Wednesday, April 29, 2020

அப்பர் -2

அரியானை
அந்தணர்தம் சிந்தை யானை
அருமறையின் அகத்தானை
அணுவை
யார்க்கும் தெரியாத தத்துவனைத்
தேனைப்
பாலைத்
திகழொளியைத்
தேவர்கள்தங் கோனை
மற்றைக் கரியானை
நான்முகனைக்
கனலைக்
காற்றைக்
கனைகடலைக்
குலவரையைக்
கலந்து நின்ற பெரியானைப் பெரும்பற்றப் புலியூ ரானைப்
பேசாத நாளெல்லாம் பிறவா நாளே.

#அப்பர்

எவ்வளவு தகுதி உடையவரும் தம் முயற்சியால் அணுகுதற்கு அரியவன் ,

அந்தணர்களின் உள்ளத்தில் உள்ளவன் .

மாற்றுதற்கு அரிய வேதத்தின் உட்பொருளாகியவன் ,

நுண்ணியன் ,

யாரும் தம் முயற்சியால் உணரப்படாத மெய்ப்பொருள் ஆகியவன் .

தேனும் பாலும் போன்று இனியவன் .

நிலைபெற்ற ஒளிவடிவினன் ,

தேவர்களுக்குத் தலைவன் ,

திருமாலையும் பிரமனையும் ,

தீயையும் , காற்றையும் , ஒலிக்கின்ற கடலையும் மேம்பட்ட மலைகளையும் உடனாய் இருந்து செயற்படுப்பவன் ஆகிய மேம்பட்டவன் .

புலிக்கால் முனிவனுக்கு உறைவிடமாகிய தில்லையை உகந்து எழுந்தருளும் அப்பெருமானுடைய மெய்ப் புகழைப்பற்றி உரையாடாத நாள்கள் எல்லாம் பயன் அற்ற நாள்களாம் .

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...