குசேலன், பிடி அவலில் குபேரன் ஆனவன். ஆனால் மஹா ஞானி - அந்த செல்வம் அவனை ஒருபோதும் கட்டுப்படுத்தவில்லை.
குசேலனின் கிருஷ்ண பக்தியே அவனை உயர்ந்த நிலையில் நிறுத்தி இருந்தது.
ஒரு நாள் கண்ணனை காண வந்தான் குசேலன் - வழக்கம் போல ஆடையில் கவனமின்மை!!
கண்ணனுக்குத் தெரியும் - இன்று ஒரு தத்துவத்தை விளக்கிச் சொல்ல வேண்டிய நாள் என்று...
என்னடா... குசேலா, என்னை விட பணக்காரன் நீ, இப்படி சாதாரண - சற்றே வெளுத்து சாயம் போன கிழிந்த ஆடையுடுத்தி வந்திருக்கிறாயே!!
இல்லை கண்ணா, உன்னை காண வேண்டும் என்று புறப்பட்டாலே என் மனது - பழைய துணிகளையே நாடுகிறது... பழசை மறக்கக் கூடாது - அப்படி மறந்து விட்டால் காலியான அந்த இடத்தில் (மனசில்) கர்வம் புகுந்து கொள்ளும் என்று குசேலன் விளக்கம் சொன்னான்.
சுவாரஸ்யமான பேச்சு... குசேலன் முகத்தில் மட்டும் ஏதோ கேள்வி ரேகைகள்...
என்னடா, ஏதோ குழப்பமாக இருக்கிறாய்?! - இது கண்ணன்.
ஏண்டா கண்ணா, நீயோ சின்னப்பையன் - நீ எதுக்குடா கோபிகைகளின் வஸ்திரங்களை அபகரணம் செய்தாய்? தேவையா உனக்கு இந்த அவப்பெயர் - குசேலன் செல்லக் கோபமாக சந்தேகம் எழுப்பினான்!!
குசேலா நீ கீதையை படித்தாயோ!!
இல்லடா, உன்னையே நான் புரிஞ்சுக்க முடியலை - இதில் கீதையை படிச்சு புரிஞ்சுக்க எனக்கு எங்கேடா நேரமிருக்கு! அறிவு இருக்கு!!
கிருஷ்ணன் சொன்னான் - இதெல்லாம் எங்கிருந்து எடுக்கப்பட்டதோ மீண்டும் அங்கேயே சென்றடைகிறது - முக்காலத்திலும் எதுவும் இல்லாமலுமில்லை!! - இது கூட கீதையின் ஒரு தத்துவம்தான்.
அன்று கோபிகைகளின் வஸ்திரங்களை அபகரித்தேன் - காரணம் அவர்கள் என்னைச் சரணடைந்த புறவுணர்வு இல்லாவர்கள் - தர்ம சாஸ்திரப்படி மேல்வஸ்திரமின்றி குளித்து ஜலதேவதையை அவமதிக்கக் கூடாது - புறவுணர்வை மறந்து - ஜல தேவதையை அவமதித்த கோபிகேகள் இருகைகளை உயர்த்தி அபயம் கேட்டனர். அதனால் எனது யோக மாயை மூலம் அவர்கள் வஸ்திரங்களை மீண்டும் அருளினேன். மேல் வஸ்திரமின்றி குளிக்கக் கூடாது என்ற தர்மத்தையும் புரிய வைத்தேன்!!
பின்னால், திரெளபதி என்ன செய்தாள்?!
கெளரவ சபையில் முடிந்தவரை போராடினாள் - கடைசியில், என்னையே சரண் புகுந்து - சங்குசக்ர கதாபாணே, துவாரகா நிலயாச்சுத! கோவிந்த புண்டரீகாக்ஷ சரணாகதம் ரக்ஷமாம் என இருகைகளை உயர்த்தி என்னிடம் சரணடைந்தாள்!!
நான் எனது அதே யோக மாயையால் - சிறு வயதில் அன்று கோபிகைகளிடம் அபகரித்த அதே வஸ்திரத்தை கெளரவ சபையில் திரெளபதிக்கு அருளினேன்!
இருக்கிற இடத்தில் எடுத்துதானை, இல்லாத இடத்தில் கொடுக்க வேண்டும்?! என்று கிருஷ்ணன் குசேலனுக்கு எதிர் கேள்வி எழுப்பினான்!!
-
இதில் தர்மம் - ஒரு ஆண் இன்னொரு ஆடவனின் வஸ்திரங்களை அணிவதை - சமூகம், அந்தஸ்து, கர்மகால சூழல் ஒப்புக் கொள்ளாது!! வீட்டில் சகோதரர்கள் சேர்ந்து ஸ்ரார்த்தம் செய்தால் கூட ஆண்களுக்கான அவரவர் வஸ்திரம் முதல் நாளே அனுப்பப்பட்டு மடி உலர்த்தப்படும்.
ஆனால், பெண்களுக்கான மடி வஸ்திரம் - ஓர்புடிகளின் மாற்று மடி வஸ்திரங்களையே அணிந்து கொள்வது இன்றும் வழக்கமே!!
கற்பனைதான் - இன்று காலை இதமாக!!
குசேலனின் கிருஷ்ண பக்தியே அவனை உயர்ந்த நிலையில் நிறுத்தி இருந்தது.
ஒரு நாள் கண்ணனை காண வந்தான் குசேலன் - வழக்கம் போல ஆடையில் கவனமின்மை!!
கண்ணனுக்குத் தெரியும் - இன்று ஒரு தத்துவத்தை விளக்கிச் சொல்ல வேண்டிய நாள் என்று...
என்னடா... குசேலா, என்னை விட பணக்காரன் நீ, இப்படி சாதாரண - சற்றே வெளுத்து சாயம் போன கிழிந்த ஆடையுடுத்தி வந்திருக்கிறாயே!!
இல்லை கண்ணா, உன்னை காண வேண்டும் என்று புறப்பட்டாலே என் மனது - பழைய துணிகளையே நாடுகிறது... பழசை மறக்கக் கூடாது - அப்படி மறந்து விட்டால் காலியான அந்த இடத்தில் (மனசில்) கர்வம் புகுந்து கொள்ளும் என்று குசேலன் விளக்கம் சொன்னான்.
சுவாரஸ்யமான பேச்சு... குசேலன் முகத்தில் மட்டும் ஏதோ கேள்வி ரேகைகள்...
என்னடா, ஏதோ குழப்பமாக இருக்கிறாய்?! - இது கண்ணன்.
ஏண்டா கண்ணா, நீயோ சின்னப்பையன் - நீ எதுக்குடா கோபிகைகளின் வஸ்திரங்களை அபகரணம் செய்தாய்? தேவையா உனக்கு இந்த அவப்பெயர் - குசேலன் செல்லக் கோபமாக சந்தேகம் எழுப்பினான்!!
குசேலா நீ கீதையை படித்தாயோ!!
இல்லடா, உன்னையே நான் புரிஞ்சுக்க முடியலை - இதில் கீதையை படிச்சு புரிஞ்சுக்க எனக்கு எங்கேடா நேரமிருக்கு! அறிவு இருக்கு!!
கிருஷ்ணன் சொன்னான் - இதெல்லாம் எங்கிருந்து எடுக்கப்பட்டதோ மீண்டும் அங்கேயே சென்றடைகிறது - முக்காலத்திலும் எதுவும் இல்லாமலுமில்லை!! - இது கூட கீதையின் ஒரு தத்துவம்தான்.
அன்று கோபிகைகளின் வஸ்திரங்களை அபகரித்தேன் - காரணம் அவர்கள் என்னைச் சரணடைந்த புறவுணர்வு இல்லாவர்கள் - தர்ம சாஸ்திரப்படி மேல்வஸ்திரமின்றி குளித்து ஜலதேவதையை அவமதிக்கக் கூடாது - புறவுணர்வை மறந்து - ஜல தேவதையை அவமதித்த கோபிகேகள் இருகைகளை உயர்த்தி அபயம் கேட்டனர். அதனால் எனது யோக மாயை மூலம் அவர்கள் வஸ்திரங்களை மீண்டும் அருளினேன். மேல் வஸ்திரமின்றி குளிக்கக் கூடாது என்ற தர்மத்தையும் புரிய வைத்தேன்!!
பின்னால், திரெளபதி என்ன செய்தாள்?!
கெளரவ சபையில் முடிந்தவரை போராடினாள் - கடைசியில், என்னையே சரண் புகுந்து - சங்குசக்ர கதாபாணே, துவாரகா நிலயாச்சுத! கோவிந்த புண்டரீகாக்ஷ சரணாகதம் ரக்ஷமாம் என இருகைகளை உயர்த்தி என்னிடம் சரணடைந்தாள்!!
நான் எனது அதே யோக மாயையால் - சிறு வயதில் அன்று கோபிகைகளிடம் அபகரித்த அதே வஸ்திரத்தை கெளரவ சபையில் திரெளபதிக்கு அருளினேன்!
இருக்கிற இடத்தில் எடுத்துதானை, இல்லாத இடத்தில் கொடுக்க வேண்டும்?! என்று கிருஷ்ணன் குசேலனுக்கு எதிர் கேள்வி எழுப்பினான்!!
-
இதில் தர்மம் - ஒரு ஆண் இன்னொரு ஆடவனின் வஸ்திரங்களை அணிவதை - சமூகம், அந்தஸ்து, கர்மகால சூழல் ஒப்புக் கொள்ளாது!! வீட்டில் சகோதரர்கள் சேர்ந்து ஸ்ரார்த்தம் செய்தால் கூட ஆண்களுக்கான அவரவர் வஸ்திரம் முதல் நாளே அனுப்பப்பட்டு மடி உலர்த்தப்படும்.
ஆனால், பெண்களுக்கான மடி வஸ்திரம் - ஓர்புடிகளின் மாற்று மடி வஸ்திரங்களையே அணிந்து கொள்வது இன்றும் வழக்கமே!!
கற்பனைதான் - இன்று காலை இதமாக!!
No comments:
Post a Comment