Monday, December 30, 2019

எண்ணம் -3

எண்ணம் 3
இடியுடன் கூடிய கடும் மழை...
ஒரு பாழ் அடைந்த கட்டிடம்...
22 நபர்கள் ஒதுங்கி நிற்கின்றனர்...
ஆண்டவன் அசரீரியாக...
மரணம் சம்பவிக்க வேண்டிய - உயிர் பறிப்பு வேண்டிய கட்டாயம் இப்போது...!!!
எல்லோரும் ஆலோசித்து...
நாம் ஒவ்வொருவராக சில தப்படிகள் தள்ளி இருக்கும் மரத்தை தொட்டு விட்டு வருவோம்..
யாருடைய உயிர் பரிக்கப்பட வேண்டுமோ அவரை விதி எடுத்துக்கொள்ளும்...
எல்லோரும் பீதியுடன் ஒவ்வொருவராக செயலில்...
21 நபர்களும் பத்திரமாக மீண்டுவிட...
எல்லோரும் 22 ஆம் நபரை பரிதாபமாகப் பார்த்தனர்...
அந்த நபர் தனது நடையை துவக்கி அருகில் இருந்த மரத்தை தொட்டார்....
அடுத்த நொடி இடி தாக்கியது...
கட்டிடத்தின் மீது... 21 பேரும் இறந்தனர்...
இதுவும் ஆண்டவன் சந்நிதி
இதுதான்...
நல்லார் ஒருவர் உளரேல்.. என்பது...
அந்த ஒரு உயிர் 21 பேரை இதுவரை காபாற்றி வந்துள்ளது...
நள்ளிரவில் பேய்கள் உலாவும் நேரத்தில் ஆண்டவன் சந்நிதி இப்படியாகவும் அமையலாம்...
புரிந்தவர்களுக்கு 

எண்ணம் -2

எண்ணம் 2
தினசரி சந்தியாவந்தனத்தில் சில சடங்குகள்...
கரங்ஞாசம்... அங்கஞாசம்...
ஆபாஹிஷ்ட என்ற மந்திரம்...
அக்னி பூர்வ ஹோமத்தில் கூட கர்த்தாவை சுத்தப்படுத்திக் கொள்ள சில நியதிகள் பலி உண்டு...
தினந்தோறும் ஆண்டவன் சந்நிதியை திறக்கும் முன்பாக உள்ளே நுழைய அர்ச்சகருக்கும் சில நியதிகள்...
ஆண்டவனுக்கு சில சடங்குகள்... சம்பிரதாயங்கள்... சுப்ரபாதம் போல...
தூங்கும் நாயை எழுப்பக்கூடாது என்று ஒரு வழக்கு உண்டு...
திருமடங்களில் உணவுக்குப்பின் மடாதிபதிகள் கொஞ்சம் கண்ணயர்வார்கள்...
அப்போது, சந்திக்க வரும் பிரமூகர்களிடம் காத்திருங்கள்... சாமி / சன்னிதானம் நித்திரையில் இருக்கு...
உறக்கம் என்பது வேறு...
நித்திரை என்பது வேறு...
நல் உறக்கம்
யோக நித்திரை...
திரை... என்பது திருஷ்டியில் இருந்து மறைத்தல்...
நிர்ச்சலனமாக... நமது உணர்வில் இருந்தும் விலகி இருத்தல்..
இரவில் ஆலய அடைப்புக்குப் பின் உறக்கம் இல்லாத இறைவன் தனது யோக நித்திரையில் இருந்து வேறு ஒரு இடத்தில் வேறு சில பரிபாலனங்களை செய்கிறான்... நாம் ஓய்வில் அமெரிக்கன் உழைப்பில்...
5.12.16 நடந்ததாக சொல்லப்பட்ட நிகழ்வுக்கு முன்பு நவம்பர் கடைசி வாரத்தில்...
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோவில் கருவறை நள்ளிரவில் திறக்கப்பட்டதாம்...
விளைவு ?!⁠⁠⁠⁠

எண்ணம் -1

எண்ணம் 1...
இப்போது பதிவு செய்வது நல்லது...
ஸ்ரீரங்கம் கோவில் சமீபத்தில் இரண்டு மூன்று கட்டங்களாக குடமுழுக்கு நடந்தது...
பாலாலய பூஜை...
அசுப... மரணயோக நாளில்... பின்னர் நடந்தது நாடே அறியும்...
ஆக நேரமும் நாளும் கோளும்.... அதன் பயனும்....
1.1.17 நள்ளிரவு பூஜை...

Monday, December 23, 2019

வயசு இலக்கணம் கூட வகையாகத்தான்

வயசு இலக்கணம் கூட வகையாகத்தான்!
சந்யாசிகள் ஒரு நாளைக்கு எட்டு கவளம் மட்டுமே சாப்பிடலாம்
வானப்ரஸ்திகள் 16 கவளமும்
க்ருகஸ்தர்கள் 32 கவளமும்
பிரம்மச்சாரிகள் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.
ஒரு கவளமென்பது சாதாரண கையளவு உணவு.
உடனே நம்மாளு ஒருத்தர் கேட்டார்....
வயசான சுகர் வருது - அதனால வயிறு காலியாக இருக்கக் கூடாதே என்று -
ஆசாரியர் சொன்னார்... க்ருகத்திலே இருக்கிற வரை குடும்பத்துக்காக உழைக்கனும் அதனால கொழுப்பு சேராது - வானப்ரஸ்தி ஆகிட்டா வீட்டை விட்டு வெளியேறி க்ஷேத்ராடணம் பண்ணி அலையனும் அப்போ நடந்தா சுகர் குறையுமே என.
கடவுளின் சிருஷ்டியில் மனிதன் கழுதை நாய் குரங்கு என 4 உயிர்களையும் தலா 40 வயதுகளோடு அவரவர்க்கு உரிய கர்மாக்களை விளக்கி படைத்தான்.
கழுதை - சதா பொதி சுமப்பது புண்யகாரியமா என்ன - அதனால 20 வயசு போதும் என்றது - அதே போல நாயும் கல்லடி தவிர்க்க - குரங்கு சேஷ்டை - இடம் மாறி தாவுதலை தவிர்க்க தங்களுக்கும் தலா 20 வயசுகள் போதும் என்றனர்.
மனிதன் பேராசையின் மொத்த உருவமாயிற்றே அதனால் மற்ற மூன்று விலங்குகளின் தலா 20 ஆக 60 ஆண்டுகளை தனக்கே தந்து தனது ஆயுளை 100 ஆண்டுகள் ஆக்க கோரினான்.
கடவுளும் சம்மதிக்க - மனிதன் 40 வயது வரை மனிதனாக பின் 41 முதல் 60 வரை குடும்பத்துக்காக சுமை சுமக்கும் கழுதையாக பின் ஓய்வு பெற்று 61-80 ல் வீட்டுத் திண்ணையில் நாயைப் போல காவலும் 81-100 வரை குரங்கைப் போல குச்சியை பற்றி - உடல் சேஷ்டை - வீடு ஆஸ்பத்திரி எனத் தாவித் தாவி....

ஆனந்தம் ஆனந்தமே -2

ஆனந்தம் ஆனந்தமே
ஆனந்தம் என்பது இன்பம் துன்பம் உயர்வு தாழ்வுகளை சமமாக நோக்குவது.
இந்த சமநோக்கு நமக்கு உள்ளே இருக்கிறது - அதை நாம் வெளியே தேடி அலைகிறோம்.
புதிய புதிய இடங்களில் புதிய புதிய குருமார்களிடம் புதிய புதிய உபதேசங்களை கேட்டுக் கேட்டு தேடித் தேடி வாழ்க்கை முடிவதும் ஓடிக்கொண்டே -
ஒரு கணவன் மனைவி - மனைவியின் ஆதிக்கம் நிறைந்த குடும்பம். ஒரு நாள் மனைவி கணவனிடம் 100 ரூபாய் கொடுத்து கோழிக்கறி வாங்கிவரச் சொல்லி அனுப்ப - கணவரிடமிருந்த பணம் களவு போனது - மனைவி நாள் முழுவதும் திட்டித் தீர்த்தார். கணவன் வருத்தமடைந்தான்.
மீண்டும் ஒருநாள் இது போலவே - இந்தமுறை கணவன் தன்னிடமிருந்த பணத்தை ஒரு ஏழை குடும்பத்தின் உணவுக்காக செலவழித்துவிட்டு - மனைவியிடம் பணம் களவு போனதாக சொல்ல - மீண்டும் அர்ச்சனை.
அன்று மனைவி திட்டியபோது வருந்திய மனம் இன்று திட்டியபோது மகிழ்ச்சியாகவே இருந்தது -
முதல் முறை பணம் தொலைந்த போது யாரோ இல்லாத குறையை போக்கிக் கொள்ள திருவிட்டார்கள் என எண்ணத் துவங்க - கணவனின் ஆனந்தம் இன்னும் அதிகமானது
இந்த சம திருஷ்டி குறித்து சாது ஒருவர் ஒரு முட்டாளுக்கு விளக்கிக் கொண்டு இருந்தார்.
சாதுவை அவமானப் படுத்த அந்த முட்டாள் சாதுவுக்கு உணவுக்கு பதிலாக மாமிசத்தை இலையில் படைத்தான் - சம திருஷ்டி என்றீர்களே ஆக இதையே உணவாக எண்ணி சாப்பிடுங்கள் என்று சொல்ல, சாது உடனே ஒரு புலியாக மாறி அந்த மாமிசத்தை திண்ணத் தொடங்கினார்.
ஆக ஆனந்தம் நம் மனோபாவத்தில் ஒளித்து வைக்கப்பட்டு இருக்கும் சமநிலை. 

ஆனந்தம் ஆனந்தமே-1

ஆனந்தம் ஆனந்தமே
ஆனந்தம் நமக்குள் இருக்கிறது - இது எப்போது வெளிப்படும்?
மனிதன் ஆசாரமாக இருந்தால் ஆனந்தம் அடையலாம்.
ஆசாரம் என்பது என்ன? ஏதோ ப்ராம்மண பாஷை என்று நினைக்க வேண்டாம் - தனி மனித ஒழுக்கமே ஆசாரம்.
கோபுரத்தின் உச்சி அந்தம் - அந்த உச்சிக்கு நாம் சென்றடைய சாரம் தேவை - ஆக ஆனந்தத்தை அடைய ஆசாரம் தேவை.
வர்ணாஸ்ரம தர்மம் - ஏதோ ஒரு இனவெறிச் சொல் என்று நம்ப வைக்கப்பட்டுள்ளது. ஜாதி என்பது பிறப்பால் வருவதல்ல - குணத்தால் என்பதை விரிவாக வேறு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.
ஜாதி எதுவாக இருந்தாலும் ஆசாரம் முக்கியம். அதாவது ஸ்நாநம் - ஆசமனம் - ஆகாரநியமம் - ப்ரம்மச்சர்யம் ஆகிய நான்கும் எல்லா தர்மத்துக்கும் ப்ரதானம்.
அது என்ன எல்லா தர்மம்....
ப்ரம்மச்சர்யம்
க்ரகஸ்தாஸ்ரமம்
வானப்ரஸ்தம்
சந்யாசம்
அறம் - பொருள் - இன்பம் - வீடு
பூ பிஞ்சு காய் கனி
Spring - summer - autumn- winter
மேலே சொன்ன நாலு தர்மங்களை முறையாக அனுஷ்டிக்க மாட்டதவர்களே / மீறுபவர்கள் / முடியாதவர்களே வர்ணாஸ்ரம தர்மத்தைப் பற்றி துர்போதனைகள் செய்பவர்கள்.
அறவழியில் வாழ்ந்து பொருள் ஈட்டி அதை இன்பமாக அனுபவித்து பின் வீடு பேரடைதலே ஆசிரம தர்மம்.
ஆனால் நாம் முதலும் போட மாட்டோம் (அறம்) கடையும் வேண்டாம் (வீடு) ஆனால் இடைப்பட்ட பொருளும் இன்பமும் மட்டுமே நமக்கு எப்போதும் வேண்டும்.
ஜாதி பிறப்பால் அல்ல குணத்தால் என்று சொன்னேனே - ஆசாரம் + தர்மம் = ஆஸ்ரமதர்மம் - எவனொருவன் இந்த 4 தர்மங்களையும் சரிவர அனுஷ்டிக்கிறானே அவன் ப்ராம்மணன்.
அறத்தை விட்டு விட்டு பொருள் இன்பம் வீடு என மூன்று விஷயங்களை ஏற்கிறானே அவன் க்ஷத்ரியன்.
அறமும் செய்ய மாட்டேன் பொருளும் தேடமாட்டேன் ஆனால் இன்பமாக வாழ்ந்து வீடுபேரடைய ஆசை கொண்டவன் வைசியன் - எதுவுமே செய்யமாட்டேன் ஆனால் வீடு பேரடைவது மட்டும் அவஸ்யம் என நினைப்பவன் சூத்திரன்.
General - OBC - MBC -SC/ST நன்றாகப் படித்து (அறம்) தேர்விலும் நல்ல மார்க் வாங்கி (பொருள்) நுழைவுத்தேர்விலும் முதலில் (இன்பம்) வந்து உயர் கல்வி படிப்பதை (வீடு) வர்ணாஸ்ரம தர்மம் என புரிந்து கெள்ளலாமா?
ஆசாரம் பற்றி அடுத்த பதிவில் 

பூதத்தில் கரைதல் -3

பூதத்தில் கரைதல்
இயற்கை யின் மகத்துவத்தால் உயிர்களின் உருவாக்கம் நடக்கிறது.
ஒவ்வொரு உயிருக்கும் அதன் பிறப்பிலிருநது இறப்பு வரை தேவையான சக்தியும் - உடலமைப்பும் அருளப்படுகிறது.
உயிர்கள் வாழும் சூழலுக்கு ஏற்றார் போல தேவையான feeder களும்....
உதாரணமாக -
இந்தியாவில் வெப்பம் அதிகம் - அதனால் இதமான பருத்தித் துணிகளுக்கான விளைச்சலும் அதிகம். பனிப் பகுதிகளில் செம்மறி ஆடுகள் அதிகம். கம்பிளிக்காக.
உயிர்களுக்கு தேவையான உணவும் கூட regional and rational.
மனிதன் தனது ஆசை காரணமாக தன் உடலை வருத்தி - கூடுதல் சக்தியை செலவிட்டு பொருளைத் தேடி ஓடுகிறான். கடைசியில் மரணத்தை நெருங்கும் காலத்தில் - to offset exhausted energy spending in times - in excess of requirements - drained out from the reserve for future - மனிதன் துணைக் கருவிகளை நாடுகிறான். உதாரணமாக walker wheel chair etc அல்லது பிறர் உதவியோடே நடமாடுகிறான்.
அநேகமாக 100 வயதுக்கு மேல் வாழும் சாதனையாளர்கள் பலரும் சொல்லும் ஒரு விஷயம் ஒரே விஷயம் இயற்கையை அனுசரித்து வாழுந்தோம் என்பதே!
மனிதனின் நகருதலுக்கு கடவுளால் படைக்கப்பட்டது அதிகபட்சம் மாட்டு வண்டிகள் - படகுகள். குதிரைகள் கூட க்ஷத்திரிய பயன்பாட்டுக்காக ஆனால் அதற்கேற்ற உணவும் ஓய்வும் அவர்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.
ஒரு மணி நேரத்துக்கு அதிகமாக மோட்டார் சைக்கிளில கார் விமானம் ரயிலில் பயணித்தால் நம் உடலுக்கு வேலை இல்லை - ஆணாலும் உடம்புக்குள் ஒரு விதமான அசதி.
குளிர் சாதன படுக்கை வசதி ரயிலில் பயணித்தால் கூட தரையில் ஒரு அரைமணி நேரம் படுத்து எழும் சுகம் கிடைப்பதில்லையே.
இயற்கையை வென்று விமானத்தை படைத்ததாக பெருமை பட்ட மனிதனுக்கு இயற்கை அடித்த ஆப்பு - அடுத்த பதிவிலே...

பூதத்தில் கரைதல் -2

பூதத்தில் கரைதல்...
இயற்கையின் படைப்பு விதிகளை மனிதன் கையாளவே முடியாது என தொடங்கினோம்...
உறுப்பு மாற்று....
பிரமாணத்தின் சார்புக்கு சப்ஸ்டிட்யூட் தேடலாம் - பிரமாணத்துக்கே?!
ஏசி இருக்கிறது - அதை ஒரு தற்காலிக ப்ரமாணமாக கொள்வோம் - அதற்கான தொடர்புடைய சார்பு ஸ்விட்ச் மாற்றிக் கொள்ளலாம்.... ஆனால்... சாம்சங் இண்டோர் யூனிட்டையும் எல் ஜி அவுட்டோர் யூனிட்டை ப்ளூ ஸ்டார் ரிமோட்டையும் இணைத்து ஏசியை இயக்க முடியுமா? எல்லோராலும் முடியாது... அது போலவே தான் உறுப்பு மாற்று...
அசம்பில்டு ரோடியோ செட் போல - இதுவும் சாத்தியமே - சில புத்திசாலிகளுக்கு - ஆணால் சர்க்யூட் போர்டில் பெரிய மாற்றங்களை அதாவது சாம்செங் / எல் ஜி / காத்ரெஜ் சாதனங்களின் தனித்தன்மை எல்லாம் திரட்டி புதியதோர் வடிவமைப்புத் தேவை - ஆக இந்த ஏசி பழுதானால் அதை சீர் படுத்த இப்போது 3 டாக்டர்கள் மற்றும் புதிய சர்க்யூட் போர்டை வடிவமைத்த 4 வது நபரும் இங்கே தேவை.
உறுப்பு மாற்றும் - இது போலவே...
ஒரே ரத்தப்பிரிவு ஒரு புறமிருக்கட்டும் - அதற்காக 50 வயது முதியவரின் சிறுநீரகத்தை 25 வயது வாலிபனுக்குப் பொருத்துதல் - spare - spare தான் O.E. O.E தான்....
ஸ்பேரின் தேய்மான விகிதம்?!
உறுப்பு மாற்றுதலில் ரத்த வகை மட்டுமல்ல - பயன்பாட்டு விகிதம் - வயது - உணவுப் பழக்க வழக்கம் - சுற்றுச் சூழல் - ஜீன் - reflex - எண்ணவோட்டம் என பல கோணங்கள் உண்டு. இவை எல்லாம் ஒரே மாதிரியாக அமையும் இரண்டு உயிர்கள் ஏன் வாண சாஸ்திரம் என்னும் ஜாதக bar code ஒன்றாக அமையும் இரு ஜீவன்கள் இருக்கவே முடியாது இறைவன் படைப்பில் -
இதுதான் 84 நூறு ஆயிரம் கோடி யோனி பேதம் என நாம் வகைப்படுத்திய இறைவனின் படைப்புக் கொள்கையில் நாம் அறிந்த பகுதி. 

பூதத்தில் கரைதல் -1

பூதத்தில் கரைதல்....
படைப்பில் பாதியை இயற்க்கைக்கு மறு சுழற்ச்சிக்காக விட்டுக் கொடுக்க வேண்டும்.
கட்ட பொம்மன் என்ற திரைப்படத்தில் கவுண்டமணி அவர்களின் நகைச்சுவை காட்சி ஒன்று வரும். ஒரு நபர் 1000 மூட்டை நெல் அறைத்தால் எவுவளவு அரிசி வரும் என கேட்பார். அதற்கு கவுண்டர் 1000 அறைத்தால் 500 - ஐநூறு அறைத்தால் 250 - என அடுக்கி இது உலக வழக்கம்தானே என பதில் சொல்வார்.
அதாவது தவிடு / உமி மீண்டும் இயற்க்கைக்கு - பசுவுக்கு...
படத்தில் அந்த நபர் - இரண்டு நெல்லை எடுத்து கவுண்டர் கையில் கொடுத்து இந்த ரெண்டு நெல்லை அறைத்தால் எத்தனை அரிசி வரும் என கேட்க - கவுண்டர் இரண்டு அரிசி வரும் எனச் சொல்ல - வந்த நபர் - கவுண்டரைப் பார்த்து மோசக்காரா யாரை ஏமாற்றுகிறாய் - இரண்டு நெல்லை அறைத்தால் இரண்டு அரிசி வருவது போல ஆயிரம் மூடை நெல் அறைத்தால் 1000 மூடை அரிசி வரவேண்டும் என்பார்.
மனிதன் இன்று இதே மனோபாவத்தில்தான் இருக்கிறான் - எண்ணிக்கை / எடை என எதையும் மிச்சம் வைக்காமல் உண்டு கொழிக்கிறான். இயற்கைக்கு மறு சுழற்சிக்காக இவன் எதையுமே கொடுப்பதில்லை.
நெல் லில் இருந்து கிடைக்கும் உமியை எரிக்கவும் தவிட்டில் இருந்து என்ணெய் எடுக்கவும் கற்ற களவானி மனிதன்.
க்ரூட் ஆயில் எடுத்தான் - 200 லிட்டர் - அதில் பாதியை - குறைந்தபட்சம் கழிவாக 100 லிட்டராவது மண்ணுக்குத் தரவேண்டும் -
மனிதன் செய்தது என்ன?
க்ரூட் ஆயிலை - பெட்ரோல் - டீஸல் - மண்ணெண்ணெய் - பாலிமர் - நாப்தா - தார் என 200 லிட்டரையும் விஞ்ஞானப் பேராசையால் அனுபவித்து, கடைசியாக - மறுசுழற்ச்சிக்கு வழியில்லாத மக்கிப் போகாத ப்ளாஸ்டிக் கழிவுகளை மட்டும் இயற்கையிடம் திருப்பிக் கொடுத்தான்.
விளைவு - எதிர்கால இயற்கை கொடை கேள்விக் குறியாக!
பூதத்தில் கரைவோம்....⁠⁠⁠⁠

Sunday, December 22, 2019

புகழோங்கிய பாரதம்- 4

புகழோங்கிய பாரதம்
அஸ்திரம்/ ஆன்ராய்டு/மந்திரம்
பாரத ரஷ்ய கூட்டுத் தயாரிப்பில் உருவானதே *#ப்ரம்மோஸ்* என்ற ஏவுகனை. இதற்க்கு இந்த பெயர் வர காரணம்... நம் புராண இதிகாசங்களில் சொல்லப் பட்ட *#ப்ரம்மாஸ்த்ரம்* மற்றும் Mos cow ரஷ்ய நாட்டின் தலை நகரம்.
இந்தோனேசியா வின் அரசு வானூர்தி நிருமம் கருடா Airlines. சின்னம் கருடன்.
புஷ்பக விமானமே குபேரன் மீது ராவணனுக்குப் வெறுப்பும் பகைமையும் வர காரணம் ஆனது.
காண்டவ பிரஸ்தம்- வனம் இந்திரபிரஸ்தம் ஆக பாண்டவர் தலை நகரம் ஆனது. அப்போது அர்ஜுனனால் உயிர் பிச்சை தரப்பட்ட பாம்பு ஒன்றே கடைசி வரை அர்ஜுனன் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த நாகாஸ்திரம்.
சிவனின் பாசுபத அஸ்திரம்... இந்த அஸ்திரங்கள் பிரயோகிக்கப்ப்படும் நேரம் அதை வாயருகே வைத்து மந்திரம் சொல்லுவார்கள்... அது என்ன தெரியுமா... பசு பிராம்மனர் குழந்தைகள் நோயாளிகள் பெண்கள் மூத்த குடிகள்ஆகியோருக்கு ஆபத்து செய்யாதே என்ற command... இது எப்படி ஒரு ஆயுதத்துக்கு ...?!
Voice typing செய்கிறோமே!! அஸ்திரத்துக்கு command கொடுக்க முடியாதா?!
நம் முன்னோர்கள் அணு ஆயுதங்களை ஒரு 3அல்லது 4 அடி நீளம் உள்ள குச்சி வடிவில் அமைத்து இருந்தார்கள்...
உலக நலன் கருதி நைமிசாரண்யத்தில் தங்கள் அம்பு அஸ்திரம் படை கலன்ங்களை நம் காவிய நாயகர்கள் விட்டும் கொடுத்தார்களே...
இன்னும் பேசுவோம்...

புகழோங்கிய பாரதம்-3

புகழோங்கிய பாரதம்
வாரணாவதம் என்ற நகரில் மெழுகு வைக்கோல் மற்றும் அரக்கு போன்ற எளிதில் தீபற்றக் கூடிய பொருள்களால் உருவாக்கப்பட்ட மாளிகை ஒன்றை தயார் செய்து அங்கே புரோசனன் என்ற ஒரு வேவு பார்ப்பவன் மூலம் பாண்டவர்களை தீர்த்துக்கட்ட துரியோதனான் திட்டமிட்டான்.
இது குறித்து தகவல் அறிந்த விதுரர் தகுந்த சில குறிப்பு உபயங்கள் சொல்லிக் கொடுத்து தருமனை உஷார் படுத்தினார்.
சுரங்கம் அமைத்தல், இரவு நேரத்தில் விண் கோல்கள் /நகர்வு மூலம் திசை/ பாதை அறிவது போன்றவை அவை. இது தவிர அரக்கு மாளிகையில் இருந்து தப்பிய பாண்டவர்கள் கங்கை கரையை அடைந்து அங்கே விதுரர் ஏற்பாட்டின் படி இருந்த படகில் ஏறி தப்பினார்கள்.
அந்த படகு குறித்து ஆதி பர்வம் அத் 13இல் இயந்திரம் பொருத்ப்பட்டது... பெரும் காற்றை எதிர்கொண்டு அலைகளால் பாதிக்காமல் அதி வேகமாக பயணிக்கும் என்று வர்ணிக்கப்பட்டு உள்ளது.
பின்னர், வியாசரை சந்தித்த பாண்டவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட துர்பாக்ய நிலை குறித்து புலம்பி துக்கித்த நேரத்தில்...
வியாசர் சொல்கிறார்...
பாண்டு குமாரர்களே, பூர்வ ஜென்மத்தில் நீங்கள் நல்ல நண்பர்களை பிரித்து அவர்களிடையே விரோதத்தை உருவாக்கிய பாவமே இன்று இப்படி அவதிப் படுகிறீர்கள்...
ஆகவே, இனி நீங்கள் உங்களோடு பயணிக்க ஹித வார்த்தைகளை சொல்லி வழி நடத்த ஒரு புரோஹிதன் உதவியோடு செல்லுங்கள் என்று சொல்லி தௌம்யர் என்ற சாஸ்திரம் அறிந்த புரோகிதரை பாண்டவர்களுக்கு துணையாக அனுப்பினார்.
அஸ்திரம்/ ஆன்ராய்டு/மந்திரம் 4இல் 

புகழோங்கிய பாரதம்- 2

 புகழோங்கிய பாரதம்
திரௌபதி பாண்டவர்களுக்கு சொந்தமான செய்தி துரியோதனாதிகளுக்கு மிகுந்த சலிப்பை கோபத்தை தூண்டியது.
பாஞ்சால தேசத்திலேயே துரியோதனன், கர்ணன், சகுனி, சோம தத்தன் ஆகிய நால்வரும் ஒன்றுகூடி பாண்டவர்களை தாக்குவது சம்பந்தமாக ஆலோசிக்கத் துவங்கினர்.
அப்போது சோமதத்தன் பேசுவது, துருபதன் வல்லமை படை பற்றி சகுனி சொல்வதை என்னால் எற்க முடியவில்லை. அவனிடம் ஆயுதங்கள் எந்திரங்கள் குவிந்து கிடக்கின்றன. அவனுடைய கோட்டை மதிலின் மேல் அக்கினியை வீசும் கோளங்கள் பொருத்தப்பட்டு இறுக்கின்றன என்று சொல்கிறான்...
இவை பீரங்கியாக இருக்கும் என்பது அனுமானம்.
ஆதாரம்... மகா பாரதம் ஆதி பர்வம் அத்யாயம் 17.
3இல் கப்பல்.

Saturday, December 21, 2019

புகழோங்கிய பாரதம் -1

புகழோங்கிய பாரதம்.
நம் பாரத மக்களின் மனதில் நமது வரலாறு/பெருமை குறித்து நிறைய பொய்கள் நன்கு விதைக்கப்பட்டு உள்ளது...
கொள்ளை அடிக்க / பெண்கள் மீது நாட்டம் கொண்டு இங்கே வந்த முஸ்லிம் களை மன்னர்கள் என்றும், மதம் மாற்றம் நோக்கமாக வந்த கிறித்தவர்களை lord என்றும் ப்ரபுக்கள் என்றும் நாம் இன்றுவரை பாடங்களில் படித்துக்கொண்டு இருக்கிறோம்.
நன்கு படித்த பாண்டித்யம் பெற்றவர்கள் கூட இன்று நம்பும் ஒரு விஷயம், secularism.
அதே போல பாரதீயர்கள் காட்டுமிராண்டிகள்/பாம்பாட்டிகள் நாகரீகம்/ விக்ஞானம் தெரியாதவர்கள் என்ற எண்ணம் நமக்குள் விதைக்கப்பட்டு உள்ளது.
பீரங்கிகள் இங்கே புழக்கத்துக்கு வந்தது, முகலாய கொள்ளையர்கள் (so called மன்னர்கள்) காலத்தில்.... துப்பாக்கிகள் இங்கே வந்தது மதம் மாற்றும் கிறித்தவர்கள் செய்த சாதனை என்றெல்லாம்...
வாஸ்து அறிந்த ப்ரோஹிதன் இன்றைய google போல தேர்தவனாக இருந்து உள்ளனர் நம் தேசத்தில்.
மகா பாரதத்தில் பீரங்கிகள்/ கப்பல் /அணு ஆயுதங்கள் இருந்து உள்ளது.
இன்றும் இலங்கை விமான குழுமத்தின் பெயர் ராமாயணம் தழுவியே. வைமானிக சாஸ்திரம் யாருடைய நூல்?!
நம் பெருமை / ஆயுதம் குறித்து கொஞ்சம் விரிவாக பேசலாம்....
2இல் 

ஸ்ரார்தம்

ஸ்ரார்தம்...
வீட்டில் இருக்கும் மூத்த கர்த்தா வே செய்ய வேண்டும்... மற்ற உப கர்த்தா க்கள் உடன் இருக்க வேண்டும்.
மூத்த கர்த்தா உடல் நலம் குன்றியவர் அல்லது மனைவி இல்லாதவர் என்றால் அதிகாரம் இரண்டாமவருக்கு.
கர்மாக்கள் கொடுக்க வேண்டியவர் தவறினால் உப கர்த்தா செய்யலாம்.
இப்போது எல்லாம் புரோகிதர்களின் அதீத பேராசை, இழுத்தடிப்பு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஒப்புக் கொள்வது மந்திர பிரயோகங்களில் சிரத்தை இல்லாமை ஆகியவற்றால், கர்த்தாக்கள் ஸ்மரண தினத்தன்று கோசாலை விருதாஸ்ரமங்களில் சிரார்தத்துக்கு ஆகும் சிலவை விட அதிக பொருள் செலவிட்டு உணவு கொடுத்து விட்டு வந்து விடுகிறார்கள்.
இங்கேயும் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், பல இடங்களில் பணம் கட்டுவதை தவிர்த்து ஒரு இடமாக செய்தால் அந்த பித்ரு அன்னம் தண்ணீருக்கு அலையாமல் இருக்க வேண்டும்... கர்த்தா பணம் கட்டிய இடத்தில் சிரத்தையுடன் ஒரு தர்ப்பணம் கொடுப்பதும் நல்லது.
இப்போதெல்லாம் சம்பாதிக்க ஒரு நல்ல வழி...
மகா பெரியவர் ஆராதனை... ராகவேந்திரர் ஆராதனை, சேஷாத்திரி ஸ்வாமிகள் ஆராதனை என்று ஊருக்கு ஊர் கிளம்பி உள்ளனர்.
குரு வின் சமாதி/ பிருந்தாவனம் உள்ள இடத்தில் அங்கீகரிக்கப்பட்ட நபரால் மட்டுமே ஆராதனை நடத்த வேண்டும்...
ஆளாளுக்கு தங்கள் தங்கள் ஊரில் ஆராதனை என்று துவங்கினால், சமாதி/பிருந்தாவனத்துக்கு என்ன முக்கியத்துவம்!
ஜெயந்தி விழா ஊர் ஊருக்கு கொண்டாடிவிட்டு போய் சேருங்கள்... அதை விட்டுவிட்டு ஆராதனை என்ற பெயரில் மக்களின் பக்தி நம்பிக்கையை பணத்தை மோசம் செய்ய வேண்டாமே. 

விவாக தர்மம்

விவாக தர்மம்
இந்து தர்மத்தில் இருந்த அதி உத்தமமான விஷயம் பால்ய விவாகம்.
தர்மத்தை அழிக்கவே வந்த ஆங்கிலேயர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகி குழந்தை திருமணம் சமூகக் கொடூரம் என்று சொல்லிவிட்டு இன்று கோ எஜூகேஷன் - செக்ஸ் கல்வி பற்றி பேசி மேல் நாட்டுக் கலாசாரம் என்று புதிது புதிதாக பினாத்துதல் செய்து சிறுமிகளை பாலியல் வன்புணர்வில் இந்தியன் சீரழிக்கிறான்.
8 வயது பெண் கெளரீ
9 வயதில் ரோஹிணீ
10 வயதில் கன்யா
அதன் பின் ரஜஸ்வலை .... எட்டு முதல் 10 வயதுக்குள் விவாகம் முடிக்கப்பட வேண்டும்
கெளரீ விவாகம் ஸ்வர்க்க லோகத்தை - ரோஹிணீ விவாகம் ப்ரம்ம லோகத்தை தரவல்லது.
பால்ய விவாகம் கணவன் மனைவிக்கு பரஸ்பர அண்யோன்யத்தை தரவல்லது -
இப்போதெல்லாம் 25 -28வயது வரை பெண்கள் சம்பாதிக்கிறேன் என்று சொல்லி பணத்தோடு தனக்கென விருப்பு வெறுப்பு பிடிவாதத்தையும் சேர்த்துக் கொண்டு அடங்காத மனைவியாய் ஆறே மாதத்தில் விவாகரத்து கோரி வழக்காடு மன்றத்தில்.
கணவனின் 32 வது வயதுக்குள் பிள்ளைகளை பெற்றுக் கொண்டு விடுதல் கட்டாயம். அப்போது தான் மகனோ / மகளோ பெற்ற தகப்பன் தன் கடமைகளை தன் சம்பாதித்து திடகாத்திரமாய் இருக்கும் காலத்திலேயே முடித்து விட முடியும் (58 வயது ரிடையர்மெண்ட்டுக்கு முன்).
ஆணுக்கும் பெண்ணுக்கும் வயது வித்யாசம் தேவை - ஆணுக்கு மீசை நரைத்தாலும் ஆசை நரைக்காது - ஆக ஆணின் இச்சை பூர்த்திக்காக பெண் இளமையைப் பேணித்தான் ஆகவேண்டும்.
பெண்ணோடு உறவு கொள்வதில் சொல்லப்படும் முக்கிய விதி - தலை முடி நரைத்த பெண்ணோடு உறவு தவிர்க்க வேண்டும். ஆணால் இன்று நாகரீக பெண்களின் முதல் நிபந்தனையே வயது வித்யாசம் அதிகபட்சம் 2 வருடங்களே.
பெண் குழந்தைகளுக்கு இரண்டு ஜாதகங்கள் உண்டு. ஒன்று ஜனன கால ஜாதகம் - இன்னும் ஒன்று ருது மங்கள ஜாதகம். ஆனால் ஆண்களுக்கு ஒரே ஜாதகம் மட்டுமே.
பெண்ணுக்கு பருவமடைவதற்க்கு முன்பே திருமணம் செய்து வைத்து பின் ருது மங்கள ஜாதகத்தின் படி தக்க நேரத்தில் சாந்தி முகூர்த்தம் வைப்பதாலேயே - இத்தனை விசேஷமாக தர்மம் நமக்கு குறிப்பிட்டு சொல்லி கொடுத்தது.
ஹூம்...⁠⁠

Wednesday, October 30, 2019

துலா தராசு -4

துலா... தராசு... -4
ஸ்ரார்த்த திதி யன்று... ஸ்ரீதர வெங்கடேஸ்வர ஐய்யாவாள்... பசியோடு இருந்த பஞ்சமன் குடும்பத்துக்கு உணவு கொடுத்தார்...
புரிதலுக்காக... காலை சுமார் 9 மணி இருக்கும்...
பவுர்ணமி திதி இரவிலும்... அம்மாவாசை, ஸ்ரார்த்த திதி உச்சி பகலிலும் அதிகமாக இருக்க வேண்டும்... உச்சி வேளை... ஆச்சார்ய புரோகிதர் வந்தார்... முன்னமேயே வந்து தைல ஸ்நானம் செய்து பிராமண போஜனத்துக்கு வந்த பிராமணர்கள்.... தலைமை புரோகிதரிடம்... ஸ்ரீதர ஐய்யாவாள்.... பஞ்சமர் க்கு உணவு தந்ததை போட்டு உடைக்க...
ஸ்ரீதர் ஐய்யாவாள்... புரோகிதரிடம்... மீண்டும் புதிய மளிகை வாங்கி... மறு குளியல் முடித்த பின் புது சமையல் செய்தாகிவிட்டது என்றும்... ஆகார நியமத்திலும் இது வரை பங்கம் இல்லை என்பதையும் பொறுமையோடு எடுத்துச் சொன்னார்...
திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி நித்ய தரிசனம் செய்பவருக்கு தெரியாத ஆச்சாரமா?! அனுஷ்டானமா?! பிரம்மஹத்தியா...
ஆனால்... புரோகிதர்.... பிடிவாதம் அதிகமாகி... கங்கையில் ஸ்நானம் செய்து விட்டு வந்தாலே... இனி ஆச்சாரியம் செய்து வைப்பேன் என்று கிளம்பி விட்டார்...
இங்கே... வெங்கடேஸ்வரர் கடமை தவறினாரா?!... புரோகிதர் கடமை தவறினாரா?!...
ஸ்ரார்த்த நியமம் தவறாமல்... அதே நேரம் பசித்தவருக்கு உணவு கொடுத்தது கூடுதல் புண்ணியம் ஆயிற்றே...
மகாலிங்கத்தின் அருளால்... கார்த்திகை அமாவாசை நாளில்... ஐய்யாவாள் வீட்டு கிணற்றில் இருந்து கங்கை உத்பவித்து திருவிசநல்லூர் வீதியெங்கும் பிரவாகித்து ஓட ...
புரோகிதர்... ஐய்யாவாளிடம்... மன்னிப்பு கோர....
கூடுதல் புண்ணியம் செய்த ஐய்யாவாள்... அந்த புண்ணிய பலனை அனுபவித்தாரா?!
கவனிக்க வேண்டியது...
பாவம் செய்யத்தான் கூடாது... புண்ணியம் எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம்...
இறந்து போன பித்ருக்களுக்கு... உணவு அளிப்பதை விட... பசித்தவர்களுக்கு உணவு தருவது அதை விட உசத்தி...
நாம் கொடுக்கும் பிண்டம் தான் பித்ரு க்களுக்கு மோக்ஷம்/ உணவு தரவில்லை... அது அவரவர் வினை வழி, அவரவர் வந்தனர்... தருமை ஆதீன குரு முதல்வர் ஞானசம்பந்தர் சொன்னது...
ஆனாலும்... நாம் கர்ம அனுஷ்டானங்களை விதிப்படி செய்ய வேண்டும்.... சாஸ்திரம் அப்படித்தான் சொல்லி இருக்கு... காரணம்... வேதியர் சம்ரக்ஷணமாகவும் கூட இருக்கலாம்...
ஐய்யாவாள் உணவு கொடுத்தது... நான்காம் வர்ண பஞ்சமருக்கு... அதுவும் 300/350 ஆண்டுகளுக்கு முன்னால்....
அதாவது... பிராமணர்கள் வர்ண பேதம் அப்போது இப்போது எப்போதும் பார்க்கவில்லை என்பது இங்கே கவனத்துக்கு உரியது...
புண்ணிய கர்மாக்கள் பலன் உயிரின் மீது ஒட்டிக் கொள்ளக் கூடாது... புண்ணிய கர்மாக்கள் கடமையாக செய்யப்பட வேண்டும்... அவ்வளவுதான்... அதற்க்கு என்ன வழி?!
பார்ப்போம்... 

துலா தராசு -3

துலா 3
தராசு...
துலா மாதத்தில் துலா கட்டத்தில் புண்ணிய தீர்த்தமாடுவது பலன் தருமா?!
நெல்லை புஷ்கரம்... 14ஸ்நான கட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருந்ததே...
12ஆண்டுக்கு ஒரு முறை மகா மகம்... கும்பகோணத்தில்... அந்த குறிப்பிட்ட குளத்தில் நீராடினால் தான் புண்ணியமா?!
வீட்டு பாத்ரூமில் கூட அதே முகூர்த்தத்தில் குளிக்கலாமே!!
இடம் பொருள் ஏவல்...
சினிமாவில் முதல்வர் வேஷம் போட்டவன் எல்லாம்... நாட்டின் முதல்வருக்கு உள்ள அதிகாரத்தை பெற்று விட முடியுமா?!
மெர்சல் டாக்டர்... piles ஆபரேஷன் செஞ்சா உபாதை தீருமா?!
மாசி மாதம் பௌர்ணமி திதியில் சூரியன் சந்திரன் கும்ப ராசியில் குரு பார்வையில் ப்ரவேசிக்கும் அந்த குறிப்பிட்ட புள்ளி...
மகா மக தீர்த்த குளம் தான்...
சூரிய கண்ணாடியில் (லென்ஸ்) சூரிய ஒளி கற்றையை செலுத்தி அது குவியும் இடத்தில் காகிதம் பஞ்சு வைத்தால் பற்றி எரியும் same logic...
கண் கண்ணாடி short/long... +/- sight... logic...
துலா மாசத்தில் துலா கட்டத்தில் அமாவாசை அன்று கங்கா தேவியே முதலை வாகனத்தில் எழுந்தருளி தீர்த்தமாடும் போது... நமக்கு மட்டும் விதி விலக்கா?!
துலா கட்டத்தில்... அநேக தீர்த்த கிணறுகளும் உண்டு... அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு கங்கை முதலாம் புண்ணிய நதியின் அம்சங்கள். கடந்த ஆண்டு புஷ்கரணி நடக்க... தூர் வாரிய போதும் சில புதிய கிணற்று ஆதாரம் கண்டு பிடிக்கப்பட்டது...
ஐப்பசிக்கு அடுத்த விருச்சிக மாதத்தில் (கார்த்திகை) அமாவாசை அன்று திருவிசை நல்லூர் ஸ்ரீதர வெங்கடேஸ்வர ஐய்யாவாள் வீட்டு கிணற்றில் கங்கை உத்பவம் கொள்வது போலவே ...
ஸ்ரீதர வெங்கடேச ஐய்யாவாள்...கோவிந்த புரம் போதேந்திர ஸ்வமிகளின் சம காலம்... இருவரும் சேர்ந்து பக்தி/ ஆராதனம் செய்து... மழை (அமிர்த வர்ஷிணி) பெற்றுவித்த உண்மைகளும் உண்டு...
ஐப்பசி அமாவாசை யன்று மயிலாடுதுறையில் சென்று தீர்த்தவாரி முகூர்த்தத்தில் துலா கட்டத்தில் ஸ்நானம் செய்வதே துலாஸ்நானம்...
மற்ற அனைத்தும் அவரவர் சவுகர்யம் கருதி மட்டும்!
(இன்று அந்த பகுதிக்கு தீராவிடம் (விஷம்) சூட்டிய பெயர் லாகடம்.... ஏதோ... மாட்டுக்கு லாடம் கட்டும் பகுதி போல...)
இப்படி புண்ணிய தீர்த்தமாடினால் பலன் உண்டா / இல்லையா என்பதை ஒரே வரியில் சொல்லி முடித்து விடவே நினைத்தேன்...
ஆனால்... சேனை க்கிழங்கும்... புண்ணிய சேர்க்கை பலச்ருதி கணக்கும்.... ஸ்ரீதர வெங்கடேஸ்வர ஐய்யாவாள் ஸ்ரார்த்த கர்மா தவறியதும் தொடரை நீட்டுவிக்கிறது... மன்னிக்கவும்...
4இல் பேசலாம்.. 

துலா தராசு -2

துலா
தராசு... 2
நண்பர் ஒருவர் துலா ஸ்நானம் செய்ய வருவதாக சொன்னார்... அப்போது... அம்மா மண்டபத்தில் தான் செய்யனுமா?! எதாவது விதி உள்ளதா என்று கேட்டார்...
துலா ஸ்நானம் என்பது என்ன?!
அதை சொல்லத்தான் ஆரம்பித்தேன்...
பகவத் கீதையின் மைய கருத்துக்குப் போய்விட்டேன்... சரி... இன்னும் கொஞ்ச தூரம் போய்விட்டு... U turn செய்துடலாம்...
ப்ரம்மச்சாரியின் கர்மா... கல்வியை நாடுதல்...
கிருஹஸ்தன் கர்மா... இல்லறம் பேணுதல்...
வானபிரஸ்தி கர்மா ஞானத்தை தேடுதல்...
சன்யாசியின் கர்மா தர்மத்தை ரக்ஷிப்பது...
இதன் படி வர்ணாஸ்ரம தர்மமத்தை பாருங்கள்...
நான்கு வர்ணத்தின் கர்மா... முறையே நாடுவது... பேணுவது... தேடுவது...காப்பது...
தர்ம அர்த்த காம மோக்ஷ...
அறம் பொருள் இன்பம் வீடு...
அற வழியில் பொருள் ஈட்டி இன்பமாக வாழ்ந்து வீடு பேற்றை அடைவது...
கர்மா... கடமை... duty... இதுதான்... duty க்கு reward கிடையாது... misconduct க்கு punishment உண்டு...
ஹிந்து தர்மம் சொல்வது கடமையை செய்... பலனை எதிர் பார்க்காதே...
படிக்கும்போதே மாணவன் part time job தேடுகிறான்...
கிருஹஸ்தன்... பிள்ளையை hostelலிலும் பெற்றோர்களை old age home களிலும் விட்டு விட்டு மனைவியையும் வேலைக்கு அனுப்பி விட்டு சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக அலைகிறான்...
வானபிரஸ்தி.... இப்போ முழுக்க முழுக்க TV serial/ ஊர் வம்பு... இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே!
சன்யாசி... politics/ பணம்/ பெண்கள்... கேட்டால்.... corporate சன்யாசி...
யாருமே அவரவர் தர்மத்தை அனுஷ்டிப்பது இல்லை...
கோவில் பூஜை / வைதீகம்/ வாத்யார்/ அன்னதாதா என்று இருந்த பிராமணன் நிலை இன்று?!
தர்மத்தின் படி அவரவர் வாழ வேண்டியதை கண்காணிக்க, அதற்க்கான கட்டமைப்புக்களை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய governance க்ஷத்ரியர் / வைசியம் செய்பவர்/ சமூக நல் இயக்கத்துக்கு அடிப்படை சூத்திரமாக இருக்க வேண்டிய அனைவரும் இன்று quota/ reservation/ political / human rights என்றெல்லாம் அறிவு/ வலிமை க்கு ஒவ்வாத வேலைகளில்...
தர்மம் எங்கே இருக்கிறது இன்று...
Quota/ reservation/rights ... இதெல்லாம் இங்கே மறுக்கப் படுவது ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டுமே...
எனவே துலா/ தராசு க்கு / நல்/தீ வினை எனப்படும் இருவினை ஒப்புக்கு இங்கே இனி வழியுமில்லை/ வகையுமில்லை...
ஐப்பசி மாதத்தில் புண்ணிய தீர்த்தங்களில் சங்கல்பித்துக் கொண்டு நீராடி ஆண்டவன் வழிபாடுகளில் நம்மை ஈடுபடுத்திக் கொள்வது துலா ஸ்நானம் என்று பெயர்...
சங்கல்பம் ... இது பற்றி தனி topic ...பின்னர்...
கடந்த ஆண்டு 144 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் மஹா புஷ்கரம் மாயூரம்/ மயிலாடுதுறை யில் நடந்ததே...
ஐப்பசி மாதம்... துலா கட்டம் எனப்படும் காவிரி நதியில்...
அங்கே, மாதம் 30 நாட்களும் தீர்த்தவாரி... ஐப்பசி எனப்படும் துலா மாதத்தின் கடைசி 10 நாட்களும் பஞ்ச மூர்த்தி சகிதம் தீர்த்தவாரி...
ஐப்பசி அமாவாசை தினத்தில்... கங்கையே தன் பாவங்களை போக்கிக் கொள்ள முதலை வாகனத்தில் எழுந்தருளி காவிரியில் புண்ணிய ஸ்நானம்...
துலா ஸ்நானம் என்பது...
துலா மாதத்தில்...
துலா கட்டத்தில்...
இதன் பலன் என்ன?! 3இல்...

துலா தராசு -1

துலா
தராசு...
சித்திரை துவங்கி பங்குனி வரை 12 மாதங்கள் மேஷம் துவங்கி மீனம் வரை 12 ராசிகளால் அழைக்கப் படுகிறது...
துலா... ஐப்பசி மாதத்தை (மத்திய) குறிக்கும்...
ஆத்மா வின் நல்/ தீ வினைகள்ஒப்பி...அதாவது....
இருவினை ஒப்பு... மல பரிபாகம் அடைந்து ஜீவ பிரம்ம ஐக்கிய நிலை அடைய வேண்டும்...
இரு வினைகள் ஒப்பு என்பது... 50% புண்ணியம் 50% பாவம் அல்ல...
அப்படி இருந்தால்... தலா 50% புண்ணிய/பாவ கர்மாக்களுக்கு உரிய சுக அவஸ்தைகளை தனித்தனியே அனுபவித்தே ஆக வேண்டும்...
ஒரு பசுவை கொன்று விட்டு 100 பசுக்கள் வைத்து பராமரிக்கிறேன் என்பது இரு வினை ஒப்பு ஆகாது...
ஒரு பசுவை கொன்ற பாவத்தையும், 100 பசுக்கள் பராமறிப்பு புண்ணியத்தையும் தனித் தனியே அனுபவித்தே ஆக வேண்டும்...
புண்ணிய / பாவங்களுக்கு உரிய தண்டனையை அவரவர் அனுபவித்தே ஆக வேண்டும்... பாவமன்னிப்பு பரிகாரம் என்பதெல்லாம் பித்தலாட்டம்!
நம்முடைய நோய்க்கு நாம்தான் மருந்து சாப்பிட வேண்டும். அதை வேறு யாரும் தன் ரத்தம் கொண்டு கழுவவோ, சுமக்கவோ முடியாது...
சரி... துலா...
துலாக் கோலில் இரண்டு தட்டுக்களுமே காலியாக இருக்கும் போதே சமன் பார்க்கப்படும்...
அது எப்படி முடியும்?! கர்மா என்று ஒன்று இருந்தால் அதன் பலனாக புண்ணியம்/பாவம் எதாவது ஒன்று கண்டிப்பாக இருந்தே ஆகவேண்டுமே!!
ஆத்மா வை புண்ணியம்/பாவம் பீடிக்காமல் இருக்க முடியுமா?!
அதுதான் ஹிந்து தர்மத்தின் speciality...
கர்மாக்கள்... செய்வதால் புண்ணிய/பாவங்கள் ஆத்மாவோடு ஒட்டாமல் இருப்பது சாத்தியம்... அதற்கான வழி...
அவரவர்க்கு விதிக்கப்பட்ட கர்மங்களை மட்டுமே நாம் செய்ய வேண்டும்...
கீதையில் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனிடம் சொல்வது என்ன?!
க்ஷத்ரியன் தொழில் போர் புரிவது... அங்கே அவன் செய்யும் கொலைக்கான பாவங்கள் அவனை /ஆத்மாவை சேராது...
இதை இன்னும் கொஞ்சம் புரியும் படியாக... ராணுவ வீரன் எதிரிகளை சுடுவது அவனுக்கு விதிக்கப்பட்ட கர்மா... அதற்காக நாம் எல்லோரும் ஆயுதங்களை கொண்டு அவரவர் எதிரிகளை கொல்ல முடியுமா?!
நகருக்குள் புகுந்து மக்களுக்கு கேடு விளைவிக்கும் துஷ்ட மிருகங்களை வேட்டையாடி கொல்வது அரசன் கடமை...
duty யை செய்ய reward கிடையாது... அது புண்ணிய கணக்கில் சேராது... அதே ராஜா... ஜீவகாருண்யம்....human rights என்றெல்லாம் பேசிக்கொண்டு... ஜன சமூகத்துக்கு கேடு விளைவிக்கும் மிருகங்களை/ பிரிவினை பேசித் திரியும் ஓநாய் மனிதர்களை தண்டிக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பானேயானால்... கடமை தவறினால் அது மகா பாவம்...
புரிதல் என்ன.... பாவம் செய்யாதே.... விதிக்கப்பட்ட கடமையை செய்...
துலா 2இல் தொடரும்...

தீபாவளி -8

தீபாவளி - 8

வரலாற்றில் தீபாவளி
மதுரை மாநகரில் திருமலை நாயக்கர் ஆட்சியில்தான் தீபாவளிப் பண்டிகை அறிமுகமானது.
கி.பி. 1117-ல் சாளுக்ய திரிபுவன மன்னனின் கன்னட கல்வெட்டில், ஆண்டுதோறும் தீபாவளியன்று சாத்யாயர் என்ற அறிஞர்களுக்கு தீபாவளி பரிசு தந்ததாகக் குறிப்பு உள்ளது. தென்னிந்திய தீபாவளி முதல் குறிப்பு இதுதான்.

ஹர்ஷரின் நாகானந்தம் நாடக நூலில் தீபாவளி பற்றிக் குறிப்பிட்டுள்ளார். புதுமணத் தம்பதிகளுக்குப் புத்தாடை வழங்கியதையும் அதில் கூறியுள்ளார்.
குடந்தை சாரங்கபாணி ஆலய கல்வெட்டு, தீபாவளியன்று பெருமாளுக்கு விசேஷ பூஜை, ஆராதனை நடந்ததைக் கூறுகிறது.

காளத்தி ஆலயத்தில் உள்ள கல்வெட்டில், தீபாவளியன்று இறைவனுக்கு விசேஷ பூஜையும் மானியமும் தந்த செய்தி உள்ளது.
மொகலாய பேரரசர் ஷாஜஹான் தீபாவளியன்று பெருவிருந்து ஏற்பாடு செய்து, சமபந்தி போஜனம் கொடுத்து பட்டாசு கொளுத்தி வாணவேடிக்கை செய்துள்ளார்.

சுவாமி ராம்பாத்ஹா என்ற ராம தீர்த்தர் தீபாவளியன்று சந்நியாசம் பெற்றார்.
பவிஷ்யோத்ர புராணத்தில் தீபாவளி என்றும்; காமசூத்ராவில் கூராத்ரி என்றும்; “கால விவேகம்’, “ராஜமார்த்தாண்டம்’ ஆகிய நூல்களில் சுக்ராத்ரி என்றும் தீபாவளி குறிப்பிடப்பட்டுள்ளது.

தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள “ஆகாச பைரவ ஜல்பம்’ என்ற ஓலைச் சுவடியில் வாணவேடிக்கை பற்றி உள்ளது. சிவகாசி பட்டாசு தொழில் 1923-ல் ஆரம்பிக்கப்பட்டது. தீபாவளி வெடி வெடிக்கும் பழக்கம் பேரரசர் பாபர் (1483- 1530) காலத்தில் ஏற்பட்டது. மஹதாப் என்ற உருது சொல்லுக்கு மத்தாப்பு எனப் பொருள்.

நேபாளத்தில்…
திஹார் என்ற பெயரில் ஐந்து நாள் கொண்டாடுகின் றனர். தீபாவளி முதல் நாள் காகங்களுக்கு தயிர் சாதம் வைப்பர். இரண்டாம் நாள் பைரவரான நாய்க்கு விருந்து வைப்பர். மூன்றாம் நாள் பசுக்களுக்கு பூஜை செய்வர். நான்காம் நாள் வீட்டுப் பிராணிகளுக்கு உணவு கொடுப்பர். ஐந்தாம் நாள் சகோதர- சகோதரிகள் நலனுக்கு பைலாதாஜ் என்ற பண்டிகை கொண்டாடுகின்றனர்.

உலகெங்கும் தீபாவளி
இங்கிலாந்தில் கைபாகஸ் என்றும்; ஸ்வீடனில் லூசியா என்றும்; ஜப்பா னில் டோராநாக்ஷி என்றும்; சீனாவில் தஹிம் ஹீபர் என்றும்; பர்மாவில் தாங் கீஜி என்றும் தீபாவளிப் பண்டிகையை வரிசையாய் தீபம் ஏற்றி கொண்டாடுவர்.

பர்மா, சீனா, சயாம் நாடுகளில் மூங்கிலில் வண்ணக் காகித அலங்காரம் செய்து அதில் தீபமேற்றி ஆடிப் பாடுவர். இது ஆகாய தீபம். கனடா நாடாளுமன்றத்தில் 1998-ல் தீபாவளி கொண்டாடினர். வண்ண விளக்கு அலங்காரத் துடன் மகாலட்சுமி பூஜை செய்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
கயானாவில் இந்துக்கள் வாழும் இடத்தில், சம்பிரதாயப்படி தீபாவளியைக் கொண்டாடு கின்றனர். அன்று அங்கு தேசிய விடுமுறை நாள்.

இந்தியாவில் ராஜஸ்தான் வேடுவர் வீர விளையாட்டு ஆடுவர். ராஜபுத்திரர்கள் ராம பட்டாபிஷேகம் கொண்டாடுகின்றனர். சௌராஷ்டிரத்தில் லட்சுமி பூஜையுடன் புது கணக்கு எழுதுவர். மகாராஷ்டிரத்தில் தாம்பூலம் போடும் திருநாள் இதுதான். பஞ்சாப் பொற் கோவிலில் தீபமேற்றி அலங்காரம் செய்வர். இமாசலப் பிரதேசத்தில் பசுவிற்கு பூஜை செய்வர். மத்திய பிரதேசத்தில் குபேர பூஜை செய்வர். வங்காளத்தில் காளி பூஜை செய்து கொண்டாடுவர்.

தீபாவளி குறித்த பதிவு 9 சிறிது இடைவெளிக்குப்பின் தொடரும். ....

#எவர்கிங்_ஏகாம்பரம் 

தீபாவளி -7

தீபாவளி - 7

தீபாவளித் திருநாள் குறித்து பல கதைகள் பரவலாக உள்ளன. அத்தனையும் நமக்குச் சொல்லும் பாடம் “கெட்டவையை நீக்கி நல்லதை அடைய வேண்டும்” என்பதாகும். அதாவது ஞானத்தை அடைவதே தீபாவளி” என்கின்றனர் சான்றோர்.

தீய எண்ணங்கள்தான் (நரகன்) நரகாசுரன் என்ற அசுரன். அவன் குடியிருக்கும் இடமே நம்முடைய உடல். இந்த மாயாவியை அழித்து, ஆத்ம ஜோதியாகத் திகழ்வதே தீபாவளி''. எனவே எம்மை தீய வழிக்கு இழுத்துச் சென்று கொடுமைப் படுத்தும் காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய ஆறுவகை அசுரக் குணங்களையும் அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்ட கிருஷ்ண பராமாத்மாவையும், இலட்சுமி தேவியையும் இந் நன்நாளில் துதித்து அசுர குணங்களை அழித்து மகிழ்வான வாழ்வைப் பெற திடசங்கல்பம் கொள்வோம்.

பண்டிகை பூஜைகள்:
பூஜையறையில் தட்டுகளில் புத்தாடைகள் (துணியில் மஞ்சள் தடவ வேண்டும்), பட்டாசு, பட்சணங்கள், தீபாவளி மருந்து வைத்து படைக்க வேண்டும். பின் மருந்தை விழுங்கிவிட்டு, புத்தாடை உடுத்தி பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெற்று, பட்சணம் சாப்பிட்டு பட்டாசு வெடித்துக் கொண்டாடி, ஒருவருக்கொருவர் பட்சணம் கொடுத்து மகிழ வேண்டும்.

தீபாவளி மருந்து எளிய வகை: வேப்பிலை, வெற்றிலை, ஓமம், மிளகு, வெல்லம் சிறிது சிறிது வைத்து, மைபோல அரைத்து சுண்டைக்காயளவு விழுங்கலாம். தீபாவளி மருந்து சாப்பிடுவதால் பின்னர் உண்ணும் பலகாரங்கள் ஜீரணமாகும். தீபாவளி பூஜைகள் பல உள்ளன. இவற்றில் ஒன்றைச் செய்யலாம்.

மகாலட்சுமி பூஜை
கங்கா ஸ்நானம் செய்தபின் இந்த முக்கிய பூஜையைச் செய்ய வேண்டும். அன்று லட்சுமிக்கு வில்வ இலையால் அர்ச்சனை செய்து, இனிப்பு பண்டம் வைத்து வணங்கி சிறுவர்களுக்குத் தரவேண்டும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும்; கன்னிகளுக்குத் திருமணம் நடைபெறும்.

லட்சுமி குபேர பூஜை
தீபாவளிக்கு மறுநாள் லட்சுமி குபேர பூஜை செய்வார்கள். இதனால் வறுமை நீங்கி வளம் பெருகும். திருமகள் திருவருளால் செல்வம் நிறையும். பிணி, மூப்பு, துன்பம் தொலையும். “சுக்லாம் பரதரம்’ சொல்லி கணபதியை வணங்கியபின், லட்சுமி, துர்க்கா, சரஸ்வதிக்கு குங்கும அர்ச்சனை செய்து, பின் குபேர ஸ்துதி கூறி குபேரனை வணங்கவும். லட்சுமியும் குபேரனும் செல்வத்தின் அதிபதிகள்.

“ஓம் குபேராய நம; ஓம் மகாலட்சுமியே நம’
என 108 முறை சொல்லலாம்.

குலதெய்வ வழிபாடு
நம் வீட்டு குலதெய்வத்தை நினைத்து- முக்கியமாக பெண் தெய்வங்களை நினைத்து அவர்களுக்குப் பிடித்த உடை, பூஜைப் பொருட்கள், பட்சணங்கள் வைத்து வணங்க வேண்டும். இதை ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் செய்யலாம். தீபாவளியன்று செய்வது மிகவும் நல்லது.

முன்னோர் வழிபாடு
நம் வீட்டில் இறந்துபோன முன்னோர்களை எண்ணி, அவர்களுக்குப் பிரியமானவற்றை வைத்து வணங்கி, அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும். நன்மைகள் கிடைக்கும்.

கோவர்த்தன பூஜை
வடமாநிலங்களில் தன திரயோதசி, நரக சதுர்த்தி, தீபாவளி, அன்னக்கூட்டு, பாய்ஜ் என அடுத்தடுத்து வரும் ஐந்து நாட்கள் முக்கியமாகும். இதில் கோவர்த்தன பூஜையை பீகார், அரியானா, பஞ்சாப், உத்திரப் பிரதேச மாநிலங்களில் சிறப்பாகச் செய்வர். மதுராவுக்கு மேற்கே 26 கிலோமீட்டரில் மானச கங்கை குளக்கரையில் கோவர்த்தனகிரி உள்ளது. 5,000 வருடங்களுக்கு முன்பு இது 29 கிலோமீட்டர் உயரம் கொண்டதாக இருந்ததாம். இப்போது 80 அடி உயரமாக உள்ளது.

பக்தர்கள் விழாவன்று இரவு விழித்திருந்து ஆடிப் பாடுவர். சிறு மலை உருவாக்கிஅலங்கரிப்பர். அதன்முன் பலவித பலகாரங்களும், 56 வகை பதார்த்தங்களும், சாப்பாடும் வைத்து மலைபோல செய்வர். இதற்கு அன்னக்கூட்டு எனப் பெயர். பின் பூஜை செய்து அனைவரும் சாப்பிடுவர். 38 கிலோமீட்டர் சுற்றளவுள்ள கிரிவலப் பிரதட்சிணமும் செய்வர். இதனால் கோவர்த்தன கிரிதாரி அருள் நமக்குக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

துளசி கல்யாணம்
தீபாவளிக்குப் பின்வரும் துவாதசியன்று துளசிச் செடிக்கு, திருமாலாக பாவித்த நெல்லி கிளைக்கும் திருமணம் செய்விப்பார்கள். பிரபோதன ஏகாதசி என்பது தீபாவளிஅமாவாசைக்குப்பின் வரும் ஏகாதசி.
அன்றுதான் திருமால் மகாபலிக்கு காவலாக நான்கு மாத யோக நித்திரை செய்து பின் வைகுண்டம் திரும்பிய நாள். அதற்கு மறுநாள் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற திருமால் துளசியை மணந்து கொண்டார்.

தீபாவளி - 8 இல் தொடரும்...

#எவர்கிங்_ஏகாம்பரம் 

தீபாவளி -6

தீபாவளி - 6

14 ஆண்டுகள் வன வாசத்திலிருந்து ராமரும், சீதையும் நாடு திரும்பும் நாள் தான் தீபாவளி என்று கொண்டாடுகின்றனர். வீடுகளில் தீபங்களை ஏற்றி வைத்து கொண்டாடுகிறார்கள். ராமர் - சீதாதேவியை வரவேற்க இந்த விளக்குகள் என்பது ஐதீகம்.

மேலும் தீபாவளியை பொதுவாக ஐந்து நாட்கள் கொண்டாடுகிறார்கள். இந்த ஐந்து நாட்களிலும் விரதமும் இருக்கிறார்கள்.
குஜராத்திலோ, லட்சுமி பூஜையாக தீபாவளியைக் கொண்டாடுகிறார்கள். பொன்னும், பொருளும் கொழிக்க வேண்டும் என்று லட்சுமியை வேண்டி நடத்தப்படும் பூஜை தான் தீபாவளி என்கிறார்கள் மார்வாரி சமூக மக்கள்....

குஜராத்தில் இது புது வருடமாகக் கொண்டாடப்படுகிறது. வீட்டை முதலிலிருந்தே சுத்தப்படுத்தி, வர்ணங்கள் பூசி, லட்சுமியை வரவேற்கத் தயார் செய்து கொள்கிறார்கள். மாவிலைகள் கட்டப்படுகின்றன. கணபதியும் இலட்சுமியும் சேர்ந்து அமர, பூஜை செய்யப்படுகிறது. வியாபாரிகள் தங்கள் புதுக் கணக்கை ஆரம்பிக்கின்றனர், அன்று கொடுக்கல் வாங்கல் இருப்பதில்லை, பல இனிப்புக்கள் இலட்சுமிக்குப் படைக்கிறார்கள் அவளை வரவேற்க இரவு முழுவதும் கதவை அடைக்காமல் திறந்தே வைக்கின்றனர்.

தீபாவளியின் ஒரு வாரம் முன்பே "ரங்கோலி" என்ற வண்ணங்களால் ஆன கோலங்கள் ஒவ்வொரு வீட்டு வாசலையும் அலங்கரிக்கின்றது. இதிலே போட்டிகளும் வைத்துப் பரிசுகளும் தரப்படுகின்றன. தீபாவளி அன்று கலர் பேப்பரில் முக்கோணம் அல்லது சதுரம், ஷட்கோணம் போன்று கூண்டுகள் தயார் செய்து அத்னுள் விளக்குகள் பொருத்துகின்ற்னர், அதைத் தன் வீட்டு வாசல், பால்கனியில் எரியவிடுகின்றனர். நரகாசுரன் வதத்தையும் கொண்டாடுகின்றனர்.

தீபாவளியின் போது பசுவும் கன்றும் சேர்ந்து பூஜிக்க்கின்றனர், இவர்களது தீபாவளி ஸ்பெஷல் கராஞ்சி லாடு, சங்கர்பாலே, சேவ் சிவ்டா, அமாவாசையன்று லட்சுமி பூஜையும் சிறப்பாக நடக்கிறது. இவர்களும் புதுக் கணக்கை ஆரம்பிக்கின்ற்னர். பின் "பாவுபீஜ்" என்று சகோதர நலத்திற்காகப் பிரார்த்தனை செய்கின்ற்னர், சகோதரர்களும் சகோதரிகளுக்குப் பரிசுகள் வழங்குகின்றனர். ராஜஸ்தானிலும் உத்தர்பிரதேசத்திலும் கோவர்தன பூஜையும் நடக்கிறது.

கிருஷ்ணர் கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தது நம் அனைவருக்கும் தெரியும், இதைக் குறித்து "அன்னகுட்" என்று சாதம் வெடித்து அதை ஒரு பெரிய மலைப்போல் பிடித்து கிருஷ்ணர் தூக்குவதைப் போல் செய்கிறார்கள். கிருஷ்ணர் இந்திரனை ஜெயித்ததையும் கொண்டாடுகிறார்கள்.

பெங்காலிகள் காளி பூஜை செய்கிறார்கள். சகோதர சகோதரிகளின் நலனுக்குப் பிரார்த்தனையும் "பாய் போலே" என்ற பெயரில் நடக்கிறது.

சீக்கியர்களும் இந்தத் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு கோவிந்தசிங் மிகப் புகழ் அடைந்து வரும் போது முகல் அர்சர் ஜஹாங்கீருக்கு இது பிடிக்காமல் அவரைக் கைது செய்து குவாலியர் கோட்டையில் அடைத்தார். அவருடன் அவரைச் சார்ந்த 21 சீக்கியர்களும் உள்ளே அடைக்கப்பட்டனர். பின் ஜஹாங்கீரே அவர்களைத் தீபாவளியன்று சிறையிலிருந்து விடுவித்தார், ஆகையால் இந்நாளை "பந்தி சோர்ரா" என்று கொண்டாடுகின்றனர். சீக்கியர்களின் "கால்ஸா" என்ற கூட்டமும் உருவானது அத்துடன் குரு கிரந்த சாஹேப் என்ற புத்தகமும் சிறிது மாற்றங்களுடன் சீக்கியர்களின் குருவானது.

ஜைனர்களுக்கும் இது மிக முக்கியமான நாள். ஜைனமத ஸ்தாபகர் குரு மஹாவீரர் நிர்வாணம் எய்திய நாள். இன்று தீபங்கள் ஏற்றி "உத்தராத்த்யாயன் சூத்ரா"வைப் படிக்கின்றனர். இதில் மகாவீரரின் ஐந்துபிரவசங்கள் இருக்கின்றன. மொத்தத்தில் தீபாவளி என்பது நமக்குள் இருக்கும் அஞ்ஞான இருளை நீக்கி உள் ஒளியைக் காண்பதாகும்.

அரக்கன் ராவணனை, ராமன் அழித்தொழித்த நாள்தான் தீபாவளி என்று சொல்வாரும் உண்டு. மகாவிஷ்ணு நான்காவது அவதாரமான நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்து உலகத்தில் உண்மையை நிலை நாட்டிய நாளே தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது என்போரும் உண்டு.

தீபாவளி - 7 இல் தொடரும்...

#எவர்கிங்_ஏகாம்பரம்

தீபாவளி -5

தீபாவளி - 5

தீயன அழிக்கப்பட்டு, மன இருள் நீங்கி, உள்ளே ஒளி பாய்ந்து, பரவி பிரகாசித்து, நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் திருநாளே தீபாவளிப் பண்டிகையாகும். தீபாவளி ஒரு சம்ஸ்கிருத பதம். இதைப் பிரித்துப் பார்த்தால் (தீப + ஆவளி-வரிசை) விளக்குகளின் வரிசை எனப் பொருள்பெறும். தீபாவளி தினம் நாம் வீட்டில் தீபங்கள் ஏற்றி வீட்டிற்கு வெளிச்சம் கொண்டு வருவது போல் அகத்து இருள் நீங்க அகத்திலும் ஒளி விளக்கு ஏற்றி உள் ஒளி பெருக்கிடல் வேண்டும்.

கிருஷ்ண அவதாரத்துக்கு முன்பு உள்ள ராமாவதாரத்தில் தீபாவளி உண்டா?

வாமன அவதார காலத்தில் கூட தீப ஆவளி கொண்டாடப்பட்டது... அதாவது திராவிட தேசமான கேரளாவில் கூட...(திராவிட கபோதிகள் கவனத்துக்கு)

ராவண சம்ஹாரம் முடிந்து சீதாதேவியுடன் ஜயராமனாக அயோத்தி திரும்பினார் ஸ்ரீராமன். அப்போது அதிகாலை மூன்று மணி. 14 ஆண்டுகளாக ஸ்ரீராமரை தரிசிக்காத அயோத்தி மக்கள், அந்த இரவில் ஏராளமான விளக்குகளை வரிசையாக ஏற்றி வைத்து, ராமரை தரிசித்து வரவேற்று மகிழ்ந்தனர்.

ஸ்ரீராமபிரான், சீதாபிராட்டியுடன் அரண்மனைக்குள் நுழைந்தார். அப்போது கௌஸல்யாதேவி, ''விளக்கேற்ற வந்த திருமகளே... சீதா! நீ இல்லாததால் இந்த அரண்மனையே இருள் சூழ்ந்து விட்டது. நீ விளக்கேற்று! அந்தகாரம் விலகி அருள் பரவட்டும்'' என்றாள். உடனே, தீபங்களை ஏற்றி வைத்து வழிபாடு செய்தாள் சீதை. இந்த நன்னாளே தீபாவளித் திருநாள்!

இதேபோல், ஞான தீபாவளி என்றும் போற்றுவர்! பிரகலாதனின் பேரனான மகாபலி முடிசூட்டிக் கொண்ட நாள் தீபாவளி. அன்று ஏற்றப்படும் தீபம் “எம தீபம்” எனப்படும். வாமன அவதாரம் எடுத்த பகவான், மகாபலி சக்ரவர்த்திக்கு அருள்புரிந்து அவருக்கு தன் ஞானத் திருவடி சூட்டிய நாள்தான் தீபாவளி என்பாரும் உளர்.

மஹாராஷ்ட்ராவில் இதை "பலிபாத்யாமா" என்று சொல்கிறார்கள். மகாபலி சக்ரவர்த்தி வாமனரால் அழுத்தப்பட்டு பாதாள லோகத்திற்கு சென்று அங்கு அரசனாகிறார் என்பதை இது குறிக்கிறது. (பலி பாட்டிமை - என்று இப்போது மருவிவிட்டது....)

தீபாவளி - 6 தொடரும்....

#எவர்கிங்_ஏகாம்பரம் 

தீபாவளி -4

தீபாவளி - 4

கங்கா ஸ்நானம் எப்படி எதற்காக...???

ஐப்பசி மாதத்தில் தேய்ப்பிறை பதினான்காம் நாளாகிய சதுர்த்தசியன்று கிழக்கு அடிவானத்தில் சூரிய உதயத்திற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாக தேய் பிறைச் சந்திரன் மெல்லியதொரு கீற்றாகத் தோன்றும். சூரியன் உதயமாகிவரும் நேரத்தில் சூரிய ஒளியில் அது மங்கிப்போய் கண்ணுக்குப் புலப்பட மாட்டாது. ஆனாலும் கூட சூரிய உதயத்திற்கு முன்பு கவனமாகத் தேடிப்பார்த்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு சந்திரனைக் காண முடியும். மேகமூட்டமோ, மூடுபனியோ இல்லாது இருக்கவேண்டும்.

இந்த நேரத்தில் பூமியில் உள்ள அனைத்து நீர் நிலைகளிலும் ஆகாச கங்கை ஆர்ப்பரிக்கும் என்பது ஐதீகம். ஆகவே அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். அதனால்தான் தீபாவளியன்று விடியுமுன் குளிப்பதை "கங்கா ஸ்நானம்" என்று கூறுகிறார்கள்.

அத்துடன் அன்று நீராடும் போது அணியும், எண்ணெயில்-லட்சுமியும், அரப்பில்-சரஸ்வதியும், குங்குமத்தில்-கௌரியும், சந்தனத்தில்-பூமாதேவியும், புத்தாடைகளில்-மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும்.

இப் பண்டிகை அடிப்படையில் இந்துப் பண்டிகையாக இருந்த போதிலும்; சாதி, மத, மொழி வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் ஒரு பண்டிகையாக விளங்குகின்றது. இப் பண்டிகையை இந்துக்கள் மட்டுமன்றி சீக்கியர்களும், சமணர்களும் கூட வெவ்வேறு காரணங்களுக்காக கொண்டாடுகின்றனர். தீபாவளியன்று நீராடுவதை "புனித நீராடல்" என்று அழைப்பார்கள். அதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் “சந்திர தரிசனம்” காலத்தில் எல்லா இடங்களிலும், கிடைக்கும் தண்ணீரில் (நதிகள், ஏரிகள், குளங்கள், கிணறுகள், நீர்நிலைகள்) "கங்கா தேவி" (கங்கை நீர்) வியாபித்து இருப்பதாக ஐதீகம். தீபாவளி தினம் அதிகாலை 3 மணியில் இருந்து 5மணிவரை உள்ள காலம் (இலங்கை, இந்தியாவில்) எண்ணெய்க் குளியலுக்கு உகந்த காலம் என கணிக்கப் பெற்றுள்ளது.

தீப ஒளி யில் மகாலட்சுமி !
திருமகள் திருநாள் இது !! எப்படி...

நரகாசுரனை அழிப்பதற்காக கண்ணன் சென்றபோது, பாணாசுரன் முதலான அசுரர்கள் பலர், திருமகளான லட்சுமிதேவியைக் கவர்ந்து வருவதற்காகப் புறப்பட்டனர். அவர்களின் உள்நோக்கத்தை அறிந்த லட்சுமிதேவி, அங்கே எரிந்து கொண்டிருந்த தீபச்சுடரில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு, அசுரர்களின் கண்களில் படாமல் மறைந்தாள். அன்றைய நாள்தான், தீபாவளி! தீபாவளியன்று திருமகள் தன்னை தீபத்தில் ஐக்கியப்படுத்திக் கொண்டதன் காரணமாகவே, தீபங்களை ஆவளி(வரிசை)யாக ஏற்றி வைத்து, தீபத்தில் திருமகளை வழிபடுகிறோம்.

தீபாவளி ஐந்தில் தொடரும்...⁠⁠⁠⁠

#எவர்கிங்_ஏகாம்பரம்

தீபாவளி -3

தீப ஆவளி - 3

நரகாசுர வத நீதி - மகன் சமூக விரோதியாக இருந்தால் - தாயே அவனை கொன்றுவிட வேண்டும் !!!!

தாயான பூமாதேவி மகனான நரகாசுரனுக்கு அறிவுரை செய்தார். ஆனால் அவன் யார் சொல்லையும் கேட்கவில்லை. மனிதன் (நரன்) ஆக இருந்த அவனிடம் அரக்கன்( அசுரன்) குணம் இருந்ததால் அவனை நரகாசுரன் என்று அழைக்கத் தொடங்கினர். சிவபெருமானும் வேறுவழியின்றி நரகாசுரனைக் கொல்ல உத்தரவிட்டார். பெற்ற தாயான பூமாதேவிக்கோ அவனைக் கொல்ல விருப்பமில்லை. இந்த விஷயத்தை விஷ்ணுவிடமே ஒப்படைத்தார்.

பூமாதேவி சத்யபாமாவாகவும், விஷ்ணு கிருஷ்ணராகவும் பூவுலகில் பிறந்தனர். கிருஷ்ணர் மேல் பற்று கொண்டு சத்தியபாமா அவரைக் கைப்பிடித்தாள். அவருக்குத் தேரோட்டும் சாரதியாகப் பொறுப்பேற்றாள்.

கிருஷ்ணர் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார். அவனுடன் போரிட்டார். ஒரு கட்டத்தில் மயக்கமடைந்தது போல் நடித்தார். நரகாசுரன் அவரைக் கொல்ல முயன்றான். உடனே சத்யபாமா ஒரு அம்பை எடுத்து நரகாசுரனை நோக்கி எய்தாள். அந்த அம்புபட்டு நரகாசுரன் இறந்தான். முற்பிறவியில் அவனது தாயாக இருந்து, இப்பிறவியில் சத்யபாமாவாகப் பிறந்த பூமாதேவியின் கையாலேயே அவன் அழிந்தான்.

நாமெல்லாம் தமிழர்கள்... நந்தா திரைப்படத்தை அதன் கிளைமாக்ஸ் ஐ மட்டுமே ஏற்றுக்கொண்டு வாழ்வோம் என்று இருந்தால் அப்படி சொல்பவர்கள் வாழ்க்கையில் வீழ்வார்கள், அந்த திராவிட கபோதிகளை புறம்தள்ளி நாம் மேல் எழுவோம்...

தீபாவளி 4 இல் தொடரும்...⁠⁠⁠⁠

#எவர்கிங்_ஏகாம்பரம் 

தீபாவளி-2

தீப ஆவளி - 2

ஒருவன் இறந்த நாளை நாம் திருநாளாக கொண்டாட வேண்டுமா?

நரகாசுரன் இறக்கும் தறுவாயில் ஸ்ரீ மஹாவிஷ்ணு காட்சி அளித்தார். அவனுக்குத் தேவையான வரம் கொடுப்பதாகச் சொன்னார், நரகாசுரன் தனது இறப்புக்கு காரணம், எல்லோரையும் தான் வருத்தியதும், விளக்கேற்றக் கூடாது என்று கட்டளையிட்டதும் என்ற தவறை உணர்ந்து, அதற்கு பிராயச்சித்தமாக கிருஷ்ணனிடம் ஒரு வரம் கேட்டான், தன்னை சம்ஹாரம் செய்த அந்த நாளில் மக்கள் அனைவரும் தாம் பட்ட துன்பம் தீர்ந்தது என தலையில் எண்ணை தேய்த்துக் கங்கையில் நீராடினால் அவர்களுடைய துன்பங்களும், பாவங்களும் தீர்க்கப்பட வேண்டுமென்றும், அவர்கள் எல்லோரும் அன்றைய தினம் புத்தாடை அணிந்து. தீபமேற்றி, வெற்றித் திருநாளாக கொண்டாட வேண்டும் என்றும் இரந்து கேட்டான்.

"அப்படியே ஆகட்டும்" என கிருஷ்ணர் வரமளித்தார். இதுவே தீபாவளியாகக் கொண்டாடுகிறோம். எம் மனதில் இருக்கும் இருளை அகற்றி தீப ஒளியை ஞான ஒளியை ஏற்றி வைப்போம். அதற்கிணங்க இந்துமக்கள் அத்தினத்தை தீபாவளி தினமாக எண்ணை வைத்து அதிகாலையில் தோய்ந்து, தீபங்கள் ஏற்றி, புத்தாடை அணிந்து, இனிப்புப் பண்டங்கள் பரிமாறி மகிழ்ச்சியாகக் கொண்டாடுகின்றனர்.

கேதார கௌரி விரதம்...

பார்வதி தேவி கேதார கௌரி விரதம் 21 நாள் இருந்து விரதம் முடித்து இறைவனின் உடலில் இடப்பாகம் பெற்றதும் ஐப்பசி அமாவாசை அன்றுதான். இன்றும் பலர் தம் இல்லங்களில் கேதார கௌரி விரத நோன்பு நோக்கின்றனர்.

குபேர பூஜை....

தீபாவளியன்றுதான் செல்வத்திற்கு அதிபதியான குபேரன் சிவபெருமானை வழிபட்டு பொக்கிஷங்களைப் பெற்றார். அதனால் தீபாவளியன்று பல்வேறு பலகாரங்களுடன் காசு, பணம் வைத்து “குபேர பூஜை” செய்வது உண்டு. இந்த குபேர பூஜை செய்வதால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்

ஜோதிமயமான ஸ்வாமியை உள்ளத்தில் வைத்து வழிபட வேண்டும் என்பதைக் குறிக்கவே, தீபங்களை வரிசையாக வைத்து, வழிபடுகிறோம். இதன் காரணமாகவே தீப ஆவளி என்பது தீபாவளி என்றானது. இதையே திருமகள் தீபாவளி என்றும் லட்சுமி தீபாவளி என்றும் சொல்வர்.

தீபாவளி 3 இல் தொடரும்.

#எவர்கிங்_ஏகாம்பரம் 

Tuesday, October 29, 2019

தீபாவளி-1

தீபாவளி - 1
அனைவருக்கும் நமஸ்காரம்.
இன்று நரக சதுர்த்தி. நரகசுரன் என்ற அசுரனின் ஸ்மரண தினம். இந்த நாளை நாம் எல்லோர் வாழ்விலும் தீப ஒளி திருநாளாக கொண்டாடுகிறோம்.
உலகின் எல்லா மூலைகளிலும், நமது சனாதன கலாசாரத்தை கைவிட்டு இன்று கிறித்தவ பூமியாக இருக்கும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் கூட தீபாவளி திருநாள் கொண்டாடப்படும் இந்த நாளில் நம் தமிழ்நாட்டில் மட்டும் - கருப்பு நாள், ஒருவன் இறந்த நாளை நாம் கொண்டாடுவதா? ஆரியன் கிருஷ்ணன் திராவிடன் நரகாசுரன் ஐ கொன்றுவிட்டான் என்றெல்லாம் உளறிக்கொண்டு திரியும் ஒரு சில சில்லறை கபோதிகளுக்கு பதில் சொல்லும் நிலையில் நாம் நம்மை தாழ்த்திக்கொள்ள வேண்டாம். இருந்தாலும் நாம் நம் ஆத்மா முன்னேற்றத்திற்க்காக சில விஷயங்களை தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இந்த பதிவு.
நரகாசுரனை கொன்றது கிருஷ்ணனா? - தீபங்களின் ஆவளி அதாவது தீபங்களின் வரிசை ஏன்?
இல்லை - நரகாசுரனை கொன்றது சத்யபாமா!
ஒருசமயம் திருமால் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாட்சனை சம்ஹரித்து, நீரில்அமிழ்ந்திருந்த பூமியைத் தன் பற்களால் வெளியே கொண்டு வந்தார். அப்போது பூமி தேவிக்கும் வராஹரான திருமாலுக்கும் பிறந்தவன்தான் பௌமன் என்ற நரகாரசுரன். இவன் பிரம்மனை நோக்கி தவமிருந்து பல வரங்கள் பெற்றான். அதில் ஒன்று தன் தாயின் கரத்தால் தான் இறக்க வேண்டும் என்பது.
புராணக் கதைகளின் படி, கிருஷ்ணரின் மனைவியர் (திருமகள், பூமகள்) இருவருள் ஒருவரான பூமகளுக்கும் (பூமாதேவிக்கு) மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது அவருக்கும் பிறந்த மகன் தான் நரகாசுரன். ஆரம்பத்தில் அவன் மிக நல்லவனாக தன் அன்னையிடமிருந்து பல கலைகள் கற்று சிறந்து விளங்கினான், ஆனால் வயது ஆகஆக அவனது போக்கில் மாற்றம் ஏற்பட்டது, அந்த பௌமன் எனும் நரகாசுரன் (இன்றைய அஸ்ஸாம்) காமரூபம் என்னும் நாட்டை ஜ்யோதிஷபுரம் என்னும் நகரத்தைத் தலை நகராகக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தான். ஜ்யோதிஷபுரம் என்றால் ஒளிபொருந்திய என்று பொருள்.
நரகாசுரன் கெட்ட சகவாசத்துடன் எல்லோரையும் துன்புறுத்தலானான். பெரிய மகரிஷி, குரு, போன்றவர்களையும் இகழ்ந்தான், எல்லா உலகத்தையும் ஜெயிக்க எண்ணினான், ஆகையால் போருக்குத் தேவையான எல்லாக் கலைகளும் கற்றறிந்தான். பின் அவன் தாய் எத்தனைச் சொல்லியும் கேளாமல் இளம் பெண்களைத் துன்புறுத்தலானான். எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர்.
இதற்கு இடையில் அவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்யலானான். பிரம்மாவும் மனம் மகிழ்ந்து காட்சித் தந்து, "அன்பனே உன் தவத்திற்கு மெச்சினேன், விரும்பிய வரம் கேள்" என்றார்.
"நான் சாகக்கூடாது, எனக்குச் சாகா வரம் அருளுங்கள்" என்றான். அதற்கு "உலகில் பிறந்தவர்கள் ஒரு நாள்: அழியத்தான் வேண்டும் அது தர இயலாது என பிரமா கூறி, வேறு எதாவது கேள்" என்றார்.
அதனால் அவன் "ஸ்வாமி நான் என் தாயைத் தவிர வேறு எவராலும் மரணம் அடையக்கூடாது" என்று வரமருளக் கேட்டான்.
"தந்தேன் நரகா, நீ உன் தாய் அம்சத்தைத் தவிர வேறு எவராலும் மரணம் அடைய மாட்டாய்" இதைக்கூறி பிரம்மா மறைந்து விட்டார்.
வரத்தை வாங்கியதும் நரகாசுரனுக்கு கர்வம் (அசுரக் குணம்) தலைக்கேறியது. ஆரம்பித்து விட்டது நரகாசுரனின் அட்டகாசம். அதனால் அவன், அவனைவிட பலம் வாய்ந்த தேவர்களையும், நாட்டு மக்களையும் பல துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாக்கினான். எவரும் இரவில் வீட்டில் விளக்கேற்றக் கூடாது என்றும் உத்தரவு போட்டான். வெளிச்சத்தை வெறுக்கும் அரக்கன் அவன்! வெளிச்ச விளக்குகளை வீட்டில் வைத்திருந்தவர்களின் தலைகளைக் கொய்தான். (இப்போது புரிகிறதா - இந்த நாள் ஏன் தீப ஆவளி ஆனது என்று...)
எல்லா லோகத்தையும் ஜெயிக்க ஆவல் கொண்டு முதலில் இந்திர லோகத்தை முற்றுகை இட்டான். பல தேவர்களைச் சிறையில் அடைத்தான். இந்திரன் ஓடி ஒளிந்துக் கொண்டான், நரகாசுரனின் கொடுமைகளைத் தாங்க முடியாத மக்கள், மிகக் கவலைக் கொண்டு கிருஷ்ணரிடம் சென்று தங்கள் நிலைமையைக் கூறி காப்பாற்றும்படிக் கேட்டுக் கொண்டனர். "கவலைபடாதீர்கள், நான் காப்பாற்றுகிறேன்" என்றார் கிருஷ்ணர்.
ஸ்ரீகிருஷ்ணர் எல்லாம் அறிந்தவர், நரகாசுரனிடம் சென்று அறிவுரைகள் கூறினார். அழிவுக் காலம் வந்தால் செவிடன் காதில் சங்கு ஊதினால் போல் தான், நரகாசுரன் காதுக் கொடுத்துக் கேட்கவில்லை. போர் ஆரம்பித்தது. அவனை பூமாதேவியினால் மட்டுமே அழிக்க முடியும் என்ற வரம் பெற்றிருந்தமையால், பூமாதேவியின் அவதாரமான சத்தியபாமாவுடன் நரகாசுரனை அழிக்கப் புறப்பட்டார் கிருஷ்ணர்.
கண்ணனுக்கு சாரதியாக சத்தியாபாமைவைக் கண்ணன் அழைத்தார். சத்தியபாமா ஒரு வீரமிக்க போருக்கு வேண்டிய எல்லாக் கலைகளும் கற்றவள். அவளும் தேரோட்ட, யுத்தம் ஆரம்பமானது. முதலில் நரகாசுரனின் படைத் தளபதி முரன் என்பவனைக் கொன்றார் கிருஷ்ணர். அதனால்தான் கிருஷ்ணனுக்கு "முராரி" என்ற பெயர் வந்தது. கடும்போர் தொடர்ந்தது. நரகாசுரன் தன் ”கதையை” வீசினான், மாயக் கண்ணன் மயங்கி விழுந்ததுபோல் விழுந்தான். எல்லாம் வல்ல அந்தக் கண்ணன் மயங்குவதா? எல்லோரும் ஸ்தம்பித்து விட்டனர்,
ஆனால் காரணம் இல்லாமல் காரியமா? பூமாதேவியின் அம்சமான சத்திய பாமா ஒரு நிலையில் நரகாசுரனின் தாய் ஆகிறாள் அல்லவா? அவள் கையால் தானே மரணம் ஆக வேண்டும்? அந்த சந்தற்பத்தை ஏற்படுத்தவே கிருஷ்ணர் மயங்கியதை அறியாத சத்தியபாமா கிருஷ்ணன் மயங்கி விழுந்ததைப் பார்த்து கோபத்தில் வீறுக் கொண்டு எழுந்தாள், "என் கண்ணனுக்கா இந்த நிலை" என்று அவள் மனம் கொதிக்க, அம்பு நரகாசுரன் மேல் சரமாரியாக எய்ய அவனும் (நரகாசுரன்) கீழே சாய்ந்தான். அவன் கேட்ட வரத்தின்படி அவன் தாயின் அம்சமான சத்யபாமாவால் கொல்லப்பட்டான்.
நரகாசுரனை எதிர்த்துச் போர் நடக்கும்போது நரகாசுரன் விட்ட அம்பால் கிருஷ்ணர் மயக்கமடைய கோபமடைந்த சத்தியபாமா, நரகாசுரனுடன் சண்டை இட்டு அவனை வெட்டி வீழ்த்தினார் என்றும் கூறுவாரும் உளர். அச்சந்தற்ப்பத்தில் சத்தியபாமா தன் சக்தியை கிருஷ்ண பரமாத்மாவுக்கு அளிக்கப் பெற்று கிருஷ்ண பரமாத்மாவே நரகாசுரனை அழித்தார் எனவும் கூறுவாரும் உளர்.
இரண்டில் தொடரும்...
எவர்கிங் ஏகாம்பரம்

Saturday, July 6, 2019

சஞ்சித கர்மா...

சஞ்சித கர்மா... 
மடி சஞ்சி என்று ஒரு வார்த்தை உண்டு.... அவன் சுத்த மடி சஞ்சி என்று ப்ரம்மணர்கள் வீட்டில் அடிக்கடி புழங்கும்...
சஞ்சி என்றால் கொண்டு வருதல்.... மடி என்றால், மடி, ஆச்சாரம், சுத்தம், பழைய சம்பிரதாயமான பழக்க வழக்கங்களை ஒரு பையில் உடன் கொண்டு சென்று, செல்லும் இடத்திலும் அந்த வழக்கங்களை கடை பிடிப்பது....
உதாரணம், நித்ய கர்ம அனுஷ்டானங்களுக்கு உரிய சாதனங்கள், சமிதா தான பொருட்கள் என....
சரி, நமக்குத் தேவை.... சஞ்சி.... சஞ்சித என்றால், நம் உயிர் பூர்வ ஜென்மாவில் இருந்து அனுபவிக்க வேண்டிய நல் அல்லது தீ வினையை /கர்மாவை புதிய பிறப்பில் கொண்டு வரும். இதற்கு பெயர் சஞ்சித கர்மா....
ஒரு ஆத்மாவின் ஒரு பிறப்பில் நல் மற்றும் தீவினை ஒப்பி / சமமாக இருந்து விட்டால் அந்த ஆன்மா, இரு வினை ஒப்பி மல பரிபாகம் அடைந்து மோக்ஷ நிலைக்கு சென்று விடும்.
ஆத்மா மட்டும் இருவினை ஒப்பி மல பரிபகத்தை எய்தி விட முடியாது....
சஞ்சித, ஆத்மா புதிய பிறவிக்கு சுமந்து வரும் கர்மாக்கள்.... இதற்கு வந்த வினை என்று பெயர்....
புதிய பிறவியில் அதே ஆத்மாவினை வந்து அடையும் வினைகள் வரு வினை.... மனைவி மக்களால் மற்றும் நாம் செய்த நித்திய செயல்களால்....
தொல் வினை என்று ஒன்று உண்டு.... அது நம் முன்னோர் செய்த வினைப் பயன் மிச்சம்.... இந்த தொல் வினைக்கு சரியான உதாரணம்... காங்கிரஸ் கட்சியின் முந்தைய (குறிப்பாக காந்தி, நேரு) போன்ற தலைகள் செய்த வினையை நாம் தானே இன்று அனுபவிக்கிறோம்...
வந்த வினையும் வரு வினையும் தொல்வினையும் தொடர் வினையும் என்று வினைகள் பகுக்கப்பட்டு உள்ளது...
வினைப்பயன் என்பது உண்மையா?!
ஒரு குறிப்பிட்ட கிரஹ சஞ்சார நிலையில் / நிமிடத்தில் இந்த உலகில் 100 க் கணக்கான குழந்தைகள் பிறக்கிறது.... ஆனால் அவற்றுள், ஆண் பெண் ஏழை பணக்காரன் பெற்றோர் இல்லாமை பொருளாதார ஏற்றத்தாழ்வு நிறம் அங்கஹீனம் என எத்தனை எத்தனையோ முரண்பாடுகளை காணும் நமக்கு, அப்போதுதான் பிறந்த குழந்தைக்கு எது கர்மா / வினை என்று யோசித்தால் புரியும் உண்மை.... சஞ்சித கர்மா....
சஞ்சித கர்மா - ஆன்மா சுமந்து வர முடியுமா?!
ஆன்மாவின் பரிணாமம், நெல்லின் முனையில் 1000 த்தில் ஒரு பகுதி.... அதாவது உயிர் உற்பத்திக்கான ஒரே ஒரு விந்து அணு அளவே.... இது எப்படி.... சஞ்சித கர்மா என்ற பாவ மூட்டையை உடன் கொண்டு வரும்?!
ஒரே வரி பதில்....
சர்க்கரை நோய் இன்று பரம்பரை வியாதி ! பெற்றவர்களுக்கு இருந்தால் அவர்களின் ஜீன் மூலம் வாரிசுகளுக்கும்!!!
குறைந்த பட்சம் ஒரு மில்லி விந்துவில் 45 முதல் 50 மில்லியன் விந்து அணுக்கள் இருந்தால் மட்டுமே உயிரின் உற்பத்தி நடைபெறும்.... ஒரு மில்லியன் என்பது 10 லட்சம்.... அப்படியானால் விந்தணுவின் பரிணாமம் என்ன என்பதை யூகித்துக் கொள்ளுங்கள்.... அந்த ஒரு விந்தணு சர்க்கரை வியாதியை சுமந்து வருதே.... ஆத்மா, சஞ்சித கர்மாவை சுமந்து வருகிறது என்று சொன்னால் மட்டும் நாம் பகுத்தறிவு பேசுவது ஏன்?! 

Thursday, June 20, 2019

கர்ப்பம்-4

கர்ப்பம் பகுதி 4
மூலிகை பசுநெய் - இங்கும் விஞ்ஞானம்...
எண்ணெயும் தண்ணீரும் கலக்குமா?! கலக்கும்.... எப்போது சோப்புத் தூள் கலந்தால்... an absolute chemical reaction... அதுபோல மூலிகை கலந்த பசுநெய் கர்ப்பப் பையில் உள்ள பனிக்குட நீராக பிண்டத்தை சுற்றியிருந்து காக்கிறது...
நீரின்றியமையாது உலகு / நீரால் சூழப்பட்ட உலகம்... நாமும் பிண்டத்தில் அப்படியே....
பசு நெய்....
ஆம்.... விந்தணு குறைபாடுடையவர்களுக்கு merck pharma தயாரித்த evion என்ற மருந்து உட்கொள்ள அறிவுறுத்துவார்கள்.... முட்டையின் வெள்ளைக்கரு பசு நெய்யில் வைட்டமீன் ஈ அதிகம் உள்ளது....
அதனாலேயே மஹாபாரதத்திலும் பசு நெய்க்ககுடத்தில் பிண்டம்.... இப்போது திரு-கரு-காவூர் கர்ப்ப ரக்க்ஷ அம்பிகை ஆலயத்திலும் பசு நெய்ப் பிரசாதம்...
இந்த பதிவை (ஆராய்ச்சித் தொடரை) முடிக்கவே முடியாத அளவுக்கு விஞ்ஞானத் தகவல்கள் மனதில் தொடர்கின்றன...
இருப்பினும்.... நேரமின்மை கருதி கோழி முட்டையின் வெள்ளைக் கருவில் வைட்டமீன் ஈ அது குறித்த ஒரு விஞ்ஞானத் தகவலோடு முடிக்கலாம்....
மாட்டாஸ்பத்திரி... ஆம் எழுபதுகளின் முடிவில் என்பதுகளின் ஆரம்பத்தில் மயிலாடுதுறையில் தரங்கம்பாடி சாலையில் பெரிய நிலப்பரப்பில் இருந்த வெட்னெரி அதாவது கால்நடைகளுக்கான மருத்துவ மனை மாடுகளுக்கான ஆஸ்பத்திரி (hospital) மாட்டாஸ்பத்திரி உண்டு.
அங்கு வெளிநாட்டு பெரிய காளைகள் (ஜெர்ஸி மட்டுமே நினைவில் இருக்கிறது) 4 அல்லது 5 வகைகள் உண்டு.
அந்த காளைகளை நேரடியாக மாடுகளோடு இணையவிடாமல் எதாவது ஒரு பெரிய பசுமாட்டை வளையத்துக்குள் நிறுத்தி காளைகளை பாயவிட்டு காளைகளின் பிளய்புறுப்பில் ப்ளாஸ்க் வடிவில் ரப்பர் குழாயின் முடிவில் பாட்டில் ஒன்றுடன் கூடிய ஒரு sperm collection vessal மூலம் காளையின் விந்தணுக்கள் சேகரிக்கப்படும்...
இந்த விந்தணுக்களை சில கண்ணாடிப் பாத்திரத்தில் விட்டு அதனுடன் சில ஆரோக்யமான பரிக்க்ஷிக்கட்பட்ட உயிர்த் துடிப்போடு கூடிய புதிய நாட்டுக் கோழி முட்டையின் வெள்ளைக் கருவை கலந்து பிப்பெட் (ஒரு வகை இருபுறம் துவாரமுடைய மெல்லிய கண்ணாடி குழாய் மூலம்) நன்கு கலக்குவார்கள்...
அதாவது காளையின் சில நூறு மில்லியன் உயிர்ப்புள்ள விந்தணுக்களோடு கோழியின் விந்தணுவும் கலக்கப்பட்டு செயற்கையாக அதிக பாயும் தன்மை உருவாக்கப்பட்டு அந்த கலவை பகுதி பகுதியாக freezer குடுவையில் இடப்பட்டு மீண்டும் சினைப்பிடிக்க அன்றயதினம் கொண்டுவரப்பட்ட பசுக்கள் இருக்குமிடத்துக்கு கொண்டு வரப்படும்.
மேற்படி பசுக்கள் கன்று ஈன்று குறைந்தபட்சம் 9 மாதங்கள் ஆகி இருக்கும்... சினை வலு என்ற திரவம் போன்ற நீண்ட கொழகொழப்பான கம்பி போல பசுவின் பிறப்புறுப்பிலிருந்து வெளிப்பட்டு பசு விரகக் குரல் எழுப்பும் பக்குவ காலம் (இது நம்மாளு / முந்தானை முடிச்சு போன்ற பாக்யராஜ் படங்களில் மேற்படி பசு குரல் எழுப்பும் / மாட்டாஸ்பத்திரிக்கு ஓட்டிச் செல்லப்படும் காட்சி அமைப்புகள் உள்ளது) மட்டுமே கொண்டு வரப்பட்ட மேற்படி பசுக்களின் பிறப்புறுப்பு வழியாக அதன் சினை பைக்குள் நீண்ட கண்ணாடி குழாய் வழியாக காளையின் விந்தணுக்கள் வைக்கப்படும்....
கோழி முட்டையின் வெள்ளைக்கருவில் விந்தணுக்களை பலப்படுத்தும் வைட்டமீன் ஈ இருப்பது என்பதற்காக இத்தனை நேரம் பேசினோம்...
இங்கு பசுக்களின் பிரசவம் / பாரத சர்க்கரை நோய்க்கான காரணம் குறித்து சில விஞ்ஞானத் தகவல்கள் இருக்கிறது... விருப்பமிருந்தால் பார்க்கலாம்....⁠⁠⁠⁠ 

கர்ப்பம் -3

கர்ப்பம் பகுதி 3
மேற்கொண்டு பின்னர் பேசுவோம்... இப்போது முந்தைய கருத்தரித்தல் பதிவின் சாராம்ச விஷயம் பற்றி பார்ப்போம்...
பண்டைய காலங்களில் சாந்தி முகூர்த்த நேரத்தை வைத்தே பிறக்கும் குழந்தை ஆணா பெண்னா என்பதையும் கணித்து விடுவார்கள்... காரணம்.... நீங்கள் சொன்ன ஒரு வார சுழற்ச்சி நீர் குமிழி போன்ற முட்டை உருவாகுதல் என்று முந்தைய பதிவில் குறிப்பிட்டது போல ஆண் பெண் விந்தணு/ கருமுட்டைகளில் எந்த க்ரோமோசோம் உயிர்ப்போடு சீரான சுழற்ச்சி வேகத்தில் மேலே இருக்கிறதோ அந்த பாலினத்திலேயே குழந்தை பிறக்கும்...
இத்தனை கட்டுப்பாடுகளோடு உடலுறவு கட்டுப்பாடுகள் முந்தைய காலகட்டத்தில் அணுசரிக்கப்பட்டதால் தான் இராம இராஜ்ஜியம் என புகழப்பட்ட குழந்தை மரணம் பிரசவகால மரணம் கருச்சிதைவு இல்லாத /ஆரோக்யமான நீண்ட ஆயுளுடன் கூடிய அதே நேரத்தில் இயற்கையான குடும்பக் கட்டுபாடு என எல்லாமே ஹிந்து தர்மத்தில் அமைந்தது...
இதை வைத்தே இந்து தர்மத்தில் தலைக் குழந்தையே கர்மாதிபதி. மற்றவை எல்லாம் காமாதிபதி...
இதுவே குடும்பக்கட்டுப்பாடு..
மஹாபாரதத்தில் கருச்சிதைவு இருந்ததே - காந்தாரிக்கு.... அது காந்தாரியின் கோபத்தால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது
அப்படியே ஏற்பட்டிருந்தாலும்... அந்த பிண்டங்களை மூலிகை மற்றும் பசு நெய் கலந்த மட்பாண்டத்திலிட்டு மீண்டும் உரிய காலத்தில் துரியோதனாதிகளை உருவாக்கினார்கள்...
இங்கும் ஒரு விஞ்ஞானம் உள்ளது...
பிரசவத்துக்குரிய பெண்ணின் வயிறு பெரியதாக இருந்தால் பெண்குழந்தை பிறக்கும் என்பார்கள்... ஞாபகமிருக்கா?! கேட்டிருக்கிறோம்...
மஹாபாரதத்தில் காந்தாரியின் பிண்டம் 101 துண்டுகளாக சிதற 100 சீரான பிண்டங்களில் 100 கெளரவர்களும் கடைசி ஒரு பெரிய துண்டான (பெரிய துண்டான) பிண்டத்தால் ஒரே ஒரு மகளும் ஜனித்தனர்....
மூலிகை பசு நெய் கலந்த மட்பாண்டத்தில் என்று சொன்னேன் அல்லவா... இங்கும் விஞ்ஞானம்....
உடல் பஞ்ச பூதங்களால் ஆனது... சதை மண் இரத்தம் நீர் மூச்சு வாயு உடல் சூடு அக்னி வெற்றிட ஆகாசம் இதயத்துக்குள்ளே
இதே போல...
மட்பாண்டம் மண் நீரால் குழைக்கப்பட்டு தீயில் சுடப்பட்டு கற்றுத் துவாரங்களுடன் உள்ளே வெற்றிட ஆகாசம்....
துரோணாச்சாரியார் கூட துரோண பாத்திரம் என்ற மண்ணால் ஆன (மடக்கு போன்ற அமைப்பு - ஹோமங்களில் பயன்படுத்தப்படுவது) பாத்திரத்தில் உருவாணதால் அவருக்கு துரோணர் (துரோண பாத்திரம்) எனப் பெயர்....⁠⁠⁠⁠

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...