Tuesday, April 28, 2020

ஞானம்

ஹிந்து மஹா சமுத்ரம் என்றால் அது தப்பு...

நாம் இப்போது வசிக்கும் solar system எனப்படும் கிரகங்களின் தொகுப்பு எத்தனையோ நூறு நமக்கு அப்பாற்பட்டு உள்ளது...

நாமெல்லாம் குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக் கொண்டு இருக்கிறோம்!

கற்றது கடுகளவு ...
கல்லாதது கோள்களின் அளவு...

அறிவு - தெளிவு - ஞானம் -

பொதுவில், இது மூன்றும் ஒன்றேதான் என நாம் நினைக்கிறேம்...

இது 3ம் வேறு வேறானது -

அறிவு

என்பது just நமது மனதில் பதிய வைக்கப்பட்ட ஒரு செய்தி...

ஒரு தீவுக் காட்டில் ஒரு விமானம் விழுந்து விடுகிறது - விமானி பராசூட் மூலம் தப்பிவிட்டான்... அந்த விமானத்தை பார்த்த கிராமத்து விவசாயி அதை ஏதோ ஒரு வண்டி என நினைக்கிறான்...

தெளிவு

என்பது பதிய வைக்கப்பட்ட அந்த செய்தியை நாம் நமக்குள் இருக்கும் - முனைப்பு - பொறியை - சிந்தனா சக்தியை வைத்து develop  செய்து ... அறிவிலே - பதிய பட்ட செய்தியைப்பற்றி - ஒருவித தெளிவை - புரிதலை பெறுவது...

இன்னெருவன் அதன் உள்ளே புகுந்து பார்த்துவிட்டு - இதில் நிறைய gear system கள் உள்ளது எனவே இது ஒரு டிராக்டராக இருக்கும் என்கிறான்.

ஞானம்

என்பது நாம் புரிந்து கொண்டதை
குரு/திருவருள் துணை கொண்டு, அறிவிலே பதிவு செய்யப்பட்டு நம் சிந்தையால் வளர்த்து புரிந்து கொண்ட அந்த செய்தியை / பதிவை முழுமையாக புரிந்து கொண்டு அதன் பூரண தத்துவத்தை உணருவதே ஞானம்.

அந்த தீவிலே விழுந்த விமானத்தை மீட்டுச் செல்லவந்த பைலட் அதை விமானம் என்று விளக்குகிறான்! 

அறிவு = ஒரு பதிவு

தெளிவு = அறிவு + தன்முனைப்பு (சிந்தனை)

ஞானம் = அறிவு + சிந்தனை + குரு/திருவருள்! 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...