Wednesday, April 29, 2020

கர்த்தா

கர்த்தா என்ற தலைப்பில் பேச ஆரம்பித்தபோது, மனைவியில்லாதவனுக்கு கர்மம் செய்ய அதிகாரமில்லை என்று விவாதம் துவக்கினோம்.

பீஷ்மர் பித்ரு தர்ப்பணம் தந்தது - ஸ்மசானங்களில் பெண்கள் தொடர்பு இல்லை - தவ சிரேஷ்டர்களை கொண்டு - எஜமானஸ்ய சங்கல்பம் செய்து சம்பாவணை உள்ள யாகங்கள் என்றெல்லாம் விவாதம் தொடர்ந்தோம்.

சகரன் அஸ்வமேத யாகம், ராமன் அஸ்வமேத யாகம் குறித்துப் விவாதம் செய்து - இராமன் வண்ணான் சொல்லால் சீதையை பிரிந்து பின் அஸ்வமேத யாகத்துக்காக சீதையின் பிரதிமைக்கு பிராண பிரதிஷ்டை செய்து யாகம் என விவாதம் தொடர ...

இப்போ சில விஷயங்கள் புரிகிறது ... இதை ஆரோக்யமான / ஆராய்ச்சி பூர்வ விவாதமாக தொடருவோம்!!

இராமன் செய்த அஸ்வமேத யாகத்தில் சீதை - பிரதிமை பற்றிய குறிப்பு வால்மீகி இராமாயண அஸ்வமேத யாக குறிப்பில் இல்லை (1)

கர்ண பரம்பரை கதையில் சீதையின் மண்ணாலான பிரதிமைக்கு புதலா (puthala) என ப்ராண பிரதிஷ்டை செய்விக்கப்பட்டு ஹோமம் நடந்ததாக ஒரு கதையும் உள்ளது (2).

புனர்பூச நக்ஷத்திரத்தாருக்கு இரு தாரம் (ஆணோ/ பெண்ணோ) என்ற ஜோதிட நம்பிக்கை (குறிப்பாக சூரிய குலத்தில்) ஒன்றும்  உண்டு.

சூரியனுக்கு உஷே அவள் மகன் யமன்.

சூரியனின் வெம்மை தாங்காத உஷே, தனது நிழலில் உருவாக்கிய சாயா (நிழல்) தேவி சூரியனின் இரண்டாவது மனைவி -  மகன் கருப்பு நிற சனீஸ்வரன்.

இரு மனைவியர் என்பதை விட இதை ஓருயிர் ஈறுடல் என்று சொல்லலாம்.

உஷே வின் நிழல் அம்சமே சாயா...

அது போல பூமியில் நுகத்தடி (ஏர் கலப்பை - சீதா) யில் உருவான பூமா தேவி அம்சமான சீதா, மீண்டும் மண்ணாலான புதலா வாக அம்சம் ஒன்றே உருவம் இரண்டு...

ஒன்று மட்டும் புரிகிறது...

ஹிந்து மஹா சமுத்திரம் ஒரு வைர வைடூர்ய தங்கச் சுரங்கம்...

தோண்டத் தோண்ட பொக்கிஷங்கள் ....

No comments:

Post a Comment

பத்தினி

பத்தினி .... பாண்டவர்கள் வன வாசத்தில் த்வைத வனம் காம்ய வனம் என மாறி மாறி தங்கி இருந்த காலத்தில் மார்க்கண்டேயர் அவர்களை சந்தித்து சில உபதே...