Monday, May 20, 2019

இனிய ஆன்மீகம்...



கடலூர் மாவட்டம் - கெடிலம் நதிக்கரை - ஏறத்தாழ 50 ஆண்டுகள் முன்பு...

சாது ஒருவர் - துர்கா உபாசகர்... வெள்ளிக்கிழமை இரவில் அம்பிகையோடு பேசி பக்தர்கள் கேட்ட கேள்விக்கு பதில் பெற்று மறுநாள் பகிரக்கூடிய பரிகாரத்தை / பதிலை பக்தர்களிடம் பகிர்வார்.

சாதுவின் இடதுகாலில் யானைக்கால் வியாதி இருந்தது. சாதுவுக்கு நெருக்கமான தொண்டர்கள் (சகஜ பாவத்தோடு கூடிய பக்தி) ஒரு நாள் சாதுவை விளையாட்டாக கேலி பேசினார்கள்...

பக்தர்களுக்காக அம்பிகையிடம் பேசும் நீங்கள் ஏன் உங்கள் யானைக்கால் நோய்க்காக பேசக் கூடாது? என ஒருவர்...

இடைமறித்த மற்றொரு அணுக்கத் தொண்டர்.... அம்பிகையோடு சம்பாஷணை எல்லாம் பக்தர்களை ஏமாற்றும் வேலை - என இடைமறிக்க...

சாது - சிரித்துக் கொண்டே சரிதான்... இன்று கேட்டுவிட வேண்டியதுதான் என்றார் உரக்க....

வெள்ளியிரவு சாது துர்காம்பிகையிடம் பேசி மறுநாள் சனிக்கிழமை பரிகாரம் / பதில் கேட்டு வந்த பக்தர்களிடம் அருள்வாக்கு சொல்லிக் கொண்டே வந்தார்...

சூரியன் உச்சியில் - எல்லா பக்தர்களும் கிளம்பிவிட்டார்கள்.. சாதுவோடு இப்போது அணுக்க (நெருக்கமான) தொண்டர்கள் மட்டுமே...உணவு பரிமாறிய படி....

சுவாமி, அம்பாளிடம் உங்கள் யானைக்கால் வியாதி பற்றி கேட்டீரா?

ஓ.... கேட்டேனே...

யானைக்கால் அப்படியேதானே இருக்கு என பக்தர்கள் சகஜமாக நகைத்தபடி...

சாது; ஆமாம் ஆமாம்... யானைக்கால் அப்படியேதான் இருக்கு! ஆனால் எந்தக் காலில் பாருங்கள்....

பக்தர்கள் நெடுஞ்சாண்கிடையாக சாதுவை நமஸ்கரித்து.... குருதேவா மன்னித்து விடுங்கள் - யானைக்கால் இடமிருந்து வலம் போனது எப்படி?!

சாது அமைதியாகச் சொன்னார்...

அம்பிகை இந்த வியாதியை நீக்கிவிடலாம் என்றும் சொன்னாள் - ஆனால் இந்த குறைபட்ட கர்ம வினையை அனுபவிக்க இன்னொரு ஜென்மா எடுத்து பின் அதன் பாவ புண்ணியம் எனது பிறவிகளை நீட்டித்து விட்டால்... அதனால் நான் அம்பிகையிடம் கால் மாற்றிவிட மட்டும் கோரினேன்...

தீதும் நன்றும் பிறர் தர வாரா.... அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்...

மந்திரம்....


கோவிலில் /ஹோமங்களில் வட மொழியில் - ஸமஸ்க்ருத மந்திரம் சொல்லித்தான் வழிபட வேண்டுமா?!
விக்ரஹங்கள் ஒரு விதமான காந்த சக்தி உள்ள கற்களிலேயே செய்யப்படுகிறது...
அது போல ஹோமங்களில் கலசங்கள் வைக்கப்பட்டு இருக்கும் மருந்துப் பொருட்கள் கலக்கப்பட்ட நீரில் - மூலிகைகளால் வளர்க்கப்பட்ட தீயில் புனல் மற்றும் அணல் மின் காந்த சக்திகள் மூலம் செரிவூட்டப்பட்ட புனித நீர் உருவாக்கப்பட்டு உபயோகிக்கிறோம்..
இப்படிப்பட்ட மின் காந்த அலைகளுக்கு கமகங்கள் அதிகம் வாய்ந்த ஒலி மூலம் மேலும் நல்ல ஆக்கப் பூர்வமான சக்திகள் ஏற்படுத்தி அவற்றை நாம் அனுபவிக்கிறோம்....
வீட்டின் ஒரு மூலையில் இருக்கும் wi-fi மோடம் வீட்டிற்க்குள் நெட்வொர்க் தருகிறது - வீடு முழுவதும் பரவும் புனித கனப்புடன் கூடிய புகை /புனித ஓலி / தெளிக்கப்பட்ட நீர் நமக்கு நல்ல பலன்களை கொடுக்காதா?
சரி... சமஸ்க்ருத மொழி மட்டுமே சக்தி வாய்ந்ததா?!
சமஸ்க்ருத மொழியில் / தூய தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் மட்டுமே பேச்சு வழக்கில் கமகங்கள் இயற்கையாக அமையும்...
ஆனால் தமிழும் தெலுங்கும் இப்போது பூகோள ரீதி வித்யாசத்தோடு புழங்கப்படுகிறது - சித்தூர் காக்கிநாடா விஜயவாடா என தெலுங்கு வித்யாசம் பெற்றது - தமிழ் நம் எல்லோரும் அறிந்தது போல சென்னை / கோவை / மதுரை / நெல்லை என பகுதிபட்டு வீணானது...
மேலும் ஒவ்வொரு மொழியும் எல்லைப் புரங்களில் மற்ற மொழியின் தாக்கத்தால் உதாரணமாக குமரி மாவட்டத் தமிழில் மலையாள வாசம் போல சுயத்தை இழந்தது...
ஆனால் சமஸ்க்ருதம் மட்டுமே எல்லா பிராந்தத்திலும் சுயத்தை இழக்காது இருக்கிறது...
சமஸ்க்ருத மந்திரங்களுக்கு உரிய அதே ஒலிப் பண்புகள் ஏறத்தாழ எல்லா பழமையான மொழிக்கும் உண்டு.
ஆனால் நமது ஆழ்வார்கள் நாயன்மார்கள் அருளாளர்கள் பயன்படுத்திய பஞ்சமம் / நாதநாமகிரியை /காந்தாரம் என்ற பண் (ராகம்) அறிந்து - அறு சீர் கழி நெழிலடி / நாலடி மேல் வைப்பு / ஆசிரியப்பா / வெண்பா அமைப்பின் படி மூல மொழி இலக்கணத்தோடு தூய உச்சரிப்போடு கூடிய அணைத்து மொழி உச்சரிப்புக்கும் மந்திர சக்தி நிச்சயமாக உண்டு. 

Monday, May 13, 2019

மமதேஹி கராவலம்பம் -1

ஸ்ரீ குரூப்யோ நம.
ஸ்ரீ கணேசாய நம.
சமஸ்க்ருதம் செத்த மொழி...
இந்த கட்டுரை எழுதப்படும் மொழியின் சொந்தக்காரர்கள், வளர்க்கப்பாடுபடும் போராளிகள் சத்தம் ரொம்ப பெரியதாகவே ஒலிக்கும் இந்த நேரத்தில், இந்த தலைப்பு இந்த தொடருக்கு கூடுதல் வலிமை சேர்க்கும்.
அன்னை சரசவாணி (மண்டன மிஸ்ரர் மனைவி) ஆதி சங்கரரை நோக்கி கேட்ட கேட்க கூடாது ஒரு
கேள்வி - உத்தம பத்தினிக்கான லக்ஷணம்!
அந்த கேள்விக்கு விடை தேட ஆதி சங்கரர் மேற்கொண்ட வழிமுறைகள் - அற்புதமான குருவின் தெளிவு!!
அதை வித்யாசமாக சிந்தித்து பொருள் புரிந்து ஏற்க வேண்டியது நமது கடமை!!!
பேருந்துகளில் பயணம் செய்யும் போது கரம் சிரம் புறம் நீட்டாதீர்!!! தமிழனின் இலக்கிய கவிதை ஆர்வம் யாருக்கு வரும். எதுகை தொடை, மோனை தொடை, இயைபுத் தொடை. Night ஏதோ TV யில் T ராஜேந்தர் படம் பார்த்து விட்டு, தூக்கம் வராமல் எழுத துவங்கிவிட்டேன் என்று நினைக்கும், டுமீல் போராளி வம்சங்களுக்கு (காரணம், தமிழனுக்கு தொடை என்றால் நினைவுக்கு வருவதே, அழகிய லைலா பாடலுக்கு நடனம் ஆடிய நடிகை ரம்பா மட்டுமே) நான் மேலே குறிப்பிட்ட உள்ள தமிழ் இலக்கணம் தான் இன்று TR இன் அடுக்கு மொழி வசனங்களின் அடிப்படை என்பதை தமிழ் ஆய்ந்த நல்லுலகத்துக்கு சொல்லிவிட்டு -
இந்த தொடை இலக்கணத்துக்கு குரளோவியம் தீட்டிய கருணாநிதி ஆகிய #நான் என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது, கருணாநிதி, பத்மாவதி, தயாளு, ராசாத்தி, ஸ்டாலின், கனிமொழி, மாறன் ஆகியோர் ஆகிய #நாம் என்றால் தான் உதடுகள் கூட ஒட்டும் என்ற டுமீளன் தந்தை முத்தமிழ் வித்தவரின் சிந்தனையில் உதித்த கரம் சிரம் புறம் நீட்டாதீர் என்ற பேருந்து வாசகங்களுக்கு நன்றி சொல்லிவிட்டு நாம் தொடருவோம்!
தமிழ் தேசியம், திராவிட தமிழ், கல் தோன்றி மண் தோன்றா காலத்தின் முன் தோன்றிய மூத்த மொழி தமிழில் கரம், சிரம், வலது என்ற பதங்கள் எல்லாம்....
ஆம், சமஸ்க்ருதம் நம் மொழியில் இருந்து இப்படி பல வார்த்தைகளை திருடித் திருடி, இன்று செத்தே விட்டது... ப்ராதா sorry Brother என்று தமிழில் type செய்ய நினைத்து அது ப்ராதா ஆகிடுச்சு...
நாமஇப்பிடிக்காபோவோம்
#பரகாய ப்ரவேசம் (ஆகா, #காயமே இது பொய்யடா - மறந்து போச்சே) மூலம் அமருகன் என்ற மன்னன் உடலில் புகுந்த ஆதிசங்கரர், இல்லற தர்மத்தில் இருந்தது ... அதனால், தன் வலது கையை தீயில் இழந்த ஆதி சங்கரர், ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரை தோத்திரம் செய்தது,
மம - எனக்கு
தேஹி - கொடு
கரா - கையை
வலம்பம் - வலது
இதுதான் தலைப்பு... மேலும் பேசலாம்.... 
No photo description available.

மமதேஹி கராவலம்பம் - 2

முதல் பகுதியில் தமிழும் சம்ஸ்க்ருதமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தது என்பதை கராவலம்பம் என்ற ஆதி சங்கரர் உபயோகித்த ஒரே ஒரு பதத்தில் உள்ள இரு வேறு தமிழ் சொற்கள் கரம், வலது ஆகியவற்றை சுட்டிக் காட்டி இருந்தேன்.
அதற்காக ஒரு லட்சுமி நரசிம்மர் படம் தேடியபோது பதிவிட்டு படம்...அதில் மனதில் பட்டது.... உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்...
யோக நரசிம்மர், மதுரை... மேலே ஸ்வர்ண கவசம்... ஸ்வாமியின் வலது கையில் ஆட்காட்டி விரலில், சுண்டு விரலில் விலை உயர்ந்த கற்கள் பாதிக்கப்பட்டு.... இடது கையில் கூட அதே விரல்கள்... ஆனால் கற்கள் நிறம், அமைப்பு... பச்சை, மாணிக்கம் போல, சதுரம், வட்டம் என...
ஜோதிடரிடம் சென்று லட்சம் கோடி என்று கொட்டிக் கொடுத்து நான் மட்டும் மஞ்சள் துண்டு, பவழ மோதிரம், சிகப்பு கயிறு, கருப்பு சட்டை அணிந்து கொண்டு, பகுத்தறிவு என்ற பெயரில் ஹிந்து தர்மத்துக்கு எதிராக ஏகடியம் பேசும் சிலருக்கு...
சுவாமி சிலையின்... மேலே அணிவிக்கப்பட்டு ஒரு கவசத்தில் கூட குறிப்பிட்ட விரல்களில் குறிப்பிட்ட ரத்தினங்கள் வெவ்வேறு உருவங்களில்... இதற்கும் ஒரு காரணம் உண்டு...
ஹிந்து தர்மம் என்பது நம் சிற்றறிவிற்கு புலப்படாத விஞ்ஞானம்...
இதை விளக்க ஒரே ஒரு சிறிய தர்மம் விஞ்ஞான விளக்கம் இங்கே...
மனிதன் கைகளில் 5 விரல்கள்... கட்டை விரல் பரமாத்மா, ஆட்காட்டி விரல் ஜீவாத்மா, நடுவிரல் தான் என்ற உயர்ந்து நிற்கும் ஆணவம், மோதிர விரல் கர்மம், சுண்டு விரல் கூடவே வரும் மாயை.
கட்டை விரல் இல்லாமல் மற்ற நான்கு விரல்களால் பயனில்லை... ஆட்காட்டி விரல் ஜீவாத்மா ஆணவம் கர்மம் மாயை என்ற மூன்று மலங்களை விட்டு விலகி, உடல் குனிந்து பணிந்து வணங்கி கட்டை விரலாகிய பரமாத்மாவுடன் இணைவது ஜீவ பிரம்ம ஐக்கிய நிலை... தட்சிணா மூர்த்தியின் சின்முத்திரை...
மோதிர விரல் கர்மா... என்று சொன்னேன்... அர்த்தனாரி ... ஆணாகி, பெண்ணாகி நின்றாய் போற்றி... வலது பாகம் சிவன்... இடது பாகம் அம்பிகை...
அதனால்தான் கிறித்தவ சர்ச் திருமணத்தில் கூட ஆணுக்கு வலது மோதிர விரலில், பெண்ணுக்கு இடது மோதிர விரலில் மோதிரம்...
கர்மத்துக்கு உரியவன் ஆண்... நல்லது செய்தால் பரிசு, தீமை செய்தால் பவித்ரம்... பர கர்மாக்கள் திருமணம் / பொரி போட மோதிரம்... இடுகாட்டு/ தர்ப்பனாதிகளுக்கு தர்ப்பை பவித்திரம்...
தாய் தகப்பனுக்கு கர்மா செய்யும் மாப்பிள்ளைக்கு மாமியார் போடும் மோதிரம் கூட சுபஸ்வீகாரம் அன்றுதான்...
பெண் பிரசவத்துக்கு நாடி இடதுகை மணிக்கட்டில்... காரணம் இதயத்துடன் நேரடி தொடர்ப்பு கொண்ட ரத்த நாடி மணிக்கட்டு வழியாக பெண்ணின் மோதிர விரலில் முடிகிறது...
இந்து தர்மத்தில் ஒரு மோதிரம் அணிவதில், நவரத்தினம் அணிவதில், நிறம், உருவத்தில், ஒரு கல் சிலையின் மேல் கவசத்தில் கூட இத்தனை விஞ்ஞானம் புதைந்து கிடக்கிறது...
நல்ல விஷயங்களை எங்காவது பதிந்து வைக்க வேண்டும் என்ற ஆவலில் நிறைய நீட்டி முழக்கிட்டேன் மன்னிக்கவும்....
மீண்டும் அதே படம்... குறியிட்டு.... சங்கரர் பின் மீண்டும், 3இல் பயணிப்போம். 

மமதேஹி கராவலம்பம் -3

விசுவாமித்திரர் ... காயத்ரி என்ற ஒரு திரைப்படம்... அதில் ஒரு குத்துப் பாட்டு உண்டு... கேட்டேளே அங்கே, அத பார்த்தேளா இங்கே என்று...

அதில் ஒரு வசனம் ஊடாலே வரும்... துர்வாச முனிவருக்கு இன்னும் கோபம் தீரலையோ என்று!!!

சமீபத்தில் அந்த பாடலை கேட்ட போது என் மனதில் அவர் துர்வாசரா?! தூர் வாசரா என்று ஒரு சந்தேகம் எழுந்தது... துஷ்டாரை கண்டால் தூர விலகு என்று சொல்லி இருக்கே...

ஆம், துர்வாசரை கண்டால் எல்லோரும் அவரின் பெயர் பெற்ற கோபத்துக்கு அஞ்சி தூரமாக விலகி விடுவார்கள்... அப்படிப்பட்ட மகானுபாவர் ஒரு முறை சத்ய லோகம் செல்கிறார்...

மெத்தப் படித்தவன் மொத்த முட்டாள் என்று ஒரு சொல்லாடல் உண்டு... இப்படிப்பட்டவர்கள் முன் கூட்டியே தகவல் சொல்வது, கதவை தட்டிவிட்டு உள்ளே செல்வது என்ற நாகரீகம் எல்லாம் கிடையாது.... உரிமை என்ற பெயரில் சகட்டுமேனிக்கு உள்ளே புகுவார்கள்!...

க்ருகஸ்தர்களுக்கு தெரியும் அந்த அவஸ்தை... வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டு, இந்த பக்கம் ஒரு வேலையாக வந்தேன்... அப்படியே உன்னை பார்த்து விட்டு போகலாம் என்று...

வீட்டில் வீட்டுக்கு உடையவன் மனைவி இருக்கிறாளா? அல்லது அவள் வேலைக்காரியா? வேறு யாராவதா?! நாம் உடன் சிலரை அழைத்து வந்துள்ளோம்... அவர்களை உபசரிக்க காபி டிகாக்ஷன் இருக்குமா? ஏதாவது உணவு ஆக்கிப் போட மளிகை இருக்குமா? அவர்கள் சூழ்நிலை என்ன?! எதுவும் யோசிக்க மாட்டார்கள்...

இப்படித்தான்.... சத்யலோகத்துக்குள் நுழைந்தார் துர்வாசர்... அப்போது, பிரம்மனும், சரஸ்வதியும் ஏகாந்தத்தில் இருக்க... துர்வாசரை கவனித்து தக்க மரியாதை செய்ய முடியவில்லை...

நல்லவனுக்கு அழகு சொல்லிக்காமல் போவது... இக்கட்டான அப்படிப்பட்ட நேரத்தில் நாகரீகமாக கிளம்பி விடவேண்டும்...

நமது patent அறிவாளிகள்... தங்கள் வரவை இந்த மாதிரி சந்தர்ப்பத்தில் கூட பதிவு செய்ய நினைப்பார்கள்... துர்வாசர், அந்த ரகம்.

கோபம் கொப்பளிக்க... என்னை மதிக்காத நீங்கள்... பூமியில் மானிடராக பிறந்து அவதிப்படக் கடவது😢

வந்த வேலை முடிந்தது... புறப்பட்டார்... பிரமன், சரஸ்வதி ஓடோடி வந்து துர்வாசரை சமாதானம் செய்ய- சாப விமோசனம் கேட்க... துர்வாசர் சொன்னார்.... விரைவில் பரமேஸ்வரன் பூமியில் ஆதி சங்கரராக அவதரித்து தர்மத்தை சமரக்ஷிப்பார்... அப்போது நீங்கள் மகிஷ்மதி க்ஷேத்திரத்தில் மண்டன மிஸ்ரர், சரசவாணி தம்பதிகளாக பிறந்து, சங்கரரிடம் வாதம் செய்து மீண்டும் சத்யலோகம் அடையலாம் என்று சொல்லிவிட்டு துர்வாசர் புறப்பட்டார்...

அந்த தம்பதிகள் தான் இப்போது இங்கே...

சரி, அதென்ன மகிஷ்மதி நகர்...?!

சொன்னாலும் புரியாத சுயமாகவும் தெரியாத - மெத்த படித்த மொத்த முட்டாள்கள் என்று சொன்னேன்... ஆம், துர்வாசர்... வாயில் வந்த நகர் மகிஷ்மதி... மகிஷ் - மகிஷம்- மகிஷாசுரமர்தினி - எருமை ... மதி... புத்தி....
(கடைசி para சொந்தக் கற்பனை)

பகுதி 4 இல் தொடரலாம்...

மமதேஹி கராவலம்பம் -4


மண்டன மிஸ்ரர்/ சரசவாணி தம்பதிகள் ப்ரம்மா/ சரஸ்வதி அம்சம், அவதார காரணம், நோக்கம் குறித்து முந்தைய பதிவில் பார்த்தோம்...
மண்டன மிஸ்ரர் இல்லற தர்மத்தை உயர்த்திப் பிடித்தவர்... சங்கரர் சந்நியாசி... இருவருக்குமிடையே வாதம் துவங்கியது யார் வெற்றி பெருகிறாரோ அவருடைய தர்மத்தை எதிராளி ஏற்க வேண்டும்... இந்த match refree மண்டன மிஸ்ரர் மனைவி சரசவாணி... என்ன புரிகிறது!!!
பெண்கள் கணவனுக்காக கூட தர்மத்தை விட்டு விலக மாட்டார்கள்... ஆனால், இப்போது கணவனின் தர்மத்தை கூட திசை திருப்பி முதியோர் இல்லங்களில் மாமியார் மாமனார் களை விட்டு வைக்க காரணமே பெண்கள் தான்... இனி, நாட்டில் எப்படி மழை பெய்யும்?!
போட்டி துவங்கியது... 21 நாட்கள் வாதம் என்றும் ஒரு மாதம் விவாதம் நடந்தது என்றும் இரு வேறு கருத்துக்கள் உண்டு... சரசவாணி, இல்லத்தரசி கூட... உணவும் தயாரித்து கணவனுக்கு/ அதிதி/ சந்நியாசி சங்கரருக்கு பிக்ஷையும் தயார் செய்து கொடுக்கவேண்டும்... எனவே இடையிடையே சரசவாணி இல்லற விஷயங்களில் ஈடுபட வேண்டி இருப்பதால் போட்டியாளர்கள், மண்டன மிஸ்ரர்/ சங்கரர் கழுத்தில் தலா ஒரு மாலை அணிவிக்கப்பட்டது... யாருடைய கழுத்தில் உள்ள மாலை முதலில் வாடுகிறதோ அவர்கள் தோற்றவர்கள்...
இங்கே கொஞ்சம், தகவல் பதிவு...
சந்நியாசிகள் நெருப்பு போல... காரணம் சுக்கிலம் கட்டுதல்... பிரம்மச்சரியம் அக்கினி போன்றது... ஒரு உதாரணம்...
காஞ்சி மகா சுவாமி ஒருமுறை ஒரு சிவாலயத்துக்கு சென்றார்... அங்கு ஸ்ரீ சுந்தர குருக்கள் முறை... சிவாலயங்களில் அர்த்த மண்டபத்துக்கு அடுத்து நாம் நின்று தரிசிக்கும் இடத்தில் ஒரு நந்தி பலிப்பீடம் இருக்கும் (கொடி மரம் அருகே இருப்பது வேறு) அந்த நந்திக்கு எதிரில் ஒரு ஹோம குண்டம் இருக்கும்...அந்த ஹோம குண்டம் அருகே கடம் ஆவாகனம் செய்து (ஸ்தபன பூஜை) அக்கினி வளர்த்து அந்த நீரால் மூலவருக்கு அபிஷேகம் நடைபெறும்...
பொது சிவாலயங்களில், ஆதி சைவர்களை தவிர வேறு யாருக்கும் மூலவரை தொட்டு பூஜிக்கும் தகுதி கிடையாது... திருவானைக்கோவில்/ ராமேஸ்வரம் போன்ற வைதீக பூஜை ஸ்தலங்களில் சில விதி விலக்கு உண்டு...
சுந்தர குருக்கள் பூஜை ஏற்பாடுகளை செய்து கொண்டு இருக்கும் போது திடீர் என்று பின்னால் ஒரு ஒளிபிழம்பு... சுந்தரம் திடுக்கிட்டு பார்த்து புரிந்து கொள்ளும் முன்பு, சுந்தரம், அக்கினி ஹோமங்கள் முடிச்சிட்டியா?! என்றபடி நம் பரமாச்சாரியாள்...
குருக்கள் சுந்தரத்துக்கு, (ஆதி சைவர்) நமஸ்கரிக்க தோன்றவில்லை... ஆனாலும் வயது கருதி வாய் பொத்தி, பொறி இல்லை, (பரிசாரகன் பெயரை சொல்லி) எடுத்துண்டு வர போய் இருக்கான்...
பெரியவர் கீழே குனிந்து கடத்தின் கீழ் வாழை இலைமேல் பரப்ப பட்டு இருந்த நெல் மணிகளை கையில் எடுத்து தேய்க்க... ஆசார்யாள் கைகளில் இருந்து, நெல் பொறி நெய்வேத்திய தட்டில் விழுந்தது...
சுவாமி காத்துண்டு இருக்கப்படாது, ஆகட்டும் என்றார்... மகாஸ்வாமி... ஆடல்வல்லான் பரமேஸ்வரன் கையில் அக்கினி இருக்கே.... ஆச்சாரியரின் கை சூட்டில் நெல் பொரிந்து நெய்வேத்தியமாக நின்றது...
சாதாரணமாக ஆதி சைவர்கள், சிவனின் வாரிசுகள் என்ற கொள்கை உடைய அவர்கள் வைதீக சந்யாசிகளை அல்லது பிறர் காலில் விழுந்து நமஸ்கரிக்க மாட்டார்கள். ஆனால் சுந்தரம் குருக்கள் பரமேஸ்வரன் தரிசனம் கண்டு ஆச்சாரியரின் கால்களில் அடியற்ற மரம் போல விழுந்து நமஸ்கரிக்க...
பின் சடங்குகளை முடித்து கண்களில் நீரோடு, ஸ்தபனத்தை நம் சுவாமி கையில் எடுத்துக் கொடுத்து நீங்களே அபிஷேகிக்க வேண்டும் என்று கோர, நம் ஆச்சாரியார், முறை மாற்றக்கூடாது என்று சொல்லி மறுத்து, ஆனால் சுந்தரத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி தானும் கர்ப்ப கிரகத்துக்கு உள்ளே சென்று சுந்தரம் பூஜை செய்வதை கண்டு மகிழ்ந்தார்...


சந்நியாசி- அக்கினி கதை இன்னும் கொஞ்சம் தொடரும்...

மமதேஹி கராவலம்பம் - 5


பிரம்மச்சரியம் அக்கினி... ஈசன் அன்பே சிவமாக இருக்கும் Mr. cool... அன்னை இயக்கம்... இயக்கம், உஷ்ணம்... நடராஜ பெருமானின் இடது கையில் நெருப்பு... ஈசன் அம்சமான ஆதிசங்கரர் சந்யாசியும் கூட... கழுத்தில் இருக்கும் மாலை சீக்கிரம் வாடிவிடுமே... கழுத்துமாலை என்பது ஏதாவது சூழ்ச்சியா?!
சீர்காழி உப்பனாறு அருகே கதிர் காமம் சுவாமி சமாதி உள்ளது... அங்கே ஒரு முருகன் விக்கிரகம் உள்ளது...அந்த பகுதியில் உள்ள பக்தர்கள், தங்கள் வீட்டு திருமண சடங்குக்கான மாலைகளை முதல் நாளே வாங்கி அந்த முருகனுக்கு அணிவித்து பின் திருமணத்துக்காக வாங்கிக்கொண்டு செல்வார்கள்...
மாலை வாடாமல் fresh ஆக இருக்கும்!! இது எப்படி சாத்தியம்?! காரணம், அந்த முருகன் சிலை ஜல பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது... முருகனுக்கு கீழே சதா குளிர்ச்சியான நீர் ஊரும் ஊற்று... அதன் மீது உள்ள முருகன் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பார் (இன்று நிலைமை வேறு... நிலத்தடி நீர் வற்றிவிட்டது).
மேலும், ஒருவன் வாதில் தோல்வி அடைந்தால் நிதானம் இழந்து, பரபரப்பாகி, உடல் உஷ்ணம் கூடி, மாலை வாடும்... எப்போதும் Mr. Cool ஆக இருக்கும் சங்கரருக்கு என்ன கவலை?
மண்டன மிஸ்ரர் வாதில் தோற்க மாலை வாட துவங்கியது...
சமையல் வேலைகளை முடித்த உபய பாரதி ஒரே வார்த்தையில் வெற்றியை அறிவித்தாள்...
கணவரை போஜனம் செய்யவும், சங்கரரை பிக்ஷைக்கு அழைப்பதும் வழக்கம்...
இருவரும் பிக்ஷைக்கு வரலாம், என்று அழைக்கிறார் அன்னை சரஸ்வதி.
அன்னையின் அடி மனதில் 1000 குழப்பங்கள்... இனி இவரும் சந்நியாசி... நான் மட்டும், இங்கே எப்படி தனியே வாழ முடியும்... சத்ய லோகத்துக்கு போய் விடலாமா?!
வேறு வழியே இல்லை, மண்டன மிஸ்ரர் ஐ காப்பாற்ற, தன் இல்லற தர்மத்தை காப்பாற்ற... உபயபாரதி சங்கரரிடம்... மனைவி என்பவள் கணவனின் பாதி, ஆகவே நீங்கள் என்னையும் வாதில் வென்றால் தான், வெற்றி உமது... என்று புது நிபந்தனை விதிக்க...
சங்கரர் ஒப்புக்கொள்ள... இம்முறை கேள்விகள் சந்யாஸ தர்மத்தில் அறியாத காமத்துப் பால் குறித்த/ கிருஹஸ்த தர்ம/ ஆச்சார பரிபாலனம் குறித்த கேள்வியாக வெளிவர...
இல்லறத்தில் அனுபவம் பெற சங்கரர் 30 நாட்கள் அவகாசம் கோர...
இங்கே ஒரு நெடிய புற வழி பயணம்...
உபயவாணி யின் கேள்விக்கு பதில் சொல்ல... ஆதி சங்கரர் இல்லற தர்மம் நாடியது சரியா?!
படித்தவன் பாட்டை கெடுத்தான்... எழுதியவன் ஏட்டை கெடுத்தான்... ஆதி சங்கரர் காமம் தேடிப்போய் வந்த கதை... நல்ல குடும்பத்து பெண்மணி sex சம்பந்த பட்ட கேள்விகளை மாற்றானிடம் கேட்பாளா...
சொரியாரிஸ்ட்கள் இப்டியேயெல்லாம் எழுதி வைத்து, தினமும் காசு கொடுத்து பல நபர்கள் அதை web இல் தேட வைத்து...
இன்றைய நவ நாகரீக பெண்கள் Dr. மாத்ருபூதத்திடம் கோடானு கோடி மக்கள் பார்க்க இரவில் தொலைக்காட்சியில் கேள்வி கேட்டால், அது பெண்ணுரிமை, முன்னேற்றம்... தன் கணவரை காப்பாற்றிக்கொள்ள, ஒரு திரைக்குப் பின்னே ஒரு கடத்தில் (குடம்) ஆவாகனம் ஆகி, நிச்சல ஏகாக்ர சிந்தை மூலம், தன் கணவனின் மனதில் கேள்விகளை உருவாக்கும் அன்னை உபய பாரதி எந்த நிலையிலும் கண்ணியம் தவறவில்லை... இதுதான் உண்மை.
நாம் விவாதத்துக்குள் போகலாம்...
இல்லற தர்மம் கடினமானது... இதை சொல்ல CBI ஆபீசர் வரணும்... அவனவன் லோல் படுவதை பார்த்து ஆளாளுக்கு கதை எழுதி டிவி பூரா இன்று சீரியல்கள் தானே!!!
சந்நியாசி ஒருவர், நவாப் சமஸ்தானத்துக்கு விவாதிக்க சென்றார்... நவாபின் மகள், சந்யாசியிடம் கேள்வி கேட்டாள்.... இல்லறம் கடினமானது என்று சொல்கிறீர்கள்... நீங்களோ சந்நியாசி, உங்களுக்கு எப்படி அந்த அனுபவம்?!
சந்நியாசி, விடை சொல்ல 2 நாட்கள் அவகாசம் கேட்டார்... பின் எல்லாம் பிரம்மம்... இறைவன் அனைத்திலும் இருக்கிறார் என்று விவாதம் நடந்தது...
விவாதம், முடியும் நேரத்தில் சந்நியாசி நவாப் மகளிடம், தனக்கு ஒரு செப்பு (தாமிர) பாத்திரம் வேண்டும் என்று கேட்டார்... இளவரசி உடனே அதை கொண்டுவந்து கொடுக்க கட்டளை இட்டாள்... பாத்திரத்தை கையில் வாங்காமல், சந்நியாசி, அதை கொண்டு வந்த ஏவலாளிடம், இந்த பாத்திரத்தை ஊருக்கு வெளியே இருக்கும் மல குழியில் போட்டு விட்டு வா என்றார்...
வேறு ஏதேதோ தலைப்புகளில் விவாதம் இரண்டு நாட்கள் கடந்து போக... சபைக்கு வந்த சந்நியாசி, நவாப் மகளிடம் ஒரு கோரிக்கை வைத்தார்...
இரண்டு நாட்கள் முன்பு ஊருக்கு வெளியில் மல குழியில் வீசப்பட்ட அதே தாமிர பாத்திரம் மீண்டும் சபைக்கு வர வேண்டும் என்று!!
பணியாளர்கள், மல குழிக்குள் இருந்து பாத்திரத்தை தேடிக் கொண்டு வந்தார்கள்... பாத்திரம் பொன் போல மின்னியது...
சந்நியாசி சொன்னார்... இது நாம் வீசிய பாத்திரம் அல்லவே.. அது களிம்பு படிந்து வித்யாசமாக இருந்ததே... இது பார்க்க பள பள என்று மின்னுகிறதே என்று கேள்வி எழுப்ப... நவாப் மகள் கலகல என்று சிரித்தாள்...
நீர் ஒரு ஞானியா?! மலம் புளிப்புத் தன்மை உடையது... அதனால் அக்குழியில் வீசப்பட்ட பாத்திரம் மினுமினுக்கிறது...
சந்நியாசி பொறுமையாக கேட்டார்... இளவரசி, மலம் புளிப்பு தன்மை உடையது என்பதை நீங்கள் எப்போது/எப்படி சுவைத்து உணர்ந்தீர்களோ அது போன்றதே நானும் இல்லறம் கடினமானது என்று சொன்னது... இளவரசி வாய் அடைக்க, இப்போது நவாப் கோபம் கொழுந்து விட்டு எரிந்தது!


அனுபவம் 6 இல் பேசுவோம்... 

மமதேஹி கராவலம்பம் -6


ஞானி தன் மகளை அவமானப் படுத்தி விட்டதாகவே எண்ணிய நவாப்... ஞானியை பழி வாங்க எண்ணினான்... உணவுக்காக எல்லோரும் சாப்பிட அமர்ந்தனர்...
நவாப் மற்றும் ஞானிக்கு தனித்தனி உயர மேடைகள்... நவாப் தனது ஊழியர்களுக்கு கண்ணை காட்டினான்... பரிச்சாரகர்கள் ஞானியின் முன்பு இருந்த தட்டில், மலத்தை பரிமாறினார்கள்... எல்லோருக்கும் அதிர்ச்சி... நவாப் பார்வையில் கேலி ... ஞானி எப்போதும் Mr. Cool....
நவாப் சொன்னான்... உங்கள் தர்மத்தில் எல்லாம் பிரம்மம் தானே... அதனால் தான் இப்படி.. என்று சொல்லி முடிக்கும் முன்பாக... ஞானி தன்னை ஒரு பன்றியாக மாற்றிக்கொண்டு பரிமாறப்பட்டதை தின்று தீர்த்தார்...
நவாப், ஞானியின் முன் மண்டியிட்டு கண்ணீர் சிந்தினான்...
நல்ல ஞானிகள் எப்போதும் நிதானம் தவறுவதில்லை... கணவனை காப்பாற்றிக் கொள்ளத்தான் என்றாலும், சரசவாணி தன்னை ஒரு கடத்தில் ஆவாகனம் செய்து கொண்டு, திரையின் மறைவில்... கணவனின் ஏகாக்ர சிந்தையில் ஒன்றி இல்லறம் பற்றிய கேள்விகளை சங்கரரிடம் கேட்க, அவர் கால அவகாசம் கேட்கிறார்...
இயற்கையின் நியதியை யாராலும் வெல்ல, bye pass செய்ய முடியாது... பிரம்மச்சரியம், கிருஹஸ்தாச்ரமம், வான ப்ரஸ்தம், சந்நியாசம்... முதல் படியில் இருந்து நேரடியாக 4 வது படிக்கு ஏறினால், சரச வாணியிடம் வாய்தா கேட்டே ஆகணும்...
வைணவத்தில் சந்நியாசம் என்பது முதல் மூன்று நிலைகளை குறையர வாழ்ந்த பின்னரே...
இந்த காலத்தில் சினிமா வில் கதாநாயகன் கன்னத்தில் ஒரு மச்சம்... அல்லது மாறு கை பழக்கம், என ஒரு சிறு வித்யாசம்... ஆனால் இரு வேடம் என்று நம் மனம் ஒப்புக்கொள்கிறது...
ஆதி சங்கரர் கடவுளின் அம்சம்... அதே உடலில் இருந்து கொண்டு சந்யாசத்தை ஏற்றதால் வேறு ஜென்மம் பெறுகிறார்...
இங்கே உடலுக்கு தோஷம் இல்லை... ஆனால், இல்லறதுக்கு?! 

மமதேஹி கராவலம்பம் -7

ஆத்மா வுக்கு தீட்டு கிடையாது... ஆனால் உடம்புக்கு... ப்ரம்மச்சரியத்தில் இருந்து சந்நியாசம்... ஆனால் சந்யாசத்தில் இருந்து கிருஹஸ்தாச்ரமம்?!
வீட்டில் ஹோமம் வளர்கிறோம்... பூரணாகுதியில், காசு போட்டு, பின் மறுநாள் அந்த காசை தேடிப்பிடித்து பிரசாதம் என்று பூஜையில் வைக்கிறோம்... சிறு குழந்தைகள் யாராவது அந்த காசை எடுத்து மிட்டாய் வாங்க கொண்டு சென்றால்... கடைக்காரன் செல்லாது என்று திருப்பி கொடுத்து விடுகிறான்... காரணம் காசின் தன்மை மாறி விடுகிறது...
விஷயம் தெரிந்தவர்க்கு அது பிரசாதம்... மற்றவர்களுக்கு செல்லாக்காசு... அந்த காசுக்கு மாட்ச்சிமை உண்டா கிடையாதா?!
பொதுவாக பார்த்தால் அதன் தன்மை மதிப்பு கூடினாலும், புற பார்வைக்கு உள்ள உருவம் க்ஷீணம் அடைந்து விட்டது...
இப்படியாக, ஹோமத்தில் இட்ட காசுகளை எல்லாம் திரட்டி அரசு அதிகாரியிடம் கொடுத்தால்... அந்த மொத்த காடுகளையும் மீண்டும் புதிய நாணயங்களாக வெளியிட ஏற்பாடுகள் செய்வார்...
தங்கத்தில் ஒரு குடம்... ஆனால் கீழே விழுந்து நசுங்கி விட்டது... தங்கத்தின் மதிப்பு குறையவில்லை... ஆனால் உருவத்தில்?!
ஆதி சங்கரருக்கு சரசவாணி கேள்விகளுக்கு பதிலளிக்க இப்போது வேறு ஒரு உடல் தேவை...
அவர் எண்ணம் போல அமருகன் என்ற அரசன் காட்டுக்குள் வழிதவறி வந்து இறந்துவிட...சங்கரர் அந்த உடலை பயன்படுத்திக்கொள்ள தீர்மானித்தார்...
சீடர்களிடம் மாற்று ஏற்பாடுகளை சொல்லி... உரிய நேரத்தில் தனக்கு நினைவூட்ட சொல்லி அதுவரை தன் உடலை தைலமிட்டு பாதுகாக்கவும் கூறிவிட்டு ... பரகாய பிரவேசம் என்ற கூடு விட்டு கூடு பாயும் உத்தியால் அமருகன் உடலுக்குள் சங்கரர் ஆன்மா?!
அமருகனை தேடி அவன் பரிவாரங்கள் அவ்விடம் வர... அமருகன் உடலுக்குள் சங்கரர்...
யாரையும் சங்கரருக்கு அடையாளம் தெரியவில்லை... ஆனால் மன்னர் தனித்து விடப்பட்டதால் குழப்பத்தில் இருப்பதாக கருதி மன்னரை அரண்மனைக்கு கூட்டிச் செல்ல..
அங்கும் எல்லோருக்கும் மன்னர் முகத்தில் ஒரு புது பொலிவு தெரிகிறது...
திருமூலர் ஜாதி இடையன்... ஆனால் அவரோ சிவ யோகி... இடையன் உடலுக்குள் புகுந்ததால் ஜாதி... தீட்டு...
இங்கு web இல் சிலர் அமருகன் உருவத்தில் 100 மனைவியரோடு சதா கால காம வேட்டையில் இருந்ததாக கிறுக்கி உள்ளார்கள்...
ஆனால் நடந்தது?

மமதேஹி கராவலம்பம் -8



இல்லற தர்மத்தில் சந்தேகம் என்றாலே... நம் நினைவில் தலை தூக்கி நிற்பது கலவி... அந்த அளவுக்கு திராவிட தீமை நம்மை ஆட்கொண்டுவிட்டது...

மருத்துவரிடம் மனோ தத்துவ ஆலோசனை கேட்கிறோம்... அவர் மன நோயாளியாக இருந்து குணம் அடைந்தவராக இருந்தால் மட்டுமே, அவருடைய ஆலோசனைகள் நமக்கு பலன் கொடுக்குமா?!

லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை/ ஆங்கியோ ப்ளாஸ்ட் சிகிச்சை .. உயிரில்லா ரப்பர் துண்டு... எந்த மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தது?!

அண்டப்பகுதியின் உண்டை பிறக்கும் எழுதிய மாணிக்கவாசகர் பேறு கால அவஸ்தைகளை வரிசை படுத்துகிறார்... அவரே பட்ட அவஸ்தைகளா அது?!

விண்வெளிக்கு வீரர்கள் செல்லும் முன்பு விண்கோள் வடிவமைத்த ஆராய்ச்சியாளர்களுக்கு அவிடத்திய தேவை/ அனுபவம் ?!

ஒரு விஷயத்தில் தெளிவாக முடிவெடுக்க முதலில் நாம் நம்மை அந்த பிரச்சனையில் இருந்து தனிமை படுத்திக்கொண்டு யோசிக்க வேண்டும்...

மருந்துகள் கூட எலி/ முயல்கள் மீது பரிசோதிக்கப்படுகிறது... ஒரு யூனிட், நாய் கடிக்கான வேக்சின், 10 க்கு மேற்பட்ட குட்டி ஆடுகளை கொன்று தயாரிக்கப்படுகிறதாம்!

தர்மத்தை ரக்ஷிக்க சில ப்ராயச்சித்த / பரிகாரங்களோடு சில அதர்மங்கள் தவிர்க்க முடியாதுதான்...

ராமோ விக்ரவான் தர்மக: ஆனால் வாலி வதத்தில்?!

ஒரு சாலையில் 60 கிமீ க்கு மேல் வேகமாக கார் ஓட்டுவது குற்றம்... அவனை துரத்திப் பிடிக்க பின்னால் விரட்டும் போலீஸ் 70 கிமீ வேகத்திலாவது கார் ஓட்டினால் தான் நீதியை பரிபாலனம் செய்ய முடியும்...

ஆதி சங்கரருக்கு சில அனுபவங்கள் தேவை பட்டது... சரசவாணிக்கு பதில் கொடுக்க, யதார்த்த அனுபவம் தேடி ஒரு சவத்தை (அமருகன் பிரேதம்) பயன் படுத்திக்கொண்டார்...

மகா பாரத போரில் தர்மம் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, த்ரேதாயுகம் முழுவதும், ஏற்பாடுகள் நடந்துகொண்டே இருந்தன... Ground making...

அம்பை - சிகண்டி, கர்ணனை கடித்த வண்டு, கவச குண்டல அபஹரணம், குருக்ஷேத்திரத்தில் கூட புண்ணிய தானம் கேட்ட ஸ்ரீ கிருஷ்ணன்... அம்பை - சிகண்டி தலைமுறைகள் இடைவெளியில் நடந்த முன்னேற்பாடுகள்!

இளைஞன் ஒருவன் சதா மது மாது சூது என்றே அலைந்தான்... தந்தைக்கு மனக்கவலை.. இளைஞனுக்கு அவர்கள் குல குருவின் மீது மட்டும் கொஞ்சமாக பக்தி இருந்தது...

தந்தை, இதை பயன்படுத்தி, மகனை திருத்த எண்ணினார்... குருவிடம் கலந்து ஆலோசிக்க... ஒரு உபாயம் கண்டனர்...

மமதேஹி கராவலம்பம் -9


குல குருவின் ஆலோசனைப்படி, அப்பா இளைஞனை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் மண்டபத்துக்கு அழைத்து வந்தார்... குருவின் மீது இருந்த மரியாதை... இளைஞன் தயங்கி தயங்கி அங்கே வந்தான்.... இளைஞன் சில தப்படிகள் தொலைவில் வரும்போதே, குரு ஓடோடி வந்து இளைஞன் கால்களில் விழுந்து வணங்க... இளைஞன் பதறிவிட்டான்... குருவே, நீங்கள் என் காலில் விழுவதா?!
குரு சொன்னார், பிள்ளாய், நான் ஆண்டவன் பரம் பொருள் போன்ற பேரின்ப சுக வாழ்வுக்காக இந்த உலகத்தில் இருக்கும் அற்ப சுகங்களை தியாகம் செய்கிறேன்.... ஆனால் நீயோ இந்த உலகத்தில் உள்ள அற்ப மதுவுக்கு, மாது, சூது க்காக பெரிய சொர்க்க வாழ்க்கையை தியாகம் செய்கிறாய்... என்னை விட நீதான் பெரிய தியாகி... நான் கோடியை சம்பாதிக்க 100 ஐ இழக்கிறேன்... நீ 100 ஐ சம்பாதிக்க கோடி யை இழக்கிறாய் என்று சொல்ல இளைஞன் யோசிக்க தொடங்கினான்... திருந்தி விட்டான்...
நெருப்பு சுடும்... இதை தொட்டு உணறுவது ஒருவகை... நெருங்கி போகும்போது வெம்மை தாக்குவதை எண்ணி/ உணர்ந்து விலகி நிற்பது இன்னொரு வகை...
இல்லறம் கடினம் என்பதை உணர்வது ரெண்டாவது வகை.... இல்லறம் என்றாலே காமம் என்பது முதல் பகை...
4 எட்டுக்கு அதாவது 32 வயதுக்குப் பின் பிள்ளை பிறப்பது, ஓய்வுக்காலத்தில் உதவாது... முதல் பிள்ளை மட்டுமே கர்மத்துக்கு/ தர்மத்துக்கு... மற்ற குழந்தை பிறப்புக்கள் காமத்துக்கு... ஆசை காரணமாக சேர்த்த சொத்துக்களை அனுபவிக்க மட்டுமே!
அமருகன் உடலுக்குள் பரகாய பிரவேசம் செய்த சங்கரர்... உடல் தீட்டை தவிர்க்க ஒரு சடலத்துக்கு ஒரே ஒரு மாதம் மதிப்பு கூட்டினார்... மற்றபடி, அதில் காமம் மட்டுமே இருந்தது என்று அந்த வழியில் சிந்திப்பது நம் பார்வை வக்கிரம்.
ஒரு முக்கிய விஷயத்தை இங்கே தொட்டு காட்ட விரும்புகிறேன்... நம் ஹிந்து தர்மங்கள் சொன்ன பல விஷயங்களை நாம் கடைபிடிக்கிறோமா என்றால், இல்லை... என்பதையும் தாண்டி வெளிநாட்டில் அந்த ஞாயங்களை கடை பிடிக்கிறான், சர்வ உண்மை.
இலங்கை பிரதமர் பதவிக்கு பிரமாணம் ஏற்றுக்கொண்ட உடனே அவர் கீழே வந்து முதலில் புத்த பிக்குகள் சிலரிடம் ஆசி வாங்கி பின் அந்த துறவிகள் கொடுக்கும் தீர்த்தம் பருகி தன் வேலையை துவாக்குகிறார்...
முற்றிலும் முன்னேறிய அமெரிக்க நாட்டில் கடவுளை நம்பி பிரமாணம்... இந்தியாவில் தலைவனின் மனைவி, துணைவி, இணைவி, பெயரால், புழுத்த அறிவின் பெயரால் பிரமாணம்...
அரசன், செங்கோல் ஏந்தி நானே உயர்ந்தவன் என்று பிரகடன படுத்திக் கொண்டு 3 முறை சொல்ல வேண்டும்... உடனே குருவிடத்தில் வந்து பணிந்து நிற்க வேண்டும்... உடனே குரு தன் கையில் இருக்கும் தண்டம் கொண்டு, மன்னன் தலையில் தட்டி தர்மம் தான் உயர்ந்தது என்று அரசனுக்கு உணர்த்துவார்...
பொன்னால் ஆன செங்கோல்... மூங்கில் அல்லது மரத்தால் ஆன தண்டம்... எது உயர்ந்தது?!
பொன்னை உருக்கினால் தன்மை மாறாது... ஆனால், மூங்கில் தன்னை ப்ரம்மத்தில் கரைத்துக் கொன்டுவிடும்...
தன்னை இழப்பதே துறவு, ப்ரம்மத்தில் கரைவது...
இது மரபு... அரசனை விட குருவின் தர்மம் உயர்ந்தது... ஆசனம் உயரத்தில் இருக்கலாம், சூக்ஷமம் ராஜ குருவிடத்தில்...
இல்லறத்தில் 1000 கணக்கான நியதிகள் உண்டு... ராஜ்ய, குடும்ப, நீதி பரிபாலனம்... யக்ஞ தர்ம சம்ரக்ஷணம் என்று... இந்த அனுபவங்களை பெறவே சங்கரர், அமருகன் உடலுக்குள் புகுந்தார்... மற்ற படி காமம் அனுபவிக்க என்ற கண்ணாடியை இந்த இடத்தோடு அறவே நீக்கி விடுவோம்...
சரி, அமருகன் சவத்தை பயன் படுத்தி, ஒரு பெண்ணை நம்ப வைத்து, மக்களை ஏமாற்றலாமா?! ஞாயமா? தர்மமா?!
இடையனை இழந்து பரிதவித்த பசுக்களை வீடு சேர்க்க சிவ யோகி மூலன் உருவத்தை எடுத்த நிலையில் ஒரு சூக்ஷமம் இருக்கு... பதி என்றால் தலைவன், பசு என்றால் உயிர்... பசு பதி, உயிர்களுக்கு எல்லாம் தலைவன்...
மூலன் உடல் ஒரு கருவி... சிவ யோகி (ஆன்மா) பதி - பரமாத்மா.... பசுக்கூட்டம் உயிர்கள் - ஜீவாத்மா...
அமருகன் சவம்... அதை சங்கரர் ஏற்றது சில காரிய காரணம் கருதி... அதில் குடும்ப, ராஜ, மக்கள் நலன் உண்டு... இது பற்றி விரிவாக பேசலாம் அடுத்த பகுதியில்... 

மமதேஹி கராவலம்பம் -10


சமஸ்க்ருதம்...
தமிழ்...
கரம், வலது என்று ஆரம்பித்தோம்... கரா வலம்பம்... இப்போது take left/right/u turn/straight என்று சங்கர தரிசனம்...
ஒரு விஷயம் தெரியுமா... ஆதி சங்கரர், ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி இரண்டும் ஒரே திதியில்...!
பின்னவர் திருக்கோஷ்டியூர் கோபுரம் மீதேறி திரு எட்டு எல்லோருக்கும் உரியது என்று சொல்ல... முன்னவர் தர்மத்தின் வழிபாடுகளை 6 ஆக பிரித்து எல்லோரையும் இந்த 6 இல் பகிர...
விமர்சனங்கள் வரலாம்... ஆனால் உண்மை... சொல்லியே ஆக வேண்டும்... சங்கரர் கடல்... ராமானுஜர் நதி... காரணம்...
பெயரிலே சைவம்... தொகுப்பு அனைத்தும்!
திராவிடம்/ ஆரியம் என்று பேதம் கற்பிக்கும் டுமீல்களே!!!
அது எந்த ஞாயமோ/ தர்மமோ தெரியலே... ஸ்மார்த்த/ வைணவ/ மாத்வ என்ற பிராம்மண உட்பிரிவுகள்/ ஹிந்து தர்மம்... அனைத்தையும் நெறிப்படுத்திய / முறைப்படுத்திய அத்தனை ப்ரம்மணர்களும், திராவிட தேசத்தில் இருந்து!
பாரத தேசம் முழுவதும் உள்ள ப்ரம்மணர் கள், ஹிந்துக்கள் ... ஜாதி வேறுபாடுகள் இல்லாமல், இன்று இந்த அத்வைத/த்வைத/ விஷிஷ்டாத் த்வைத மார்க்கத்தின் கீழ் பகுக்க / பிரிக்கப்பட்டு உள்ளனர்...
ஆனால், மாற்று சாதியினர்... வடமொழி பெரியோர் வழி பகுக்கப்பட்டு...
தலித்துகள் பெயரால் போற்றப்படும் அம்பேத்கர் - தமிழர்/ திராவிடர் இல்லை... மகாராஷ்டிரர்...
கம்யூனிசம் போற்றும் சேகுரோவா, மார்க்ஸ், லெனின் போன்ற பன்னாடைகள் இந்தியர்கள் கூட இல்லை... விதேசிகள்...
ஒன்று... நன்றாக புரிகிறது...
பகுத்தறிவு, மனித உரிமை, பெண்ணுரிமை என்று பேசிப் பேசி வயிறு வளர்க்கும் சாதிகள்/ ஆதிக்க சக்திகள் எல்லோருக்கும் ஆத்தா/ அப்பன் வெளிநாட்டு வித்து...
மூலம் தேடினால் கூட - முடிவு கான்வெர்ட் தான்!
இத்தனைக்கும் பிறகு .... ப்ரம்மணர் மீது ஆரிய வந்தேறி/ கைபர் போலன் கணவாய் என்று பேசும் ஏகடியம் அப்பா பெயர் தெரியாத groups களே...
தர்மத்துக்கு/ இந்துவுக்கு/ தமிழுக்கு/ திராவிட பெருமை தொண்டு செய்த சங்கரர்/ ராமானுஜர்/ மத்வர் போல இன்று தர்மத்துக்கு பிரமாணமாக நிற்கும் ஒரு தமிழர்? திராவிடர்?
அரசியல் பேசக்கூடாது என்றே நினைக்கிறேன் ... ஆனாலும் விதி...
Right விடு...
அமருகன் உடல் அபஹரணம்... ஞாயமா?!
ராஜா, கானக வேட்டைக்கு போவது சகஜம்... routine... ஒவ்வொருமுறை காட்டுக்கு, மாற்று நாடுகளுக்கு செல்லும்போது, ஸ்தல பேதி துணை முதல்வர் என்று paper பரிவட்டம் கட்டும் வழக்கம், இன்றைய பிண/பண நாயகத்தில் சரி... அன்று சனாதன தர்மத்தில்?!
சில புராண விவாதம் இங்கே அவசியம்...
தசரதன் மாண்டுபட்டான்...
ராமன் கானகம் செல்ல...
புதிய அறிவிப்பு, கோரிக்கைப்படி பரதன் வரும் வரை waiting...
அரச குடும்ப வாரிசுக்காக... வியாசர் வருகை... பிரமாணம் தானே?!
திருதராஷ்டிரன் குருடன் ஆளும் தகுதி இல்லாதவன்... பாண்டு ... பிறப்பில் வெள்ளை நோய் உடையவன்... விதுரன், பணிப்பெண் பிறப்பு ராஜ லக்ஷணம் இல்லை...
ராஜ்யத்துக்கு உடையவர்கள் கவுரவர்கள்... விதி வசத்தால் பாண்டு மன்னன்... (ஒன்னும் இல்லாததற்கு ஒரு பொண்ணு)... அதுவே மகா பாரத / யுக கர்மா!!!
பட்ட மகரிஷிக்கு பிள்ளை இல்லை... இரண்டாம் திருமணம் செய்து பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என்று அனுமதி கொடுக்கும் தர்மம்... சந்நியாசி சங்கரருக்கு அமருகன் உடல் பரகாய பிரவேசத்துக்கு அனுமதி கொடுக்காதா?!
நான்... negative விவாதங்களை முன் நிருத்துகிறேன் .... நன்றாகவே புரிகிறது...
Test tube baby... அதற்கு அங்கீகாரம்... வாடகை தாய்/ விந்து தானம்... அதெற்கெல்லாம் இன்று சட்ட அங்கீகாரம்... சங்கரரின் 30 நாள் project மட்டும் தப்பா?!
தெரியும்... இதுவும் negative வாதம்...
இயற்க்கை சமன்பாட்டு விதிப்படி... ஒருவனுக்கு ஒருத்தி.. ஆனால் இன்று மனைவி இணைவி துணைவி...
ஒருவனுக்கு ஒருத்தி... தலைப்பில் இரு கட்டுரைகள் அதை 10(1) மற்றும் 10(2) சேர்க்கபடுகிறது அவற்றை இங்கே இணைத்துள்ளதாக படித்துகொள்ளவும்
Lets go in to positive discussions!!
ஒருவருக்கு...இதய நோய்... லாட்டரியில் 1 கோடி பரிசு கிடைத்தது... இதை பக்குவமாக அவரிடம் எடுத்துச் சொல்ல ஒரு டாக்டரை அணுகினார்கள்...
கதை முடிவு உங்களுக்கு தெரியும்...
அமருகன் உடலில் சங்கரர் அந்த நிலை தான்!...
In order to make mind set... / alternate arrangements/ political requirements அமருகன் episode executed...
கண்ணீரில் ப்ரிதவித்த, பசுக்கள் (உயிர்கள்) வீட்டுக்குச் (வீடு பேரடைய) செல்ல... (பதியாகிய) சிவ யோகி எதற்கு மூலன் என்ற இடையன் உடலுக்குள் புகுந்தாரோ... அது போலவே சங்கரர்/ அமருகன் ...
To make mind set to ராணி/ மக்கள்/அரசியல் சூழல்...
இன்னும் புரியும் படியாக அடுத்த பதிவில்!! போகன்... அனேகன்... அந்நியன்...

Image may contain: textNo photo description available.

மமதேஹி கராவலம்பம் -10 (1)


#ஒருவனுக்கு_ஒருத்தி-1
ராமன், சமூக சமன்பாட்டின் ஓவியம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற சித்தாந்தமே சமூக/ மனித குல சமன்பாடு.
தென்கச்சி திரு சுவாமிநாதன் வீடியோ clip ஒன்று பார்த்தேன்.
அதில் அவர் சொன்ன தகவல்.... உலகில் ஆண் பெண் பிறப்பு விகிதம் ஆண்116:100 பெண் என்று உள்ளதாம்...
ஆண்களில் 16 கூடி இருப்பது காலத்தின் மாற்றத்தால் ஆண் பெண் உறவு சமன்பாட்டை துள்ளியமாக எட்டிவிடுமாம்.
உலக பெரும் போர் காலத்தில் இயற்கை இந்த பிறப்பு விகிதத்தை 100 பெண்களுக்கு நேராக 150 அல்லது 160 ஆண் பிறப்புக்களை உருவாக்குதாம். காரணம், போர் உயிர் இழப்புக்களை சரிக்கட்ட...
இப்படி சொல்லிக்கொண்டே சென்ற திரு சுவாமிநாதன், தன் வீட்டில் தானே புறா வளர்த்ததாகவும், அது குறித்த ஒரு தகவலையும் சொன்னார்... புறா ஒவ்வொரு முறையும் இரண்டே இரண்டு முட்டைகள் மட்டுமே இடுமாம்... அந்த முட்டையில் ஒன்று ஆண் மற்றொன்று பெண் புறா.... இந்த சமன்பாட்டு விதி எப்போதும் மாறவே மாறாதாம்...
இதை தொடர்ந்து அவர் ஒரு நகைச்சுவை கதையையும் சொன்னார் அது பகுதி 2ஆக வெளிவரும். காரணம் ஒரு உயர்ந்த காவிய நாயகன்/ சமூக அக்கறை பதிவின் நோக்கை மாற்ற விரும்பவில்லை.
#என்_புரிதல்
இந்த இயற்கையின் சமன்பாட்டு சின்னமே ஸ்ரீ ராமன்... ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்ந்து காட்டினான்.
மேலும், எப்போதெல்லாம் உலகின் எந்த பகுதியிலாவது ஆண் பெண் பிறப்பு விகிதாசாரங்கள் மிக பெரிய முரண்பாடுகளோடு இருக்கிறதோ, அதை ஒட்டி வரும் காலத்தில் அங்கே இயற்க்கை க்கு முரணாக உயர்வாக பிறந்த பாலினம் ஏதோ காரணத்தால் வெகுவாக அழியும்...
உதாரணமாக.... நாளை துவங்கி ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டில் 150ஆண் 100 பெண் என்ற விகிதத்தில் பிறப்புக்கள் இருந்தால்... எதிர் காலத்தில் அந்த பகுதியில், போரால் அல்லது ஆண்களை மட்டும் தாக்கும் ஏதோ நோய் காரணமாக உயிரிழப்புகள் அதிகமாகும் என்று எதிர்பார்க்கலாம்.
இதை முதல் இரண்டு உலகப்போர்களுக்கு முந்தைய கால பிறப்பு விகித்துடன் ஒப்பிட்டு சரிபார்க்கு முயற்சியில் விவரம் தேடிக்கொண்டு இருக்கிறேன்.... நீங்களும் தேடலாம்....

மமதேஹி கராவலம்பம் -10 (2)

ஒருவனுக்கு_ஒருத்தி- 2
ஆண் பெண் பிறப்பு விகிதம் குறித்த ஒரு செய்தி சொல்லி இருந்தேன்... இப்போது அதன் நகைச்சுவை பகுதி...
பேருந்து ஒன்றில் கூட்டம் குறைவாக...
அமர்ந்து இருந்த பெண் ஒருத்தி கண்டக்டரை அழைத்து, அந்த ஜன்னலை சாத்து... இல்லாவிட்டால், குளிரில் நான் இறந்து விடுவேன் என்றாள்... அதற்கு அடுத்த சீட்டில் இருந்த இன்னொருத்தி சொன்னாள்.... அந்த ஜன்னலை சாத்தினால் மூச்சு திணரல் காரணமாக நான் இறந்து விடுவேன் என்றாள்...
சத்தம் decibal கூடியது.... பேருந்தின் கடைசி இருக்கையில் பீடி குடித்தபடி ஒருவன்... யோவ், கண்டக்டர் இங்கே வா... நான் சொல்வதை கேள்... கொஞ்ச நேரம் அந்த ஜன்னலை மூடு... மூச்சு திணறி ஒருத்தி சாவட்டும்... பின் ஜன்னலை திறந்துவை ... குளிரில் இன்னொருத்தியும் செத்து விடுவாள்... பின் நாம் எல்லோரும் சுகமாக பயணிக்கலாம் என்றான்...
கண்டக்டர்... கடுப்பாகி... யோவ், துண்டு பீடி.. நீ சொல்லிட்டு போய்விடுவே... அப்புறம் நான் கொலை கேஸில் மாட்டிக்கொள்வேன்.... அவர்களின் வீட்டுக்காரர் வந்து கேட்டால் நான் என்ன பதில் சொல்வது என்றான்?!
துண்டு பீடிக்காரன் பொறுமையாக சொன்னான்... அவர்களின் கணவன் நான் தான் என்று cool ஆக சொல்லிவிட்டு மீண்டும் பீடி பிடிக்க ஆரம்பித்தான்...
உடனே, கண்டக்டர் காண்டு ஆகி, ரெண்டு பேரையும் இங்கே சாகடிச்சிட்டு நீ மட்டும் வீட்டுக்குப்போய் என்ன பண்னுவே என்று கேட்க ... துண்டு பீடி நீட்டி புகை விட்டபடி... ஆலிவர் சாலையில் எனக்கு ஒரு துணைவி இருக்கா, என்றான்!
அதிக பிறப்பு விகித ஏற்ற இறக்கம் இருந்தால், இப்படித்தான்...ஒருவனுக்கு ஒருத்தி போய்.... பல தார திருமணங்கள் தவிர்க்க முடியாததாகிவிடும்... இயற்கையின் ஒருவனுக்கு ஒருத்தி சமன்பாடு.... சீராக இல்லா விட்டால் இப்படித்தான் கோபாலபுரம், ஆலிவர் சாலை என்று adjust ஆகும்... இதிலிருந்தே மேற்படியார் ஆயுசு இன்னமும் கூடலாம்...
பெண் பிறப்பு விகிதம் கம்மியாக இருக்கும் கால சூழலில், திலீபன், அரவிந்தன், ராசா போன்ற offset களும் இயற்கையின் திருவிளையாட்டே! இந்த போட்டியில் இன்னும் யார் யாரோ?! 

மமதேஹி கராவலம்பம் -11


தர்மத்தை ரக்ஷிக்க சில நேரங்களில் விதி மீறல் கள் சகஜம் என்று சொல்ல வந்தேன்...
அமருகன் தேகத்தில் பரகாய பிரவேசம் மூலம் புகுந்த சங்கரர், கிருகஸ்த தர்மங்களை பற்றிய அனுபவம்/ உணர்வுகளை பெற அதே நேரம் தன் உடல் தூய்மையை பாதுகாக்கவும் இப்படிப்பட்ட ஒரு சூழல் உருவாக்கப்பட்டது...
Split personality அந்நியன் நமக்கு ஓகே... கூடு விட்டு கூடு பாயும் சின்ன வாத்தியார், போகன் நமக்கு ஒகே... இனம்புரியாத ஒரு நோய் ஒருவரை ஒருவர் கடித்து பரப்பும் மிருதன் நமக்கு ஓகே...
ஆனால், நம்மை விட கோடி மடங்கு உயர்ந்த நம் முன்னோர்கள் நிகழ்த்திய அற்புதங்களை மட்டும் ஆளாளுக்கு கேள்வி கேட்போம்...
அமருகன் உடலுக்குள் இருந்த சங்கரர் இல்லறத்தில் (இரவு வாழ்க்கையில்) நெருங்கிப் போகவே இல்லை...
மன்னன் முகத்தில் இருந்த புதிய பொலிவு, முடிவெடுப்பதில் உள்ள அறிவு முதிர்ச்சி, நிதானம், வார்த்தை பிரயோகம், தெளிவு எல்லாம், நெருங்கிப் பழகிய பட்ட மகரிஷிக்கு, மந்திரிக்கு வித்யாசமாக தெரிந்தது...
அரசியும், மந்திரியும் யோசித்தனர்/ கலந்து ஆலோசித்தனர்..
கர்மா யாரையும் விடாது... சங்கரருக்கு அது பொருந்தும்... 30 நாள் trial... offer... அதற்குள் அமருகன் இல்லாமைக்கு உரிய ஏற்பாடுகள்... ஆனாலும் குறித்த காலத்துக்குள் நினைவூட்டல் வந்து சேர வேண்டும்...
ராணி, மந்திரி ஒரு முடிவுக்கு வந்தார்கள்... ஓரளவு யூகித்து... அரசன் உடலுக்குள் இருப்பது வேறு யாரோ மகான் என்பதை வெகு சீக்கிரம் உணர்ந்து, சங்கரரை அமருகனுக்கு உள்ளேயே நிலை நிறுத்திக்கொள்ள, ஞானியின் உடலை தேடிப்பிடித்து எரித்துவிட நடவடிக்கைகள் ஒரு பக்கம் ஜரூர்...
சங்கரர் கவனம் தர்மத்தின் புரிதலில் focussed.
இங்கே, ஒரு குட்டிக் கதை...
ரிஷி ஒருவர் ஒரு தவறை செய்து விட்டார்... அதற்கு விதிக்கப்பட்ட சாபம், பன்றியாக பிறக்கவேண்டும் என்று...
தன் தபோ வலிமையால், பன்றியாக இந்த இடத்தில் பிறப்பேன்... என்பதை அறிந்து அதை சீடர்களுக்கு சொல்லி... குறிப்பிட்ட காலத்தில் பன்றியாக பிறக்கும் தன்னை கொன்றுவிடவேண்டும் என சீடர்களிடம் சொல்லி விட்டு புதிய உடலை அடைந்தார்...
உரிய காலத்தில் சீடர்கள் பன்றியை தேடி கொன்றுவிட முடிவு செய்த போது பன்றி பேசியது...
சீடர்களே, என்னை கொல்லாதீர்கள்...இந்த வாழ்விலும்/ அனுபவத்திலும் புதிய சுகம் இருக்கிறது என்று சொல்லி... வராகமாகவே தன் வாழ்க்கையை தொடர்ந்தார்...
திருவண்ணாமலை கிளி கோபுர கதையை பார்த்துவிட்டு பின்னர் சங்கரர் பற்றி பேசுவோம்...
Image may contain: 1 personImage may contain: sky

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...