2004 சுனாமிக்குப் பிறகு தொண்டு நிறுவனம் ஒன்றில் இணைந்து சேவைப் பணிகளில் ஈடுபட்டேன்...முதல் ஒன்றரை வருடம் நாகப்பட்டினத்தை மையமாக வைத்து...
நாகை மாவட்டத்தில் மட்டும் சுமார் 73 மீனவ கிராமங்கள்
கச்ச தீவால் பாதிக்கப்பட்ட மீனவர் கிராம பகுதி ராமேஸ்வரம் துவங்கி பழையாரு வரை மட்டுமே...
படத்தில் குறிப்பிட்டபடி 350 கிலோ மீட்டர் பரப்பு...இன்னும் கொஞ்சம் விவரமாக ராமர் சேது வின் வடக்குப் பகுதி.... கச்ச தீவு அருகே செல்லும் மீனவர்கள்...
இங்கே கொஞ்சம் தடம் மாறி தடம் மாறி போனால்தான் பிரச்சனையின் மூல காரணம் நமக்குப் புரியும்.
தடம் மாறுவதற்கு மன்னிக்கவும்....
ராமர் சேது பாலம் தொடர்பான வழக்கில் நீதி மன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் சில...
சென்னை மாநகர பல்லவன் போக்குவரத்துக் கழக இயக்குனரகம் தயாரித்த ஒரு சேது சமுத்திர திட்ட வரைவு project report.... பல்லவன் பேருந்துகளை சென்னை சாலையில் ஒழுங்காக ஓட்டிப் பிழைக்கத் தெரியாத பேமாநிகள் இவர்கள், கடலில் கப்பல் ஓட்ட, dredging செய்ய project report... பன்னி மட்டுமே மேய்க்கிறவன் / தெரிந்தவன் பசுமாடு வளர்த்த கதை....
இந்த project report இல் இவர்கள் கோட்டை விட்ட விஞ்ஞான உண்மை ஒன்று...
ஸ்ரீ ராமபிரானால் நம்மை ரக்ஷிக்க ஏற்பாடு செய்யப்பட்ட ரக்ஷை ஒன்றை மறந்து போனது...
சரி, மீண்டும் ஒரு தாவுதல்...
சுனாமி பாதிக்கப்பட்ட மீனவர் கிராமங்களில் உள்ள படகுகளை பற்றி ஒரு புள்ளி விவரம்.... அவர்களின் மனோபாவம் பற்றி பேசுவோம்...
சுனாமிக்குப் பிறகு, மீனவர்களுக்கு உதவி செய்வதாக காட்டிக்கொண்டு மதம் மாற்றம் பெரிய அளவில் நடந்தது...
ஒட்டு மொத்த மீனவர்களை விட மீன்பிடிக்கும் படகுகள் எண்ணிக்கை அதிகமாக வினியோகிக்கப்பட்டது...
இன்னும் சில மீனவர்கள் அரசு கொடுத்த மனித உயிருக்கான இழப்பீட்டுத் தொகையை கொண்டு புது மனைவி கட்டி மிச்சம் இருந்த பணத்தில் வட்டிக்கு விட்டு, கூடுதல் படகுகளை சல்லிசாக விலைக்கு வாங்கி வாடகைக்கு விட்டு காசு பார்த்தனர்....
மீனவர் கிராமங்களில் ஒரு பழக்கம் உண்டு...
ஒரு நாள் கடலுக்குள் போனவன் மறுநாள் கடலுக்குள் போகக்கூடாது என்ற கட்டுப்பாடு....
கடலுக்குள் போக படகு ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு மீனவ கிராம பஞ்சாயத்துக்கு / கிராம கோவிலுக்கு வரி செலுத்த வேண்டும்.
சுனாமிக்கு முன் படகு பற்றாக்குறை நிலையால் ஒன்று விட்டு ஒரு நாள் கடலுக்குள் சென்ற மீனவர்கள்...
ஒரு படகுக்கு 5 நபர்களாக சேர்ந்து கடலுக்குள் செல்பவர்கள் .... சுமார் 15000 மதிப்புள்ள "பாடு" பிடித்தால் வரி, வாடகை, டீசல் வலை வாடகை உட்பட போக 5 மீனவர்கள் இருந்தால் தலைக்கு தலா குறைந்தது ₹2000 கிடைக்கும்...
இப்போது, அதிக படகுகள் இருப்பதால் ஒரு படகுக்கு கடலுக்குள் செல்லும் மீனவர் எண்ணிக்கையும் குறைந்தது... காரணம் பேராசை... வீட்டில் வேலைக்கு செல்ல தகுதி இல்லாத வயோதிகர்கள் குழந்தைகள் பெயரில் கூட வரி கட்டி அதே மீனவன் தினமும் கடலுக்குள் போனான்...
மீனவ கிராம பஞ்சாயத்துக்களில் / ஹிந்து கோவில்களில் வசூலிக்கப்படும் பணத்தில் வந்த பிரச்சனை 2இல்...
(#எல்லா_குறிப்புகளும்_ஒன்றோடு# ஒன்று_முடிச்சு_போடுவேன் #கவலை_வேண்டாம்)
No comments:
Post a Comment