Wednesday, April 29, 2020

சைவ வைணவ பேதம் இல்லை -3

மஹாபாரதம்  த்ரோணபர்வம் 15ஆவது நாள் முடிவு

துரோணர் மரணம் அடைந்துவிட்டார். அதனால், அவரது மகன் அஸ்வத்தாமன் மிக கோபத்தில் இருக்கிறார். பழிக்குப் பழி வாங்க சபதமேற்ற்கிறார்.  துரோணர் அர்ஜுனனுக்கே கற்று தராத பல அஸ்திரங்களை அஸ்வத்தாமாவுக்கு சொல்லி கொடுத்துள்ளார். அவைகளில் சில, அர்சுனன், ஏன் கண்ணனுக்கே தெரியாதவை என்ற உன்மையையும் அஸ்வத்தாமன் துரியோதனனிடம் தெளிவாக சொல்கிறார்!!

அதில் மிக முக்கியமான அஸ்திரம் ஆக்னேய அஸ்திரம்.

(பிரம்மாஸ்திரம் - Moscow உதவியுடன் தயாரிக்கப்பட்டதால் இந்திய ஏவுகணைக்குப் பெயர் பிரம்மோஸ் - அதே போல அக்னியை பொழியும்  - மகாபாரதத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது - ஆக்னேய அஸ்திரம்   அதுதான் இந்தியாவின் அக்னி ஏவுகணைகள் இன்று)

அதை அஸ்வத்தமான் பிரயோகிக்க அதன் வெப்பத்தை தாங்க முடியாமல் பாண்டவர்கள் தவிக்கிறார்கள்.

அப்பொழுது கிருஷ்ணன் ஆலோசனைப்படி அர்ச்சுணன்,   வருண பகவானின் துணை கொண்டு அந்த அஸ்திரத்தின் பலத்தை இழக்க செய்கிறார்.

இதனால் போரில் விருப்பம் இல்லாமல் அஸ்வத்தாமன் விரக்தியில் போர்களத்தை விட்டு செல்லும் போது முதல் முறையாக வ்யாஸ மகரிஷி வருகிறார் (கெளரவ தரப்புக்காக குருக்ஷேத்திரம் வருவது இதுவே முதல் முறை).

அஸ்வத்தாமன் அவரிடம் நான் எந்தவிதமான யுத்த தர்மத்தையும் மீறவில்லை. இருந்தாலும் நான் பிரயோகித்த ஆக்னேய அஸ்திரம் பெரும்பாலான பாண்டவ தரப்பு சேனையை நாசம் செய்தது .... ஆனால்  கிருஷ்ணனையும் அர்ஜுனனையும் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்று கேட்கிறார்.

அப்பொழுது வ்யாஸ பகவான் நர நாராயண தத்துவத்தை (அவதார ரகசியத்தை) அஸ்வத்தாமாவுக்கு  சொல்கிறார்.

பல யுகங்களுக்கு முன் தர்மர் என்பவருக்கு நாராயண  என்பவர் மகனாக பிறக்கிறார்.  அவர் பிரம்மன் மற்றும் ருத்ரனை குறித்து கடும் தவம் செய்கிறார்.  முதலில் பிரம்மன் காட்சி கொடுக்கிறார்.  பின் நாராயண ரிஷி ருத்ரனை லிங்க வடிவில் பூஜிக்கிறார்.  அதில் மகிழ்ந்து பரமேஸ்வரன் காட்சி கொடுக்கிறார்.

அப்பொழுது நாராயண ரிஷி தவத்தால் மகழ்ந்த பரமேஸ்வரன் பெரிய வரம் ஒன்றை கொடுக்கிறார்.  எந்த ஒரு காலத்தில் நமக்குள்ளேயே பகை ஏற்பட்டாலும் என்னால் உன்னை வெல்ல முடியாது.  எனச் சொல்லி பல வரங்களை வழங்குகிறார்.

அதற்கு பிறகு நாராயண ரிஷி நரன் என்ற ஒருவரை படைக்கிறார்.

அந்த நர நாராயணர்களே அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணன் என்ற பெரிய உண்மையை விளக்குகிறார்.

இதை கேட்ட அஸ்வத்தாமன் வியாசர் மற்றும்  கிருஷ்ணா பகவான் இருந்த திசையை நமஸ்கரித்து விடை பெறுகிறார்.

பின்பு அர்ஜுனனனை சந்தித்த வ்யாஸர் இதே விஷயத்தை இன்னும் மிக தெளிவாக அர்சுனனுக்கு  எடுத்து உரைக்கிறார்.

அதற்கு காரணம் - அர்ச்சுனன் சொன்ன சேதி ... ஸ்வாமி நான் யாரையுமே இந்த யுத்தத்தில் கொல்லவில்லை....‌என் ரதத்துக்கு முன் ஜோதிப் பிழம்பாக தரையில் கால் படாது கையில் சூலாயுதம் ஏந்திய ஒருவரை கண்டு எதிரிகள் எல்லோரும் வீழ்ந்தனர்... ஆனால் காண்போர்கள் எதிரிகளை நான் வீழ்த்தியதாக நம்பியதாக அர்ச்சுனன் சொல்கிறான்.

இந்த இடத்தில் வ்யாசர் அர்ச்சனனிடம் அஸ்வத்தாமாவிடம் கூறியதை விட அதிக புராண மேற்கோள்களை / அம்சங்களை விளக்கி நர-நாராயண விவரங்கள் சிவ லிங்க பூஜையின் மகிமையால் நாராயணர் பெற்ற பலன்கள் ஆகியவற்றை விரிவாக விளக்குகிறார். (in depth description) ஈஸ்வரனின் பஞ்சபூத தத்துவம் உட்பட...

ப்ரம்மம் ஒகட்டே...‌பரப்ரம்மம் ஓக்கட்டே...

99% : 1% என்று இருந்தாலும் இருக்கின்ற இரண்டு வஸ்துக்களில் ஒன்று என்றுதான் ஆகிறது ...

எனவே, அயம் ஆத்மா ப்ரம்மம் - ப்ரம்மா விஷ்ணு சிவ - படைப்பு காத்தல் அழித்தல் - GOD - Generator பிரம்மா Organisor விஷ்ணு Destructor சிவன்.

Its only single person doing multiple roles!

சைவ  வைணவ பேதம் இல்லை என்பதை வ்யாஸ பாரதத்திலிருந்து  நாம் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...