முக அசைவு ஒரு வித பயிற்சி _ கோணலாக இருக்கும் முகத்தையே சரி செய்து விடும்... அது போலத்தான் பேசும் பாஷையும்...
நம் முக அமைப்பு நாம் பேசும் பாஷையை வைத்தே! பேசும் பாஷையின் உச்சரிப்பில் இருக்கும் அழுத்தம் குழைவு நெளிவு சுளிவுகளை வைத்தே நம் முக அமைப்பு...
சமஸ்க்ருதம் தேவ பாஷை... சமஸ்க்ருதத்தின் சரளமான உச்சரிப்பு அதில் இருக்கும் சப்த நீட்டல் கமகம் அதிர்வு ஒரு விதமான மூச்சடக்கல் பயிற்சி...
முகத்துக்கு / உயிருக்கு பொலிவை தருவது சமஸ்க்ருதம்.
இந்த பெருமைமிகு மொழி இந்த நாட்டில் செத்த மொழியாம்!
உருது / பிரெஞ்சு படித்தால் சலுகை இங்கே - சமஸ்க்ருதம் படித்தால் அவமதிப்பு _ அங்கீகாரம் இல்லை இந்த தேசத்தில்....
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் _ நாம் ஹ்ருதயத்தை பதம் பார்ப்போம்!! 4 இல்⁠⁠⁠⁠ 
Image may contain: 1 person

சம்ஸ்கிருதம்-2

உபர் = upper
த்ரீநீம் = three
துவெ = தோ = two
நவ்கா = navigator
ப்ராதா = brother
முன்னே சொன்னது சமஸ்க்ருதம்... பின்னே சொன்னது... வெளிநாட்டு எச்சில்.
வெளிநாட்டு எச்சிலுக்கு மரியாதை! நம் வீட்டு அமுது காட்டுமிராண்டிகள் பாஷை!
விளங்குமா இந்த தேசம்.
பல வருடங்களாக ஜெர்மனி நாட்டில் ஒரு ஆராய்ச்சி நடந்து வருகிறது... அது...
இன்றைய நவீன கண்டு பிடிப்பான கம்ப்யூட்டர் பயன்பாட்டில், சமஸ்க்ருத commands விரைவாக வேகமாக தெளிவாக ஏற்கப்படுகிறதாம்!
ஆக, சமஸ்க்ருத த்தை ஏற்ற அவர்கள் இரண்டும் ஒன்றாய்... இன்னும் சொல்லப்போனால் ஐரோப்பியா முழுமையும் யூரோவால் ஒன்றாய்...
நாம்,மொழியால் இனத்தால் மதத்தால் சண்டை போட்டுத் துண்டாகி....
நாம் பெருமைப் பட வேண்டிய ஒரே ஒரு விஷயம்...
கிறித்தவ இஸ்லாமிய தாக்கங்கள் நம் நாட்டில் ஆயிரக்கணக்கான விஷ விதைகளை நட்டுச் சென்று இன்று - இன்று மொழி/ ஜாதி/ மதச் சண்டை என்று நாம் தாழ்ந்து இருந்தாலும் வல்லமையால் விஞ்ஞானத்தால் நாம் உயர்ந்து நிற்கிறோம்... மங்கள்யான் / 104 விண்கலம்....
காரணம் வேரடி மண்... நம் மொழி கலாச்சாரம் பெரியோர்கள் புராணங்கள் விட்டுச் சென்ற நம் தேசத்தின் வேரடி மண்.....
தொடர்ச்சி 3இல் 
Image may contain: 1 person, beard and text

சம்ஸ்கிருதம்-1

நமது தேசத்தில் நாம் அலட்சியம் செய்யும் எல்லாம் உலகத்தால் உயர்வாக கருதப்படுகிறது.
நாட்டு பசு, பாரதத்தில் வெட்டி உண்ணப்பட்டது... உலகம் இந்திய மாடுகளின் ஒரு அலகு வீரியத்தை லட்சம் கோடி என பணம் கொடுத்து வாங்கி தங்கள் நாட்டை செழுமை படுத்தி கொள்கின்றன!
ஹிரோஷிமா நாகசாகி _ அணு வால் அழிகப்பட்ட பூமி இன்று சொர்க்கமாக... இதற்க்கு காரணம் பாரதத்தின் கண்டுபிடிப்பான மண்புழு உரம்.
இங்கு சமஸ்க்ருதத்தை புறக்கணிக்க _ வெளிநாட்டில் இன்று university வைத்து வளர்த்து வைமானிக சாஸ்திரத்தை வைத்து புதுவித விமானங்களை தயாரிக்கிறான்.
ஆங்கில காலண்டரில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் ஜூலியர் சீசர் மற்றும் அகஸ்டஸ் என்ற மன்னர்களின் பெயரால் பிற்சேர்க்கை. அதற்க்கு முன்பாக ஐரோப்பிய காலண்டரில் மாதங்கள் வெறும் 10, ஒரு மனித கர்ப்ப காலம்.
சப்த / செப்டம்பர்
ஆட் / அக்டோபர்
நவ் / நவம்பர்
தஸ் / டிசம்பர்
சப்த அஷ்ட நவ தச எந்த மொழி?!
உலகின் முதல் மூத்த மொழியை பழித்து நாம் படுகுழியில் வீழ்த்தோம்...
நாம் புறக்கணிப்பது அமுது அதன் பலனாக நாம் ஏற்பது நஞ்சு... இது சாரம்
மீதி பதிவு 2ல் Image may contain: 2 people, including Maruthamani Muthaliyar

Monday, February 11, 2019

ஜெய் அனுமான் -2

ரத்தத்தில் இருப்பதே வியர்வையில் வெளிப்படும் / ஹனுமான் மகன் மகரத்வஜன்
மகாபாரதத்தில் சந்தனு மகாராஜா மகன் பீஷ்மர்.. இவர் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து வீழ்ந்தார்... இவர் தான் பிரம்மச்சாரியாகவே வாழ்வேன் என்று சபதம் செய்த போது சொன்ன வாக்கியங்களில் ஒன்று "ஊர்த்துவரேதஸ்"
"ஊர்த்துவரேதஸ்" என்றால் என்ன?
நீரின் இயல்பு என்ன தெரியுமா? பள்ளமான இடங்களை நோக்கி ஓடுவது... தீயின் இயல்பு மேல் நோக்கி செல்லுவது..
மனிதனின் விந்து நீர்த் தன்மை கொண்டது தானே... அப்போது அது கீழ்நோக்கியே பாய்வதுதானே இயற்க்கை... நம் பீஷ்மாச்சரியார், அந்த சுக்கிலத்தை உர்த்தவ அதாவது மேல்நோக்கி கொண்டு செல்வேன் என்று சத்தியம் செய்தார்,..
இதை, கொஞ்சம் வேறு விதமாகவும் பார்க்கலாம்... சன்யாசிகள் உயிர் நீத்தாள், கபால மோக்ஷம் என்று தலையில் தேங்காய் உடைத்து... அவர்களின் ஆன்ம சக்தியை (பிரம்மச்சரிய விரதத்தால் தேக்கி வைக்கப்பட்ட ஆண்மை சக்தியை) வெளியேற்றுவார்கள்...
சரி, இந்த விந்து எரு வாய் மற்றும் கருவாய் ஆகிய இரண்டுக்கும் இடையே உற்பத்தி ஆகி, எப்படி மேலே செல்லும்... ரத்தத்தின் வழியாகத்தானே? அதாவது உபயோகிப்படாத விந்து மீண்டும் உர்த்தவ ரேதஸ் மூலம் ரத்தத்தோடு ரத்தமாக கலந்து, தலைக்கு செல்லும்... அப்படி ரத்தத்தோடு ரத்தமாக கலந்த ஹனுமான் விந்து அவன் வியர்வையில் வெளிப்பட்டு அதுவே மகரகன்னி யாக இருந்த தேவதை வயிற்றில் மகரத்வஜன் ஐ உண்டு செய்ததது...
(அதுநாள் வரை ஹனுமனுக்கு வியர்வை வெளிப்படவே இல்லையா? அல்லது அதற்க்கு முன் அல்லது பின் வெளிப்பட்ட வியர்வையில் உயிர் உற்பத்தி சக்தி இல்லையா? - அது எப்படி வாய் வழி உண்டது குழந்தையை உற்பத்தி செய்யும்? இந்த கேள்விகளுக்கும் விஞ்ஞான ரீதியில் பதில் உண்டு - நீங்கள் விரும்பினால் தனி பதிவாக)

ஜெய் அனுமான் -1

ஹனுமான் மகன் மகரத்வஜன் 
வியர்வை வழி குழந்தை...
ச்சென்ட், perfume இதை நாம் பூசிகொண்டால் உடல் துர்நாற்றம் தவிர்க்கப்படுகிறது... சில மணி நேரங்களுக்கு... உடல் துர்நாற்றம் காரணம், சுற்றுச்சூழல் மற்றும் குறிப்பாக நமக்கு உள்ளே இருந்து சுரக்கும் வியர்வை...
இப்போதும் சர்க்கரை வியாதி உள்ள பலர், தங்களுக்கு நோய் இருப்பதை, தான் மிகவும் இனிப்பானவன் என்று நாசுக்காக அறிமுகபடுத்தி கொள்வது உண்டு... ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை / உப்பு வியர்வையில் வெளிப்படுவது இயற்கை... அதனால்தான் வியர்வை உப்பு கரிக்கிறது..
(ரத்தமும் தண்ணீர், வியர்வையும் தண்ணீர்... பஞ்ச பூதங்களில் ஒன்றான நீரின் அம்சம்)
வியர்வையில் சர்க்கரை வெளிப்படுமா? கொஞ்சம் வித்யாசமாக பார்ப்போம்...
மது குடிப்பவர்கள் ரத்தம் குறைந்த பட்சம் மூன்று நாட்கள் சேகரிக்கபடாது... என்று ஒரு விதி இருந்தது... பேரிச்சை அத்தி பழம் சாப்பிட்டால் ரத்தத்தில் ஹீமோகிளோபின் அதிகம் ஆகிறது...
ரத்தமே மனித விந்துவின் மூலம்...
ரத்தத்தில் உள்ளது உயிர் உற்பத்தியில் பிரதிபலிக்கும்... இதை தான் ரத்த பாசம், ஜீன், சாதி வழக்கம்...(ரத்தத்துக்கும் சாதி வந்துள்ளதே) என்றெல்லாம் சொல்கிறோம்...
எல்லாம் சரி சார்.. ரத்தத்துக்கும் வியர்வைக்கும் என்ன சம்பந்தம்...?
நாம் சாப்பிடுவது எல்லாம் ஜீரணிக்கப்பட்டு அந்த உணவில் இருக்கும் உயிர் சத்துக்கள் எல்லாம் ரத்தத்தின் மூலமே உடலின் தேவையான பகுதிகளுக்கு இயக்க சக்தியாக கொடுக்கபடுகிறது என்பது இயற்கை... நாம் கண்டுகொண்ட விஞ்ஞான உண்மை...
வீட்டில் உடல் உபாதை, வாயு தொந்திரவு காரணமாக மருத்துவர் அறிவுரைப்படி - பூண்டு அதிகமாக சேர்த்து கொள்கிறோம்... A apple a day ... keeps doctor away... a garlic a day keep everyone away...
இங்கே, ஒரு சுவையான செய்தி பாப்போம்... பூனைக்கு பால் தவிர வேறு எதை பிடிக்கும்.... எனக்குத் தெரிந்து எலி... எலியில் பல வகை உண்டு... அதில் நாம் ஸ்ரீ விநாயகர் வாகனமாக மூஞ்சூறு என்ற எலியை சொல்கிறோம்.. இதுவும் சாதாரண எலி போலவே இருக்கும்.. ஆனால், இந்த மூஞ்சூறு என்ற எலியை பூனை தொடவே தொடாது... காரணம்... பூனை தன்னை துரத்தும் போது இந்த மூஞ்சூறு வாயு பரிசனம் செய்யுமாம்... அந்த வாடை பூனைக்கு பிடிக்காதாம்... பூனை விலகி ஓடிவிடுமாம்....
மேலே, நான் சொன்ன பூண்டு, அனைவரையும் நம்மை விட்டு விலகி இருப்பதும் இது போன்ற ஒரு காரணமே...
அதுமட்டும் அல்ல... பூண்டு உட்கொண்டால், அது நம் உடலில் இருந்து வெளிப்படும் சிறுநீர் மற்றும் வியர்வையில் அந்த வாடையை வெளிப்படுத்தும்...
ஆக, ஒரு சிலமணி நேரம் நம் உடலில் இருந்த பூண்டு நம் ரத்தத்தில் கலந்து வியர்வை, சிறுநீரில் துர்நாற்றம் ஏற்படுத்தி வெளியேறுகிறது...
ரத்தத்தில் உள்ளது - வெளிப்பாட்டில் (வியர்வையில்) பிரதிபலிக்கும் ... இப்போது மகரத்வஜன் பிறப்பை இன்னம் கொஞ்சம் நெருங்கி விட்டோம்...

விராட் புருஷன் -2

ஸ்ரீ மத் பாகவதம் ஸ்கந்தம் 3 அத்தியாயம் 6
ஸ்லோகம் 27
விராட் புருஷன் தலையில் தேவலோகம் கால்களில் பூலோகம் தொப்புளில் ஆகாயம் தோன்றின.
அந்த மூன்று இடங்களிலும் சத்வம் ரஜஸ் தமஸ் என்ற 3 குணங்கள் உடைய தேவர்கள் மனிதர்கள் பூத கணங்கள் வசிக்கிறார்கள்.
ஸ்லோகம் 28, 29
சத்வ குண மிகுதியால் தேவர்கள் சொர்கத்தையும் ரஜோ குண மிகுதியால் மனிதர்களும் அவர்களுக்கு உதவும் கால் நடைகளும் பூஉலகை பெற்றனர்.
தமோ குண மிகுதியால் விண்ணுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட விராட புருஷனின் தொப்புள் பிரதேசமான அந்தரிட்ச உலகை ருத்ரனின் கணங்களான பூத கணங்கள் அடைந்தன.
ஸ்லோகம் 30
விராட புருஷனின் முகத்தில் இருந்து வேதங்கள் தோன்றின. அதை அனவரதமும் போற்றி காக்க அந்தனனும் உடன் தோன்றினான்.
ஆகவே, அவன் 4 வர்ணங்களுள் மிக முக்கியமானவன், மற்ற 3 வர்ணத்தவருக்கும் ஆசான்.
ஸ்லோகம் 31
விராட புருஷனின் கைகளில் இருந்து மக்களை காக்கும் தொழில் திறனும் அதை போற்றும் க்ஷத்ரியனும் தோன்றினர். அவன் பகவான் விஷ்ணுவின் காக்கும் அம்சம் கொண்டவன். மற்ற 3 வர்ணத்தவர்களையும் திருடன் முதலிய தீயோர்களிடமிருந்து காக்க கடைமைப்பட்டவன்.
ஸ்லோகம் 32
பகவானது துடைகளில் மக்களுக்கு ஜீவனத்துக்கு உரிய விவசாயம் முதலியனவும், அவற்றை மேற்கொண்ட வைசியர்களும் தோன்ற, அவர்களின் தொழில் மக்களின் வாழ்க்கைக்கு வேண்டியவற்றை செய்து தரவேண்டும்.
இனி, இந்த இடம் தான் நம்ம பகுத்தறிவு பக்கோடாக்களுக்கு முக்கியமான இடம்.... ஆம், சூத்திரன் விராட புருஷனின் கால்களில் இருந்து தோன்றினான்... ஸ்லோகம் 33.... சூத்திரனுக்கு கொடுக்கும் definition என்ன?!
மேலே கூறிய அனைத்து அறநெறிகளும் செவ்வனே செயல் பட.... அதாவது ஆசிரியர் தொழில் (வேதம் பேணுதல்) க்ஷத்திரிய தொழில் (காத்தல்) வைசிய தொழில் (பேணுதல்) ஆகிய அனைத்தும் செவ்வனே செயல் பட இறைவனது திருவடித் தாமரையில் இருந்து (பத்ப்யாம் பகவதோ)
சேவை என்னும் உயர்ந்த தொழிலும் (ஜக் ஞே ஸுஸ்ரூஷா தர்ம ஸித்தயே)
அதை செய்து தர (தஸ்யாம் ஜாத:) 4 ஆம் வர்ணத்தவரான வேளாளர்களும் தோன்றினர்... (புரா ஸூத்ரோ யத் வ்ருத்த்யா துஷ்யதே ஹரி:)
இந்த வர்ணத்தவர்கள் சேவையால் தான் பகவான் ஸ்ரீ ஹரி மகிழ்ச்சி அடைகிறார்...
முக்கிய விளக்க குறிப்பு (especially for பஹூத் அரிப்பு பக்கோடா க்களுக்கு)...
*அனைத்து அறங்களும் செவ்வனே நடக்க மூல காரணம் (ஆணிவேர்) சேவை மனப்பான்மையே. அச்சேவை இல்லையேல் எந்த அறநெறியும் நிற்காது. ஆகவே, அனைத்து அறங்களும் நன்கு நடக்க உதவும் சேவை மனப்பான்மை கொண்ட வேளாளர்களே 4 வர்ணங்களிலும் உயர்ந்தவர்கள்.*
*அந்தணர்கள் நெறி முக்தி நெறி, க்ஷத்திரியர்கள் நெறி போக நெறி, வைசியர்கள் நெறி பணம் திரட்டுவது, அதை பிறருக்குத் தருவது. ஆனால் வேளாளர்கள் நெறி, #அறநெறி.*
*அதாவது, 3 வர்ணத்தவர்கள் நெறிமுறைகளுக்கு உதவி செய்வது. இவ்வாறு முதல் 3 வர்ணத்தவர்களின் நெறி மற்றைய புருஷார்த்தங்களை அடைவதற்குகென்று இருப்பது. ஆனால், சூத்திரர்களான வேளாளர்கள் நெறியோ, தனக்கென வாழா பிரற்குறியாளர் நெறி. எனவே, வேளாளர் நெறி கண்டுதான் இறைவன் மகிழ்கிறான்*
இப்போ இப்பிடி simple ஆக பார்ப்போம்...
வாத்தியார் தொழில் செய்பவன் எல்லாம் பிராம்மணன்...
போலீஸ், ராணுவம் உத்தியோகஸ்தர்கள் க்ஷத்ரியன்.
விவசாயி, கோனார், வட்டிக்கடை சேட்டு, வியாபாரி எல்லாம் வைசியன்.
ஹோட்டல் நடத்துரவன், ராக்கெட் விடுபவன், ஆவடி tank பேக்டரி தொழிலாளி, திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை தொழிலாளி, துணி, சர்க்கரை ஆலை bhel தொழிலாளிகள், பேங்க் வேலை பார்ப்பவன், இன்ஜினியர், மருத்துவர், வக்கீல், CA இத்யாதி இத்யாதி எல்லாம் சூத்திரன்.
எதா இருந்தாலும் ஒழுங்கா படிச்சுட்டு, புரிஞ்சிக்கிட்டு போராடுங்கடா பேப்பய புள்ளைகளா! 

Sunday, February 10, 2019

விராட் புருஷன்

ஸ்ரீ மத் பாகவதம், ஸ்கந்தம் 3 அத்தியாயம் 26... அண்டம் மற்றும் விராட் புருஷன் தோற்றம் பற்றி விரிவாக சொல்கிறது....
1. விராட் புருஷனுக்கு முதலில் முகம் தோன்ற அதில் இருந்து வாக் (சொல்) பின் வாக் கின் அதிஷ்டான தேவன் அக்னி தோன்ற...
இப்போது புரியும், தீயினால் சுட்டப்புண் உள்ளாறும் ஆறாதே நாவினால் சுட்ட வடு என்று திருவள்ளுவர் எழுதிய காரணம்...
மூக்கின் தேவதை வாயு
கண்களின் தேவதை சுட்டும் விழிச் சுடராய் சூரியன்... காதுக்கு தேவதை திக்...
விராட புருஷனுக்கு நாடி நரம்பு ரத்தம் அதன் தேவதை நதிகள் பின் வயிறு அதில் பசி தாகம் பின் அதன் தேவதையாக சமுத்திர தேவன் அதன் பின் இதயம் அதில் இருந்து மனசு.... இப்போ புரியுதா மனசு ஏன் அலை பாய்ந்து கொண்டே இருக்கு என்று...
ஒன்றில் இருந்து ஒன்று உண்டான படியால், பின்னர் உண்டான வஸ்து வுக்கு (காரியத்துக்கு) அதன் தாயான மூல வஸ்து (காரணத்தின்) குணமும் கலந்து இருக்கும்.... தாயை போல பிள்ளை...
மனதில் இருந்து அதன் தேவதை சந்திரன் பிறகு புத்தி அதன் தேவதை பிரம்மன் பின் அகங்காரம் அதன் தேவதை ருத்ரன் கடைசியில் சித்தம் (பகுத்தறியும் திறன்) அதன் தேவதை க்ஷேத்ரக்ஞன் வெளி வந்தனர்...
ஆனா, இன்னிக்கி பூரா பய புள்ளைக்கும் சித்தம் கலங்கி போய் தன்னைத் தானே பகுத்தறிவாளன் என்று சொல்லிக்கிட்டி திரியிறான்! 
Image may contain: 11 people, including Harit Churu

கூத்தனூர் சரஸ்வதி கோவில்

கூத்தனூர் சரஸ்வதி கோவில், செட்டிப்புண்ணியம் ஹயக்ரீவர் கோவில் திருவெஹிந்திபுரம் கோவில் என எங்கு போனாலும் திரும்பும் திசை எல்லாம் பேனா கடைகள்...
இந்தியாவில் உற்பத்தியாகும் ஒட்டுமொத்த பேனாக்கள் படிக்குப் பாதி இந்த 3 இடங்களில் மட்டுமே கிடைக்கும் என்ற அளவில் கொட்டிக்கிடக்கும்....
நம்மோடு தரிசனம் செய்யும் முன்னும் பின்னும் நிற்கும் மாணவ மாணவிகள் பெற்றோர் கைகளில் 100 க்கு 95% use and throw ball point pen கள்...
அர்ச்சகரிடம் கொடுத்து மூலவரின் ஸ்பரிசத்தோடு எடுத்துச் செல்லப்படும் இந்த பேனாக்கள் எத்தனை நாட்கள் மாணவ செல்வத்தோடு இருக்கும்....
ஒரு அறிவு ஜீவி சொல்லியது.... யார் சார் இந்த காலத்தில் இங்க pen உபயோகிக்கிறார்கள்?! நான் என் மகனுக்கு 1300 ரூபாய் கொடுத்து parkar ball point வாங்கி கூத்தனூரில் வைத்து பூஜித்து கொடுத்தேன்... ஒரிஜினல் refil மட்டும் மாற்றி உபயோகிக்கிறான்...
அடேய், அறிவு off ஆனவனே... பேனாவில் முக்கியம் எழுதும் nib/ tip/முனை... அதை அவ்வப்போது மாற்றி கொள்ளாமல் இருக்க இங்க pen தானே சௌகரியம்...
Ball point pen களில் பேனாக்கள் அழுத்திப் பிடிக்க வேண்டும்... வேகமாக எழுதலாம் என்பதை விட கிருக்கலாம்... ஆனால், ink pen களை நிதானமாக பிடித்து நிதானமாகவே எழுத வேண்டும்... எண்ணத்தின் வேகம் எழுத்தில் வராது... அப்படி என்றால் யோசித்துதான் எழுதியாக வேண்டும்....
கையில் இல்லாத அழுத்தம் pressure/stress மனதிலும் இருக்காது...
Ink pen உபயோகிக்க வேண்டும் என்று மேற்படி கோவில் களில் அர்ச்சகராவது எடுத்துச் சொல்லி /சொல்லுவார்கள்....
ஆண்டவன் ஸ்பரிசம் pen னுடன் தொடரும் என்று நம்புவோம்.

எச்சில் இலை...


பொங்க போற எல்லோருக்கும் ஒரு விஷயத்தை முதலில் சொல்லிக்கிறேன்....
இந்தியாவின் அரசியல் சாசனத்தை தயாரிக்க ஒரு குழு இருந்தது. அதன் தலைமை பொறுப்பில் அதாவது தொகுப்பு ஆசிரியராக இந்திய ஜாதி மத பிரித்தாளும் அரசியலின் compromise காந்தியால் சட்ட மேதை என்று கருதப்பட்ட அம்பேத்கார் பரிந்துரைக்கப்பட்டார்...
Notes & Discussions on அரசியல் சாசனம் என்ற பெயரில் ஒரு நூல் இருக்கு.... அதை படித்தால் இந்தியாவின் அரசியல் சாசனம் எந்த அளவுக்கு விவாதித்து தயாரிக்கப்பட்டு உள்ளது என்று தெரியும்...
ஆனால், political compromising நிலைப் *#பாடுகளால்* இந்திய அரசியல் சாசனம் இந்திய தர்ம சாஸ்திரங்களை குறித்து விவாதித்து விட்டு.... மேலை நாடுகளின் எச்சில் இலையை வழித்து நக்கி - மனித உரிமை- மத சார்பு- கருத்துச் சுதந்திரம்- சிறார் குற்றவாளிகள் என்றெல்லாம் நக்கி நக்கி சீரழிக்கப்பட்டு விட்டது...
Start....பொங்குங்க.... ஆனால் பொங்கும் முன்பு கீழே வைக்கப்பட்டு இருக்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்க...
விஜய் மல்லையா
லலித் மோடி
இவர்கள் இருவரும் பொருளாதார குற்றங்களில் சிக்கி நாடு கடந்து, அதுவும் நம்மை அடிமை படுத்திய இங்கிலாந்தில் தொடர்ந்து பல மாதங்களாக வசித்து வருகிறார்கள்....
இவர்களை இழுத்து வந்து மோடி தண்டிக்கவில்லை.... மோடி கார்பொரேட் கள் கைக்கூலி.... விஜய் மல்லையா சரி.... லலித் மோடி காங்கிரஸ் ஆட்சியில் போனவன் ஆச்சே!!!
மேற்படி இருவரும் வாழும் வாழ்க்கை முறைக்கு வெளிநாட்டில் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு குறைந்தது ₹1 லட்சம் தேவைப் படலாம்.... இவர்கள் அதற்கு அங்கே பிச்சை எடுத்தா சாப்பிடுகிறார்கள்?!
இங்கே உள்ள எவனோ இங்கே அவர்கள் சேர்த்து குவித்து உள்ள சொத்தில் இருந்து அங்கே அவர்களுக்கு படி அளக்கிறான்...
இவர்களை தண்டிக்க முடியவில்லை... காரணம், எச்சில் இலை கூட்டாஞ்சோறு இந்திய சட்டங்கள்....
வழக்கு பதிவு, ஓட்டை FIR, முன்ஜாமீன், வாய்தா... ஒவ்வொரு சிவில் case ம் 15/20 ஆண்டுகள் இழுத்தடித்து பின் மேல் முறையீடு... 1.முன்ஷிப், 2 டிஸ்ட்ரிக்ட் 3 high கோர்ட் (Special கோர்ட்) பின் மீண்டும் high கோர்ட் பின் உச்சநீதி மன்றம், சீராய்வு மனு, அரசியல் சாசன அமர்வு, பின் கருணை மனு...
1991 ராஜிவ் கொலையாளிகளை வைத்து இன்னமும் கட்டி அழும் பிரியாணி சட்டங்கள் நம் எச்சில் சட்டம்...
நீதி மன்றம் மீது விமர்சனம் என்று உடனே தானே முன் வந்து வழக்கு பதிவு செய்து தண்டனை தரும் நீதி மன்றம் வழக்குகளை முடிக்க எப்போதாவது கால நிர்ணயம் செய்து உள்ளதா?!
கீழே அதிக பட்சம் 4 வாரம், district கோர்ட்டில் 6 வாரம், உயர் நீதி மன்றத்தில் 8 வாரம், உச்ச நீதி மன்றத்தில் 12 வாரம்... என்ற வரையறை வேண்டும்....
அதிக பட்சம் 2 அப்பீல்கள்... no revision petetion in murder/corruption case / no mercy petetion in rape and anti nation cases என்று சட்டங்கள் திருத்தப்பட்டால், குற்றம் செய்ய பயம் வரும்.... வழக்குகள் தேங்காது!!!
ஜெயா வழக்கில் குன்ஹா தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது... ஊடால சட்ட விபச்சாரம் செய்த குமார semi க்கு தண்டனை ஏதாவது... ஆக காசு பார்க்கிற/ வாங்குறவனுக்கும் நல்லவனுக்கும் ஒரே மரியாதைதானா?!
சட்டத்தில் இம்புட்டு ஓட்டைகள்.... எழுதியது சட்ட மேதைகள்.... ஆனால் ஏதோ இந்த சட்டங்களை எல்லாம் எழுதி வச்சி தன் இஷ்டத்துக்கு மோடி வளைத்து போட்டு குற்றவாளிக்கு தண்டனை கொடுக்க மோடிக்கு துப்பு இல்லை என்று விவாதம்....
இன்றைக்கு பணமும், காசும் வரும்... ஆனால் இன்று இங்கே பணம் காசுக்கு ஆசைப்பட்டு தேச துரோகம், மத மாற்றத்துக்கு துணைபோகும் மீடியா கணவான்களும்/எச்சி பிரியாணி அரசியல் வியாதிகளும் நடுவு நிலை நக்கிகளுக்கு நாளை உங்கள் சந்ததிகள் பிச்சை காரர்கள் போல நாடோடிகள் போல, அகதிகள் போல, ரோஹிங்கியர் கள் போல, ISIS sex அடிமைகள் போல வாழ நீங்கள் இந்த நாட்டை தயாரிக்க துணை போவதை எண்ணிப்பாருங்கள்...
இந்திரா 1975 இல் பிரகடனப் படுத்திய அவசர நிலை இன்று இப்போது தேவை நம் நாட்டுக்கு.... காரணம் இந்திய ஒழிக பாகிஸ்தான் வாழ்க என்று கூவி JNU வளாகத்தை விபச்சார விடுதியாக மாற்றிய... கன்ஹையா குமார், தாக்கரே மகனோடு, வேசி மம்தாவோடு!
போங்கடா பேப் பயலுகளா!!!

Thursday, February 7, 2019

ராம ராஜ்யம் என்றால் என்ன?!

ராம ராஜ்யம் என்றால் என்ன?!
ஸ்ரீ ராமன் ஆட்சியில் மக்களிடையே அல்பாயுசில் குழந்தைகள் இறந்து போனதாக நிகழ்ச்சிகள் கிடையாது.
பெண்கள் விதவைத் தன்மையை எய்தாமலும், கற்பை இழக்காமலும் நல் வாழ்வு வாழ்கிறார்கள்.
தீ, காற்று, தண்ணீர் இவற்றினால் எந்த ஆபத்தும் மக்களுக்கு ஏற்படாது.
திருடர் பயம் கிடையாது
பசி, நோய் துன்பம் கிடையாது
பயிர்கள் செழித்து செல்வம் கொழிக்கும்
மக்கள் மகழ்ச்சி பொங்க சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தார்கள்....
மேற்கு வங்கத்தைப் போல அரசு ஆஸ்பத்திரிகளில் கொத்து கொத்தாக குழந்தைகள் சாகாது. சென்னையில் இன்குபேட்டரில் குழந்தைகள் சாகாது
டாஸ்மாக்கினால் பெண்கள் விதவை ஆகமாட்டார்கள். சூரிய மின் தகடால் சரிதா நாயர் கற்பிழந்து இருக்க வாய்ப்பில்லை. நிர்பயா வழக்கும் இல்லாது இருந்து இருக்கலாம்.
கும்பகோணம் பள்ளித் தீவிபத்து கடலூர் தானே புயல், சென்னை வெள்ளம் கிடையாது.
தமிழக கள்வர்களுக்கும் காவல்துறைக்கும் கூட்டுக் களவானி உறவு இருக்காது
சுகாதாரத் துறை மூலம் காசு பார்க்க அரசு மருத்துவ மனை, ஆம்புலன்ஸ், மருத்துவ காப்பீட்டுத் திட்டமே தேவை இல்லை
காவிரிப் பிரச்சனை மணல் கொள்ளை பாசனத் தூர்வாரல் என்ற பெயரில் கொள்ளைகள் இல்லாது மக்கள் செல்வம் கொழிக்க சுகமாக இருந்திருக்கலாம்....
ராமன் - தனி ஒருவன். ஆனால் தற்போது ஜனநாயகம் என்ற பெயரிலும் / கூட்டணி என்ற பெயரிலும் நடப்பது ராஜ்யம் அல்ல - ஒரு கூட்டு வண்புணர்வு - political gang rape.⁠⁠

காண்டீவம்...

காண்டீவம்...
காண்டீவம் என்பது அர்ஜூனன் கையில் இருந்த வில். இதற்கு ஒரு வரலாறு உண்டு...
கெளரவர்களுக்கும் / பாண்டவர்களுக்கும் ராஜ்ய பாகப் பிரிவினை செய்ய பெரியோர்கள் அறிவுரைப்படி வேறு வழியில்லாது துரியோதனன் ஒப்புக் கொள்கிறான்.
ஆனாலும், பேராசை காரணமாக துரியோதனன் வளமான பகுதிகளை தன்வசம் வைத்துக் கொண்டு - வெப்பமான - இடுகாடுகள் நிறைந்த - துஷ்டமிருகங்கள் வாழும் காண்டவ வணம் என்ற பகுதிகளை (குறிப்பாக தற்போதைய டெல்லி பகுதியை) பாண்டவர்களுக்கு விட்டுக் கொடுக்கிறான்.
(நினைவிருக்கட்டும் இன்றும் கூட டெல்லியில் எந்த இயற்கை வளமும் கிடையாது)
இந்த காண்டவ வனப்பகுதியை அர்ஜூனன் கண்ணன் ஆலோசனைப் பேரில் முழுவதுமாக அக்கினிக்கு இரையாக்கி - நிலத்தை சீர்படுத்தி இந்திரப்ரஸ்தம் எனும் தலைநகரை பாண்டவர்கள் உருவாக்கினார்கள்.
இந்த காண்டவ வனத்திலிருந்து தப்பிப் பிழைத்த கார்கோடகன் எனும் கொடிய சர்ப்பமே - காண்டவ வனத்தை அழித்த அர்ச்சுனனை பழிதீர்க்க நாகாஸ்திரமாகி பின் நாட்களில் கர்ணன் கைகளில் தஞ்சம் புகுந்தது - புராண இதிகாசங்களில் நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று எத்தனை அழகாக தொடர்புடையவையாக கோர்க்கப்பட்டுள்ளது என்பது நினைத்து இன்புறத்தக்கது...
காண்டவ வனத்தை அர்ஜூனன் அக்னி தேவனுக்கு உணவாகப் படைத்ததால் - அக்னி தேவன் மனம்மகிழ்ந்து அர்ஜூனனுக்குப் பரிசளித்தது காண்டீபம் (காண்டவவனம் - காண்டீபம்)
காண்டீபம் - பனைமரத்தளவு உயரம் கொண்டது (மஹா. உத். பர்வம் 161)
காண்டீவத்துக்கு தங்கக் கவசம் உண்டு - லட்சம் ஆயுதங்களுக்கு சமமான சக்தி உடையது. (லட்சம் வில்களுக்கு அல்ல - லட்சம் ஆயுதங்கள் என்றால் - வாள், சக்ரம், ஈட்டி, கதாயுதம் என பல வகையை குறிக்கும்)
பல வர்ணம் கொண்டது - மிருதுவானது- தேவர்கள் - கந்தர்வர்கள் பூஜித்தது.
காண்டீவம் - 1000 வருடங்கள் பிரம்மதேவனிடமும் - பிரஜாபதியிடம் 503 வருடங்களும் - இந்திரன் வசம் 85 வருடங்களும், சந்திரன் 500 வருடங்களும் வருணனிடம் 100 வருடங்களும் வைத்து இருந்தனர்.
(ஆண்டுக் கணக்குள் கூட எத்தனை நேர்த்தியாக கோர்க்கப்பட்டு!!!)⁠⁠

அர்ஜூனன் ரதம்.

அர்ஜூனன் ரதம்.
அர்ஜூனன் ரதம் நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட ரதம்.
வாய் கண் மூக்கு செவி இந்த நான்கும் புலன்களும்
மெய்யாகிய இந்த உடல் எனும் ரதத்தின் உள்ளே பயணிக்கின்ற
அர்ஜூனன் என்கிற ஜீவாத்மாவுக்கு
போர்களமாகிய உலகில் க்ருஷ்ணன் என்ற பரமாத்மாவின் வழிகாட்டுதலில்
வெற்றி எனும் ஞானத்தை தருகிறது.
சித்ரரதன் என்ற கந்தர்வன் தன்னிடமிருந்த நூறு திவ்யமான அதிவேக குதிரைகளில் நான்கினை அர்ஜூனனுக்கு கொடுத்தான் - இந்த குதிரைகள் கொலையுண்டாலும் குறையாது 100 ஆகவே இருக்கும் - ஆக குதிரைகள் சாகா வரம் பெற்றவை.
இவை பூமி வானம் சொர்க்கம் என எங்கும் செல்லும் சக்திவாய்ந்த குதிரைகளாம்.

மஹாபாரத போர் (2)

மஹாபாரத போரில் வெற்றி பாண்டவருக்கே என துரியோதனன் போர் துவங்கிய அன்றே அறிவித்தது

முதல் நாள் போரில் பாண்டவர்களின் சேனை எண்ணிக்கை குறைவானதாக இருந்தபோதிலும் த்ருஷ்டத்யும்னனால் வஜ்ர வ்யூகம் வகுக்கப்பட்டு மிக பிரம்மாண்டமானதாக அமைக்கப்பட்டதை துரியோதனன் துரோணருக்கு சுட்டிக் காட்டுகிறான்.

போர்க்கலைகளை சொல்லிக் கொடுக்கும் துரோணருக்கு இதை பார்த்தவுடன் புரியாதா? துரியோதனன் சொல்லித்தான் தெரிய வேண்டுமா?

சரி, த்ருஷ்டத்யும்னன் குறித்து சொல்லுகையில் துரியோதனன் துரோணர் மனதில் கோபத்தை ஏற்படுத்த - பாஞ்சால தேசத்து அரசன் துருபதன் மகன் த்ருஷ்டத்யும்னன் என்று விளித்து - துரோணருக்கும் - துருபதனுக்கும் உள்ள பழைய பகையை நினைவூட்டுவதாக எண்ணி அதிகப் பிரசங்கியாக -

துருபதன் துரோணர் மீது உள்ள தீராத பகையை தீர்க்க யாஜர் மற்றும் உபயாஜர் என்ற ரிஷிகளை கொண்டு துரோணரை கொல்ல வேண்டி த்ருஷ்டத்யும்னன் (அவன் தங்கையாக திரெளபதி என்கிற க்ருஷ்ணை என்கிற பாஞ்சால தேசத்து பாஞ்சாலியையும்) தோன்றப் பெற்றார் துருபதர்.

துருபதனுக்கு போரில் துரோணர் கையாலேயே மரணம் சம்பவித்தது வேறுகதை. ஆனால் போரில் துரோணருக்கு மரணம் உறுதி, காரணம் துரோணரை கொல்லவவே (பழைய பகையில் பழிதீர்க்க) துருபதன் யாகம் மூலம் த்ருஷ்டத்யும்னனை பெற்றதைச் சொல்லிக்காட்டி துரோணரின் மரணத்தை முதல் நாள் போர்களத்திலேயே உலகறியச் சொல்லிவிட்டான் துரியோதனன்.

இதே போலவே சிகண்டியை பற்றி குறிப்பாலுணர்த்தி, பீஷ்மரை காப்பது நம் முதல் கடமை என்று சொல்லி, பீஷ்மரின் வீழ்ச்சியையும் போர் துவங்கும் முன்னரே துரியோதனன் வெளியே கொட்டி பாண்டவ வெற்றியை உறுதியாகச் சொல்லி விட்டான்.

மஹாபாரத போர் (1)

குருக்ஷேத்திரப் போர் துவங்கிய அன்றே பாண்டவர்களின் வெற்றியை துரியோதனனே அறிவித்துவிட்டான்.

ஏன், வியாசரும் கூட....

பாண்டவர்கள் யுத்த ஆரம்பத்தை அறிவிக்க தத்தமது சங்குகளை ஊதி ஒலிக்கச் செய்தனர் - இந்த ஆரவார ஒலி துரியோதனாதியருடைய இருதயங்களை பிளந்தது. அத் 1. ஸ் 19.

உடல் என்பது கருவி அனால் மனம் புத்தி சித்தம் ஞானம் ஆனந்தமே நம்மை உள்ளிருந்து இயக்கும் கர்த்தா. பாண்டவ சேனையில் தருமம் வீரியம் பலம் ஞானம் வைராக்கியம் போன்ற அந்த கரணங்கள் குறிக்கப்பட்டு அதை பரமாத்மாவின் இயக்கத்தில் இருப்பனவாக குறிக்கப்பட்டது - ஆனால் கெளரவ சேனை முதல்வர்கள் யாராலும் வெல்ல முடியாத பலசாலிகளாக அதாவது உடல் என்ற கருவியின் பிரதாபத்தினால் சிறப்பிக்கப்பட்டவர்களாகவே போர்களத்தில் குறிக்கப்பட்டார்கள்.

பாண்டவர்களின் போர்த்திட்டம் - கடைசி நேர ஆலோசனைகள் எல்லாம் பாசறைக்குள்ளேயே முடிந்தது - ஆனால் 11 அக்க்ஷொரவ்னி படைகள் கொண்ட துரியோதனன், போர்க்களத்துக்கே வந்து - போர் துவங்கும் முன்பாக 7 அக்க்ஷொரவ்னி படைகள் கொண்ட பாண்டவர்கள் படை த்ருஷ்ட்டத்யும்ணனால் அழகாக சிறப்பாக அணிவகுக்கப் பட்டு நிறுத்தப்பட்டதாக துரோணரிடம் சொல்கிறான்.

சேனை நாயகராக பீஷ்மர் நிற்க்கும் போது சக்ரவர்த்தி துரோணரிடம் வந்து strategy குறித்து விவாதிக்கிறான் - மேலும் கடைசியாக எல்லோரையும் நோக்கி - படை தனது அதனால் எல்லோரும் எனக்குரியதை போலவே முக்யத்துவத்தை பீஷ்மருக்கு தந்து பிதாமகரை ஏற்றிக் காக்க வேண்டும் என்கிறான்.

பரசுராமருக்கு இணையாக போர்புரிய வல்ல பீஷ்மரை பற்றிய எதிர்மறை அபிப்பிராயங்களை இது கெளரவ சேனையிடம் ஊக்குவித்துவிட்டது.

துரோணரை கோபப்படுத்தி வைப்பதாக எண்ணி துரியோதனன் உமது சீடர்கள் பாண்டவர்கள் த்ருட்டத்யும்ணன் என பேசி சுற்றி இருந்த சேனையிடத்தே, அரசரே போற்றும் எதிரணி வீரர்கள் நம் ஆசாரியரின் சீடர்கள் என ஒரு பச்சாதாபத்தையும் ஏற்படுத்தி இருக்கலாம்.

கடைசியாக, பாண்டவர் அணியில் அர்ச்சுனன் தவிர வேறு பிறப்புக் காரண பராக்ரமசாலிகள் இல்லை. மற்ற நால்வரும் வெல்ல முடியாத சக்தி படைத்தவர்களும் அல்ல என்பது கர்ணனிடம் குந்தி வாங்கிய சத்தியத்தால் உறுதியாகிறது.

மாறாக, கெளரவ சேனையில் பீஷ்மர், துரோணர், கர்ணன், க்ருபாச்சாரியார், அஸ்வத்தாமன், பூர்சிரவசு, சல்லியன், ஏகலைவன் என பெரிய பெரிய பராக்ரமசாலிகள் நிறைந்திருந்தனர். இது கூட ஒருவேளை too many cooks spoils the dish ஆக இருக்கலாம்....

Saturday, February 2, 2019

துருவன்

துருவன் பத்தினி பிரமி யின் இளைய குமரன் வத்சரன்.
வத்சரன் மனைவி ஸ்வர்வீதி
இவர்களுக்கு 6 (ருத்துக்களோ?) பிள்ளைகள். அதில் மூத்தவன் புஷ்பார்ணனுக்கு பிரபை தோஷை என்ற இரு மனைவிகள்...
பிரபை க்கு பிராதன் மத்யந்தினன் ஸாயன் (நாளின் 3 காலங்கள்?!) என்ற மூன்று பிள்ளைகள்...
தோஷை க்கு பிரதோஷன் நிசிதன் வியுஷ்டன் (3 இரவு ஜாமங்களோ?!!) என்ற 3 பிள்ளைகள்...
வியுஷ்டன் மனைவி புஷ்கரணி ... இவர்கள் மகன் ஸர்வதேஜஸ்
சர்வதேஜஸ் மனைவி ஆகூதி இவர்கள் மகன் சக்ஷூஸ் என்கிற மனு
மனு மனைவி நட்வலா இவர்களுக்கு 12 (மாதங்களோ) பிள்ளைகள்... அதில் கடைசி உல்முகன்
உல்முகன் புஷ்கரணி என்பவளை மணந்து அங்கன் முதலான 6 பிள்ளைகள் பெற்றனர் ...
அங்கன் மனைவி ஸுநீதை இவர்கள் மகன் வேனன் மகா கொடூரன்... அதனால் அங்கன் நாடு துறக்க வேனன் மன்னனாக...
வேனன் நல்லோர் சாபத்தால் உயிர் துறக்க ... வேனன் இறந்த பின் ராஜா வேண்டுமே என்று இறந்த வேனன் தொடையை கடைந்து (க்ரோமோசோம்) அதில் இருந்து பாகுகன் (நிஷாதன்) என்ற அவலக்ஷணமான ஒருவனை தோற்றுவிக்க... அவனுக்கு ஆளுமை தகுதி இல்லாததால் மீண்டும் வேனன் சடலத்தின் கை பகுதியில் கடைந்து (க்ரோமோசோம்) விஷ்ணு திருமகள் அம்சமாக ப்ருது என்ற ஆண் மற்றும் அர்சிஸ் என்ற பெண்ணையும் உருவாக்கினார்... இவர்களே முதல் வம்ச கர்தாக்கள்....
ஆண் பெண் கூடல் இன்றி அந்த காலத்திலேயே ஹிந்து தர்மத்தில் குளோனிங் மூலம் பிரஜைகள் உருவாக்கப் பட்டது என்பதற்கான பீடிகை இது....
இனி, மீண்டும் அனுமன் மகன் குறித்த கதைக்குள் செல்வோம்...
தொடரும்... 
#எவர்கிங்_ஏகாம்பரம்

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...