மீனவர் பிரச்சனை என்று ஆரம்பித்து, கடற்கரை நீளம், மீனவ கிராம வரி, கோவில்/ சர்ச், சுனாமி படகுகள் / மத மாற்றம் / ராமசேது / தாது மணல் கொள்ளை/ கடலடி எரிமலை என்று எங்கெங்கோ சஞ்சரித்தாலும் நாம் மையம் கொண்டு இருப்பது இலங்கை கடற்படை கைதுப் படலம் நடக்கும் பகுதியில் தான்...
கடலடி ஏரி்மலையால் ராமசேது வின் இரண்டு பக்கங்களிலும் கடல் நீர் இரு வேறு வெப்ப நிலையில் இருக்கும்... ஆக இலங்கைக்கு உரிய கச்ச தீவு அருகே கிடைக்கும் மீன் அதிக சுவை உள்ள அதிக விலை உள்ள மீன் வகைகள்...
ராம சேது வின் வடக்குப் பகுதியில் நீர் வெப்பம் அதிகம்... காரணம் இமயமலை பனிப் படலத்துக்கு நடுவே வெப்பம் நிறைந்த நிலப்பரப்பு ஒன்று உள்ளது... ஆனால் ராம சேது வுக்கு தெற்கே நீரின் தன்மை குளிர்ச்சி உடையது... காரணம் அண்டார்டிக் பகுதியின் நேரடி நீர் தாக்கம்.
புரியும்படி சொல்ல வேண்டுமானால், கச்சத் தீவு அருகே கிடைக்கும் மீன் double boiled... புழுங்கரிசி சோறு போல அதிக சுவை...அதிக விலை.
இந்தியாவுக்கு, இந்திய மீனவர்களுக்கு என்று பெரிய கடல் எல்லை இருக்கு... ஆனால் இலங்கைக்கு?!
நம், மீனவர்கள் வீட்டு கொல்லை யில் இருக்கும் கக்கூஸ் தாண்டாமல் சாப்பிடவேண்டும் என்ற சோம்பேறித்தனமே இலங்கையின் நிலைப்பாட்டுக்கு முக்கிய காரணம்...
நாகை மாவட்டத்தில் மட்டும், 73 மீனவ கிராமம் என்று சொன்னேன்... ராமநாதபுரத்தில் ஒரு 35 கிராமம் மட்டும் வைத்துக்கொள்வோம்... காரணம், நாம் ரமேஸ்வரத்துக்கு தெற்க்கே கடற்கரை நீளத்தை கணக்கில் கொள்ளவில்லை...
ஆக, மீனவர் பிரச்சனை +or- 100 கிராமங்களின் இடர்....
நாகை அக்கரைபேட்டை கீச்சங்குப்பம் ஆகிய இரு க்ராமங்களே இந்த பகுதியில் மிகப்பெரிய மீனவ கிராமங்கள். இங்கே ரெண்டு கிராமங்களிலும் சேர்த்து சுனாமி நேரத்தில் சுமார் 2200 ரேஷன் கார்டுகள் இருக்கலாம்... மிகச் சிறிய மீனவ கிராமத்தில் சுமார் 80 முதல் 100 ரேஷன் கார்டுகள் இருக்கலாம்...
சராசரியாக, கிராமத்துக்கு 300 ரேஷன் கார்டு உடைய மீனவ மக்கள், அல்லது 100 படகுகள் கடலுக்குள் இந்த கடற்ப்பரப்பில் இருந்து செல்வதாகக் கொள்வோம்....
மீனவரின் pre tsunami வழக்கப்படி ஒன்று விட்டு ஒரு நாள் என்றே வைத்துக்கொண்டால்...
100 ÷ 2= 50 படகுகள் × 100 கிராமங்கள் .... நாள் ஒன்றுக்கு சுமார் 5000 படகுகள் அதில் குறைந்த பட்சம் 15000 மீனவர்கள் கடலுக்குள் செல்கிறது / செல்கின்றனர்...
ஆனால், இலங்கை கடற்படை தாக்கும் மீனவர் படகு எண்ணிக்கைகள் /கைது செய்யும் மீனவர்கள் எண்ணிக்கை?!
இது என்ன co-relation?! அதாவது அதிகபட்சம் 100 மீனவர்கள் (எண்ணிக்கையில்) அல்லது 25 படகுகளில் செல்லும் நபர்கள் இலங்கையால் கைது செய்யப்பட்டு அல்லது தாக்கப்படுகிறார்கள்...
Not even 1%... இவர்களும் ஏன் தாக்கப்படுகிறார்கள்?! 4இல் பேசலாம்.
No comments:
Post a Comment