Thursday, March 21, 2019

சபரி மலை-4

பரசுராமர் க்ஷத்ரியர்களை வெற்றி கொண்ட ஒரு பிரம்மச்சாரி. ராமாவதாரத்துக்கு முந்தியவர் -ஸ்ரீ ராமன் சீதா திருமணத்துக்குப் பின் ராமன் அயோத்தி திரும்புகையில் சில ஸம்வாதங்களுக்குப் பிறகு -
ஸ்ரீ ராமனே ஸ்ரீமன் நாராயணன் என்பதை புரிந்து பரசுராமர் விஷ்ணு தனுஸ் ஐ ராமனிடம் ஒப்படைத்து விடைபெறுகிறார்.... பரசுராமர் தான் வெற்றி கொண்ட ராஜ்யங்களை எல்லாம் தானம் செய்கிறார்....
பரசுராமன் ஒரு சிரஞ்சீவி - ஹனுமனும் சிரஞ்சீவி - அதாவது ப்ரம்மச்சர்ய தர்மத்தை முறையாக அனுஷ்டிப்பவர்கள் எல்லோருமே சிரஞ்சீவீ... காரணம் உயிர் ஆத்ம உடல் சக்தியை உன்மை பிரம்மச்சாரிகள் ஒருபோதும் இழப்பதில்லை.....
ராஜ்யங்களை தானம் செய்த பரசுராமர் தனது தபஸ் (ஆன்மீக சாதனை) க்காக கடலில் இருந்து ஒரு தனி நிலப்பகுதியை பெயர்த்து எடுத்து உருவாக்கியது கேரளம்.... yes... its reclamation bay....
ஸ்ரீ தர்ம சாஸ்தா வனம் சென்று பரசுராமரை சந்தித்து தான் யோகத்தில் அமர ஒரு இடம் கேட்க....
பரசுராமர் தனது வில்லில் ஒரு அம்பு பொருத்தி (ச்சரம்) ஏவ.... அந்த சரம் சென்று குத்திய இடத்தில் ஸ்ரீ அய்யன் ஐய்யப்பன் யோக பட்டம் அணிந்து மெளனாதீதத்தில் அமர... (சரம் குத்தி பெயர்க் காரணம் அறிக)
ஒரு பிரம்மச்சாரி இன்னொரு பிரம்மச்சாரிக்கு கடலில் இருந்து தான் பெயர்த்து எடுத்த இடத்தில் இடம் கொடுத்து - பிரம்மச்சரிய சாதனைக்காக பெண்கள் (பருவ) அங்கே வரக் கூடாது என விதித்தால் எந்த உச்ச பேதி மன்ற நீதிபதிக்கு கவட்டை இடுக்கில் நெறி கட்டுது?! 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...