போகாந் அநந்ய மநஸாம் மணகபாதுகே த்வம்
புஷாணாஸி ஹந்த பஜதாம் அநுஷங்கஸிந்தாத்
தேநைவ நூநம் அபவத் பரதஸ்ய ஸாதோ:
அப்ரார்த்திதம் தத் இஹ ராஜ்யம் அவர்ஜநீயம்.
இரத்தின கற்களால் இழைக்கப்பட்ட பாதுகையே! உன்னை விட்டு வேறு எங்கும் தங்கள் மனதைத் திருப்பாமல், உன்னை மட்டுமே தியானிப்பவர்களுக்கு நீ என்ன செய்வாய்?!
உன்னை வழிபடுபவன் கேட்காமலேயே பலப்பல நன்மைகளை செய்கிறாய். இது மிகவும் வியப்பானது.
எப்படித் தெரியுமா?!
உத்தமமான பரதனுக்கு அவன் கேட்காமலேயே, உலகைக் காபாற்றும் ராஜாங்க பொறுப்பு வந்து சேர்ந்தது.
உட்பொருள்:-
தாய் கைகேயி கேட்டபடியே பரதனுக்கு ராஜ்யம் வந்திருந்தால், மக்களாலும் - சரித்திரத்தாலும் பரதனுக்கு பேராசை/ சூழ்ச்சிக்காரன் என்ற பட்டமே கிடைத்திருக்கும்.
ஆனால், பரதாழ்வாரின் வினயம், பக்தி, அவனுக்கு ராமன், கெளசல்யை, சீதாமாதா, மற்றும் மக்கள் என கோடானுகோடி மக்களின் இதய சிம்மாசனம் - கூடவே ராஜ்ய பரிபாலன பொறுப்பு - எல்லாவற்றுக்கும் மேலாக வைகுண்ட வாசலின் திறவுகோல்.!
ராம ராம.
No comments:
Post a Comment