ராமாயண சம்புகன் கதை யை முடிக்கும் முன்பு மஹாபாரதம்/ பெரிய புராணம் இரண்டில் இருந்தும் சில தெளிதல் பெறுவோம்.
தர்மர் கொஞ்சம் ஓய்வில் இருக்க, ராஜ்ய பரிபாலனம் பீமன் கையில்...
வழக்கு ஒன்று விசாரணைக்கு வருகிறது...
ஒரு இளம் விதவை யை பிராம்மணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் ஆகிய நால்வரும் கற்பழிக்கின்றனர்.
வழக்கை விசாரித்த பீமன், ஒவ்வொருவருக்கும் தலா 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க... அவையில் இருந்த சான்றோர்கள், வழக்கை தர்மர். வந்து விசாரிக்கட்டும் என்று பீமனிடம் கோர... வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது...
சில நாட்களில் நாடு திரும்பிய தர்மர் வழக்கை விசாரித்து, ப்ரம்மணனுக்கு மரண தண்டனையும், க்ஷத்ரியனுக்கு சாகும் வரை சிறை, வைசியனுக்கு 14 ஆண்டுகள் சிறை, சூத்திரனுக்கு 4 ஆண்டுகள் சிறை என்று தீர்ப்பு வழங்கினான்.
சபையில் எல்லோரும் பீமன் கொடுத்த தண்டனையே மேல் என்று எண்ண... தொடர்ந்து பேசிய தர்மர் சொன்னது...
பிராம்மணன் இது போன்ற குற்ற எண்ணம் தோன்றிய கணத்திலேயே இறந்துவிட்டான்... இப்போது என் தண்டனை வெறும் பிரேத சமஸ்காரம் என்று சொல்லி, காக்க வேண்டிய க்ஷத்ரியன் கடமை தவறியதால் இனி அவன் நடை பிணமே, வைசியன் காசுக்கு இப்படிப்பட்ட சுகத்தை பெற்று இருக்கலாம்... ஆனால் அவன் லாப நோக்கில் காசு சேமிக்கவே இப்படிப்பட்ட தவறை செய்து விட்டதால், விதி மீறல் தண்டனை அவனுக்கு.... சூத்திரன் தவறு செய்ய காரணம் மற்ற மூன்று சாதியினரும்... இங்கே அவன் செய்த தவறு வெறும் அறியாமை பாமரத்தனம் மற்றும் இறக்கமில்லாமை... அதனால் அவனுக்கு குறைந்த தண்டனை என்று தீர்ப்பு தருகிறான்...
வர்ண தர்மப்படி, உயர் சாதி தவறுகளுக்கே அதிக தண்டனை... இது தவறு என்று எப்போதாவது யாராவது குரல் எழுப்பியது உண்டா?!
தாழ்த்தப்பட்ட/ மற்றும் சிறுபான்மை மக்கள் தங்கள் தவறுகள் கூட தண்டனைக்கு உரியது இல்லை என்று எண்ணும் கீழ்த்தர மனோபாவம் உருவாக்கப்பட்ட நிலையில்....
பெரிய புராண கதை ஒன்று... 5 இல்
No comments:
Post a Comment