Wednesday, April 29, 2020

ராமரும் கிருஷ்ணரும்

இராமரும்
கிருஷ்ணரும்!

இராமாவதாரத்தில்,

தசரதனுக்கு - கோசலை மகனாக மூத்தவனாக விஷ்ணு....

தசரதனுக்கு- சுமித்திரை மகனாக ஆதிசேஷன் அம்சமாக லக்ஷ்மணன். (தொண்டனாக)

கிருஷ்ணாவதாரத்தில்,

to pay back...

வசுதேவருக்கு தேவகி வயிற்றிலிருந்து நவீனகால egg transplantation போல ரோகிணி கர்பமாற்றம் செய்யப்பட்டு மூத்தவனாக ஆதிசேஷன் அம்சமாக பலராமர்.

வசுதேவர் தேவகிக்கு - கிருஷ்ணன்.

ஆதிசேஷன் லட்சுமணனாக இராமாவதாரத்தில் செய்த சேவைக்கு பிரதிபலனாய் கிருஷ்ணாவதாரத்தில் பலராமனுக்கு தம்பியாக கிருஷ்ணன் - to pay back!!

சூரசேனர் என்ற யாதவ அரசனுக்கு மூன்று குழந்தைகள்.

1. பிரிதா என்கிற குந்தி (பஞ்சபாண்டவர்களின் தாய்), குந்தி போஜன் என்ற ராஜாவுக்கு தத்து கொடுக்கப்பட்டாள் - நட்பின் அடிப்படையில்.

2. வசுதேவர், கிருஷ்ணரின் தந்தை.

3. தேவபாகா ஸ்ரீ உத்தவரின் தாய்.

குந்தியின் மைந்தன் அர்ஜுனனுக்கு போர்க்களத்தில் பகவத் கீதையையும்,
தேவபாகா மைந்தன் உத்தவருக்கு உத்தவ கீதையும் ஸ்ரீ கிருஷ்ணனால் உபதேசிக்கப்பட்டது.

வசுதேவர் - தேவகி தம்பதியருக்கு ஏழாவது கர்பம் உண்டானது.

அந்த சமயத்தில் விஷ்ணு யோகமாயை துர்கையை அழைத்து, தேவகி கர்பத்தில் உள்ள ஆதிசேஷன் அம்சமாக வளரும் கருவை எடுத்து கோகுலத்தில் வசித்து வரும் வசுதேவரன் மற்றொரு மனைவியான ரோகிணி கர்பத்தில் சேர்த்து விடவும், துர்கையை நந்தகோபர் மனைவி யசோதை வயிற்றில் மகளாக பிறக்க என்று பணித்தார்.

விஷ்ணுவே, தேவகியின் 8வது பிள்ளையாக கிருஷ்ணனாக பிறக்கப் போவதாகச் சொன்னார்.

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...