Wednesday, April 29, 2020

குருவின் மஹாத்மியம்

#குரு

சீடனுக்கு குரு ஒருவரின் வழிகாட்டல்  அவசியமா?!

இப்படி ஒரு கேள்வி எழுந்தது.

குரு சீடனிடம், உடனே ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வா என்றார்.

சீடனிடம் இரும்பு துண்டம் ஒன்றை கொடுத்த அதை தண்ணீரில் போடச் சொன்னார் குரு.

இரும்பு துண்டு வாளித் தண்ணீரில் மூழ்கிவிட்டது.

உடனே குரு ஒரு மரப் பலகையை சீடனிடம் கொடுத்து - அதை வாளித் தண்ணீரில் போடு என்றார்.

மரப்பலகை மிதந்தது - அந்த மரப் பலகை மீது இப்போது அந்த இரும்புத் துண்டை வை என்று சொன்னார் குரு.

இப்போது குரு சொன்னார் ...

வாளித் தண்ணீர் பிறவிக் கடல்...

அதை கடக்க விரும்புபவன் இரும்புத் துண்டு...

மரப்பலகை இரும்புத் துண்டை தாங்குவது போல, நல்ல குருவின் அருளும் வழிகாட்டலும் பிறவிக் கடல் கடக்க உதவும்!!

இதுதான் குருவின் மஹாத்மியம்!! 

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...