Wednesday, April 29, 2020

அவதாரங்கள்

அவதாரங்கள் என்றவுடன் நாம 10 என்று சொல்கிறோம் - ஆனால் அது தவறு...

ஆதி நாராயண ஸ்வரூபமாகி விராட புருஷ அவதாரமே எல்லா அவதாரங்களுக்கும் கருவூலம் ...

பிரளய காலத்தில் இவர் ஜல சயனத்திலிருந்தபோது  இவரது நாபிக் கமலத்திலிருந்து பிரும்மதேவர் தோன்றினார்...

பிரம்மதேவர்க்கு உதவியாக தக்ஷன், மரீசி...

(இவர்களுக்கு முன்பே பகவான் வாசுதேவன், இவ்வுலகை படைக்கக் கருதி - மஹத் - அஹங்காரம், 5 தன்மாத்திரைகள், 16 கலைகள் அடங்கிய விராட்புருஷ திருவுருவை மேற்கொண்டார்...

16 கலைகள் ...
(அந்தக்) அறிவுப்புலன்கள் 5 (புற) செயற்புலன்கள் 5 பூதங்கள் 5 + மனசு ஆகியவை உள்ளடங்கியவரே விராட் புருஷர்...

பிரும்மாவின் அம்சமான மரீசி முதலிய பிரஜாபதிகள் மூலம் தேவர்கள் மனிதர்கள் விலங்குகள் தோற்றுவிக்கப்பட்டனர்.....

விராட் புருஷனின் அங்கங்களிலிருந்து பல வகையான உலகப்படிகள் தோன்றின. (பிரபஞ்சங்களின் உற்பத்தி)

இவர்தான் பரம்பொருள் ஒன்றே பலவல்ல - சத்தியம் ஒன்றே இரண்டல்ல ...

இதை சுலபமாக புரிய வைக்க - அம்பாள் திரு நாமங்களில் 1 ப்ரம்ம விஷ்ணு சிவாத்மிகாயை நமஹ:

அதாவது ப்ரம்மா விஷ்ணு சிவன் எல்லோருக்குள்ளும் இருக்கும் ஆத்மா ஒன்று அதனுள் ஊடுருவி இருப்பதும் லலிதாதிரிபுரசுந்தரியாகிய இச்சா சக்தி கிரியா சக்தி ஞான சக்தி ஸ்வரூபிணி யாக ப்ரம்மா சரஸ்வதி விஷ்ணு லக்ஷ்மி சிவ பார்வதி ...

creator / Generator must hv new ideas / design - intellect - saraswathi

organisor - should have enough money - Lakshmi

destructor should have energy/ power சக்தி - Parvathi

1 விராட் புருஷரான பகவான் வாசுதேவனே முதலில் (ஸநத்குமாரர் முதலிய) கெளமார அவதாரத்தை மேற்கொண்டு அரிய பிரும்மச்சரிய விரதத்தை இடைவிடாது கடைபிடித்து ஒழுகினார்...

ஸநத்குமாரர் என்பவர்கள் - புரிதலுக்காக தக்ஷிணாமூர்த்தி காலருகே அமர்ந்து பாடம் கேட்பவர்கள் - கல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறங்கம் முதற்கற்ற கேள்வி வல்லார்கள் #நால்வருக்கும் +...

கெளமார அவதாரம் - புரிதலுக்காக ஆதி சங்கரர் 74 பிரிவுகளாக இருந்த ஹிந்து தெய்வ வழிபாட்டு முறைகளை ஷண்மதங்களாக வகுத்தார் - சைவம் (சிவ) வைணவம் (விஷ்ணு) காணபத்யம் (விநாயகர்) செளரம் (சூரிய) சாக்தம் (அம்பாள்) கெளமாரம் (முருகன்) ....
வடக்கே முருகன் ப்ரம்மச்சாரிதான் - தொகுத்தவர் தெற்கத்தி சங்கரர் என்பதையும் நினைவில் கொள்க!...

2வது அவதாரம் வராக அவதாரம்

3 #தேவரிஷி_நாரதர் - வைஷ்ணவ சாஸ்திரமான பாஞ்சராத்ரம் (5இரவுகளில் தொகுக்கப்பட்டது) ஆகமம் செய்தவர்.

4 தர்ம பிரஜாபதி மனைவி மூர்த்தி என்பவளிடம் நர, நாராயண ரிஷிகளாக மன ஒடுக்கத்தை கைக் கொண்டு தவமியற்றுகின்றனர் (இதுவே துரோண பர்வம் - குருக்ஷேத்ரம் 15ஆவது நாளில் வியாஸரால் அஸ்வத்தாமாவுக்கு விவரிக்கப்படுபவர்கள்)

5 சித்தர்களின் தலைவனாக கபில வாசுதேவனாக - ஸாங்க்யம் என்ற யோகத்தை புதுபித்து ஆசுரி என்ற அந்தணருக்கு உபதேசிக்கிறார் (ஸாங்க்யம் - வழி/விதி முறைகள்)

6 அத்ரி மகரிஷி அனசூயா தேவிக்கு தத்தாத்ரேயா ஆத்ரேய புத்ரா வாக...  ஆன்ம ஞான உபதேசம் அலர்க்கன் - ராஜரிஷி மற்றும் பிரகலாதன். பகவானே அவதரித்த முதல் கோத்ரம் என்பதால் ஆத்ரேய கோத்ரத்துக்கு ஏற்றம் - மகிமை ...

7 ருசி என்ற பிரஜாபதி மனைவி ஆகூதி என்பவளிடம் யக்ஞன் என்ற அவதாரம் ...

8 நாபியின் மனைவி மேருதேவி வயிற்றில் ரிஷபதேவராக (சந்யாச தர்மத்தை நிலைநிறுத்த)

9 பிருது என்ற அரசராக

10 சாக்ஷுஷ மன்வந்தர முடிவில் ஏற்பட்ட மஹாபிரளயத்தில் மத்ஸ்யாவதாரம்

11 கூர்ம

12 தந்வந்திரி (custodian of அமிர்தம்)

13 மோகினி

14 நரசிம்மர்

15 வாமனர்

16 பரசுராமர்

17 வியாஸர் (பராசரர் சத்யவதி) (இராமருக்கு முற்பட்டவர் )

18 இராமன்

(இராமாயணம் ஆட்டோ பயோக்ராஃபி - பிறரால்  அறிந்து - சொல்லி  எழுதப்பட்டது)

19 பலராமன்

20 கிருஷ்ணன் (விருஷ்ணி வம்சம் - யது குலம்)

- பாகவதம் -  சுயசரிதை .... 20வது தன் அவதாரத்தை பற்றி 17வது அவதாரமே எழுதியது -

மகாபாரதம் கூட வியாசர் சொல்ல கணபதியால் எழுதப்பட்டது ....

21 கலியுக தொடக்கத்தில் கீகடம் என்கிற மகத ராஜ்யத்தில் அஜனன் என்பவர் மகனாக புத்தர் என்ற திருப்பெயருடன்

(this Bhuddha hijacked - separated - particularly by Christians after extensive study of our epics - with an conversion ideology - prior to Muslim/ Christians Adi Sankara and Azhvaars / Nayanmars kept them tact in fold .... During Christian rule thru Ambedkar  - promotion - declared constitutionally separate Religion - hope may be post corona China 160c+ population + other Buddhists country may come back to Hindu fold with vegetarian adoption atleast a majority portion)

22 கலியுக முடிவில் அரசர்கள் திருடர்கள் போல கொள்ளையர்கள் ஆகும்போது பகவான் விஷ்ணுயசஸ் என்கிற அந்தணனுக்கு கல்கி என்ற திருப்பெயரோடு பிறப்பார்.

வற்றாத ஏரியிலிருந்து எண்ணற்ற வாய்க்கால்கள் தோண்டப்படுவது போல - பகவானுக்கு அவதாரங்களும் எண்ணற்றவை

இந்த 22 + ஹம்ஸா மற்றும் ஹயக்ரீவ அவதாரமும் பகவானுக்கு உண்டு ...

#நாரதமுதலியமகரிஷிகள்  மனுக்கள்,  இந்திராதி தேவர்கள், மனு புத்திரர்கள் தக்ஷ ப்ராஜாபதிகளும் விராட் புருஷனின் கலைகளே!!

மேலே சொல்லப்பட்ட அத்தனை அவதாரங்களும் - விராட்புருஷனின் அம்சங்கள் - ஆணால்  ஸ்ரீ கிருஷ்ணன் சாட்சாத் பகவானே ...

ஆதாரம் : ஸ்ரீ மத் பாகவதம், முதல் ஸ்கந்தம், அத்யாயம் 3.

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...