காஞ்சி மஹா பெரியவர் குறித்த ஒரு நித்ய பாராயண ஸ்துதி உண்டு... அபார கருணா ஸிந்தும் ஞானதம் சாந்த ரூபிணம்... என்று துவங்கும்....
அதில் ஒரு வரி...
#அநாதப்ரேதஸமஸ்காராத்
#அஸ்வமேதபலம்லபேத்.
கர்ம காரியங்கள் செய்ய வாரிசுகள் இல்லாதவர்களுக்கு, ஸமஸ்கார கர்மத்தை தானே முன் வந்து ஒருவர் செய்தால் அது அஸ்வமேத யாகம் செய்த பலனைத் தரும்.
விவரம் தெரிந்து, அதன் பின் 1985 வரை, மயிலாடுதுறையில் எங்கள் வீதியில் நிகழ்ந்த மரணங்களில் - வாகனத் தயாரிப்பு, சுமத்தல் (அப்பொழுதெல்லாம் van வழக்கமில்லை) என எங்கள் குடும்ப பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.
முக்கியமாக, அங்கு தரப்படும் தானம் / காசு வாங்க மாட்டோம். சுமந்த புண்ணியத்தை இழக்க மாட்டோம்.
வீட்டுக்கு வந்து புணர் ஸ்நானம் செய்து புதுப் பூணல் அணிந்து - மாலை சிவாலயம் சென்று தரிசித்து, பசுவுக்குப் புல் கொடுத்துவிட்டு வருவோம்.
இதை நாங்கள் செய்ய முக்கிய காரணம் பரமாச்சாரியாள் அருளுரை -
சவங்களை (குறிப்பாக கதியில்லாத /அநாதை ப்ரேதங்களை ) சுமந்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு அஸ்வ மேத யாகத்துக்கு சமம்.
கயா ஸ்ரார்தத்தில் வீட்டில் வளர்த்த இஷ்ட பிராணிகள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என யார் யாருக்கோ பிண்டம் ஏன் போடுகிறோம்?!
சாஸ்திரத்துக்கும்/ தர்மத்துக்கும் நிறைய வித்யாசம் உள்ளது.
நாம் செய்யும் கர்மத்தால் போனவர்களுக்கு கதி மோட்சமில்லை! ஆனால் நமது திருப்திக்கு/ சாஸ்திரம் விதித்தபடி கார்யங்கள் நாம் செய்தே ஆக வேண்டும்.
பிதுர் கடன் என்றுதான் நாம் குறிக்கிறோம் - அது அடைக்க முடியாத கடன்.
ஒருவரோடு சேர்ந்து 3 அடிகள் நடந்தால் அவர்களின் மரணத்தில் நாம் ஆஜராக வேண்டும்...
அவர் கையால் ஒரு குவளை நீர் குடித்தால் மறுநாள் சஞ்சயனத்திலும் நாம் இருக்க வேண்டும்.
ஒரு வேளை உணவு உண்டிருந்தால் தசம திதிக்கு ஆஜராக வேண்டும்.
பந்து/ தீட்டு இருந்தால் அவரவர் குல வழக்கப்படி சவரத் தர்ப்பணம்/ சபிண்டி/ சோதகும்பம்/ஆப்தீகம் ஆகியவற்றில் நம் பங்களிப்பு கட்டாயம்!
ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது - சொன்னேன் - யாரையும் குறிப்பிட்டு அல்ல!
அதில் ஒரு வரி...
#அநாதப்ரேதஸமஸ்காராத்
#அஸ்வமேதபலம்லபேத்.
கர்ம காரியங்கள் செய்ய வாரிசுகள் இல்லாதவர்களுக்கு, ஸமஸ்கார கர்மத்தை தானே முன் வந்து ஒருவர் செய்தால் அது அஸ்வமேத யாகம் செய்த பலனைத் தரும்.
விவரம் தெரிந்து, அதன் பின் 1985 வரை, மயிலாடுதுறையில் எங்கள் வீதியில் நிகழ்ந்த மரணங்களில் - வாகனத் தயாரிப்பு, சுமத்தல் (அப்பொழுதெல்லாம் van வழக்கமில்லை) என எங்கள் குடும்ப பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.
முக்கியமாக, அங்கு தரப்படும் தானம் / காசு வாங்க மாட்டோம். சுமந்த புண்ணியத்தை இழக்க மாட்டோம்.
வீட்டுக்கு வந்து புணர் ஸ்நானம் செய்து புதுப் பூணல் அணிந்து - மாலை சிவாலயம் சென்று தரிசித்து, பசுவுக்குப் புல் கொடுத்துவிட்டு வருவோம்.
இதை நாங்கள் செய்ய முக்கிய காரணம் பரமாச்சாரியாள் அருளுரை -
சவங்களை (குறிப்பாக கதியில்லாத /அநாதை ப்ரேதங்களை ) சுமந்து எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் ஒரு அஸ்வ மேத யாகத்துக்கு சமம்.
கயா ஸ்ரார்தத்தில் வீட்டில் வளர்த்த இஷ்ட பிராணிகள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என யார் யாருக்கோ பிண்டம் ஏன் போடுகிறோம்?!
சாஸ்திரத்துக்கும்/ தர்மத்துக்கும் நிறைய வித்யாசம் உள்ளது.
நாம் செய்யும் கர்மத்தால் போனவர்களுக்கு கதி மோட்சமில்லை! ஆனால் நமது திருப்திக்கு/ சாஸ்திரம் விதித்தபடி கார்யங்கள் நாம் செய்தே ஆக வேண்டும்.
பிதுர் கடன் என்றுதான் நாம் குறிக்கிறோம் - அது அடைக்க முடியாத கடன்.
ஒருவரோடு சேர்ந்து 3 அடிகள் நடந்தால் அவர்களின் மரணத்தில் நாம் ஆஜராக வேண்டும்...
அவர் கையால் ஒரு குவளை நீர் குடித்தால் மறுநாள் சஞ்சயனத்திலும் நாம் இருக்க வேண்டும்.
ஒரு வேளை உணவு உண்டிருந்தால் தசம திதிக்கு ஆஜராக வேண்டும்.
பந்து/ தீட்டு இருந்தால் அவரவர் குல வழக்கப்படி சவரத் தர்ப்பணம்/ சபிண்டி/ சோதகும்பம்/ஆப்தீகம் ஆகியவற்றில் நம் பங்களிப்பு கட்டாயம்!
ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது - சொன்னேன் - யாரையும் குறிப்பிட்டு அல்ல!
No comments:
Post a Comment